#39 - விபூதி சந்தி
பூ1ர்வ த3க்ஷிண பஸ்சிமோத்தர
பார்வதீ1பதி1 அக்3னி வாயு சு
ஷார்வரீசர திக்3வலயதொ3ளு ஹம்ஸ நாமக1னு |
ஸார்வகா1லதி3 சர்வரொளு சுர
ஸார்வபௌமனு ஸ்வேச்செயலி ம
த்தோ1ர்வரிகெ3 கோ3சரிஸத வ்யக்தாத்ம நெந்தெ3னிப ||39
பூர்வதக்ஷிண பஸ்சிமோத்தர = கிழக்கு தெற்கு வடக்கு மேற்கு திசைகளில்
பார்வதிபதி = ருத்ரர் வசிக்கும் ஈசான்யம்
அக்னி, வாயு,
சுஷார்வரீசர = நள்ளிரவில் சஞ்சரிக்கும் அசுரனான நிரருதியின் திசை
திக்வலயதொளு = திக்கு, திசைகளில்
ஹம்ஸ நாமகனு = ஹம்ஸ நாமக பரமாத்மன் (இருக்கிறான்)
சுரசார்வபௌமனு = தேவதா சக்ரவர்த்தியான ஸ்ரீபரமாத்மன்
சர்வகாலதி = அனைத்து காலங்களிலும் (எப்போதும்)
சர்வரொளு = எல்லா பிராணிகளிலும்
ஸ்வேச்செயலி = தன் விருப்பத்தின்படியே
மத்தோர்வரிகெ = வேறொருவருக்கு
கோசரிஸதெ = யார் கண்ணுக்கும் புலப்படாமல்
அவ்யக்தாத்மனு = ஸ்வரூபத்தைக் காட்டாமல் இருப்பவன்
எந்தெனிஸி = என்று இருப்பான்.
கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு, ஈசான்ய, அக்னி, வாயு, நிரருதி - என அனைத்து திக்கு விதிக்குகளில் ஹம்ஸ நாமக பரமாத்மன் நியாமகனாக இருக்கிறான். இப்படியாக, தேவதா சார்வபௌமனான ஸ்ரீஹரி, எல்லா காலங்களிலும், அனைத்து பிராணிகளிலும், தன் விருப்பப்படியே இருந்தவாறு, வேறு யாரின் கண்களுக்கும் புலப்படாமல் ‘அவ்யக்தாத்ம’ என்னும் பெயரைப் பெறுகிறான்.
‘இந்த்ரோ நலோ தண்டதரஸ்ச ரக்ஷோ பாஷாயுதோ வாயு தனேஷ ருத்ர:’ என்னும் ஸ்லோகத்தில் நிரருதிக்கு அசுரன் என்று சொல்லியிருக்கும் ஆதாரத்தின்படியே தாசராயரும் சொல்லியிருக்கிறார்.
***
No comments:
Post a Comment