#32 - பஞ்சமஹாயக்ஞ சந்தி
***
ஸாக3ரதொ3ளிஹ நதி3ய ஜல பே4
தா3க3ஸதொ3ளிப்ப1ப்த3 ப3ல்லுது3
கா1கெ3 கு3ப்பி3க3ளரிய ப3ஹவெ நதி3ய ஜலஸ்தி2திய |
போ4கிவரப1ரியங்க1 ஷயனனொ
ளீகு3ணத்ரய ப3த்த4 ஜக3விஹு
தா3க3மக்3ஞரு திளிவரஞானிக3ளிக3ளவட3து3 ||32
சாகரதொளு = கடலில்
இஹ = இருக்கும்
நதியஜல = ஆற்று நீரின்
சேத = வேறுபாட்டினை
ஆகஸதொளு = ஆகாயத்தில்
இப்ப = பறக்கும்
அப்த = தண்ணீர் கொடுக்கும் மேகங்கள்
பல்லவு = அறியும்
காகி குப்பிகளு = காக்கை, குருவிகள்
நதியஜலச்சேத = கடலில் சேர்ந்த ஆற்றின் சுவையான நீரினை
அரியபல்லவெ = அறியுமோ?
போகிவர = சர்வஸ்ரேஷ்டனான சேஷதேவரே
பர்யங்க = படுக்கையாக்கிக் கொண்டிருக்கும்
ஷயனனொளு = படுத்திருக்கும் பரமாத்மனில்
ஈகுணத்ரயபத்த ஜகவு = சத்வ ரஜஸ் தமோ குணங்களுக்குக்
கட்டுப்பட்ட இந்த பிரபஞ்சம்
இஹவு = இருப்பதை
ஆகமஜ்ஜரு = மத்வ சாஸ்திரத்தை நன்றாக அறிந்தவர்கள்
அறிவார்கள்
அஞ்ஞாகளிகெ அளவடரு = அஞ்ஞானிகள் அறியமாட்டார்கள்.
த்வைத மத சித்தாந்தங்களை நன்றாக அறிந்தவர்களுக்கு
மட்டுமே மேற்சொன்ன பேத ஞானம் சாத்தியமே தவிர, மற்றவர்களுக்கு புரிவதற்கு சாத்தியமில்லை என்னும் விஷயத்தை சொல்கிறார்
தாசராயர். கடலில் கங்காதி நதிகள் சேர்ந்திருப்பதை, ஆகாயத்தில் பறக்கும் மேகக்கூட்டங்கள் மட்டுமே வேறுபடுத்திப் பார்க்கும். அந்த
நீரைக் குடிக்கும் காக்கை, குருவிகள் இந்த வேறுபாட்டினை
அறியுமோ?
முடியாது.
அதுபோல, சாத்விக, ராஜஸ,
தாமஸர்களான, தேவ,
தானவ,
மானுஷர்களாலும், த்ரிகுணமயமான பொருட்களாலும், நிரம்பிய இந்த உலகம், சேஷசாயியாக படுத்துக்கொண்டிருக்கும் பரமாத்மனுக்குள் அடங்கியிருந்தாலும், அது பரமாத்மனிடமிருந்து பின்னமாக இருக்கிறது என்னும் விஷயத்தை
அறியவேண்டுமெனில், மத்வ சித்தாந்த சாஸ்திரங்களை நன்றாக அறிந்தவர்களால் மட்டுமே முடியுமே தவிர, அஞ்ஞானிகளுக்கு எப்படி புரியும்? என்றைக்கும் புரியாது என்பது
பொருள்.
***
No comments:
Post a Comment