ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Thursday, May 21, 2020

#27 - பஞ்சமஹாயக்ஞ சந்தி

#27 - பஞ்சமஹாயக்ஞ சந்தி


சதுரவிம்ஷதி த1த்வதொளு தத்பதிக3
ளெனிஸுவ பி3ரம்மமுக2 தே3
வதெக3ளொளு ஹதி3மூரு ஸாவிரதெ3ண்டு நூரதி41 |
சதுரவிம்தி ரூபதி3ந்த3லி
விததனாகித் தெ3ல்லரொளு ப்1ரா
க்ருத1 புருஷனந்த33லி பஞ்சாத்மக1னு ரமிஸுவனு ||27

சதுரவிம்ஷதி தத்வதொளு = 24 தத்வங்களில்
தத்பதிகளெனிஸுவ = தத்வாபிமானிகள் என்று அழைக்கப்படும்
பிரம்மமுக தேவதெகளு = பிரம்மரே முதலான தேவதைகளில்
ஹதிமூரு சாவிர தெண்டு நூரதிக சதுரவிம்சதி ரூபதிந்ததலி = 13,824 ரூபங்களால்
எல்லரொளு = அனைவரிலும்
விததனாகித்து = நிலைத்திருந்து
பஞ்சாத்மகனு = அனிருத்தாதி 5 ரூபாத்மகன்
ப்ராக்ருத புருஷனந்ததலி = சாமான்யமான புருஷர்களைப் போல
ரமிசுவனு = நடமாடுவான்

இந்த பத்யத்தில், ஸ்தூல சரீரத்தில் வியாபித்திருக்கும், இந்த சந்தியில் இதுவரை சொல்லியிருக்கும், அனைத்து பகவத்ரூபங்களையும், மறுபடி தொகுத்து சொல்லியிருக்கிறார். மொத்தம் 13,824 ரூபங்கள். எழுத்தின் எண்ணிக்கையின்படியே இவற்றை அறியவேண்டும்.

அவ்யக்த - 251
மஹத் - 185
தாமஸ - 751
மனஸ் - 755
பத்து இந்திரியங்களின் மொத்த எழுத்து எண்ணிக்கை : 2353
பஞ்சபூதங்களின் மொத்த எழுத்து எண்ணிக்கை - 1000
பஞ்சதன்மாத்ர மொத்த எழுத்து எண்ணிக்கை - 1080

மொத்தம் : 6365

ஆத்யாத்ம, ஆதிதெய்வ, ஆதிபூதங்களின் மொத்த எழுத்து எண்ணிக்கை - 4326 பத்து இந்திரியங்களில், ஒவ்வொன்றிலும் அனிருத்தாதி 5 ரூபங்கள் என, 30 ரூபங்களையும், ஆக : 10*30=300

இதைப் போல தஷ ப்ராணரில் ஒவ்வொருவரிலும் 30 ரூபங்கள், ஆக 10 பிராணர்களில், 10*30=300 24 தத்வங்களில் ஒவ்வொரு தத்வத்திலும் அ-காராதி 51 எழுத்துக்கள். 24 * 51 = 1224

க-முதல் க்‌ஷ-வ்ரை இருக்கும் எழுத்துக்கள் 35. இவை க, கா, கி, ... கம். க: என்று 13 எழுத்துக்களையும் கொண்டவை. இப்படி 35 எழுத்துக்களின் மொத்த எண்ணிக்கை : 35 * 13 = 420

க், ச், என மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை : 51

ஷக்தி பிரதிஷ்டா முதலான ரூபங்கள் : 12

அனைத்து தேகங்களிலும் இருக்கும் அனிருத்தாதி பஞ்சரூப : 5

ஆக மொத்தம் : 13,824 ரூபங்கள்.

பரமாத்மன், இவ்வளவு ரூபங்களால் அனைவரிலும் இருந்து அனிருத்தாதி ரூபங்களால், சாதாரண மனிதர்களைப் போல நடமாடுவான்.


***

No comments:

Post a Comment