ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Sunday, May 3, 2020

#30 - விபூதி சந்தி

#30 - விபூதி சந்தி

மீனகே1தன த1னய ப்ராணா
பான வ்யானோதான முக்2யை
கோ1ன பஞ்சாஷன் மருத்க3ண ருத்3ர வசுக23ணரு |
மேனகா1த்மஜெ கு1வர விஷ்வ
க்சேன த4னபாத்3யனி மேஷரனு
தா3னுராக3தி3 தே4னிபு1து3 வைஷ்யரொளு ப்ரத்4யும்ன ||30

மீனகேதன = மன்மதனின்
தனய = மகனான அனிருத்தன்
ப்ராணாபான வ்யானோதானமுக்ய = பிராண, அபான, வ்யான, உதான முதலான
ஏகோனபஞ்சாஷத் மருத்கண = 49 மருத்கணர்கள்
ருத்ரவசுகணரு = ருத்ரகண, வசுகணர்கள்
மேனகாத்மஜெ குவர = பார்வதியின் மகனான கணபதி
விஷ்வக்சேன,
தனபாதி = குபேராதி
அனிமிஷரனு = தேவதைகளை
வைஷ்யரொளு = வைஷ்ய ஜாதியின் அபிமானிகளாக, வைஷ்யர்களின் இருப்பவர்கள் என்று
ப்ரத்யும்ன = ப்ரத்யும்ன நாமக ஸ்ரீபரமாத்மன் வசிக்கிறான் என்றும்
ஸதா = எந்நேரமும் / எப்போதும் 
அனுராகதி = நினைக்க வேண்டும். 


மன்மதனின் அவதாரமான ப்ரத்யும்னனின் மகனான அனிருத்தன், பிராண, அபான, வியான, உதான முதலான 49 மருத்கணங்கள், 11 ருத்ரர்கள், பார்வதியின் மகனான கணபதி, விஷ்வக்சேன, குபேராதி தேவதைகள் ஆகியோர் வைஷ்யாபிமானிகள், வைஷ்யர்களில் இருப்பவர்கள். இந்த தேவதைகளில் இருப்பவர், பிரத்யும்ன நாமக பகவந்தன் என்று அன்புடன் எப்போதும் நினைக்க வேண்டும். 

***

No comments:

Post a Comment