#12 - பஞ்சமஹாயக்ஞ சந்தி
ஈரெரடு3ஷத1 த்யஷ்டதி4க ஹதி3
நாருஸாவிர ரூப சர்வ ஷ
ரீரதொ3ளு ஷப்தா3தி3க3ள தி4ஷ்டானதொ3ளகி3ப்ப |
மாருத1ர நாகா3தி ரூப1தி3
மூரனெ கு3ணமானி ஸ்ரீது3
ர்கா3 ரமண வித்4யா கு1மோஹவ கொ1டு3வ க1ரணக்கெ ||12
மாருதனு = வாயுதேவர்
நாகாதிரூபதி = நாக முதலான உபவாயு ரூபமாக
ஸர்வ ஷரீரதொளு = அனைத்து பிராணிகளின் சரீரத்தில் இருந்து
ஷப்தாதிகள = ஷப்த, ஸ்பர்ஷாதி தன்மாத்ரா குணங்களின்
அதிஷ்டானதொளகெ = சன்னிதானத்தில் (அவர்களில்)
ஈரெரடு ஷத த்யஷ்டதிக ஹதினாரு சாவிர ரூப = (2*2*100 = 400) + 16 + 16,000 = 16416 ரூபங்கள்
இப்ப = இருக்கிறான்
மூரனெ குணமானி = மூன்றாம் குணமான தமோ குணத்தின் அபிமானியான
ஸ்ரீதுர்கா ரமண = ஸ்ரீதுர்காபதியான (மேற்சொன்ன வாயுரூபங்களின் அதிஷ்டானங்களில் இருந்துகொண்டு)
கரணக்கெ = இந்திரியங்களுக்கு
குமோஹவ = அஞ்ஞானாதி மோகங்களைக் கொடுக்கிறான்.
தேகத்தில், தசபிராணர்களை சிந்திக்க வேண்டுமென்று சொல்கிறார். இதில் ‘பிராணாபான விக்யாஞ்ச பிங்களாயாஞ்ச சர்வஷ:’ என்னும் வாக்கியத்திற்கேற்ப இளா, பிங்களா, முதலான நாடிகளில் பிராண அபானாதி வாயுகள் இருக்கிறார்கள் என்னும் விஷயம் முன்னால் சொல்லப்பட்டிருக்கிறது. நாகாதி உபபிராணர்கள் இந்த சரீரத்தில் எங்கு இருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கவில்லை. இந்த பத்யத்தினால் அவற்றை மேலும் விளக்குகிறார்.
நாக நா=5 க=3 53 35
க்ருகள க்ரு=3 க=1 ள=9 319 913
கூர்ம கூ=1 ர்ம=7 17 71
தேவதத்த தே=3 வ=4 த=3 த்த=2 3432 2343
தனஞ்சய த=4 ந=5 ஞ்=0 ஜ=3 ய=1 45031 13054
மொத்தம் : 16416 ரூபங்கள்
இப்படியாக 16416 நாகாதி பிராணங்களில், தமோ குணாபிமானி ஸ்ரீதுர்காதேவியின் பதியான பரமாத்மன் இருந்து தாமசர்களின் ஷப்தாதி மாத்ரா குணங்களுக்கு காரணமான தாமிஸ்ர, அந்ததாமிஸ்ர, மஹாமோஹ, மோஹ, தமஸ் என்னும் அஞ்ஞானங்களில் அவர்களை ஈடுபடுத்துகிறான்.
***
No comments:
Post a Comment