ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Saturday, May 2, 2020

#28 - விபூதி சந்தி

#28 - விபூதி சந்தி


வாரிஜ ப4வாண்ட3வெ ஸுமண்ட1
மேருகி3ரி ஸிம்ஹானவு பா4
கீ3ரதி4யெ மஜ்ஜனவு திக்3வஸ்த்ரக3ளு நுடி மந்த்ர |
பூ4ருஹஜ ப2ல பு1ஷ்ப க3ந்த4
மீர சஷிரவி தீ31 பூ4ஷண
தாரகெக3 ளெந்த3ர்ப்பிலு கைகொண்டு3 மன்னிஸு||28


வாரிஜ பவாண்டவெ = இந்த பிரம்மாண்டமே
சுமண்டப = சிறந்த மண்டபம்
மேருகிரி = மேரு பர்வதம்
சிம்ஹாசனவு = சிம்மாசனம்
பாகீரதியெ = கங்கையின் தண்ணீரே
மஜ்ஜன = அபிஷேகம்
திக்வஸ்த்ரகளு = திசைகளே வஸ்திரங்கள்
நுடி = பேச்சுக்களே மந்திரங்கள்
பூருஹஜ = தானாக வளர்ந்த மரங்களில் இருக்கும் பூ, பழங்களே
ஸமீர = காற்று
கந்த = சுகந்தம்
ஷரீரவெ = சந்திர சூர்யர்களே தீபங்கள்
தாரககளே = நட்சத்திரங்களே
பூஷண = ஆபரணங்கள்
எந்தர்ப்பிஸலு = என்று சமர்ப்பிக்க
கைகொண்டு = ஸ்வீகரித்து
மன்னிஸுவ = நம் அபராதங்களை மன்னிப்பான்

பிரம்மாண்டமே ஸ்ரீபரமாத்மனின் மண்டபம். மேரு மலையே சிம்ஹாசனம். கங்கை நதியே ஸ்னானத்திற்காக நீர். திசைகளே வஸ்திரங்கள். பேச்சுக்களே மந்திரங்கள். மரங்களில் வளரும் பூ, பழங்களே தேவருக்கு பூ, புஷ்பங்கள். வீசும் காற்றே சுகந்தம். சந்திர சூரியரே தீபங்கள். நட்சத்திரங்களே ஆபரணங்கள் என்று நினைத்து பரமாத்மனை மானஸ பூஜை செய்து சமர்ப்பித்தால், பரமாத்மன் அவற்றை ஏற்றுக்கொண்டு நம் அபராதங்களை மன்னித்து நமக்கு அருள்கிறான். 

***

No comments:

Post a Comment