ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Monday, May 4, 2020

#32 - விபூதி சந்தி

#32 - விபூதி சந்தி
வீதப4ய நாராயண சது
ஷ்பாது தானெந்தெ3னிஸி தத்த
ஜ்ஜாதி த4ர்ம சுக2ர்மகள தா மாடி3 மாடி3ஸு|
சேதனர ஒளஹொரகெ3 ஓத
ப்ரோத னாகித்தெ3ல்லரிகெ3
ம் ப்ரீதியலி த4ர்மார்த்த காமாதி33ள கொடு3திஹனு ||32

வீதபய = பயம் அற்றவனான 
நாராயண = நாராயண மூர்த்தி
சதுஷ்பாத = நான்கு பாதங்களைப் போல இருக்கும் நான் இந்த ஜாதி என்று சொல்லிக்கொண்டு
தத்தத் ஜாதி தர்மசுகர்மங்கள = பிராமண க்‌ஷத்ரியாதி தர்மங்களை அந்தந்த ஜாதிகளுக்கான செயல்களை 
தா மாடி மாடிஸுத = தான் செய்து, செய்விக்கிறான்
சேதனரொளகெ = அனைத்து சேதனர்களுக்குள்ளும்
ஓதப்ரோதனாகி = குறுக்கும் நெடுக்குமாக
எல்லரிகெ = அனைத்து ஜாதி மக்களுக்கும்
ஸம்ப்ரீதியலி = மிகவும் அன்புடன்
தர்மார்த்த காமகள = தர்மாதி புருஷார்த்தங்களைக் 
கொடுதிஹனு = கொடுக்கிறான். 

பயம் முதலான தோஷங்கள் அற்றவனான ஸ்ரீநாராயண மூர்த்தி, நான்கு பாதங்களைப் போல இருக்கும், பிராமணாதி ஜாதியரில், வாசுதேவாதி 4 ரூபங்களில் இருந்து, அந்தந்த ஜாதியருக்கேற்ற கர்மங்களை அனுசரித்து அந்தந்த செயல்களை செய்து, செய்வித்து, அனைத்து பிராணிகளின் உள்ளேயும் வெளியேயும் இருந்துகொண்டு, துணியில் நூல்கள் குறுக்கும் நெடுக்குமாக இருப்பதைப் போல அனைத்து இடங்களிலும் வியாபித்தவாறு, அன்புடன் தர்மார்த்தாதி புருஷார்த்தங்களை வழங்குகிறான். 

***

No comments:

Post a Comment