ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Saturday, May 30, 2020

#10 - பஞ்சதன்மாத்ர சந்தி

#10 - பஞ்சதன்மாத்ர சந்தி


ஸுருசி ஷார்வரிகரனெனிஸி ச
ங்கருஷண ப்ரத்3யும்ன ஷஷி பா4
ஸ்கர ரொளகெ அரவத்ததி3க முன்னூரு ரூபத3லி |
கரெஸிகொம்ப3னு அஹ: சம்வ
த்ஸரனெனிப சுவிஷிஷ்ட நாமதி3
அரிதவரிகா3ரோக்ய பா4க்யவனீவனந்த3மய ||10

சுருசி ஷார்வரிகரனெனிஸி = சுருசி, ஷார்வரிகர என்னும் நாமங்களால், சங்கர்ஷண, பிரத்யும்ன ரூபங்கள்
ஷஷி பாஸ்கர ரொளகெ = சூர்ய, சந்திரர்களுக்குள்
அரவத்ததிக முன்னூரு ரூபதலி = 360 ரூபங்களில்
அஹ: = பகல் என்று அழைத்துக்கொண்டும்
சம்வத்ஸர நெனிபனு = சம்வத்ஸர என்று அழைத்துக் கொள்பவனும்
விஷிஷ்ட நாமதலி = இப்படி பற்பல நாமங்களில் அழைத்துக்கொண்டு
அரிதவரிகெ = அறிந்தவர்களுக்கு
நந்தமய = ஆனந்த ஸ்வரூபன்
ஆரோக்ய பாக்யவனீவ = ஆரோக்யத்தை, செல்வத்தை
ஈவ = கொடுக்கிறான்.

சந்திர சூர்யர்களில் பகவத் உபாசனையை எப்படி செய்யவேண்டும் என்று சொல்கிறார். ஆனந்தமயனான சங்கர்ஷணன், சுருசி நாமகனாகி, சூர்யனிலும், ப்ரத்யும்னன் ஷார்வரிக நாமகனாகி சந்திரனிலும் இருந்து, 360 பகல்கள் என்று அழைக்கப்பட்டும், 360 இரவு என்று அழைக்கப்பட்டும், மேலும், சம்வத்ஸர என்றும் அழைத்துக்கொண்டும் இருக்கிறான். இப்படி பற்பல நாமங்களால் அழைத்துக் கொள்கிறான் என்று அறிந்து, உபாசனை செய்பவர்களுக்கு ஆரோக்கியத்தை, செல்வத்தைக் கொடுத்து அருள்கிறான்.


***

No comments:

Post a Comment