#34 - பஞ்சமஹாயக்ஞ சந்தி
***
மூலரூபனு மனதொ3ளிஹ ஸ்ரவ
நாலியொளகி3ஹ மத்ஸ்ய கூர்மனு
கோலரூபனு த்வக்ரசன தொளகி3ப்ப நரசிம்ஹ |
பா3லவடு1 வாமனனு நாஸிக1
நாளதொ3ளு வத3னத3லி பா4ர்க்க3வ
வாலிப4ஞ்ஜன ஹஸ்த1தொ3ளு பாத3த3லி ஸ்ரீகிருஷ்ண ||34
மூலரூபனு = ஸ்ரீமன் நாராயணன்
மனதொளு = மனதில்
இஹ = இருக்கிறான்
ஸ்ரவண = காதுகளில்
ஆலியொளகெ = கண்களில்
மத்ஸ்யகூர்மனு = மத்ஸ்ய, கூர்மரூபி இருக்கிறான்.
கோலரூபனு = வராஹரூபி
த்வக் = த்வக் இந்திரியத்தில் இருக்கிறான்.
ரசனதொளகெ = நாக்கினில் இருக்கிறான்
நரசிம்ஹ = நரசிம்ம ரூபனாக
இப்ப = இருக்கிறான்
பாலவடு வாமனனு = பாலபிரம்மசாரியான வாமனன்
நாஸிக நாளதொளு = மூக்கின் துளைகளில்
வதனதலி = வாக் இந்திரியத்தில்
பார்க்கவ = பரசுராமன்
வாலிபஞ்சன = ஸ்ரீராமன்
ஹஸ்ததலி = கைகளில்
பாததலி = கால்களில்
ஸ்ரீகிருஷ்ண = ஸ்ரீகிருஷ்ண ரூபி
இருக்கிறான்.
சந்தியை முடிக்கும் தாசராயர், மனஸ் சேர்த்து 11 இந்திரியங்களில், மூலரூபத்தின் தசாவதாரங்களை சிந்தித்தால், பகவத் ப்ரசாதம் கிடைக்கிறது என்று, கடைசி இரு பத்யங்களில் சொல்கிறார்.
மனதில், மூலரூபியான ஸ்ரீமன் நாராயணன்
இருக்கிறான்.
காதுகளில், மத்ஸ்ய ரூபி;
கண்களில் கூர்ம ரூபி;
சரீரத்தில் வராக ரூபி;
நாக்கினில் நரசிம்ம ரூபி;
மூக்கினில் பால பிரம்மசாரியான வாமன ரூபி;
வதனத்தில் பரசுராம ரூபி;
கைகளில் வாலியைக் கொன்றவனான ஸ்ரீராம ரூபி;
கால்களில் ஸ்ரீகிருஷ்ணரூபியும் இருக்கின்றனர்.***
No comments:
Post a Comment