#7 - பஞ்சதன்மாத்ர சந்தி
ஈரெரடு தே3ஹோர்மி பூ4தக3
நாரதி4கத3ஷ ருக்3வினுத ல
க்ஷ்மீரமண விஷ்ண்வாக்ய ரூபதி3 சது:ஷஷ்டிகலா
தா4ரக1னு தானாகி3 பி3ரம்ம பு
ராரி முக்யரொளித்து ஸதத வி
ஹார மாள்பனு சது:பாதா3ஹ்வயதி3 லோகதொ3ளு ||7
ஈரெரடுதேஹ = மேற்சொன்ன, ஸ்வரூபதேஹாதி 4 தேகங்களால் கூடிய ஜீவனின் ஸ்தூல சரீரம்
ஊர்மிபூதகளாரு = அஸ்தி, ஜாயதெ, பரிணமதெ, விவர்ததே, அபக்ஷீயதெ, விவஷ்யதெ என்னும் 6 அலைகள் கூடிய, இத்தகைய அலைகளால் கூடிய தேகத்தில்
சது:ஷஷ்டிகலா = 64 கலைகளால் கூடிய
தாரகன் = காப்பாற்றுபவன் அல்லது அனைவருக்கும்
ஆதாரமானவன்
தானாகி, ஆரதிக தஷருக்வினுத = 16 ரிக்குகளால் கூடிய புருஷ சூக்தத்தினால் கூடியவனான ஸ்ரீலட்சுமி நாராயணன்
லட்சுமிரமண விஷ்வாக்ய ரூபதி = லட்சுமிபதியானவன், விஷ்ணு நாமகனான ரூபத்தினால்
பிரம்ம புராரி முக்யரொளித்து = பிரம்ம, ருத்ர, ஆகியோர்களில் இருந்துகொண்டு
சது:பாதாஹ்வயதி = தர்ம, சத்ய,
தயா,
தான என்னும் 4 பாதங்களில் தர்மபூதனாக
லோகதொளு = இந்த உலகத்தில்
ஸதத = எப்போதும், எல்லா காலங்களிலும்
விஹாரமாள்பனு = நடமாடுகிறான் (செயல்களை செய்கிறான்).
பிரம்மாதி தேவதைகளில் 4 பாத தர்மங்களை பின்பற்றியவாறு, 64 கலைகளையும் தரித்தவனாக இருக்கும்
பகவத் ரூபோபாசனையை சொல்கிறார்.
பிரம்மாதி அனைத்து தேவதைகளுக்கும், ஸ்வரூப, லிங்க, அனிருத்த, ஸ்தூல என்னும் 4 தேகங்கள் உண்டு. இதில் 6 விதங்கள் இருக்கின்றன. அவை :
1. அஸ்தி: லிங்க அனிருத்த தேகங்களுடன்
ஸ்தூல தேகத்தை அடைவதற்கு கிழக்கில் இருப்பது
2. ஜாயதி: ஸ்தூலதேகத்தைப் பெறுவது
3. பரிணயதி: ஷைஷவ அவஸ்தையைக் கடப்பது
4. விவர்த்ததி : யௌவனத்தை அடைவது
5. அபேக்ஷியதி : உடல் மெலிவது
6. வினஷ்யதி : அழிவது
என்னும் 6 அலைகள் உண்டு. இவற்றில், பிரம்ம வாயு சரஸ்வதி பாரதியர்களுக்கு மட்டும் கர்ப்ப பிரவேசம் இல்லை.
பிரம்மதேவருக்கு அவதாரமே இல்லை. வாயுதேவரின் அவதார த்ரயங்களிலும், சுக்லஷோணித சம்பந்தத்தால் அவர் பிறப்பது இல்லை என்று அவரது
சரித்திரத்திலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம். ஆஞ்சனேய அவதாரத்தில், வாயுதேவர் பழத்தைக் கொடுத்தார் என்றும், அவர் மூலமாகவே அஞ்சனா கர்ப்பம் தரித்தாள் என்று சொல்லியிருப்பர்.
சுக்லஷோணித சம்பந்தமானால் மட்டுமே கர்ப்பத்தில் ஸ்தூல
தேகம் உற்பத்தி ஆகும். அது இல்லாமல், இந்த உலகத்தில் பிறக்க
வேண்டுமெனில், தம் விருப்பத்தினால், தம் நிஜ ரூபத்தினாலேயே ஒரு
கர்ப்பத்தில் பிறந்தார் என்று நிச்சயமாகிறது.
கலிலம் ஏகராத்ரேண பாஞ்சராத்ரேண புத்துதம் |
தஷராத்ரேன கர்கந்து:பேஷ்யண்டம் வாதத:பரம் ||
வாஸேனது ஷிரோத்வாப்யாம் பாஹ்வாங்க்ராத்யங்க விக்ரஹ: ||
பாகவத 3ம் ஸ்கந்தத்தில் வரும் இத்தகைய
வாக்கியங்களால், ஓர் இரவில் சுக்லஷோணிதம் கலக்கிறது. 5 நாட்களில் நுரைகள் தோன்றும். 10 நாட்களில் வீங்கிய கண்களைப் போல
திடமாகிறது. பிறகு, பேஷே என்னும் உறையினால் சுற்றப்பட்டு, உலகத்தைப் போல வளர்கிறது. 1 மாதத்தில் தலை வருகிறது. 2ம் மாதத்தில் கை, கால்கள் முதலான அங்கங்கள் தோன்றுகின்றன. -- இந்த வாக்கியங்களால், சுக்லஷோணித சம்பந்தத்தினாலேயே கர்ப்பம் உற்பத்தி ஆகிறது என்று தெளிவாகிறது.
அது இல்லாமல் ஆவதென்றால், தன் மகிமையினாலேயே, ரிஷிகளின் தபஸ் சக்தியினாலேயே, ஆகவேண்டுமே தவிர, வேறு வழி இல்லை. த்ருபதாதிகளின் உற்பத்தி சுக்லாதிகளின் சம்பந்தம் இல்லாமலேயே
ஆனாலும்,
அது அவர்களது சாமர்த்தியம் இல்லை. தபோமகிமை என்று அறியவேண்டும்.
வாயுதேவர், தன்னுடைய சுய மகிமைகளாலேயே, எவ்வித கர்ப்ப சம்பந்தமும் இல்லாதவாறு ஹனும பீம அவதாரங்களை எடுத்தார் என்று
அறியவேண்டும். மத்வவிஜயத்தில் ஸ்ரீமதாசார்யரின் ஜனனத்தைப் பற்றி ‘ராஜீவ சத்புரவரம் புவனாதிராஜோ நிஷ்காஸர்ய பரமஸௌபகவான்வீஷ’ - மத்யகேஹ பட்டரின் மனைவி கர்ப்பிணி ஆனபிறகு, சம்பூர்ண லட்சணத்துடன் கூடிய அந்த தேகத்தில் இருந்த ஜீவனை வெளியே எடுத்து, எப்படி தான் கைப்பற்றிய நாட்டின் அரசனை துரத்திவிட்டு வெற்றி பெற்ற அரசன், தான் கோட்டையில் எப்படி நுழைவானோ, அது போல வாயுதேவரும் அந்த சரீரத்தில்
பிரவேசம் செய்தார் என்று தெளிவாக வர்ணித்திருக்கிறார்.
திரௌபதி, தன் முந்தைய பிறவிகளான
இந்திரஸேனாதி அவதாரத்தில் நள ராஜனின் மகளாக பிறந்தார். அங்கு பாரதி தேவிக்கு
கர்ப்பாவஸ்தையை சிந்திக்க வேண்டாமா என்றால், அங்கும் பாரதிதேவி ஷச்யாதிகளால் பிரார்த்திதராகி, தாம் கர்ப்பத்திற்கு வந்ததால், ஸ்வதந்திரமாக அந்த கர்ப்பத்திற்கு
சம்பந்தப்படாமல், ஷச்யாதிகளுக்கு மட்டுமே, கர்ப்ப சம்பந்தத்தைக் கொடுத்தார்
என்று அறியவேண்டும். ஒரே கர்ப்பத்தில், ஷசி, ஷாமலா, உஷா,
பார்வதி என்னும் 4 தேவியர்களுடன் கூடி பாரதி தேவியர் வந்திருக்க, பாரதிதேவிக்கு மட்டும் கர்ப்ப சம்பந்தம் இல்லை, மற்ற ஷச்யாதி நால்வருக்கு இருக்கிறது என்று எப்படி சொல்கிறீர்கள் என்றால், தேங்காய் கொப்பரையாக இருக்கும்போது உடைத்தால், உள்ளிருக்கும் கொப்பரை எப்படி ஓட்டிற்கு சம்பந்தப்படாமல் இருக்கிறதோ, அது போல என்று சொல்லவேண்டும்.
இந்த தேகம் தன்னுடையது என்னும் அபிப்பிராயம்
ஷச்யாதிகளுக்கு இருந்ததால், அந்த கர்ப்ப சம்பந்தம் அவர்களுக்கு
மட்டுமே இருந்தது. அந்த தேகத்தின் மீதான அபிப்பிராயம், பாரதிதேவியருக்கு இல்லாததால், அவருக்கு கர்ப்ப சம்பந்தம் இல்லை
என்று அறியவேண்டும்.
பிரம்ம வாயு, சரஸ்வதி பாரதியரைத் தவிர, தாரதம்யத்தில் அடுத்து வருபவர்கள்
அனைவருக்கும் ஆறு அலைகளாலான அவஸ்தைகள் இருக்கிறது என்று அறியவேண்டும். பிரம்ம
வாயுகளுக்கு ஸ்வரூப, லிங்க, அனிருத்த தேகங்களைக் கொண்டிருத்தல்; ஸ்தூல தேக ப்ராப்தி ஆகியவை உண்டு.
ஆனால்,
கர்ப்பாவஸ்தைகள் இல்லை. வளர்வது, மெலிவது என நிலைகள் அவரது
தேகங்களுக்கு இல்லை என்றாலும், 100 ஆண்டு ஆயுள் குறைந்துகொண்டு
வருவதே அவருக்கான வளர்ச்சி / குறைவு நிலைகள் என்று அறியவேண்டும். இத்தகைய 4 தேகங்கள், 6 அலைகளாலான பிரம்மாதி அனைத்து சேதனர்களில் புருஷசூக்தத்தில்
வர்ணிக்கப்படுபவனான ஸ்ரீலட்சுமி ரமணனான ஸ்ரீபரமாத்மன் விஷ்ணு ரூபத்தால் வியாப்தனாக
இருந்து 64 கலைகளை தரித்திருக்கிறான்.
64 கலைகள் என்னவென்றால்:
1. அக்கரவிலக்கணம் - எழுத்திலக்கணம்
2. இலிகிதம் - எழுத்தாற்றல்
3. கணிதம் - கணிதவியல்
4. வேதம் - மறை நூல்
5. புராணம் - தொன்மம்
6. வியாகரணம் - இலக்கணவியல்
7. நீதி சாஸ்திரம் - நய நூல்
8. ஜோதிடம் - கணியக் கலை
9. தர்ம சாஸ்திரம் - அறத்துப் பால்
10. யோக சாஸ்திரம் - ஓகக் கலை
11. மந்திர சாஸ்திரம் - மந்திரக் கலை
12. சகுன சாஸ்திரம் - நிமித்தகக் கலை
13. சிற்ப சாஸ்திரம் - கம்மியக் கலை
14.வைத்தியசாஸ்திரம் - மருத்துவக் கலை
15. உருவ சாஸ்திரம் - உறுப்பமைவு
16. இதிகாசம் - மறவனப்பு
17. காவியம் - வனப்பு
18. அலங்காரம் - அணி இயல்
19. மதுர பாடனம் - இனிதுமொழிதல்
20. நாடகம் - நாடகக் கலை
21. நிருத்தம் - ஆடற் கலை
22. சத்தப்பிரும்மம் - ஒலிநுட்ப அறிவு
23. வீணை - யாழ் இயல்
24. வேணு (புல்லாங்குழல்)- குழலிசை
25. மிருதங்கம் (மத்தளம்)
26. தாளம் - தாள இயல்
27. அத்திரப் பரிட்சை - வில்லாற்றல்
28. கனகப் பரிட்சை - (பொன் நோட்டம்)
29. இரதப் பரிட்சை - (தேர் ஏற்றம் )
30. கஜப் பரிட்சை - (யானை எற்றம்)
31. அசுவப் பரிட்சை - (குதிரை ஏற்றம்)
32. இரத்தினப் பரிட்சை - மணி நோட்டம்
33. பூமிப் பரிட்சை - மண்ணியல்
34. சங்கிராம விலக்கணம் - போர்ப்
பயிற்சி
35. மல்யுத்தம் - கைகலப்பு
36. ஆகருடனம் (ஆகர்ஷணம்)-
கவர்ச்சியியல்
37. உச்சாடனம் - ஓட்டுகை
38. வித்து வேடனம் - (நட்பு பிரிக்கை)
39. மதன சாஸ்திரம் - மதன கலை
40. மோகனம் - மயக்குக் கலை
41. வசீகரணம் - வசியக் கலை
42. இரசவாதம் - இதளியக் கலை
43. காந்தருவ வாதம் - (இன்னிசைப்
பயிற்சி)
44. பைபீலவாதம் - (பிறவுயிர்மொழி)
45. கவுத்துவ வாதம் - மகிழுறுத்தம்
46. தாதுவாதம் - ( நாடி சாஸ்திரம்)
47. காருடம் - கலுழம்
48. நட்டம் (காணாமற்போன பொருளைக்
கண்டுபிடித்தல் அல்லது இழப்பறிகை)
49. மூட்டி (கைக்குள் மூடியிருக்கும்
பொருளைச் சொல்லுதல்;மறைத்ததையறிதல்)
50. ஆகாய கமனம் (வானத்தில் ஊர்ந்து
செல்லுதல்--வான் செல்கை)
51. பரகாய பிரவேஷம் (கூடுவிட்டுக் கூடு
பாய்தல்)
52. ஆகாயப் பிரவேஷம் ( ஆகாயத்தில்
மறைந்து கொள்வது--வான்புகுதல்)
53. அதிரிசியம் - தன்னுறு கரத்தல்
54. இந்திர ஜாலம் (செப்பிடு வித்தை, மாய வித்தை)
55. மகேந்திர ஜாலம் - பெருமாயம்
56. அக்கினி ஸ்தம்பம் (நெருப்பைச்
சுடாமல் கட்டல்--அழற் கட்டு)
57. ஜலஸ்தம்பம் (நீருக்குள் மூழ்கி
வெகு நேரமிருத்தல், நீரில் நடத்தல், நீரில் படுத்திருத்தல்)
58. வாயுஸ்தம்பம் - வளிக் கட்டு
59. திட்டி ஸ்தம்பம் - கண் கட்டு
60. வாக்கு ஸ்தம்பம் - நாவுக் கட்டு
61. சுக்கில ஸ்தம்பம் -
(விந்தையடக்கல்)
62. கன்னத்தம்பம் - புதையற் கட்டு
63. கட்கத்தம்பம் - வாட் கட்டு
64. அவத்தைப் பிரயோகம் - சூனியம்
இப்படியாக 64 கலைகளை தரித்திருப்பவனாக, பிரம்மாதி அனைத்து சேதனர்களில் இருந்துகொண்டு, தர்ம,
சத்ய,
தயா,
தான என்னும் 4 பாதங்களைக் கொண்ட தர்மத்தை நிறுவியவாறு, செய்தவாறு, சதுஷ்பாத என்று அழைத்துக் கொண்டு, அனைத்து உலகங்களிலும் நடமாடுகிறான்
(தன் செயல்களை செய்கிறான்).
***