#31 - விபூதி சந்தி
இருதிஹரு நாஸத்ய த3ஸ்ரரு
நிருருதியு யமத4ர்ம யமகி
ங்கரரு மேதி3னி காலம்ருத்யு ஷனைஸ்சராதிக3ளு |
கரெஸிகொம்ப3ரு ஷூத்4ரரெந்தன
வரத ஷூத்4ரரொளிப்ப ரிவரொள
க3ரவிதூ3ர னிருத்தனிகனெந்தரிது மன்னிபு1து3 ||31
நாஸத்யதஸ்ரரு = அஸ்வினி தேவதைகள்
நிரருதியு = திக்பாலகனான நிரருதி
யமதர்மன்,
யமகிங்கரர்கள்,
மேதினி = பூமி
காலம்ருத்யு,
ஷனைஸ்சராதிகளு = சனீஸ்வரன் முதலான தேவதைகள்
ஷூத்ரரொளு = நான்காம் வர்ணத்தவர்களில்
இருதிஹரு = இருக்கிறார்கள்
இவரொளகெ = இந்த தேவதைகளில்
அரவிதூர = தோஷங்கள் அற்றவனான அனிருத்தன்
மன்னிபுது = மரியாதை செய்யவேண்டும்.
நாஸத்யதஸ்ரர் என்னும் இருவர் அஸ்வினி தேவதைகள், சனீஸ்வராதி தேவதைகள், யமதர்மன், யமதூதர்கள், பூமி, காலம்ருத்யு, நிரருதி, இவர்கள் அனைவரும் ஜாதியில் நான்காம் வர்ணத்தவர் என்று நினைத்து, அந்த ஜாதிக்கு அபிமானி தேவதைகளாக, அவர்களில் இருக்கின்றனர். இவர்களில் தோஷங்கள் அற்றவனான அனிருத்தரூபி ஸ்ரீபரமாத்மன் இருக்கிறான் என்று மரியாதையுடன் நினைக்கவேண்டும்.
***
No comments:
Post a Comment