#25 - விபூதி சந்தி
மாதரிஷ்வனு தே3ஹரத2தொ3ளு
ஸுதனாகி3ஹ சர்வகாலதி3
ஸ்ரீதருணி வல்லப ரதிகனெந்தரிது3 நித்யதலி |
ப்ரீதியிந்த3லி போ1ஷிஸுத வா
தாதபாதி3க3ளிந்த3 அவிரத1
ஈ த1னுவினொளு மமதெ1 பி3ட்டிஹனவனெ மஹயோகி3 ||25
மாதரிஷ்வனு = வாயுதேவர்
தேஹரததொளு = தேகம் என்னும் இந்த ரதத்தில்
சர்வகாலதி = அனைத்து காலங்களிலும்
ஸூதனு = சாரதி
ஆகிஹ = ஆகியிருக்கிறான்.
ஸ்ரீதருணி வல்லபனு = ஸ்ரீதேவி என்னும் தருணியின் பதியான ஸ்ரீபரமாத்மன்
ரதிகனெந்தரிது = ரதத்தில் அமர்ந்திருக்கிறான் என்று அறிந்து
நித்யதலி = தினந்தோறும் (எப்போதும்)
ப்ரீதியிந்தலி = பக்தி விஸ்வாசங்களால்
வாதாத பாதிகளிந்தலி = காற்று வீசுவது முதலான செயல்களால்
அவிரத = திடமாக (இடைவிடாமல்)
போஷிஸு = நன்றாக கவனி
ஈதனுவினொளு = இந்த தேகத்தில்
மமதெ = அபிமானத்தை (ப்ரியத்தை)
பிட்டிஹனு = விட்டவன் (யார் விடுகிறார்களோ)
அவனே
மஹாயோகி = மஹா யோகி ஆகிறான்.
தேகம் என்னும் ரதத்தில் சாரதியாக இருப்பவர் வாயுதேவர். பாகவதத்தில் ‘மனோரஷ்மிபுத்திஸுதோ’ ‘புத்திந்து ஸாரதிம்வித்தி’ புத்தியை சாரதியாக சொல்லியிருப்பர். மேலும் ‘மூலவாயு ரக்ஷஸக்ஞஷ்சக்ரே த்வேஷபுண்யதுஷ்க்ருதி’ என்னும் ஆத்யாத்ம யோக வாக்கியத்திற்கேற்ப சக்கரத்தில் இருக்கும் அச்சாணியே வாயுதேவர் என்றும் சொல்லியிருப்பர். ஆனால், தாசராயரோ வாயுதேவரையே சாரதி என்கிறார். இதில் பரஸ்பரம் கருத்து வேறுபாடு வருகிறதே என்றால், அது அப்படியில்லை.
புத்தியை சாரதியாகி சொல்லியிருப்பது, வெறும் புத்தியை மட்டும் குறிப்பதல்ல. அபிமானி தேவதைகளையும் சொல்கின்றனர் என்று கருத வேண்டும். அப்படியானாலும், புத்திக்கு அபிமானி, உமா, ப்ருஹஸ்பதி ஆகியோர்களே தவிர, வாயுதேவர் இல்லையே என்றால், அதற்கு விளக்கம் இதுவே. புத்தியில் சித்த, புத்தி, அஹங்கார, மனஸ் என்று 4 பகுதிகள் உண்டு. சஞ்சலம் பிறக்கும் இடம் மனஸ். நான், எனது என்று சொல்வது அஹங்காரம். இது இப்படிப்பட்டது என்று தீர்மானம் செய்வது புத்தி. பகவத் பாதாரவிந்தங்களில் திடமாக நிற்கும் புத்தியே சித்தம் எனப்படுகிறது. புத்தியில் சுபுத்தி, துர்புத்தி என்று இரு பாகங்கள் உண்டு. புண்ய கர்மங்களில் நம்மை ஈடுபடுத்துவது சுபுத்தி. பாவ கர்மங்களில் நம்மை ஈடுபடுத்துவது துர்புத்தி. இந்த இரண்டும் அல்லாமல், வெறும் பகவந்தனை பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும் புத்தியே சித்த.
இப்படியாக சித்தத்திற்கும் புத்திக்கும் சிறிது வேறுபாடு இருந்தாலும், குருபாண்டவ நியாயத்தைப் போன்றது என்று சொல்லலாம். அது என்னவெனில், கௌரவர்கள், பாண்டவர்கள் இருவரும் குரு வம்சத்தில் பிறந்ததால் ‘கௌரவர்கள்’ என்னும் சொல், பாண்டவர்களுக்கும்கூட பொருந்தும். ஆனாலும் கௌரவர் என்னும் சொல் துரியோதனாதிகளை மட்டுமே குறிப்பதோடு நின்றுவிட்டது. ஆனால், பாண்டவ என்னும் சொல், கௌரவர்களைக் குறிப்பதில்லை. பாண்டுராஜனின் மக்கள் மட்டுமே பாண்டவர்கள் என்று குறிக்கிறது. இந்த பெயர் துரியோதனாதிகளுக்கு பொருந்தாது.
ஆகையால், புத்தியின் இன்னொரு பாகமே சித்தம் ஆனாலும், வெறும் பகவந்தனைப் பற்றி சிந்திக்கும் புத்திக்கு மட்டுமே சித்தத்வம் இருப்பதால், சித்த என்னும் சொல், புத்திக்கு சேர்வதில்லை. புத்தி என்னும் சொல் சித்தத்தையும் குறிக்கும். புத்தியை பகவந்தனிடம் ஈடுபடுத்தினால் அதுவே சித்தம் ஆவதால், அதனை சுபுத்தி எனலாம். இப்படியாக, பகவந்தனில் ஈடுபட்டிருக்கும் புத்தியிலிருந்து வேறுபட்டிருக்கும் சித்தத்திற்கு வாயுதேவரே அபிமானி. ஆகையால், இங்கு புத்தி என்பது சித்தத்தையும் மற்றும் சித்த என்னும் சொல், அபிமானியையும் குறிக்கும். இப்படியாக சிந்தித்தால், சித்தாபிமானியான வாயுதேவரே, சாரதி என ஆகிறது. ஆகையால், தாசராயரின் வாக்கியத்திற்கும், பாகவதாதிகளில் இருக்கும் வாக்கியத்திற்கும் வேறுபாடு இல்லை என்று அறியவேண்டும்.
அச்சாணியை வாயுதேவர் என்று சொல்லும் ஆத்யாத்ம யோகத்தின் வாக்கியத்தின்படி, அச்சாணி ரூபமாகவும், சாரதியாகவும் வாயுதேவரே இருக்கிறார் என்று சொன்னால் அதில் தவறு எதுவும் இல்லை.
ஸ்ரீபரமாத்மனே இந்த தேக ரதத்தில் அமர்ந்திருக்கிறார் என்று அறிந்து தினந்தோறும் அன்ன, பானாதிகளால் தினந்தோறும் இந்த தேகத்தைப் பார்த்துக்கொள். இந்த தேகம் என்னுடையது என்று நினைத்து, இந்திரிய அபிமானத்திற்காக மட்டும் சரீரத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டாம் என்கிறார். இந்த தேகம் பரமாத்மன் அமரும் ரதம். ஆகையால் இதை கழுவுகிறேன், ஆடை அணிகலன்களால் அலங்கரிக்கிறேன் என்று ரதம் கெடாமல் இருப்பதற்காக அன்ன, பானாதிகளால் நன்றாக பாதுகாப்பேன் என்று சிந்தித்து பார்த்துக் கொள். எனக்கு வெயில் ஆகாது, மழை பிடிக்காது என்று இந்திரிய அபிமானத்திற்காக தேக அபிமானத்தை செய்யாமல், பகவத்ப்ரீதிக்காக மட்டும் சரீர போஷணம் செய்தவாறு, வெயில், குளிர் ஆகியவற்றை சகித்துக்கொண்டு, நான் எனது என்னும் அபிமானத்தை விட்டு இருப்பவன் யாரோ, அவனே மஹாயோகி.
***