ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Sunday, May 31, 2020

#11 - பஞ்சதன்மாத்ர சந்தி

#11 - பஞ்சதன்மாத்ர சந்தி


ஏகபஞ்சாஷத் வரணக3
மாகளத்ரனு சர்வரொளக3
வ்யாக்ருதா காஷாந்த வ்யாபிஸி நிக3மததி13ளனு |
வ்யாகரண பா4ரதமுகா2தி அ
நேக சாஸ்திர புராண பா4ஷ்யா
நீக13ள கல்பிஸி மனோவாங்மய நெனிஸிகொம்ப3 ||11

ஏகபஞ்சாஷத் வர்ணகத = அ முதலான 51 எழுத்துக்களின் தலைவனான
மாகளத்ரனு = லட்சுமிபதி
சர்வரொளகெ = அனைவருக்குள்ளும், வெளியேயும்
அவ்யாக்ருதா காஷாந்த = அவ்யாக்ருத ஆகாஷத்தின் வரை
வியாபிஸி = நிலைத்திருந்து
நிகமததிகளனு = வேத சமூகங்களை
வ்யாகரண = வியாகரண சாஸ்திரங்களை
பாரத முகாத்யனேக = பாரதத்திலிருந்து துவங்கி அனேக
புராண, பாஷ்யானீதகள = புராண, பாஷ்யங்களின் சமூகங்களை
கல்பிஸி = கற்றுக்கொடுத்து
மனோவாங்மய = மனோமயன் என்று
எனிஸிகொம்ப = சொல்லிக் கொள்கிறான்.

அ-காரத்திலிருந்து அனைத்து எழுத்துக்களிலும் வியாபித்திருந்து, அனைத்து சொற்களிலும் வியாபித்து, மனோமயனாக இருப்பதை விளக்குகிறார்.

அகாராதி 51 எழுத்துக்களின் தலைவனாக, ஸ்ரீலட்சுமிரமணன் அவ்யாக்ருத முதல் ஆகாயத்தின் வரை, அனைத்து இடங்களிலும், அனைவரிலும் நிலைத்திருந்து, வேத, பாரதாதி அனைத்து சாஸ்திரங்களையும், அவரவரின் தகுதிக்கேற்ப புரிந்துகொள்ளுமாறு செய்து, மனோமய, வாங்மயனென்று அழைத்துக் கொள்கிறான். [எந்தவொரு பாஷ்யமானாலும், புராணாதிகள் ஆனாலும், 51 அகாராதி எழுத்துக்களையும் கொண்டிருக்கிறது ஆகையால், அஜாதி பெயர்களில் அனைத்து இடங்களிலும் நிறைந்திருக்கிறான் என்று பொருள்].


***

No comments:

Post a Comment