ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Wednesday, April 22, 2020

#9 - விபூதி சந்தி

#9 - விபூதி சந்தி


அஷ்ட13ள சத்ஹ்ருத3ய க1மலா
தி3ஷ்டிதனு தானாகி3 சர்வோ
த் க்1ருஷ்டமஹிமனு த1லக3ளலி சஞ்சரிஸு தொ1ளகி3த்து3 |
து3ஷ்டரிகெ3 து3ர்பு3த்தி3 கர்ம வி
சிஷ்டரிகெ3 சுக்ஞான த4ர்ம சு
பு1ஷ்டிகை3சுத1 ந்த1யிப நிர்து3ஷ்ட1 சுக2பூர்ண ||9


நிர்துஷ்ட = நிர்தோஷியான
சுகபூர்ண = பூர்ணானந்த ஸ்வரூபனான
ஸர்வோத்க்ருஷ்ட மஹிமனு = சர்வஸ்ரேஷ்ட மகிமைகளைக் கொண்டவனான ஸ்ரீபரமாத்மன்
அஷ்டதள = 8 தளங்களைக் கொண்ட
ஸத்ஹ்ருதய கமல = இதயம் என்னும் கமலத்தில்
அதிஷ்டிதனு = இருக்கிறான்
தளகளலி = எட்டு தளங்களில்
சஞ்சரிஸுத ஒளகித்து = இதய கமலத்தில் உள்ளேயிருந்து
துஷ்டரிகெ = அயோக்கியர்களுக்கு
துர்புத்தியன்னு = கெட்ட புத்தியை
கர்மவிசிஷ்டரிகெ = சத்கர்மங்களை செய்யும் சத்பக்தர்களுக்கு
சுஞ்ஞானதர்ம = உத்தமமான தர்மத்தை
தர்மபுத்தியன்னு = நற்புத்தியை
சம்புஷ்டிகைசுத = நன்றாக புரியுமாறு கொடுத்து
சந்தெயிப = சமாதானப் படுத்துகிறான்.

முந்தைய பத்யத்தில், பூஜை சாமான்களில் இருக்கும் விபூதி ரூபங்களை சொல்லியவாறு, இப்போது இதய கமலத்தில் இருக்கும் பகவத் விபூதி ரூபத்தை சொல்கிறார். இதய கமலத்தின் எட்டு தளத்தில் சஞ்சரித்தவாறு, தோஷங்கள் அற்ற, பூர்ணானந்தமயனான, சர்வோத்க்ருஷ்ட மகிமையுள்ள ஸ்ரீஹரி, அந்த கமலத்தில் உள்ளே இருந்துகொண்டு, தமோ யோக்யர்களுக்கு துர்புத்தியையும், சத்கர்மங்களை செய்பவர்களுக்கு சுக்ஞான தர்மங்களையும் அதிகப்படுத்தி, மக்களை சமாதானம் செய்கிறார்.

***

No comments:

Post a Comment