#17 - விபூதி சந்தி
சதுரவித4 புருஷார்த்த2 படெ3வரெ
சதுரத3ஷ லோக1க3ள மத்4யதொ3
ளித1ரு பா1யக3ளில்ல நோடலு சகலசாஸ்திரத3லி |
ஸதத விஷயேந்திரயக3ளலி ப்ரவி
ததனெனிஸி ராஜிஸுவ லகுமி
பதிகெ3 ஸர்வஸமர்ப்பணெய மஹபூஜெ ஸது3பாய ||17
சதுரவித புருஷார்த்த படெவரெ = தர்ம, அர்த்த, காம, மோட்ச என்னும் நான்கு புருஷார்த்தங்களைப் பெறவேண்டுமெனில்
சதுர்தஷ லோககள மத்யதொள் = 14 உலகங்களின் நடுவில்
சகல சாஸ்திரதலி = அனைத்து சாஸ்திரங்களில்
நோடலு = பார்த்தால்
இதருபாயகளில்ல = வேறு உபாயங்கள் இல்லை
ஸதத = எப்போதும்
விஷயேந்திரியகளலி = விஷய சுகானுபவத்திற்கு காரணங்களான ஞானேந்திரிய, கர்மேந்திரியங்களில்
ப்ரவிததனெனிஸி = வியாப்தன் என்று நினைத்து
ராஜிஸுவ = ஒளிர்ந்து கொண்டிருக்கும்
லகுமிபதிகெ = லட்சுமிபதிக்கு
ஸர்வஸமர்ப்பணெய = அனைத்தையும் சமர்ப்பணம் செய்யவேண்டும் என்பதே
மஹபூஜெ சதுபாய = மகாபூஜை சரியான வழியாகும்
சகல சமர்ப்பணையினால் பரமாத்மனை தியானம் செய்வதைவிட மிகப்பெரிய சாதனம் வேறு எதுவும் இல்லை என்று சொல்கிறார். தர்ம, அர்த்த, காம, மோட்ச என்னும் நான்கு புருஷார்த்தங்களைப் பெறவேண்டுமெனில், இந்த 14 உலகங்களில் எந்த நற்சாஸ்திரங்களைத் தேடினாலும், ஞானேந்திரிய கர்மேந்திரியங்களில், தத்ரூபியாகி, தன் நாமங்களால் அந்தந்த இந்திரியங்களில் வியாப்தனான பரமாத்மனுக்கு, அந்தந்த இந்திரியங்களால் செய்த புண்ணிய பாபாதிகள் அனைத்தையும் சமர்ப்பணம் செய்வது என்பது மிகப்பெரிய மகாபூஜையே, இதைத்தவிர வேறு உபாயம் இல்லை.
***
No comments:
Post a Comment