#30 - வியாப்தி சந்தி
அதம மானவனோர்வ = அதமனான மனிதன் ஒருவன்.
மந்த்ரௌஷகளனு = மந்திர, மாத்திரைகளை
தானரிது = தான் அறிந்து
பாவக உதககள = நெருப்பு, தண்ணீரின்
சம்பந்தவில்லதெ = சம்பந்தம் இல்லாமல்
அதரொளகெ = அந்த நெருப்பு மற்றும் தண்ணீரில் இருக்கிறான்.
பதுமஜாண்டோதரனு = பிரம்மாண்டத்தையே வயிற்றில் வைத்துக் கொண்டிருக்கும் பரமாத்மன்
சர்வர ஹ்ருதயதொளகிரெ = அனைவரின் இதயத்தில் இருக்கிறான்
காலகுணகர்மத = கிருத த்ரேதாதி யுககாலங்களில், சத்வாதி குணங்களில், புண்ய பாபாதி கர்மங்களில்
அல்லது
கால = வசந்த க்ரீஷ்மாதி காலங்களில், அதற்கேற்ப குணங்கள் என்றால் வெயில், மழை ஆகியவை, கர்மம் என்றால் வெயிலுக்கு
குடை பிடிப்பது. விசிறியால் விசிறிக் கொள்வது ஆகியவை.
கலுஷ = அந்தந்த காலத்திற்கேற்ப செய்யும் செயல்களால் வரும் கஷ்டங்கள்
நிரஞ்சனகெ = தோஷங்கள் அற்றவனான ஸ்ரீஹரிக்கு இவை சம்பந்தம் ஆகுமோ? ஆகாது என்று பொருள்.
அத4ம மானவனோர்வ மந்த்ரௌ
ஷத3க3ளனு தா1னரிது3 பா1வக1
உத3க1க3ள சம்பந்தவில்லதெ இப்பனதரொளகெ |
பது3மஜாண்டோதரனு சர்வர
ஹ்ருத3யதொளகி3ரெ கா1ல கு3ண க
ர்மத க1லுஷ சம்பந்தவாகுவதே
நிரஞ்சனகெ3 ||30
அதம மானவனோர்வ = அதமனான மனிதன் ஒருவன்.
மந்த்ரௌஷகளனு = மந்திர, மாத்திரைகளை
தானரிது = தான் அறிந்து
பாவக உதககள = நெருப்பு, தண்ணீரின்
சம்பந்தவில்லதெ = சம்பந்தம் இல்லாமல்
அதரொளகெ = அந்த நெருப்பு மற்றும் தண்ணீரில் இருக்கிறான்.
பதுமஜாண்டோதரனு = பிரம்மாண்டத்தையே வயிற்றில் வைத்துக் கொண்டிருக்கும் பரமாத்மன்
சர்வர ஹ்ருதயதொளகிரெ = அனைவரின் இதயத்தில் இருக்கிறான்
காலகுணகர்மத = கிருத த்ரேதாதி யுககாலங்களில், சத்வாதி குணங்களில், புண்ய பாபாதி கர்மங்களில்
அல்லது
கால = வசந்த க்ரீஷ்மாதி காலங்களில், அதற்கேற்ப குணங்கள் என்றால் வெயில், மழை ஆகியவை, கர்மம் என்றால் வெயிலுக்கு
குடை பிடிப்பது. விசிறியால் விசிறிக் கொள்வது ஆகியவை.
கலுஷ = அந்தந்த காலத்திற்கேற்ப செய்யும் செயல்களால் வரும் கஷ்டங்கள்
நிரஞ்சனகெ = தோஷங்கள் அற்றவனான ஸ்ரீஹரிக்கு இவை சம்பந்தம் ஆகுமோ? ஆகாது என்று பொருள்.
அதமனான ஒரு மனிதன், மந்திர தந்திரங்களை அறிந்து, அதனால், நெருப்புக்கு நடுவில் போய் நிற்பது, நெருப்பை கையில் பிடிப்பது, நீரில் நிற்பது, அதன் மேல் நடப்பது ஆகியவற்றை மக்களுக்குக் காட்டி, நெருப்பின் சம்பந்தத்தால் ஆகும் சுடுதன்மை, நீரின் சம்பந்தத்தினால் ஆகும் மூழ்கும்தன்மை ஆகியவை இல்லாதிருப்பான். பிரம்மாண்டத்தையே தன் வயிற்றில் வைத்துக் கொண்டிருக்கும், தோஷங்கள் அற்ற ஸ்ரீபரமாத்மன், அனைத்து ஜீவர்களின் இதயத்தில் இருந்து, சிறியதான பரமாணு முதல் மிகப்பெரிய பதார்த்தங்கள் வரை இருக்கும் காலத்தை படைத்து, பிறந்து, வாழ்ந்து, முதுமையை அடைந்து, இறந்து, இருக்கும்வரை அரசாண்டு, யாகங்களை செய்து, போரில் மூர்ச்சையாகி, தோற்று, வெயிலால் வாடி, தாகத்தால் தவித்து - என அனைத்து கால குண கர்மங்கள், அதனால் வரும் கஷ்டங்கள் இவை அந்த பரமாத்மனுக்கு சம்பந்தம் ஆகுமோ? என்றும் ஆகாது.
***
No comments:
Post a Comment