#8 - விபூதி சந்தி
வாரியொள கி3ப்ப1த்து1 நாலகு1
மூரெரடு சாவிரத3மேல் மு
ந்னூரு ஹதி3னேளெனிப ரூபவு ஸ்ரீதுளசித3ளதி |
நூரு அரவத்தொந்து3 பு1ஷ்ப1தி3
மூரதி4கத3ஷ தீ3பதொ3ளு நா
நூருமூரு சுமூர்த்திக3ளு க3ந்த3தொ3ளகி3ருதிஹவு ||8
வாரியொளகெ = தண்ணீரில்
இப்பத்து நாலகு = 24 ரூபங்கள்
ஸ்ரீதுளசிதளதி = ஸ்ரீதுளசிதளத்தில்
மூரெரடு சாவிரத மேல் முன்னூரு ஹதினேளெனிப = 3+2=5. 5000+317 = 5317
நூறு அரவத்தொந்து = 161 ரூபங்கள்
புஷ்பதி = பூக்களில்
மூரதிகதஷ = 3+10 = 13 ரூபங்கள்
தீபதொளு = தீபத்தில்
நானூரு மூரு சுமூர்த்திகளு = 403 ரூபங்கள்
கந்ததொளகிருதிஹவு = சந்தனத்தில் இருக்கின்றன.
பூஜை சாமான்களில் இருக்கும் அகண்ட பகவத்ரூபங்களை 3ம் பத்யத்தில் சொல்கிறார் தாசராயர். இந்த பத்யத்தில் எந்தெந்த பொருட்களில் எவ்வளவு ரூபங்கள் உள்ளன என்பதை சொல்கிறார்.
தண்ணிரில், வாரி என்னும் சொல்லின் எண்ணிக்கையின்படி, வா = 4, ரி = 2. இதனை வலது பக்கத்திலிருந்து படித்தால், 24 ரூபங்கள் உள்ளன. ஸ்ரீதுளசி சொல்லின் எண்ணிக்கையின்படி ஸ்ரீ=7 து=1 ல=3 ஸி=5 அதாவது, 5317 ரூபங்கள். புஷ்பங்களில் பு=1 ஷ்=6 ப=1 அதாவது 161 ரூபங்கள் உள்ளன. தீபங்களில், தீ=3 ப=1 என்று 13 ரூபங்கள். கந்தத்தில் (சந்தனத்தில்) = க=3 ந்=0 த=4, அதாவது 403 ரூபங்கள் உள்ளன என்று அறியவேண்டும்.
***
No comments:
Post a Comment