ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Tuesday, April 21, 2020

#7 - விபூதி சந்தி

#7 - விபூதி சந்தி


பிம்ப3ரூபனு ஈ தெரதி ஜட
பொ1ம்ப3சுர மொத3லாத3 சுரரொள
கி3ம்பு3 கொ3ண்டி3ஹ னெந்த3ரிது த4ர்மார்த்த2 காமக3|
ஹம்ப3லிஸ த3னுதி3னதி3 விஷ்வ கு
டு1ம்பி3 கொ1ட்ட க1ணான்ன கு1த்ஸித
கம்ப3ளியெ சௌபா4க்ய வெந்த3வனங்க்ரிக3ள ப4ஜிஸு ||7


பிம்பரூபனு = பிம்பரூபியான ஸ்ரீபரமாத்மன்
ஈ தெரதி = முன்பு சொன்ன விதத்தில்
ஜட = ஜடரூபமான சல, அசல பிரதிமைகளில்
பொம்பஸுர = பொம்ம = தங்கத்தின். பஸுர = கர்ப்பம். அதாவது, ஹிரண்யகர்ப்பம் என்னும் பிரம்மதேவன் ஆகிய
சுரரொளகெ = தேவதைகளில்
இம்புகொண்டிஹனு = சஹஜ ரூபத்தால் நிலைத்திருப்பவன்
அரிது = என்பதை அறிந்து
தர்மார்த்தகாமகள = தர்மார்த்த காமங்களை
ஹம்பலிஸதெ = விரும்பாமல்
அனுதினதி = தினந்தோறும்
விஷ்வகுடும்பி = ஜகத்குடும்பியான ஸ்ரீபரமாத்மன்
கொட்டகணான்ன = கொடுத்த அரிசிகளை
குத்ஸிதகம்பளிய = மிகச்சிறிய கிழிந்த கம்பளி ஆடையை
சௌபாக்யவெந்து - இது நமக்கு சௌபாக்கியம் என்று நினைத்து
அவன = பரமாத்மனின் கமலங்களை வணங்கு.

முந்தைய பத்யங்களில் சொன்னதைப்போல, பிம்பரூபியான பரமாத்மன், சலாசல பிரதிமைகளில், அஹித சஹஜாதி விபூதியினாலும், பிரம்மாதிகளில் சஹஜவாத விபூதியினாலும் இருக்கிறான் என்று சிந்தித்து, தர்மார்த்த காமங்களை வேண்டாமல், நிஷ்காமத்தினால் தினந்தோறும் பஜித்தவாறு,, விஷ்வகுடும்பியான பரமாத்மன் கொடுத்த மிகச்சிறிய அளவிலான அரிசியானாலும்,, மிகவும் நைந்த / கிழிந்த கம்பளியானாலும், அதை பயன்படுத்தியவாறு, இதுவே நம் சௌபாக்கியம் என்று அறிந்து, இடைவிடாமல் எந்நேரமும் பரமாத்மனின் பாதகமலங்களை வணங்கு. இதுவே உனக்கு முக்திக்கான வழி.

***

No comments:

Post a Comment