ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Wednesday, April 15, 2020

#25 - போஜனரசவிபாக சந்தி

#25 - போஜனரசவிபாக சந்தி


3ணனெயில்லத பரமசுக2
த் கு3ணக3ணங்கள லேஷ லேஷகெ
எணெயெனிஸது ரமாப்ஜ பவ ஷக்ராதிக3ள சுக2வு |
உணுதுணுத மை மரெது க்ருஷ்ணா
ர்ப்பண வெனலு கைகொம்பனர்பக
ஜனனிபோ4ஜன சமயத3லி கை ஒட்டுவந்த33லி ||25

கணனெ இல்லத = எண்ணமுடியாத அளவிற்கு

பரமசுக சத்குணகணங்கள = பரமானந்த முதலான சத்குணங்களில்
லேஷலேஷக்கெ = பற்பல அம்சங்களில் ஒரே ஒரு அம்சமாவது
அப்ஜபவ = பிரம்மதேவர்
ஷக்ராதிகள = இந்திராதிகள்
எணெயெனிஸது = சமம் என்று சொல்லமுடியாது. 
உணுதுணுத = தான் போஜனம் செய்து கொண்டிருக்கும்போது
மை மரெது = பக்தியில் மெய்மறந்து
கிருஷ்ணார்ப்பணவெனலு = கிருஷ்ணார்ப்பணம் என்று சொல்லி அர்ப்பித்தால்
அர்பக = சிறுவன்
ஜனனி போஜன சமயதலி = தாய் தான் உண்ணும் சமயத்தில்
கை ஒட்டுவந்ததலி = கை நீட்டுவதைப் போல
கைகொம்பனு = ஏற்றுக் கொள்கிறான்

அபரிமிதமான சுக ஸ்வரூபனான ஸ்ரீபரமாத்மனிடம் இருக்கும் சத்குணங்களின் ஒரு அம்சம்கூட, ரமாபிரம்மாதிகளின் சுகத்திற்கு ஈடுசெய்வதற்கு சாத்தியமில்லை. இத்தகைய பரமாத்மனின் சேவை என்று நினைத்து, தான் போஜனம் செய்யும்போது, ஒவ்வொரு கை உண்ணும்போதும், பரமாத்மனின் ஸ்மரணையை செய்து, அந்த உணவினை பரமாத்மனுக்கு கிருஷ்ணார்ப்பணம் என்று சமர்ப்பித்தால், தாய் தான் உண்ணும்போது, குழந்தை அவள் அருகில் அமர்ந்து எச்சில் உணவினை ஏற்றுக்கொள்வது போல, நாம் கொடுப்பதை அவன் ஏற்றுக்கொள்கிறான்.

****


No comments:

Post a Comment