#18 - போஜனரசவிபாக சந்தி
***
மூரு சாவிரதர்த்தஷத மே
லீரதி4க1 ரூபக3ள த4ரிஸி ஷ
ரீரதொள கானந்த3மய நாராயாணாஹ்வயனு |
ஈரெரடு சாவிரத3மேல் மு
ந்னூருஐது3 சுரூபதி3ந்த3லி
பா4ரதீஷனொளிப்ப நவனீதஸ்த2 க்4ருத1தந்தெ ||18
நாராயணாஹ்வயனு = நாராயண நாமகன்
மூரு சாவிரதர்தஷத மேலீரதிக = 3052
ரூபகள தரிஸி = ரூபங்களை தரித்து
ஷரீரதொளகெ = நம் தேகங்களில்
ஆனந்தமய = ஆனந்தமய கோஷாதாரனாகி, ஆனந்த என்று அழைத்துக் கொள்கிறான்
ஈரெரடு சாவிரதமேல் முன்னூரு ஐது = (2+2)=4*1000= 4000 + 305 = 4305
சுரூபதிந்தலி = சிறந்த ரூபங்களால்
நவனீதஸ்த = வெண்ணையில் (மறைந்து) இருக்கும்
க்ருததந்தெ = நெய்யைப் போல
பாரதீஷனொளு = பாரதிரமணனான முக்யபிராண தேவரில்
இப்ப = இருக்கிறான்
ஆனந்த என்னும் சொல்லின் எண்ணிக்கை. ஆ=2 நன்=50 த=3. இதை வலப்புறமாக படித்தால் 3052 ஆகிறது. ஸ்ரீ நாராயணன் இப்படி 3052 ரூபங்களை தரித்து, தேகத்தில் ஆனந்தகோஷ தாரகனாக ஆனந்த என்னும் பெயரில் இருக்கிறான். இது போலவே, அனிருத்தாதி 5 ரூபியான பரமாத்மன்,
அன்ன= 101,
பிராண = 513,
மன = 55,
விக்ஞான = 584,
ஆனந்த= 3052
இவ்வளவு ரூபங்களிலும் இவை அனைத்தையும் கூட்டினால், 4305 என்றும் ஆகிறது. இவ்வளவு ரூபங்களால், வெண்ணையில் இருக்கும் நெய்யைப் போல பாரதிரமண முக்யபிராணனில் முக்யபிராணரூபியாக இருக்கிறான். வெண்ணையில் நெய் இருந்தாலும், அது நெய் போல தோன்றாமல், அதை காய்ச்சினால் மட்டுமே தெரியும். அதுபோலவே, பிராணதேவரிடம் பரமாத்மன் இருந்தாலும், முக்யபிராணரூபியாகவே பரமாத்மன் காணப்படுகிறான்.
***
No comments:
Post a Comment