ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Monday, April 20, 2020

#4 - விபூதி சந்தி

#4 - விபூதி சந்தி


கா13 கா1ஞ்சனதொளகெ3 ஷோபிப
ஆதி3தே1யாஸ்யன தெ1ரதி3 லகு
மீத4வ ப்ரதிதி3னதி3 ஷாலக்ராம தொ3ளகி3ப்ப |
ஐது சாவிரவதி41 மூவ
த்தைது3 மேலைனூரூ ரூபதி3
பூ44ரக3ளபி4மானி திவிஜரொளிப்ப னனவரத ||4

காத காஞ்சனதொளகெ = நன்றாக காய்ச்சிய தங்கத்தில்

ஷோபித = ஒளிரும்
ஆதிதேய = அதிதியின் மக்களான தேவதைகளுக்கு
ஆஸ்யனதெரதி = தலைவரான அக்னியைப் போல
லகுமிதவனு = லட்சுமிபதியான
ப்ரதிதினவு = அனைத்து நேரங்களிலும்
ஐது ஸாவிர மேலெ மூவத்தைததிக வைனூரு ரூபதி = 5535 ரூபங்களால்
ஷாலிகிராமதொளகெ இப்ப = சாலிகிராமத்தில் இருக்கிறான்
அனவரத = எப்போதும் எங்கும் நிலைத்திருப்பவன்
பூதரகளபிமானி = பர்வத அபிமானிகளான
திவிஜரொளு = கருட, சேஷ, ருத்ரரில்
இப்பனு = இருக்கிறான்.

முந்தைய பத்யத்தில் கூறிய பிரதிமை, சாலிகிராம ஆகியவற்றில் இருக்கும் பகவத் விபூதிகளை இங்கு விளக்கமாக சொல்கிறார். இந்த பத்யத்தில் சாலிகிராமத்தில் இருக்கும் பகவத்ரூபங்களை சொல்கிறார்.

பொதுவாகவே தங்கம் மிகவும் ஒளிர்ந்தவாறு இருக்கிறது. அதையே நெருப்பில் போட்டு காய்ச்சினால் எப்படி ஒளிருமோ, அதைப்போல, சாலிகிராமத்தில் பரமாத்மனின் விபூதியை அறியவேண்டும். அக்னிக்கு ஆதிதேயாஸ்ய என்று பெயர். அது எப்படியெனில், இந்திராதிகளுக்குக் கொடுக்க வேண்டிய ஆஹுதியை அக்னியில் கொடுப்பர். தேவதைகள் அக்னி மூலமாக ஆஹுதிகளைப் பெறுவர். ஆகையால், அக்னிக்கு தேவமுக என்ற பெயர் வந்தது. சாலிகிராம என்னும் சொல்லின் எண். ஷா=5 லி-3 க்+ரா=3+2=5, ம=5 இவற்றை வலது பக்கத்திலிருந்து படித்தால், 5535 வருகிறது. பகவந்தன் இவ்வளவு ரூபங்களால் சாலிகிராமத்தில் இருக்கிறான். 

இதைப்போல, பர்வதாபிமானிகளான கருட, சேஷ, ருத்ரர் அனைவரும்கூட இருக்கின்றனர். பர்வதாபிமானிகள், கருடாதிகள் என்னும் விஷயத்தில் (பாரத தாத்பர்ய நிர்ணய 20-68) ‘ஷிவம் சேஷம் கருடஞ்சாஹஸாபி பராவனாத்பர்வத நாமதேர்யா’ என்னும் வாக்கியமே ஆதாரம் ஆகும். இப்படி நீத விபூதிகளை சாலிகிராமத்திலும், விசேஷ விபூதிகளை கருடாதிகளிலும் சிந்திக்க வேண்டும். 

***


No comments:

Post a Comment