ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Saturday, April 18, 2020

#30 - போஜனரசவிபாக சந்தி

#30 - போஜனரசவிபாக சந்தி

ஐதுலக்‌ஷெம்பத்த1 ரொம்ப3
த்தாத சாவிரனேளுனூர்மே
லைது3 ரூப1வ த4ரிஸி போக்த்ருக3 போ4ஜ்ய னெந்தெனிஸி |
ஸ்ரீத4ரா துர்கா3ரமண பா1
தா3தி3 ஷிரப1ரியந்த வியாபி1ஸி
கா1து3கொண்டிஹ சந்தத ஜகன்னாத2விட்டலனு ||30

ஐதுலக்‌ஷெம்பத்த ரொம்ப த்தாத சாவிரனேளுனூர்மே லைது ரூபவ = 589705
ரூபவ தரிஸி = ரூபங்களை தரித்து
போக்த்ருக போஜ்ய நெந்தெனிஸி = உணவை உண்பவன் என்றும், அந்த உணவின் அன்னமயன் என்றும்
எனிஸி = பெயர் பெற்று
ஸ்ரீதரா துர்காரமண = ஸ்ரீதேவி, பூதேவி, துர்காதேவியரின் பதியான
ஜகன்னாதவிட்டலனு = தாசராயரின் பிம்பரூபியான ஜகன்னாதவிட்டலன்
பாதாதி ஷிரபர்யந்த = கால் முதல் தலை வரை
வியாபிஸி = மனிதனின் சரீரத்தில் வியாபித்து
காதுகொண்டிஹ = நம்மை காப்பாற்றுகிறான். 

ஸ்ரீ பூ துர்கா ரமணனான, நம் தாசராயரின் பிம்பரூபியான ஸ்ரீஜகன்னாதவிட்டலன், அன்னமயாதி கண்டரூபங்கள் 585400, அன்னாதி கண்ட ரூபங்கள் 4305 (ஆக மொத்தம் 589705) என உணவை உண்பவரில் அதாவது அவரின் பஞ்சபிராணர்களிலும், அந்த தத்வாபிமானி தேவதைகளிலும், ஜீவரிலும், அனைத்து இந்திரியங்களிலும், வியாப்தனாக இருக்கிறான். இது மட்டுமல்லாமல், போஜ்ய பதார்த்தங்களில் மொத்தம் 589705 ரூபங்களை தரித்து, பிராணிகளின் கால் முதல் தலை வரையிலும் நிலைத்திருந்து, எப்போதும் அவர்களை காத்துக் கொண்டிருக்கிறார். இப்படியாக பரமாத்மனை தியானித்தால், நாம் நிர்லிப்தராக பரமாத்மனை அடையமுடியும் என்று பொருள்.

இங்கு போஜனரசவிபாக சந்தி முடிவுற்றது.

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து

***

No comments:

Post a Comment