#22 - விபூதி சந்தி
உருபராக்ரம அரமனெகெ3 த3ஷ
கரணக3ளு கன்னடி3ய ஸாலுக3
ளரவிதூ3ரன சத்3விஹாரக்கெ1 சித்த1 மண்டபவு |
மரளிபீ3சுவ ஷ்வாஸக3ளு சா
மர விலாஸினி பு3த்தி4 தா3மோ
த3ரகெ சாஷ்டாங்க3 பிரணாமக3ளே ஸுஷயனக3ளு ||22
உருபராக்ரம = உரு = மிகச்சிறந்த பராக்ரமன = பராக்ரமசாலியான பரமாத்மனின்
அரமனகெ = நம் இதயம் என்னும் அரண்மனைக்கு
தஷகரணகளு = ஞானேந்திரியங்கள் 5, கர்மேந்திரியங்கள் 5 என மொத்தம் 10 இந்திரியங்கள்
கன்னடிய சாலுகளு = வரிசையாக இருக்கும் கண்ணாடிகள்
அரவிதூரன = தோஷங்கள் இல்லாதவனான ஸ்ரீஹரியின்
ஸத்விஹாரகெ = நன்றாக நடவடிக்கை செய்வதற்கு
சித்த = நம் சித்தம்
மண்டபவு = மண்டபம்
மரளிபீசுவ ஷ்வாஸகளு = திரும்பத்திரும்ப வீசும் ஸ்வாசங்கள்
சாமர = சாமரங்கள்
புத்தி = புத்தியே
விலாஸினி = வேசிப்பெண்
சுஷயனகளு = நாம் படுத்திருப்பதே
தாமோதரகெ = தாமோதரனுக்கு
சாஷ்டாங்க பிரணாமகளு = சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வதைப் போன்றதாகும்.
பஹு பராக்ரமசாலியான பரமாத்மனின் அரண்மனையப் போன்றதாகும், நம் இதயம். இதற்கு, ஞானேந்திரியம், கர்மேந்திரியம் என்னும் 10 இந்திரியங்கள் கண்ணாடியின் வரிசைகளைப் போன்று இருக்கின்றன. தோஷங்கள் அற்றவனான ஸ்ரீஹரி, நன்றாக நடவடிக்கைகளை செய்வதற்கு, நம் சித்தமே மண்டபமாக இருக்கிறது. திரும்பத்திரும்ப நாம் விடும் ஸ்வாசங்களே அவனுக்கான சாமரங்கள். புத்தியே வேசிப்பெண். நாம் படுப்பதே, தாமோதரனுக்கு நாம் செய்யும் சாஷ்டாங்க நமஸ்காரங்கள் என்று நினைக்க வேண்டும்.
***
No comments:
Post a Comment