#16 - போஜனரசவிபாக சந்தி
ஐது3சாவிரனூர இப்ப
த்தைது3 நாராயணன ரூபவ
தா த4ரிசிகொண் ட3னுதினதி ஆனந்தமயனெனிப |
ஐது3லக்ஷத மேலெ எம்ப3
த்தை1து3 சாவிர நால்கு1ஷதக3ள
லைது3 கோ1ஷாத்மக விரிஞ்ச்யாண்ட3தொ3ளு தும்பி3ஹனு ||16
நாராயணன் = நாராயணரூபியான ஸ்ரீபரமாத்மன்
ஐதுசாவிரனூர இப்பத்தைது = 5125
ரூபவ = ரூபங்களை
தா = தான்
தரிசிகொண்டு = தரித்து
அனுதினதி = தினந்தோறும் (எப்போதும்)
ஆனந்தமயனெனிப = ஆனந்தமய என்று தன்னை அழைத்துக் கொள்கிறான்
இதுகோஷாத்மக = அன்னமய, பிராணமய, மனோமய, விக்ஞானமய, ஆனந்தமய என்று ஐந்து கோஷாத்மகனாகி, அனிருத்த, பிரத்யும்ன, சங்கர்ஷண, வாசுதேவ, நாராயண என்னும் 5 ரூபங்களால்
ஐதுலக்ஷத மேலெ எம்பத்தைது சாவிர நால்குஷதகள = 585400 ரூபங்களில்
விரிஞ்சாண்டதொளகெ = பிரம்மாண்டத்தில்
தும்பிஹனு = நிலைத்திருக்கிறான்.
நாராயண என்பதை எண்ணிக்கையில் பார்த்தால், நா=5 ரா=2 ய=1 ண=5 என வருகிறது. இதை வலப்பக்கமாக படித்தால், 5125 ஆகிறது. ஸ்ரீபரமாத்மன் இவ்வளவு நாராயண ரூபங்களில் ஆனந்தமய என்று அழைத்துக் கொள்கிறான். ஆக பரமாத்மன், அன்னமய, பிராணமய, மனோமய, விக்ஞானமய, ஆனந்தமய என்னும் பெயர்களில் அனிருத்த, பிரத்யும்ன, சங்கர்ஷண, வாசுதேவ, நாராயண என்னும் 5 ரூபங்களைக் கொண்ட பரமாத்மன் மொத்தம் 585400 ரூபங்களில் இந்த பிரம்மாண்டத்தில் அனைத்து இடங்களிலும் வியாபித்திருக்கிறான்.
***
No comments:
Post a Comment