#20 - போஜனரசவிபாக சந்தி
***
மூல நாராயணனு ஐவ
த்தேளதி4க ஐனூரு ரூபவ
தா1ளி சர்வத்ரதி3 ஸமானனொளிப்ப சர்வக்3ஞ |
லீலெகை3வனு ஸாவிரத3 மே
லேளு னூர்ஹன்னொந்து3 ரூபவ
தா1ளி பஞ்சப்ராணரொளு லோக1க3ள ஸலஹுவனு ||20
மூல நாராயணன் = மூலரூபியான நாராயணன்
ஐவத்தேளதிக ஐனூரு ரூபவ = 557 ரூபங்களை
தாளி = தரித்து
சர்வத்ரதி = எல்லா பிராணிகளிலும்
சமானனொள் = சமான பிராண தேவருக்குள்
இப்ப = இருக்கிறான்
சர்வேஷ = அனைவருக்கும் ஈஷனான ஸ்ரீபரமாத்மன்
பஞ்சபிராணரொளு = பிராணாபானாதி பஞ்ச ப்ராணர்களில்
சாவிரத மேலேளுனூர்ஹன்னொந்து = 1711
ரூபவ தாளி = ரூபங்களை தரித்து
லீலெகைவனு = அனிருத்தாதி ரூபங்களால் சஞ்சரிக்கிறான்
லோககள = அனைத்து லோகங்களின் பிராணிகளை
சலஹுதிருவனு = காப்பாற்றுகிறான்.
சமான நாமக பிராணதேவருக்குள், ஸ்ரீமன் நாராயணன் சமான = ச=7 மா=5 ன=5, 557 ரூபங்களை தரித்து, அனைவரிடமும் வியாபித்திருக்கிறான். இப்படி சர்வேஸ்வரனான இந்த பரமாத்மன், அனிருத்தாதி ஐந்து ரூபங்களால், பிராண அபானாதி ஐந்து ரூபங்களில் முறையே,
பிராணனில் 53,
அபானனில் 511
வ்யானனில் 55
உதானனில் 535
சமானனில் 557,
என இவை அனைத்தையும் கூட்டினால், 1711 ரூபங்களை தரித்து, தன் லீலைகளால் உலக மக்களை காப்பாற்றுகிறான். ‘ப்ராணாபானா விடாயாஞ்ச பிங்களாயாஞ்ச சர்வஷ:’ என்னும் பாகவத 2ம் ஸ்கந்தத்தின் தாத்பர்ய வாக்கியத்திற்கேற்ப,
* மனிதர்களின் இளா, பிங்கள என்னும் நாடிகளில் ப்ராண, அபான நாமக வாயுதேவரும்
* நடுவில் இருக்கும் சுஷும்னா நாடியில் உதான வாயுதேவரும்,
* சந்தி நாடிகளில் சமான பிராணதேவரும்,
* தேகத்தில் அனைத்து இடங்களிலும் வியாபித்திருக்கும் நாடியில் வ்யான பிராணதேவரும் -
இருக்கிறார்கள் என்று அறியவேண்டும்.
***
No comments:
Post a Comment