#29 - வியாப்தி சந்தி
வேஷபாஷெகளிந்த = நாடகங்களில் ராம, கிருஷ்ண வேடங்களைப் போட்டு, தன் நடிப்பினாலும், வசனங்களாலும்
ஜனர = பார்த்துக் கொண்டிருக்கும் மக்களின்
ப்ரமோஷகைசுவ = மனதை ஈர்க்கும்
நடபுருஷனோல் = வேடம் போடும் மனிதர்களுக்கு
தோஷதூரனு = தோஷங்கள் இல்லாதவனான
பூதாத்ம = பவித்ரமான ஆத்மனைக் கொண்ட
பூர்ணானந்த ஞானமய = பூர்ணானந்தஞான ஸ்வரூபியான ஸ்ரீபரமாத்மன்
லோகதொளு = இந்த உலகத்தில்
பஹுரூப = பற்பல ரூபங்களை தரித்து. அதாவது ராம கிருஷ்ணாதி பல ரூபங்களை தரித்து, நடிப்பவர்களிலும்,
ரிஷிமுனிவர்களிலும் அந்தர்யாமியாக இருந்து பிம்பக்ரியைகளை நடத்தி.
மாதினலி = அந்தந்த ஜீவர்களின் தகுதிக்கேற்ப அவரவர்களில் நடவடிக்கைகளை செய்து
தோஷிசுவனு = மகிழ்விக்கிறான்.
அவரவர = அந்தந்த மக்களின்
மனதபிலாஷெகள = மனதில் இருக்கும் விருப்பங்களை
பூரைசுவ போஷிசுவ = நிறைவேற்றி அருள்வான்
***
வேஷ பா4ஷெக3ளிந்த3 ஜனர சு
தோ1ஷகை3சுவ நட1புருஷனோ
ல் தோ3ஷதூ3ரனு லோக1தொ3ளு ப4ஹுரூப மாதி1னலி |
தோ3ஷிசுவனவரவர மனதபி4
லாஷெக3ள பூரயிஸுத1னுதி3ன
போ1ஷிசுவ பூ1தா1த்ம பூர்ணானந்த3 ஞானமய ||29
வேஷபாஷெகளிந்த = நாடகங்களில் ராம, கிருஷ்ண வேடங்களைப் போட்டு, தன் நடிப்பினாலும், வசனங்களாலும்
ஜனர = பார்த்துக் கொண்டிருக்கும் மக்களின்
ப்ரமோஷகைசுவ = மனதை ஈர்க்கும்
நடபுருஷனோல் = வேடம் போடும் மனிதர்களுக்கு
தோஷதூரனு = தோஷங்கள் இல்லாதவனான
பூதாத்ம = பவித்ரமான ஆத்மனைக் கொண்ட
பூர்ணானந்த ஞானமய = பூர்ணானந்தஞான ஸ்வரூபியான ஸ்ரீபரமாத்மன்
லோகதொளு = இந்த உலகத்தில்
பஹுரூப = பற்பல ரூபங்களை தரித்து. அதாவது ராம கிருஷ்ணாதி பல ரூபங்களை தரித்து, நடிப்பவர்களிலும்,
ரிஷிமுனிவர்களிலும் அந்தர்யாமியாக இருந்து பிம்பக்ரியைகளை நடத்தி.
மாதினலி = அந்தந்த ஜீவர்களின் தகுதிக்கேற்ப அவரவர்களில் நடவடிக்கைகளை செய்து
தோஷிசுவனு = மகிழ்விக்கிறான்.
அவரவர = அந்தந்த மக்களின்
மனதபிலாஷெகள = மனதில் இருக்கும் விருப்பங்களை
பூரைசுவ போஷிசுவ = நிறைவேற்றி அருள்வான்
நாடகங்களில் ராம கிருஷ்ணாதி வேடங்களை தரித்து, நாடகங்களில் நடிக்கும்போது, பார்ப்பவர்களுக்கு அவர்கள் ராம கிருஷ்ணர்களைப் போலவே தோன்றுவதைப் போல, அவர்களின் மனதை ஈர்த்துவிடுவதைப்போல, தோஷங்கள் அற்றவனும், மங்களாத்மகனும், பூர்ணானந்த ஞானஸ்வரூபனும் ஆன ஸ்ரீபரமாத்மன், ராமகிருஷ்ணாதி ப்ராக்ருத ரூபங்களை தரித்து, கௌஸல்யா முதலானவர்களுக்கு இவன் என் மகன் என்று தோன்றுவதைப்போல, தன் பேச்சு நடவடிக்கைகளால் அவர்களை மகிழ்விப்பதைப்போல, பிம்பரூபத்தினால் அனைத்து பிராணிகளின் அந்தர்யாமியாக இருந்து, ஜீவ-ஜீவர்களுக்கு பரஸ்பரம் சம்பந்தம் இல்லாதிருந்தாலும், தேக சம்பந்தத்தினால் இவள் என் மனைவி, இவன் என் கணவன், இவன் என் மகன் என்று பலவித அபிமானங்களைத் தோற்றுவித்து, ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியாக இருப்பதைப் போல செய்கிறான். ராமகிருஷ்ணாதி ரூபங்களால், தன்னை பஜிப்பவர்களின் இஷ்டார்த்தங்களை நிறைவேற்றுகிறான். கணவன் மனைவி இவர்களில் இருந்து, பரஸ்பரம் அவர்களின் இஷ்டார்த்தங்களை நிறைவேற்றுகிறான். அனைத்து ஜீவர்களிலும் இருந்து, அவர்களை காப்பாற்றுகிறான்.
***
No comments:
Post a Comment