ஹ்ருத3ய தொ3ளகி3ஹுதஷ்டத3ள கம
லத3ரொளகெ3 ப்ராதேஷ நாமக
நுதி3த பா4ஸ்கரனந்தெ தோர்பனு பி3ம்ப3னெந்தெனிஸி |
பது3ம சக்ர சுஷங்க2 சுக2தா
ங்தகடக முகுடாங்கு3லீயக
பத3க கௌஸ்துபஹார க்3ரைவெயாதி பூ4ஷிதனு ||6
ஹ்ருதயதொளகெ = இதயத்தில்
அஷ்டதள கமலவு = 8 தளமுள்ள தாமரை
இஹது = இருக்கிறது
அதரொளகெ = அதற்குள்
ப்ராதேஷ நாமக = ப்ராதேஷ நாமகனான ஸ்ரீபரமாத்மன்
உதிதபாஸ்கரனந்தெ = உதய சூரியனைப் போல
பதும சக்ர சுஷங்க சுகதா = பத்ம, சக்ர,
சங்க,
கதா ஆகியவற்றை
அங்கத = தோள்களில் தரித்து
கடக = வாள்/கேடயம்
முகுட = கிரீடம்
அங்குலீயக = மோதிரம்
பதக, கௌஸ்துபஹார = பதக்கம், கௌஸ்துப ஹாரம்
க்ரைவேயாதி = கழுத்தில் அணியும் வகைவகையான மாலைகள்
பூஷிதனு = இவற்றை அணிந்தவனாக
பிம்பனெந்தெனிஸி = பிம்பரூபி என்னும் பெயரில்
தோர்ப்பனு = தரிசனம் அளிக்கிறான்.
இதயத்தில் இருக்கும் 8 தள கமலத்தில், ப்ராதேஷ நாமகனாக வசிக்கும் பகவந்தனை பூஜிக்கும் கிரமத்தை பாகவத 2ம் ஸ்கந்தம் 2ம் அத்தியாயம் ‘கீசித்ஸ்வதேஹாந்த ஹ்ருதயாவகாஷே ப்ராதேஷ மாத்ரம் புருஷம் வஸந்தம்’ என்னும் 9ம் ஸ்லோகத்தில் துவங்கி, 13ம் ஸ்லோகம் வரைக்கும்
விவரிக்கிறது. அதையே தாசராயர் இந்த பத்யத்தில் விவரிக்கிறார்.
இதயத்தில் 8 தள தாமரை இருக்கிறது. அதற்குள், ப்ராதேஷ நாமகனாக பிம்பரூபி பரமாத்மன், உதயசூரியனைப் போல ஒளிர்ந்துகொண்டு பத்ம, சக்ர,
சங்கு, கதா,
மற்றும் பற்பல ஆபரணங்களை அணிந்தவனாக ஒளிர்கிறான். இத்தகைய பரமாத்மனின்
உபாசனையை அதற்கு தகுதியானவர்கள் செய்யவேண்டும் என்பது கருத்து.
No comments:
Post a Comment