ரோமக3ளொளு வசந்த த்ரிககு
த்தா3ம முக2தொளக3க்3னி பா4ர்க3வ
தாமரஸ ப4வ வாசுதேவரு மஸ்தகதொ3ளிஹரு |
ஈ மனதொ3ளிஹ விஷ்ணு ஷிக2தொ3ளு
மாமஹேஸ்வர நாரசிம்ஹ
ஸ்வாமி தன்னனுதி3னதி3 நெனெவரபம்ருத்யு பரிஹரிப ||16
ரோமகளொளு = மயிர்களில்
வசந்த = வசந்தருதுவிற்கு அபிமானி தேவதையான வசந்தன்
த்ரிககுத்தாம = மூன்று திமில்களைப் போல, சிறப்பாக வளர்ந்திருக்கும், ஸ்வேதத்வீபாதி மூன்று இடங்களைக்
கொண்டிருப்பதால், பரமாத்மனுக்கு த்ரிகக்குத்தாம என்று பெயர்
முகதொளகெ = வாய்க்குள்
அக்னி - அக்னி
பார்க்கவ = பரசுராமதேவர் இருக்கிறார்
மஸ்தகதொளு = தலையில்
தாமரஸபவ = தாமரையில் பிறந்த பிரம்மதேவர்
வாசுதேவரு = வாசுதேவ மூர்த்தி
மனதொளு = மனதில்
ஈ = லட்சுமிதேவி
விஷ்ணு = விஷ்ணுரூபி பரமாத்மன் இருக்கிறார்
ஷிகதொளு = சிகையில்
உமாமஹேஸ்வர நாரஸிம்ஹஸ்வாமி = பார்வதி பரமேஸ்வரன்
மற்றும் நரசிம்மதேவர்
தன்னனு = தன்னை
அனுதின = தினந்தோறும்
நெனெவர = தியானிப்பவரின்
அபம்ருத்யு = துர்மரணத்தை
பரிஹரிப = பரிகரிக்கிறான்.
மயிர்களில் வசந்தன், த்ரிகக்குத்தாம நாமக பரமாத்மன் இருக்கிறான். முகத்தில் அக்னி, பரசுராமன் இருக்கின்றனர். தலையில் பிரம்மதேவர் வாசுதேவமூர்த்தி இருக்கின்றனர்.
மனதில் லட்சுமி-விஷ்ணு இருக்கின்றனர். சிகையில் பார்வதி பரமேஸ்வரன் மற்றும்
நரசிம்மதேவர் இருக்கிறார். ‘உக்ரம் வீரம் மகாவிஷ்ணும்’ ஆகிய நரசிம்ம மந்திரங்களை தினந்தோறும் ஸ்தோத்திரம் செய்தவாறு, நரசிம்ம ஸ்மரணையை செய்பவர்களுக்கு அந்தந்த காலத்தில் வரவிருக்கும் துர்மரணத்தை
பரிகரிக்கிறான்.
No comments:
Post a Comment