கபில சார்வங்கா3தி3 ரூபதி3
வபுக3ளொளு ஹஸ்தக3ள ஸந்தி4யொ
ளபரிமித கர்மக3ள மாடு3தலிப்ப தி3னதி3னதி3 |
க்ருபணவத்ஸல பார்ஷ்வதொ3ளு பர
ஸுப2லி எனிஸுவ கு3த3 உபஸ்த2தி3
விபுள ப3லிப4க1 மனுவெனிஸி துந்தி3யொளகி3ருதிஹனு ||2
கபில சார்வங்காதி ரூபதி = கபில, சார்வங்க முதலான ரூபங்களால்
ஹஸ்தகள சந்தியொளு = வலது, இடது கைகளின் மூட்டுகளில் இருந்து
தினதினதி = தினந்தோறும் / எப்போதும்
அபரிமித = எல்லைகள் அற்ற (எண்ணிக்கை அற்ற)
கர்மகள = கர்மங்களை
மாடுதலிப்ப = செய்து வருகிறான்
க்ருபணவத்ஸல = (பக்தர்களாக இருந்து, ஜிதேந்திரியர் ஆகாதவர்கள் க்ருபணர்கள்). அத்தகைய பக்தர்களின் ப்ரியம் கொண்ட
ஸ்ரீஹரி.
பார்ஷ்வதொளு = வல இட பக்கங்களில்
பரசுபலியெனிசுவ = பர மற்றும் பலி என்னும்
சுரூபங்களால் இருக்கிறான்
குத உபஸ்ததி = மல மூத்ர இந்திரியங்களில்
விபுள = நிலைத்திருக்கும்
பலிபக = பலி, பக என்னும் ரூபங்களில் இருக்கிறான்
மனவெனிஸி = மன என்னும் பெயரில்
துந்தியொளகெ = நாபியின் கீழ்ப்பாகத்தில்
இருதிஹனு = இருக்கிறான்.
முந்தைய பத்யத்தில் ட1, ட2,
ட3,
ட4,
ண,
த1,
த2,
த3,
த4,
ந என்னும் 10 எழுத்துக்களின் பகவத்ரூபங்களை சிந்திப்பதைப் பற்றி சொல்லியிருந்தார். இந்த
பத்யத்திலிருந்து துவங்கி, க முதல் ச வரிசையில் உள்ள பகவத்
ரூபங்களை சிந்திப்பதைப் பற்றி விவரிக்கிறார்.
க1=கபில, க2=கபதி,
க3=கருட,
க4=கர்ம,
ஞ=ஞஸார என்னும் 5 ரூபங்களை வலது கை, தோளின் மூட்டு, முழங்கை சந்தி, விரல் நுனி, விரல் நடுவே இருக்கும் மூட்டு என இந்த 5 சந்திகளில் சிந்திக்க வேண்டும். இதைப்போலவே, ச1=சார்வாங்க. ச2=சந்தோகம்ய, ஜ1=ஜனார்த்தன, ஜ2=ஜாடிதாரி ங=யம என்னும் 5 ரூபங்களை இடது 5 சந்திகளில் சிந்திக்க வேண்டும்.
ப-வர்க்கத்திற்கான இடங்களை சொல்கிறார்.
க்ருபணவத்ஸலனான ஸ்ரீஹரி, ப1=பர என்னும் ரூபத்தினாலும், ப2= பலி என்னும் ரூபத்தினாலும் இரு பக்கங்களில் இருக்கிறான். ப3=பலி,
ப4=பக எனும் இரு ரூபங்களால் மலமூத்ர உறுப்புகளில் இருக்கிறான். ம=மனு என்னும்
ரூபத்தினால் நாபிக்கு கீழ் பாகத்தில் இருக்கிறான். இப்படியாக சிந்திக்க வேண்டும்
என்பது கருத்து.
No comments:
Post a Comment