ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Monday, March 30, 2020

#24 - வியாப்தி சந்தி

#24 - வியாப்தி சந்தி


வாரிஜாப்த1ன கி1ரண மணிக3
ஸேரி தத்த1த்வர்ணகளனு வி
கா1ரகை3தெ3 நோள்ப1ரிகெ31ங்கொ3ளிசுவந்த33லி |
மாரமண லோக1த்ரயதொ3ளிஹ
மூருவித3 ஜீவரொளகி3த்து3 வி
ஹார மாடு3வனவர யோக்யதெ11ர்மவனுரிஸி ||24


வாரிஜாப்தன = தாமரைக்கு இஷ்டமான சூரியனின்
கிரண மணிகள = கிரணங்கள், சிகப்பு, பச்சை, நீலம் முதலான வண்ணங்களைக் கொண்ட ரத்னங்களின்
ஸேரி = மேல் விழுந்து
தத்தத்வர்ணகளனு = அந்தந்த ரத்னங்களின் வர்ணங்களுக்கேற்ப
விகாரகைசதெ = நிறங்களின் வித்தியாசங்களை செய்யாமல் (பார்க்காமல்)
நோள்பரிகெ = பார்க்கும் மனிதர்களுக்கு
கங்கொளிசுவந்ததலி = பளபளவென்று தெரிவதைப் போல
மாரமண = லட்சுமிபதியானவன்
லோகத்ரயதொளிஹ = மூன்று உலகங்களிலும் இருக்கும்
மூருவித ஜீவரொளகித்து = சாத்விக முதலான மூன்று வித ஜீவர்களிலும் இருந்து
அவர = அந்தந்த ஜீவர்களின்
கர்மவ = தகுதியை அனுசரித்து (அதற்கேற்ப)
விஹார மாடுவனு = நிலைத்திருப்பான் / சஞ்சரிப்பான்.

சூரியனின் கதிர்கள், சிகப்பு, நீல, பச்சை முதலான ரத்னங்களில் எந்தவித வித்தியாசமும் பார்க்காமல் விழுந்து, அந்தந்த ரத்னங்களின் நிறத்தை எப்படி மேம்படுத்திக் காட்டுகிறதோ, அது எப்படி பார்க்கும் மக்களுக்கு பளபளவென்று தெரிகிறதோ, அதுபோல, லட்சுமிபதியான பரமாத்மனும், சாத்விகாதி மூன்று வித ஜீவர்களுக்குள்ளும் இருந்து, அந்தந்த ஜீவர்களின் தகுதிக்கேற்ப, அவர்களில் நிலைத்திருப்பான் / சஞ்சரிப்பான். 

***


No comments:

Post a Comment