ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Sunday, March 29, 2020

#23 - வியாப்தி சந்தி

#23 - வியாப்தி சந்தி


வாரித3னு மளெகெ3ரெயெ பெளெதி3
பூ4ருஹங்க3ள சித்ரப2லரஸ
பே3ரே பே3ரிப்ப1ந்தெ13ஹுவித4 ஜீவரொளகி3த்து3 |
மாரமணனவரவர யோக்யதெ1
மீரத3லெ கு3ண க1ர்மக1ள அனு
சார நடெசுவ தே3வனிகெ3 வைஷம்ய வெல்லிஹுதோ3 ||23


வாரிதனு = மேகம்
மளெகெரெயெ = மழை பொழிந்தால்
பெளெதிஹ = விளைந்திருக்கும்
பூருஹங்கள = மரங்களின்
சித்ரபலரச = விதவிதமான பழங்கள் மற்றும் அவற்றின் சாறுகள்
பேரேபேரிப்பந்தெ = வெவ்வேறாக இருப்பதைப் போல
பஹுவித ஜீவரொளகித்து = அனைத்துவித ஜீவர்களிலும் இருந்து
மாரமண = லட்சுமிபதி
அவரவர யோக்யதெ மீரதலெ = அவரவர்களின் தகுதிக்கேற்ப
குண கர்மகள அனுசார = அவர்களின் குண, கர்மங்களுக்கேற்ப
நடெசுவ = பலன்களைக் கொடுப்பான்
தேவனுக்கு = ஸ்ரீஹரிக்கு
வைஷம்யவெல்லிஹுதோ = பாரபட்சம் எங்கிருக்கிறது? (இல்லை என்று பொருள்).

மேகங்கள் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரி மழையைப் பொழிகிறது. ஆனால், அந்த நீரினால் விளைந்த மரங்களில் காய்க்கும் காய், பழம், மற்றும் அவற்றின் சாறு வெவ்வேறு விதமாக இருக்கின்றன. சில இனிப்பு, சில கசப்பு என வெவ்வேறாக இருக்கிறது. இதற்கு அந்த மரத்தின் ஸ்வரூபமே காரணமே தவிர, மண், நீர் இவையெல்லாம் எப்படி காரணம் ஆகாதோ, அப்படியே, ஸ்ரீபரமாத்மன், சாத்விகாதி மூன்றுவித ஜீவர்களிலும் இருந்து, அவரவர்களின் தகுதியை மீறாமல் (அதற்கேற்ப), சாத்விகர் மூலமாக சத்வ கர்மங்களையும், ராஜசர் மூலமாக பலவிதமான கலவையான (மிஸ்ர) கர்மங்களையும், தாமசர் மூலமாக தன்னில் த்வேஷங்களை உருவாக்கி, அந்தந்த கர்மங்களுக்கேற்ப பலன்களைக் கொடுக்கிறார். முக்கியமாக, ஜீவர்களின் சத்வாதி கர்மங்கள், கர்மபலன்கள், இவற்றிற்கேற்ப கர்மங்களை செய்து, பலன்களைக் கொடுக்கிறாரே தவிர, தனக்கு இவன் வேண்டியவன், இவன் வேண்டாதவன் என்னும் பாரபட்சத்தினால் பலன்களைக் கொடுப்பதில்லை. இதிலிருந்து பரமாத்மனுக்கு பாரபட்சம் இல்லை என்று தெரிகிறது. 

***

No comments:

Post a Comment