ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Saturday, August 29, 2020

24 - பிம்ப அபரோக்‌ஷ சந்தி

 

பாவபிரகாசிகை : சந்தி 24 : பிம்ப பிரதிம்ப சந்தி

/ பிம்ப அபரோக்ஷ சந்தி

 

ஹரிகதா2ம்ருதசார கு3ருக3

கருணதிந்தா3பநிது பே1ளுவே

பரம ப4கவத்34க்தரித3னாத3ரதி கேளுவுது3

 

மமைவாம்ஷோ ஜீவஷோகே ஜீவபூத: ஸனாதன: || என்னும் கீதை வாக்கியத்திற்கேற்ப, பரமாத்மனின் அம்சமே ஜீவரூபமாக இருக்கிறது. அம்சர்களில், ஸ்வ-அம்சர் என்றும் ப்ரதிபிம்பாம்சர் என்றும் இரு விதங்கள் உண்டு. பரமாத்மனின் ராமகிருஷ்ணாதி அவதாரங்களே ஸ்வாம்ஷ ரூபங்கள். ஜீவர்கள் பிரதிபிம்பாம்ஷர்கள் என்று அறியவேண்டும். இந்த சந்தியில் எந்த பிரதிபிம்ப ஜீவர்களுக்கு எந்த ரூபத்தினால் பிம்பரூபியாக இருக்கிறான் என்பதை சொல்கிறார்.

 

முக்தபி3ம்ப3னு துரிய ஜீவ

ந்முக்தபி3ம்ப3னு விஷ்வ ப4ம்

க்தபி3ம்ப3னு தைஜனு அஸ்ருஜ்யரிகெ3 ப்ராக்3|

ஷக்தனாத3ரு ரியே ர்வோ

த்ரிக்த மஹிமனு து3க்க2 ஸு23

வ்யக்த மாடு3தலிப்ப கல்பாந்த்யத3லி ப3ப்பரிகெ3 ||1

 

முக்த = முக்த ஜீவர்களுக்கு

துர்ய = துர்ய மூர்த்தி

பிம்பனு = பிம்ப மூர்த்தி

ஜீவன்முக்த = பிம்ப அபரோக்‌ஷம் ஆனவர்களுக்கு

விஷ்வ = விஷ்வமூர்த்தியே பிம்பன்

பவஸம்ஸக்த பிம்பனு = சம்சாரத்தில் இருப்பவர்களுக்கு பிம்பன், தைஜஸன்

அஸ்ருஜ்யரிகெ = ஸ்ருஷ்டிக்கு இன்னும் வராதவர்களுக்கு

ப்ராக்ஞ = ப்ராக்ஞ மூர்த்தி பிம்பன்

ஷக்தனாதரு சரியே = ஸ்ருஷ்டி ஆகியவற்றை செய்யாமலேயே ஜீவர்களுக்கு சுகதுக்காதிகளைக் கொடுக்கும் சக்தி இருந்தாலும், அவன் சத்யசங்கல்பன் ஆகையால்,

சர்வோத்ரிக்த மஹிமனு = அனைவரைவிடவும் அதிகமான மகிமைகளை உடையவன் பரமாத்மன்

கல்பாந்ததலி = பிரம்ம கல்பத்தின் இறுதியில்

பப்பரிகெ = அவரவர்களின் யோக்யதைக்கேற்ப சாதனையை செய்து வருபவர்களுக்கு

துக்கசுககள = அவரவர யோக்யதைக்கேற்ப சுக துக்கங்களை

வ்யக்திமாடுதலிப்ப = சாத்விகர்களுக்கு ஸ்வரூபானந்தத்தையும், ராஜசர்களுக்கு சுகதுக்க மிஸ்ரமான சம்சாரத்தையும், தாமசர்களுக்கு அந்தம்தமஸில் துக்கத்தையும் கொடுக்கிறான்

 

முக்தர் ஆனவர்களுக்கு துர்ய நாமக பரமாத்மனே பிம்ப மூர்த்தி. லிங்க பங்கம் ஆகாமல், பிம்பாபரோக்‌ஷம் ஆனவர்களுக்கு விஷ்வ நாமக பரமாத்மன் பிம்பன். இந்த கல்பத்தில் ஸ்ருஷ்டிக்கு வராமலேயே இருப்பவர்களுக்கு ப்ராக்ஞ நாமக பரமாத்மன் பிம்பன். ப்ரம்மாதி சகல தேவதைகளைவிட உத்தமனான, மகா மகிமைகளைக் கொண்ட ஸ்ரீஹரி, ஸ்ருஷ்ட்யாதிகளை செய்யாமலேயே அவரவர்களுக்கு ஸ்வரூபபூதமான சுக துக்கங்களைக் கொடுக்கும் தகுதி கொண்டவனாக இருந்தாலும், சத்யசங்கல்பன் அவரவரின் யோக்யதைக்கேற்ப அவரவர்களிடமிருந்து செயல்களை செய்வித்து, கல்பத்தின் முடிவில் அவரவர்களின் செயல்களுக்கேற்ப சுக துக்க மிஸ்ர என்னும் மூன்று வித பலன்களை மூன்று வித ஜீவர்களுக்கு கொடுக்கிறான்.

 

முக்தானாம் பிம்ப ரூபஸ்து துர்யோ விஷ்வோபரோக்‌ஷிணாம் ||

ஸம்ஸாரிணாம் தைஜஸ ஸ்த்வ ஸ்ருஜ்யானாம் ப்ராக்ஞ உச்யதே ||

 

என்னும் சார சங்க்ரஹ வாக்கியம், இந்த பத்ய அர்த்தத்தையே சொல்கிறது.

 

அன்னனாமக ப்ரக்ருதியொளக3

ச்சி2ன்ன வாகி3ஹ ப்ராக்3ஞனாமதி3

ஸொன்னொட3ல மொத3லாத3வரொளன்னாத3 தைஜஸனு |

அன்னத3ம்பு3ஜனாப4 விஷ்வனு

பி3ன்னனாம க்ரியெக3ளிந்த3லி

தன்னொளகெ3 தா ரமிப பூர்ணானந்த3 ஞானக4||2

 

அன்னனாமக = அன்ன நாமகனான ஸ்ரீபரமாத்மன்

ப்ராக்ஞ நாமதி = ப்ராக்ஞ என்னும் பெயரால்

ப்ரக்ருதியொளகெ = ப்ரக்ருதி என்னும் பெயர் கொண்ட ஸ்ரீதேவியரிடம்

அச்சின்னவாகிஹ = தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் வசிக்கிறான்

ஸொன்னொடல = பிரம்மதேவர்

மொதலாதவரொள = முதலான தேவதைகளில்

அன்னாத = அன்னாத நாமக பரமாத்மன்

தைஜஸனு = தைஜஸ நாமகனாக இருந்து

அன்னத = அன்னத என்னும் பெயர் உள்ள

அம்புஜனாப = பத்மனாபன்

விஷ்வ = விஷ்வ நாமகனாகவும்

பின்ன நாம க்ரியெகளிந்தலி = வெவ்வேறு பெயர்களாலும், வெவ்வேறு செயல்களாலும்

பூர்ணானந்த ஞானகன = பூர்ணானந்த ஸ்வரூபனான ஹரி

தன்னொளகெ தாரமிப = தனக்குள் தானே மகிழ்ச்சியாக இருக்கிறான்

 

அன்ன நாமகனான ஸ்ரீஹரி, ப்ரக்ருதியில் ப்ராக்ஞ என்னும் பெயரால், மற்றவர்களின் கண்களுக்குத் தெரியாமல் மறைந்திருக்கிறான். அன்னாத என்னும் ஸ்ரீஹரி, தைஜஸ நாமத்தினால், பிரம்மாதிகளில் இருந்து, அன்னத்தை உண்கிறான். அன்னத என்னும் ஸ்ரீஹரி, விஷ்வ நாமகனாகி அனேகமான நாம ரூபங்களால், வெவ்வேறு ஜீவர்களில் இருந்து, அன்னப்ரதனாக, தனக்குள் தானே மகிழ்ச்சியாக இருக்கிறான்.

 

பூ4தி3யொள க3டகி3ப்பனலனோ

பாதி3 சேதன ப்ரக்ருதியொளு அ

ந்னாத3 அன்னாஹ்வயதி3 கரெஸுவ பி3ரம்ம ஷிவ ரூபி |

ஓத3னப்ரத3 விஷ்ணு பரமா

ஹ்லாத3 நீவுத3 த்ருப்திப3டி3ஸு

கா34 மஹிமன சித்ரகர்மவனாவ ப3ண்ணிஸு||3

 

பூதியொள கடகிப்பனலனோபாதி = சாம்பல் மூடிய கங்கினைப் (கங்கு) போல

சேதன = அனைத்து ஜீவர்களில்

ப்ரக்ருதியொளகெ = ஜட ப்ரக்ருதியில்

அன்னாஹ்வயதி = அன்ன என்னும் பெயரில் இருக்கிறான்

பிரம்மஷிவரூபி = பிரம்ம ரூபத்தினாலும், ருத்ர ரூபத்தினாலும் அவர்கள் இருவரில்

அன்னாதனு = அன்னாத என்னும் பெயரில் இருந்து, அன்னத்தை ஏற்றுக் கொள்கிறான்.

விஷ்ணு = விஷ்ணு ரூபத்தினால்

ஓதனப்ரத = அன்னத என்னும் பெயரால்

பரமாஹ்லாத நீவுத = அனைத்து பிராணிகளுக்கும் அன்னத்தைக் கொடுத்தவாறு, அதன் மூலம் அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சியைக் கொடுத்து

த்ருப்திபடிசுவ = த்ருப்தியைக் கொடுக்கிறான்

அகாத மஹிமன = இத்தகைய எல்லைகளற்ற மகிமைகளைக் கொண்ட பரமாத்மனின்

சித்ரகர்மவ = விசித்ர வியாபாரங்களை

ஆவபண்ணிஸுவ = வர்ணிப்பதற்கு யாரால் சாத்தியம்?

 

சாம்பல் மூடிய கங்கினைப் போல, ஸ்ரீஹரி அன்ன நாமகனாக ஸ்ரீதேவியில் அடங்கியிருக்கிறான். அன்னாத என்னும் பெயரில், பிரம்ம தேவரிலும், ருத்ர தேவரிலும், பிரம்மரூப ருத்ரரூபத்தினால் அன்னத்தை உண்கிறான். விஷ்ணு ரூபத்தினால் அன்னத என்னும் ஸ்ரீஹரி, அனைவருக்கும் அன்னத்தைக் கொடுத்து, அவர்களுக்கு பரம மகிழ்ச்சியைக் கொடுத்து, த்ருப்திப்படுத்துகிறான். இத்தகைய அபாரமான மகிமை உள்ள பரமாத்மனின் விசித்ரமான கர்மங்களை வர்ணிப்பதற்கு யாரால்தான் சாத்தியம்? ரமா பிரம்ம ருத்ராதிகளாலேயே அது முடியாது. அப்படி இருக்கையில், மற்றவர்களின் பாடுதான் என்ன? என்பது கருத்து.

 

நாத3 போ4ஜன ஷப்33தொ3ளு பி3ன்

தோ33னோ3கதொளகெ3 கோ42னு

வாத3தொ3ளு ஷாந்தாக்2ய ஜட2ராக்3னியொளு இருதிப்ப |

வைதி3ஸுஷப்த3தொ3ளு புத்ர

ஹோத3ரானுக3 ரொளதிஷாந்தன

பாத31மலனவரத சிந்திஸு ஈ பரியலிந்த3 ||4

 

போஜன ஷப்ததொளு = உணவு உண்ணும்போது வரும் சத்தத்தில்

நாத = நாத ரூபத்தினாலும்

ஓதனோதகதொளகெ = அன்ன மற்றும் தண்ணீர் இவற்றில்

பிந்து = பிந்து ரூபத்தினாலும்

வாததொளு = பகவத்குணங்களை விளக்கும்போது வரும் சத்தத்தில்

கோஷனு = கோஷ ரூபத்தினாலும்

ஜடராக்னியொளு = பிராணிகளின் வயிற்றில் இருந்து அன்னாதிகளை ஜீரணம் செய்யும் ஜடராக்னியில்

ஷாந்தாக்ய = ஷாந்த நாமகன்

இருதிப்ப = வசிக்கிறான்

வைதிக சுஷப்ததொளு = வேத அத்யயனம் செய்யும்போது வெளிவரும் சத்தத்திலும்

புத்ர, சஹோதர = அண்ணன் தம்பியர்

அனுக = உற்றார் உறவினர் ஆகியோர்

அதிஷாந்தன = அதிஷாந்த நாமகனான ஸ்ரீஹரி

பாதகமல = பாத கமலங்களை

ஈ பரியலிந்த = மேலே கூறிய விதமாக

அனவரத = அனைத்து காலங்களிலும் சிந்திக்க வேண்டும்

 

பரமாத்மன் ப்ரணவத்தில் அதாவது ஓம்என்னும் எழுத்தில் இருக்கும் அகார, உகார, மகாரங்களில், நாத, பிந்து, கோஷ நாமகனாக இருப்பது மட்டுமல்லாமல், போஜனாதி சப்தங்களில் இருக்கிறான் என்று சிந்திக்க வேண்டும்.

 

* போஜன சப்தத்தில் நாத ரூபியான பரமாத்மனை,

* அன்ன உதகங்களில் பிந்து நாமகனை

* சாஸ்திரங்களின் வாதத்தில் கோஷ நாமகனை,

* ஜடராக்னியில் ஷாந்த ரூபியை

* வேத அத்யயனம் செய்யும்போது வரும் சத்தத்தில், மக்கள், அண்ணன் தம்பியர், உற்றார் உறவினர் ஆகியோரில் அதிஷாந்த நாமகனை அறிந்து, அனைத்து காலங்களிலும், இவ்விதமாக பாத கமலங்களை சிந்திக்க வேண்டும் என்பது கருத்து.

 

நாதாபிமானி க்ரோடஸ்து போஜன ஸ்தரவேஷுச |

பிந்துமானி விஷ்ணுதேவோ ஜலான்ன ஸ்தோத்ரிவ்ருத் ப்ரபு: ||

கோஷா நாவாதஷப்தேஷு ஷாந்தாக்யோ ஜடரேஸ்தித: ||

புத்ரமித்ர களத்ராதௌ வேத சாஸ்திரேஷு சர்வதா ||

அதிஷாந்தாக்ய கிருஷ்ணஸ்ய பாதபத்மம் நிபோதய ||

 

என்னும் ப்ரமேய ரத்னாகர வாக்கியம், மேற்சொன்ன வாக்கியங்களுக்கு ஆதாரமாக இருக்கிறது.

 

வேத3மானி ரமானுபாஸ்ய கு3

ணோத3தி4 கு3ணத்ரய விவர்ஜித

ஸ்வோத3ரஸ்தி2த நிகி2ல பிரம்மாண்டா3த் விலக்‌ஷணனு |

ஸாது4ம்மத வெனிஸுதிஹ நிஷு

ஸீ33ணபதெ எம்ப3 ஸ்ருதி ப்ரதி

பாதி3ஸுவுத3ன வரத1வன கு3ண ப்ராந்தகா3ணத3லெ ||5

 

வேதமானி = வேதாபிமானியான

ரமா = ரமாதேவியராலும்

அனுபாஸ்ய = உபாசனை செய்வதற்கு

அஸாத்யவாத = சாத்தியமில்லாத

குணோததி = குணசமுத்திரன்

குணத்ரயவிவர்ஜித = ப்ராக்ருத குணங்கள் இல்லாதவன்

ஸ்வோதரஸ்தித = தனது உதரத்தில் இருக்கும்

நிகில = அனைத்து

பிரம்மாண்டாத் விலக்‌ஷணனு = பிரம்மாண்டத்திலிருந்து வேறுபட்டவன்

ஸாதுசம்மதவெனிஸுதிஹ = சாதுகள் அனைவரும் ப்ரமாணத்தின் ஆதாரத்தில் அங்கீகரிக்கும்

நிஷுஸீத கணபதி எம்ப = நிஷுஸீத கணபதி என்னும்

ஸ்ருதி = ஸ்ருதி

அனவரத = அனைத்து காலங்களிலும்

அவனகுண = பரமாத்மனின் குணங்களை

ப்ராந்தகாணதலெ = எல்லையைக் காணமுடியாமல்

ப்ரதிபாதிசுவரு = சர்வோத்தமன்; அனைத்தையும் செய்பவன்.

 

வேதாபிமானியான ரமாதேவியாலும்கூட, பரமாத்மனின் குணங்களின் எல்லைகளைக் கண்டு, அவற்றை உபாசனை செய்வதற்கு அசாத்தியமாக இருக்கிறது. பரமாத்மன் சத்வாதி ப்ராக்ருத குணங்களால் கட்டுப்படாதவன். தன் வயிற்றில் இருக்கும் பிரம்மாண்டத்திலிருந்து வேறுபட்டவன். அனைத்து சஜ்ஜனர்களும், ஆதாரம் என்று ஒப்புதல் அளிக்கும் நிஷுஸீத கணபதிஎன்னும் ஸ்ருதி, பரமாத்மனின் அனந்த குணங்களை ஸ்துதித்து, அவன் அனந்தகுண பரிபூர்ணன் என்பதை எப்போதும் தெளிவாக வலியுறுத்துகிறது.

 

தாசார்யர் இந்த பத்யத்தில் உதாரணம் சொல்லியிருக்கும் ஸ்ருதி:

 

நிஷுஸீத கணபதே கணேஷுத்வாமஹுர் விப்ரதமம் கவீனாம் |

நருதே த்வத்க்ரீயதே கிஞ்சனாரே மஹாமர்க்கம் மகவன் சித்ரமர்ச்ச ||

 

இதன் பொருள்:

ஹே கணபதி:  இந்திரியாபிமானி தேவதைகளின் கணத்திற்கு அதிபதியே! உன்னை ஞானிகள் இந்திரியாபிமானிகளில் உத்தமன் என்று சொல்கிறார்கள். உன்னை (வணங்காமல்) விட்டால், எந்த வேலையும் யாராலும் செய்வதற்கு சாத்தியமில்லை. நீ ரமா பிரம்மாதி தேவதைகளில் இருந்து உன் பூஜையை நீயே செய்து கொள்கிறாய். அயோக்யர்களில் இருந்து அவர்களின் த்வேஷாதிகளை நீயே செய்விக்கிறாய். அது அவர்களுக்கு தமஸ் சாதனையாகிறது. முக்கியமாக, அனைத்து கர்த்ருத்வமும் உனதாகவே இருக்கிறது.

 

இதுவே அந்த ஸ்ருதியின் கருத்து. ஸ்ருதி அர்த்தத்திற்கும், இந்த பத்யத்தின் அர்த்தத்திற்கும் என்ன சம்பந்தம் என்றால், ஸ்ருதியின் முக்கியக் கருத்து, பாகவத ஸ்ருதிகீதையின் தாத்பர்யத்தில்:

 

ஸ்ரீபிரம்ம ருத்ர பூர்வேஷு க்ரமாத் ஸ்தித்வா ஜனார்த்தன: ||

ஸ்வாத்மான மர்சயத்யத்தா பஹிரந்தர ஸத்ஸுச ||

 

ரமா பிரம்மாதிகளில் இருந்து முறையே தன்னை பூஜித்துக் கொள்கிறான். உள்ளேயும் வெளியேயும் வியாப்தனாக இருந்து, யோக்யர்களிடமிருந்து பூஜையையும், அயோக்யர்களிடமிருந்து த்வேஷத்தையும் தானே செய்து, செய்விக்கிறான் என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்.

 

ஸ்ருதியின் பொருளும் இதுவே ஆகிறது. சர்வகர்த்ருத்வம் பரமாத்மனுடையது என்று சொன்னதால், ரமா பிரம்மாதிகளைவிட உத்தமன் என்று சொன்னதாக ஆயிற்று. இந்த அபிப்பிராயத்தை மனதில் வைத்துக்கொண்டே தாசார்யர், இந்த ஸ்ருதியை உதாரணம் கொடுத்திருக்கிறார் என்று அறியவேண்டும்.

 

கரெஸுவனு மாயாரமண தா

புருஷரூபதி3 த்ரிஸ்த2லக3ளொளு

பரம த்புருஷார்த்த23த் தத்வதொ3ளகி3த்து3 |

ஸிஜ ப4வாண்ட3ஸ்தி2த ஸ்த்ரீ

புருஷ தன்மாத்ரக3ள ஏகோ

த்தர த3ஷேந்த்3ரியக3ள மஹாபூ4தக3ள நிர்மிஸித3 ||6

 

மாயாரமண = மாயாபதியான ஸ்ரீவாசுதேவ மூர்த்தி

த்ரிஸ்தலகளொளு = ஸ்வேதத்வீப முதலான மூன்று இடங்களிலும்

தா = தான்

புருஷரூபதி = புருஷ ரூபத்தில் இருந்து

பரம ஸத்புருஷார்த்தத எந்து கரெசுவனு = முக்தர்கள் ஆனவர்களுக்கு, ஸ்வரூப ஆனந்தத்தைக் கொடுப்பவன் என்று அழைத்துக் கொள்கிறான்

மஹத்தத்வதொளித்து = மஹத் தத்வத்தில் இருந்து

ஸரஸிஜ பவாண்டஸ்தித = பிரம்மாண்டத்தின் உள் இருக்கும்

ஸ்த்ரி புருஷ,

தன்மாத்ர = ஷப்த ஸ்பர்ஷாதி தன்மாத்ரா குணங்களை

ஏகோத்தர தஷேந்திரியகள = 11 இந்திரியங்களை (கர்மேந்திரியங்கள் 5

ஞானேந்திரியங்கள் 5 மனஸ் 1)

மஹாபூதகள = பஞ்சமஹாபூதங்களை

நிர்மிஸித = படைத்தான்.

 

மாயாபதியான லட்சுமிபதியான ஸ்ரீவாசுதேவன், ஸ்வேதத்வீப, அனந்தாஸன, வைகுண்ட என்னும் மூன்று இடங்களில் இருந்துகொண்டு, முக்த ஜனர்களுக்கு அனைத்து புருஷார்த்தங்களையும் கொடுக்கிறான். ஸ்ருஷ்டி காலத்தில் புருஷ ரூபத்தை ஏற்று, மஹத் தத்வத்தில் இருந்து, பிரம்மாண்டத்தில் இருக்கும் ஸ்த்ரி, புருஷ, ஆகியோரை, மனஸ், ஞானேந்திரியங்கள் 5, கர்மேந்திரியங்கள் 5, பஞ்ச மஹாபூதங்கள் தன்மாத்ர குணங்கள் ஆகியவற்றை படைத்தான்.

 

பரமாத்மன் மூன்று முறை, மூன்று புருஷ ரூபங்களை ஏற்றுக்கொண்டு இருக்கிறான். முதலில் மாயா நாமகனான லட்சுமிதேவியில், புருஷ நாமகனாக வீர்யாதானம் செய்தான் என்று பாகவத வாக்கியம் உள்ளது.

 

இரண்டாவது முறை, பிரம்மதேவருக்கு சரீரபூதமான மஹத் தத்வத்திலும், பிரம்மாண்டத்திலும் இருக்கும் ரூபம். அந்த ரூபத்தினாலேயே இந்திரியங்களின் ஸ்ருஷ்டி ஆகியிருக்கிறது என்பது கருத்து.

 

மூன்றாவது அடுத்த பத்யத்தில் வருகிறது.

 

ஈ ஷரீரக3 புருஷ த்ரிகு3ணதி3

ஸ்ரீஹித தானித்து3 ஜீவரி

கா3ஸெ லோபா4க்ஞான மத3 மத்ஸர குமோஹ க்‌ஷுத |

ஹாஸ ஹருஷ ஸுஷுப்தி ஸ்வப்ன பி1

பா1ஸ ஜாக்3ருதி ஜன்ம ஸ்தி2தி ம்ருதி

தோ3ஷ புண்ய ஜயாபஜய த்3வந்த்3வக3ள கல்பிஸித3 ||7

 

ஈ ஷரீரக = அனைத்து பிராணிகளின் தேகத்தில் நிலைத்திருக்கும்

புருஷ = புருஷ நாமகன்

த்ரிகுணதி = சத்வ ரஜஸ் தமோ குணங்களில்

ஸ்ரீஸஹித = ஸ்ரீ, பூ, துர்கா சமேதனாக இருந்து

ஜீவரிகெ = ஜீவர்களுக்கு

ஆஷெ = ஆசை

லோப = கஞ்சத்தனம்

அக்ஞான = அஞ்ஞானம்

மத = கர்வம்

மத்ஸர = பொறாமை

குமோஹ = பேராசை

க்‌ஷுத = பசி

ஹாஸ = சிரிப்பு

ஹருஷ = மகிழ்ச்சி

சுஷுப்தி = தூக்கம்

ஸ்வப்ன = கனவு

பிபாஸ = தாகம்

ஜாக்ரதெ = முழிப்பு

ஜன்ம = பிறப்பு

ஸ்திதி = காத்தல்

ம்ருதி = மரணம்

தோஷ, பாப, புண்ய,

ஜய அபஜய = வெற்றி தோல்வி

த்வந்த்வகள = இது போன்ற த்வந்த்வங்களையும்

கல்பிஸித = கற்றுத் தந்தான்

 

அனைத்து பிராணிகளின் தேகத்திலும் புருஷ ரூபத்தினால் பரமாத்மன், த்ரிகுணாத்மகரான ஸ்ரீதேவி, பூதேவி, துர்காதேவி ஆகியோருடன் கூடி, தான் இருந்து, ஜீவர்களுக்கு ஆசை, கஞ்சத்தனம், சுக துக்க முதலான த்வந்தவங்களையும் கற்றுத் தந்தான்.

 

த்ரிவித4 கு3ணமயதே3ஹ ஜீவகே1

கவசத3ந்த3தி3 தொடி3ஸி கர்ம

ப்ரவஹதொ3ளு ஞ்சார மாடி3ஸுதிப்ப ஜீவரன |

கவிஸி மாயாரமண மோஹவ

4வக்கெ காரணனாகு3வனு ம்

ஸ்ரவண மனனவ மாள்பரிகெ3 மோசகனெனிஸுதிப்ப ||8

 

த்ரிவித குணமய = சாத்விக, ராஜஸ, தாமஸ எனும் மூன்று விதமான

ஜீவகெ = ஜீவர்களுக்கு

தேஹ = தேகங்களை

கவசதந்ததி = கவசத்தைப் போல

தோடிஸி = இணைத்து

கர்ம ப்ரவஹதொளு = கர்ம பிரவாகத்தில்

ஜீவரனு = ஜீவர்களை

சஞ்சார மாடிசுதிப்ப = சஞ்சாரம் செய்ய வைக்கிறான்

மாயாரமண = மாயாபதியான வாசுதேவன்

மோஹவ கவிஸி = மோகத்தினால் அவர்களை சுற்றி

பவகெ = சம்சாரத்திற்கு

காரணனாகுவனு = காரணன் ஆகிறான்

ஸ்ரவண மனனவ மாள்பரிகெ = (பகவன் மகிமைகளைப் பற்றி) கேட்டு, மனனம் செய்பவர்களுக்கு

மோசகனெனிஸுதிப்ப = மோட்சத்தைக் கொடுப்பவன் என்று அழைத்துக் கொள்கிறான்.

 

லிங்கதேகத்திலிருந்து முக்தரான த்ரிவித ஜீவர்களின் மேல் ஒரு கவசத்தைப் போட்டதைப் போல, ஸ்தூல தேகத்தைக் கொடுத்து, அவர்களை கர்ம பிரவாகத்தில் சஞ்சாரம் செய்விக்கிறான். மாயாரமணனான ஸ்ரீவாசுதேவன், ஆசையால் அவர்களை மயக்கி, அவர்களை சம்சாரத்தில் மூழ்க வைக்கிறான். பகவத் கதா ஸ்ரவண, மனன ஆகியவற்றை செய்பவர்களால், பகவந்தன் மகிழ்ந்து, அவர்களை சம்சாரத்திலிருந்து முக்தர்களாக ஆக்குகிறான்.

 

ஸாஷனாஹ்வய ஸ்த்ரி புருஷரொளு

வாவாகி3ஹனெந்த3ரிது3 வி

ஷ்வாஸபூர்வக ப4ஜிஸி தோஷி2ஸி ஸ்வாவரோத்தமர |

க்லேஷனாஷன அசலக3ளொளு ப்ர

காஷிஸுதலிஹனஷன ரூபோ

பானவ மாள்பரிகெ3 தோர்ப்பனு தன்ன நிஜரூப ||9

 

சாஷனாஹ்வய = போஜனாதிகளை செய்யும் ஸ்வபாவம் கொண்டவர்கள் ஆகையால், சல (நடமாடும் உயிருள்ள) பிராணிகளுக்கு ஸாஷனர் என்று பெயர்.

ஸ்த்ரி புருஷரொளு = பரமாத்மன், ஸ்த்ரியர்களிலும், புருஷர்களிலும்

வாசவாகிஹனெந்தரிது = வசிக்கிறான் என்பதை அறிந்து

விஷ்வாஸ பூர்வக பஜிஸி = நம்பிக்கையுடன் அவனை வணங்கி

ஸ்வாவர = உங்களைவிட குறைவானவரை, உங்களைவிட உத்தமமானவர்களையும்

தோஷிஸி = மகிழ்ச்சிப்படுத்துங்கள்

க்லேஷனாஷகனு = கஷ்ட பரிகாரகனான ஸ்ரீஹரி

அசலகளொளு = மலை, சாலிகிராமம் முதலானவற்றில்

அனஷனரூப = ஆகாரம் இல்லாததால் அஷன என்னும் பெயர் கொண்டவனாக

ப்ரகாஷிஸுதலிஹ = ஒளி பொருந்தியிருக்கிறான்

உபாஸனா மாள்பரிகெ = மேற்கூறியவாறு, சலாசல பிராணிகளில் சாஷன என்றும், அனஷன என்றும் ரூபங்களால் பகவந்தன் இருக்கிறான் என்று உபாசனை செய்பவர்களுக்கு

தன்ன நிஜரூப = தன் நிஜ ரூபத்தை

தோர்ப்பனு = காட்டுகிறான்.

 

போஜன, பானாதிகளை செய்பவர்கள், சாஷனர் என்றும், அது இல்லாதவர்கள் அனஷன என்றும் அழைத்துக் கொள்வர். சல பிராணிகள் சாஷனர். அசல பிராணிகள் அனஷனர் என்று அறியவேண்டும். சல பிராணிகளில் மனுஷ்யர் உத்தமர். உலகத்தில் இருக்கும் சாமான்ய ஸ்த்ரி, புருஷர்களில், சாஷன நாமகனாக பரமாத்மன் வசிக்கிறான் என்று அறிந்து, நம்பிக்கையுடன் வாழ்ந்து, தன்னைவிட கல்வி, ஞானம் முதலான விஷயங்களில் குறைவானவர்கள், தன்னைவிட உத்தமர்களில்கூட அவர்களில் சாஷன நாமக பரமாத்மனை சிந்தித்து, அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும்.

 

கஷ்டங்களைப் போக்குபவனான ஸ்வாமி, அசலமான பர்வதம், சாலிகிராமம் ஆகியவற்றில் அனஷன நாமகனாக இருக்கிறான் என்று சிந்தித்து உபாசனை செய்ய வேண்டும். இப்படியாக உபாசனை செய்பவர்களுக்கு, ஸ்ரீஹரி, தன் நிஜ ஸ்வரூபத்தைக் காட்டுகிறான்.

 

ப்ரகர 3ந்தர சிந்திஸுவுதீ3

ப்ரக்ருதியொளு விஸ்வாதி3 ரூபவ

ப்ரகடமாள்பெனு யதா2மதியொளு கு3ருக்ருபாப3லதி3 |

முகுரனிர்மித 3னதொ3ளு பொகெ3

ஸ்வகியரூபவ காம்ப3 தெரத3லி

அகுடிலாத்ம சராசரதி3 ர்வத்ர தோருவனு ||10

 

ப்ரகாராந்தர = இன்னொரு விதமாக

சிந்திஸுவுது = சராசராத்மக பிரபஞ்சத்தில் பரமாத்மனின் வியாப்தியை சிந்திக்க வேண்டும்.

ஈ ப்ரக்ருதியொளு = இந்த ப்ரக்ருதியில்

விஸ்வாதி = விஸ்வ, தைஜஸ, முதலான ரூபங்களை உபாசனை செய்யும் விதத்தை

க்ருக்ருபாபலதி = நம் குருகளின் க்ருபாபலத்தினால்

யதாமதியொளு = நம் புத்திக்கு எட்டும் வரைக்கும்

ப்ரகடமாள்பெ = சொல்கிறேன்

முகுர நிர்மித சதனதொளு = கண்ணாடியால் இழைக்கப்பட்ட வீட்டில்

போகெ = யாராவது ஒருவர் சென்றால்

ஸ்வகியரூப காம்ப தெரதலி = தன் பிரதிபிம்ப ரூபத்தையே தான் காண்பதைப் போல

ஆகுடிலாத்மக = வக்ர ஸ்வபாவம் உள்ள, ருஜு ஸ்வபாவாத்மகனான ஸ்ரீஹரி

சராசரதி = சரமான மனுஷ்யாதிகள், அசரமான பர்வதாதிகள் இவற்றில்

சர்வத்ர தோருவனு = என அனைத்து இடங்களிலும் காட்டிக் கொள்கிறான்.

 

பரமாத்மனின் ரூபங்களை அனைத்து இடங்களிலும் சிந்திக்க வேண்டும். ப்ரக்ருதியில் விஷ்வாதி ரூபங்களால், பரமாத்மன் இருக்கிறான். நம் குருகளின் க்ருபா கடாக்‌ஷத்தினால், ப்ரக்ருதியில் விஷ்வாதி ரூபத்தை சிந்திக்கும் விதங்களை, எனக்கு தெரிந்தவரை விளக்குகிறேன்.

 

கண்ணாடியால் வீடு கட்டி, அந்த வீட்டில் ஒருவன் நுழைந்தால், நான்கு திசைகளிலும் கண்ணாடி இருப்பதால், ஒரு கண்ணாடிக்கு இன்னொரு கண்ணாடி பிரதிபிம்பமாகி, 4 திசைகளிலும் அவன் ரூபமே அனந்தமாக தெரியும். சென்றவன் ஒருவனே ஆனாலும், எதிரெதிரே கண்ணாடிகள் இருப்பதால், அனந்த ரூபங்கள் தெரிவதைப்போல, பரமாத்மன் சரசராத்மக ப்ரபஞ்சத்தில் ஸ்வரூப பூதமான சரீரோபாதியினால் அனந்தானந்த ரூபியாக தெரிகிறான்.

 

பரிச்சேதத்ரய ப்ரக்ருதிக3ளொள

கி3ருதிஹனு விஷ்வாதி3 ரூபவ

4ரிஸி ஆத்மாதி3 த்ரிரூபதி3 ஈஷணத்ரயதி3 |

ஸுருசி ஞானாத்ம ஸ்வரூபதி3

துரிய நாமக வாஸுதே3வன

ஸ்மரிஸு முக்திஸு2ப்ரதா3யக3 நீதனஹுதெந்து3 ||11

 

பரிச்சேத த்ரய ப்ரக்ருதிகளொளகெ = சத்வ பரிச்சேத, ரஜஸ் பரிச்சேத, தமோ பரிச்சேத என்னும் மூன்று பரிச்சேதங்கள் உள்ள ப்ரக்ருதியில்

விஷ்வாதி ரூபவ = விஷ்வ, தைஜஸ, ப்ராக்ஞ என்னும் மூன்று ரூபங்களை

தரிஸி = தரித்து

இருதிஹனு = இருக்கிறான்

ஈஷணத்ரயதி = தாரேஷண, புத்ரெஷண, வித்தேஷண என்னும் ஈஷண த்ரயத்தில்

ஆத்மாதி த்ரிரூபவ = ஆத்ம, அந்தராத்ம, பரமாத்ம என்னும் மூன்று ரூபங்களை தரித்து இருக்கிறான்

ஸுருசி = விசேஷமான ஒளி பொருந்தியவனான ஸ்ரீஹரி

ஞானாத்ம ஸ்வரூபதி = ஞானாத்ம ஸ்வரூபனாக

துர்ய நாமக = துரிய நாமகனான

வாசுதேவன = வாசுதேவ மூர்த்தியை

ஈதனு = இவனே

முக்திசுக ப்ரதாயக = முக்தி சுகத்தைக் கொடுப்பவன் என்று

அஹுதெந்து = அந்தந்த ரூபங்களை

ஸ்மரிஸு = நினை

 

ப்ரக்ருதி, மூன்று பரிச்சேதங்களால் ஆனவள். சத்வ பரிச்சேத, ரஜஸ் பரிச்சேத, தமோ பரிச்சேத என்னும் இந்த மூன்றில், விஷ்வ, தைஜஸ, ப்ராக்ஞ என்னும் மூன்று ரூபங்களால், ஸ்ரீபரமாத்மன் வசிக்கிறான். தாரேஷண, புத்ரேஷண, வித்தேஷண என்னும் ஈஷண த்ரயர்களில் ஆத்ம, அந்தராத்ம, பரமாத்ம என்னும் மூன்று ரூபங்களால் வசிக்கிறான். ஞானாத்ம ஸ்வரூபனாக, துர்ய, வாசுதேவ என்னும் ரூபங்களால் முக்தியைக் கொடுத்து சுகத்தைக் கொடுக்கிறான் என்று நினைக்க வேண்டும்.

 

1மலம்ப4வ ஜனக ஜட3

ங்க3மரொளகெ3 நெலெஸித்து3 க்ரம வ்யு

த்க்ரமதி கர்மவ மாடி3 மாடி3ஸுதிப்ப பே3ரதெ3 |

க்‌ஷம க்‌ஷாம மீஹனாஹ்வய

ஸுமனஸாஸுரர ஒளகெ3 நமம

மம அஹம் எந்தி3 உபானெகெ3ய்வ ப்ராந்தத3லி ||12

 

கமலசம்பவ ஜனக = பிரம்மதேவரின் தந்தையான ஸ்ரீவாசுதேவன்

ஜட ஜங்கமரொளகெ = ஜட சேதனர்களிலும், த்ரிவிதரான சேதனர்களிலும்

நெலஸித்து = நிலைத்திருந்து

க்ரம = செய்ய வேண்டிய செயல், புண்யங்களை

வ்யுத்ரகமதி = அதன் எதிரான பாவங்களை

கர்மவ = இத்தகைய கர்மங்களை

பேசரதெ = சோர்வில்லாமல்

மாடி மாடிசுதிப்ப = செய்து, செய்விக்கிறான்

க்‌ஷம = மன்னிப்பவன் ஆகையால் க்‌ஷம என்றும்

க்‌ஷாம = ப்ரளய காலத்தில் அனைத்து பிராணிகளையும் சூக்‌ஷ்மரூப உள்ளவர்களாக மாற்றி, தன் வயிற்றில் வைத்துக் கொள்கிறான் ஆகையால், க்‌ஷாம என்றும்

ஸமீஹன = ஸ்ருஷ்ட்யாதி கர்மங்களை செய்வதில் விருப்பம் கொண்டிருப்பவன் ஆகையால், ஸமீஹன என்று பெயர்

இந்தப் பெயர்களால்,

ஸுமனஸாசுரரொளகெ = தேவதைகள், அசுரர்கள், நித்ய சம்சாரிகள் இந்த மூவரில் வசித்தவாறு

அஹம் = நானே பரமாத்மன் என்று தைத்யரிலும்

மம = என் மனைவி, மக்கள், என்னுடையவர்கள் என்னும் கர்வத்தினால் செயல்களை செய்யும் நித்ய சம்சாரிகளிலும்

நமம = அனைத்தும் பரமாத்மனுடையதே, எனது என்று ஒன்றும் இல்லை என்று சாத்விகரான தேவதைகளிலும்

ப்ராந்ததலி = இறுதிக் காலத்தில்

ஈ உபாசனெகெய்வ = செய்து செய்விக்கிறான்

 

ஸ்ரீவாசுதேவன், த்ரிவித ஜீவராசிகளிலும் இருந்து, புண்ய பாவங்களை செய்து செய்விக்கிறான். தேவதைகளில், க்‌ஷம என்னும் பெயரிலும், தைத்யர்களில் க்‌ஷாம என்னும் பெயரிலும் இருந்து, தைத்யரில் நானே ஈஸ்வரன், நானே போகி என்று அவர்களின் சாதனை முடியும் காலத்தில், தவறான உபாசனையை செய்து, செய்விக்கிறான்.

 

ராஜஸ ஜீவர்களில் இருந்து, தன் மனைவி, மக்கள் என்னும் கர்வத்தைக் கொடுத்து, அவர்களின் நலனுக்காக, பலன்களை எதிர்பார்த்து, உபாசனை செய்து செய்விக்கிறான்.

 

ஸாத்விகரான தேவதைகளில் இருந்து, அனைத்தும் பரமாத்மனுடையதே, அவன் ஸ்வதந்த்ரன், நான் பரதந்த்ரன் என்று உபாசனை செய்து செய்விக்கிறான். இறுதியில் அந்த உபாசனைகளை அனுசரித்து பலன்களைக் கொடுக்கிறான் என்பது கருத்து.

இதனால் ஜீவர்களுக்கு தங்களுடைய ஸ்வதந்த்ரத்தினால் ஒரு தூசியை நகர்த்தக் கூடியதான சக்தியையும், பரமாத்மன் கொடுத்தாலே ஒழிய கிடைக்காது என்று, உறுதியாக சொல்கிறார்.

 

மஸ்த ஜக3த்து ஈஷா

வாஸ்யவெனிபுது3 கார்யரூபனு

நாஷவாத3ரு நித்யவெ ரி காரண ப்ரக்ருதி

ஸ்ரீஷகெ3 ஜட3ப்ரதிமெயெனிபுது3

மாதொ3ம்மெகு3 ன்னிதா4னவு

வாவாகி3ஹ நித்ய ஷாலக்3ராமதோ3பாதி3 ||13

 

ஈ ஸமஸ்த ஜகத்து = இந்த உலகம் முழுக்கவும்

ஈஷாவாஸ்யவெனிபுது = பரமாத்மனின் இருப்பிடமாக இருக்கிறது.

கார்யரூபவு = கார்ய ரூபமான இந்த ஜகத்

நாஷவாதரு = ப்ரளய காலத்தில் நாசம் அடைந்தாலும்

காரணப்ரக்ருதி = ப்ரபஞ்சத்தின் ஸ்ருஷ்டிக்கு காரணபூதளான ப்ரக்ருதி

நித்யவே ஸரி = நித்யமானவள்

கார்ய ரூபமான ப்ரபஞ்சமானது,

ஸ்ரீஷகெ = ஸ்ரீலட்சுமிபதிக்கு

ஜடப்ரதிமெயெனிபுது = ஜட ப்ரதிமை என்று சொல்லப்படுகிறது

ஸன்னிதானவு = அவரின் சன்னிதானம்

மாசதொம்மெகு = என்றும் குறையாது (அழியாது)

ஷாலக்ராமதோபாதி = சாலிகிராமத்தில் பகவந்தனின் சன்னிதானம் எப்போதும் இருப்பதைப் போல

நித்ய வாசவாகிஹ = எப்போதும் வசிக்கிறான்.

 

ஈஷாவாஸ்யமிதம் சர்வம் -- என்னும் ஈஷாவாஸ்ய உபநிஷத்தின் வாக்கியத்தைப் போல, இந்த ஜகத் அனைத்தும் ஸ்ரீபரமாத்மனின் இருப்பிடமே ஆகியிருக்கிறது. பானைக்கு காரணம் மண். காரிய ரூபம் பானை. பானை உடைந்தாலும், காரண ரூபமான மண், நித்யமாகவே இருப்பதால், அதிலிருந்து மறுபடி பானை செய்யமுடியும்.

அதைப்போலவே, ப்ரக்ருதியில் சேதன ப்ரக்ருதி, சேதன ஸ்ருஷ்டிக்கு காரணள். ஜடப்ரக்ருதி, ஜட ஸ்ருஷ்டிக்கு காரணரூபம். கார்யரூபமான ஜகத் நாசமடைந்தாலும், காரணரூப ப்ரக்ருதி நித்யமானதால் மறுபடி ஸ்ருஷ்டிக்க முடியும். ப்ரபஞ்சமானது ஜடசேதனங்களால் ஆனது. இதில், ஜடரூபமான ப்ரபஞ்சங்கள் அனைத்தும் பரமாத்மனுக்கு ஜடப்ரதிமை எனப்படுகின்றன. சேதனர்கள் அனைவரும் பரமாத்மனின் சேதனப்ரதிமை என்று முந்தைய பத்யத்தில் பார்த்தோம்.

 

கார்யரூப ப்ரபஞ்சம் இருக்கும் வரைக்கும், பரமாத்மனின் சன்னிதானம் இருந்தே இருக்கிறது. ப்ரளய காலத்திலும்கூட காரணத்தில் வசிக்கிறான். சாலிகிராமத்தில் எப்படி எப்போதும் அவனின் சன்னிதானம் இருந்தே இருக்கிறதோ, அப்படியே ப்ரபஞ்சத்திலும் அவனின் நித்ய சன்னிதானம் இருந்தே இருக்கிறது.

 

ஏகமேவாத்2விதிய ரூப அ

நேக ஜீவரொளித்து3 தா ப்ர

த்யேக கர்மவ மாடி3 மோஹிஸுதிப்ப திளி3லெ |

மூக வதி4ராந்தா4தி3 நாமதி3

ஈ களேவரதொ3ளகெ3 கரெஸு

மாகலத்ரன லௌகிக மஹாமஹிமெ கே3னெம்பெ3 ||14

 

ஏகமேவ = சர்வ ஸ்வதந்த்ரமானதும், பரபிரம்ம நாமகமானதுமான வஸ்து ஒன்றே. அதாவது, பிரபிரம்ம நாமகனான பரமாத்மன் ஒருவனே ஸ்வதந்த்ரன்.

அத்விதீயரூப = சமம் (ஒப்புமை) இல்லாதவன். அவனை விட்டால், இன்னொரு ஸ்வதந்த்ரன் இந்த உலகத்தில் இல்லை.

அனேக ஜீவரொளித்து = இத்தகைய பரமாத்மன், அனேக ஜீவர்களில் இருந்து

திளிஸதலெ = தன் இருப்பை மற்றவர்களுக்குக் காட்டாமலே

ப்ரத்யேக கர்மவ = ஒவ்வொருவரிலும் இருந்து, ஒவ்வொரு விதமான செயல்களை செய்து

மோஹிஸுதிப்ப = அந்த ஜீவர்களே அதை செய்கிறான் என்று நினைக்க வைக்கிறான்

ஈ களெவரதொளகெ = இந்த மனுஷ்யனின் தேகத்தில்

மூகபதிராந்தாதி நாமதி = ஊமைகளில் இருந்து ஊமை என்றும், செவிடர்களில் இருந்து செவிடன் என்றும், குருடர்களில் இருந்து குருடன் என்றும்

கரெசுவ = அழைத்துக் கொள்கிறான்

மாகளத்ரன = லட்சுமிதேவியே பத்னியாக உள்ள ஸ்ரீபரமாத்மனின்

லௌகிக மஹா மஹிமெகெ ஏனெம்பெ = மஹா மகிமைகளை என்னவென்று சொல்லி வர்ணிப்பேன்?

 

ஏகமேவாத்விதீய என்னும் ஸ்ருதி ப்ரதிபாத்யனான ஸ்ரீஹரிக்கு சமானர் இந்த உலகத்தில் வேறு யாரும் இல்லை. இத்தகைய ஸ்ரீஹரி ஒருவனே ஆனாலும், அனேக வித பிராணிகளில் இருந்து அவர்களுக்குத் தெரியாமலேயே அனேக விதமான கர்மங்களை செய்து செய்விக்கிறான். ஊமைகளில் இருந்து ஊமை என்றும், செவிடர்களில் இருந்து செவிடன் என்றும், குருடர்களில் இருந்து குருடன் என்றும் அழைத்துக் கொள்கிறான். இத்தகைய ஸ்ரீஹரி மஹாமகிமைகளை என்னவென்று வர்ணிப்பேன்?

 

லோகப3ந்து4ர் லோகநாத2 வி

ஷோக ப4க்தர ஷோக நாஷன

ஸ்ரீகரார்ச்சித ஸோகத3ந்த33லிப்ப ர்வரொளு |

ஸாகு1வனு ஜ்ஜனர பரம க்ரு

பாகரேஷ பினாகி ன்னுத

ஸ்வீகரிப ஆனதரு கொட்ட மஸ்த கர்மக3||15

 

லோகபந்து = அனைத்து பிராணிகளுக்கும் உறவினன்

லோகநாத = அனைத்து உலகங்களுக்கும் தலைவன்

விஷோக = சோகம் இல்லாதவன்

பக்தர ஷோக நாஷன = பக்தர்களின் சோகத்தை பரிகரிப்பவன்

ஸ்ரீகரார்ச்சித = லட்சுமிதேவியரின் கைகளால் பூஜிக்கப்படுபவன்

சர்வரொளு = அனைவரிலும்

சோகதந்ததலி = அவர்களுக்கு சம்பந்தப்படாமல்

இப்ப = இருக்கிறான்

பரமக்ருபாகர = பரம கருணாளுவான

ஈஷ = சர்வ ஸ்வதந்த்ரனான பரமாத்மன்

சஜ்ஜனர சாகுவனு = சஜ்ஜனர்களை காக்கிறான்

பினாகிசன்னுத = ருத்ர தேவரால் வணங்கப்படுபவன்

அனதருகொட்ட = தன்னை வணங்கும் பக்தர்கள் சமர்ப்பித்த

சமஸ்தகர்மகள = அனைத்து கர்மங்களையும் ஏற்றுக் கொள்பவன்

 

அனைத்து உலகங்களுக்கும் தலைவனான, லோகபந்துவான ஸ்ரீஹரி, பக்தர்களின் சோகங்களை பரிகரித்தவாறு, அவர்களுக்கு சம்பந்தப்படாமல் அனைவரிலும் இருந்து, சஜ்ஜனர்களைக் காக்கிறான். பக்தர்கள் கொடுத்த கர்மங்களை ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு உத்தமமான பலன்களைக் கொடுக்கிறான்.

 

ஆஹித ப்ரதிமெக3ளெனிஸுவவு

தே3ஹ கே3ஹாபத்ய தி த4

லோஹ காஷ்ட ஷிலா ம்ருதாத்3மகவாத3 த்4ரவ்யக3ளு |

ஸ்நேஹத3லி பரமாத்ம எனகி3

த்தீஹ நெந்த3ரித3னுதி3னதி3 ஸ்

ம்மோஹ கொளகா333லெ பூஜிஸு ர்வ நாமகன ||16

 

ஆஹித ப்ரதிமெகளெனிஸுவவு = அடுத்து சொல்லப்போகும் பொருட்கள் அனைத்தும் பரமாத்மனுக்கு ஆஹித ப்ரதிமெகள் எனப்படுகின்றன.

தேஹ = தேகம்

கேஹ = வீடு

அபத்ய = மக்கள்

ஸதி = மனைவி

தன = செல்வம்

லோஹ, காஷ்ட, ம்ருதாத்மகவாத = பஞ்சலோகம், இரும்பு, மிருத்திகை ஸ்வரூபமான

த்ரவ்யகளு = த்ரவ்யங்கள்

ஸ்னேஹதலி = நல்ல நோக்கத்துடன்

பரமாத்மனு = பரமாத்மன்

எனகித்திஹ னெந்தரித = எனக்கான சாதனைக்காக கொடுத்திருக்கிறான் என்று அறிந்து

அனுதினதி = தினந்தோறும்

சம்மோஹக்கெ = அதன்மேல் எவ்வித பிடிப்பும் இன்றி

ஒளகாகதலெ = ஆசைப்படாமல்

சர்வ நாமகன = அந்தந்த பெயர்களைக் கொண்டவனை

பூஜிஸு = பூஜித்து வா.

 

தேகம், வீடு, மக்கள், மனைவி, செல்வம், இரும்பு, பஞ்சலோகம், சிலை, மிருத்திகையிலான பொருட்கள் என அனைத்தும் பரமாத்மனின் ஆஹித ப்ரதிமைகள் என்று அழைக்கப்படுகின்றன. அவற்றில் அந்தர்கதனான, சர்வ நாமகனான பரமாத்மனை பூஜித்து வா.

 

ஸ்ரீதருணி வல்லப4கெ3 ஜீவரு

சேதன ப்ரதிமெக3ளு ஓத

ப்ரோத நாகி3த்தெ3ல்லரொளு வ்யாபார மாடு3திஹ |

ஹோத ர்வேந்த்3ரியக3ளொளு

ம்ப்ரீதியிந் து3ண்டு3ணிஸி விஷய நி

ர்வாத தே33 தீ3பத3ந்த33லிப்ப நிர்ப4யதி3 ||17

 

ஸ்ரீதருணிவல்லபகெ = லட்சுமிபதியான ஸ்ரீஹரிக்கு

ஜீவரு = ஜீவர்கள்

சேதன ப்ரதிமெகளு = சேதன ப்ரதிமைகள்

எல்லரொளு = இவர்கள் அனைவரிலும்

ஓதப்ரோதனாகித்து = குறுக்கும் நெடுக்குமாக பரமாத்மன் இருந்து

வியாபார மாடுதிஹ = கர்மங்களை செய்கிறான்

ஸர்வேந்த்ரியகளொளு = அனைத்து இந்திரியங்களிலும்

ஹோத = ஹோத என்னும் பெயரில் இருந்து

சம்ப்ரீதியிந்த = மிகவும் அன்புடன்

விஷய = விஷய போகங்களை

உண்டுணிஸி = தானும் உண்டு, அவர்களை உண்ணவும் வைத்து

நிர்வாததேஷக = காற்று இல்லாத இடத்தில் இருக்கும்

தீபதந்ததலி = தீபத்தைப் போல

நிர்பயதி = பயம் இல்லாமல்

இப்ப = இருக்கிறான்

 

ஜீவர்கள் அனைவரும் பரமாத்மனின் பிரதிமைகள் எனப்படுகின்றனர். ஆடையில் எப்படி நூல் குறுக்கும் நெடுக்குமாக ஓடி நூல் இருப்பதே தெரியாமல் அது ஆடையாகவே இருக்கிறதோ, அதைப்போலவே, பரமாத்மனும் பிராணிகளில் குறுக்கும் நெடுக்குமாக இருந்து, பிராணிகளைப் போல காட்டிக்கொண்டு கர்மங்களை செய்து வருகிறான்.

சர்வேந்திரியங்களிலும் ஹோத நாமகனாக இருந்து, விஷய சுகத்தை தான் உண்டு, அவர்களையும் அன்புடன் உண்வித்து, அதிகமான காற்று இல்லாத இடத்தில் இருக்கும் தீபம் எப்படி அணைந்து போகும் என்ற பயம் இல்லாமல் இருக்கிறதோ, அதைப் போலவே அனைத்து இடங்களிலும் பயம் இல்லாமல் வசிக்கிறான்.

 

பூ4ஸோகித3 மானவனு ப3ஹு

மாதனாடு3வ தெரதி3 மஹத

த்3பூ4த விஷ்ண்வாவேஷதி3ந்த3லி ர்திபுது3 ஜக3வு |

கைத வோக்திக3ளல்ல சேஷ 2

ணாதபத்ரகெ3 ஜீவபஞ்ச

வ்ராதவெந்தி3கு3 பி4ன்னபாதா3ஹ்வயதி3 கரெஸுவுது3 ||18

 

பூதசோகித மானவனு = பேய், பிசாசுகளால் பீடிக்கப்பட்ட மனிதன்

பஹு மாதனாடுவ தெரதி = அதிகமாக (அர்த்தமில்லாமல்) பேசுவதைப் போல

மஹதத்பூத விஷ்ண்வாவேஷதிந்தலி = மஹா பூதனான விஷ்ணுவின் ஆவேசத்தினால்

ஜகவு = இந்த உலகம்

பர்த்திபுது = நடக்கிறது

கைதவோக்திகளல்ல = இந்த பேச்சுகள் கபடமான பேச்சுகளல்ல (பொய் பேச்சுகளல்ல)

சேஷபணாதபத்ரகெ = சேஷதேவரின் தலைகளையே குடைகளாக வைத்திருப்பவன்

இத்தகைய பரமாத்மனுக்கு

ஜீவபஞ்சகவ்ராத = தேவதைகள், கந்தர்வர், பித்ருகள், மனுஷ்யர், அசுரர் என்னும் ஐந்துவித வெவ்வேறு சமூகங்கள்

எந்திகு = என்றைக்கும்

பின்னபாதாஹ்வயதி = பின்னாம்சர்கள் என்று

கரெசுவுது = அழைக்கப்படுகின்றனர்.

 

பேய் பிடித்தவர்கள் தொடர்ச்சியாக ஏதோ பேசிக் கொண்டிருப்பார்கள். அதைப்போல, பரமாத்மன் என்னும் மஹாபூதம் பிடித்த இந்த ஜகத்; அதாவது இந்த ஜகத்தில் இருக்கும் பிராணிகள், அனேக விதமான அற்புதமான காரியங்களை செய்கின்றனர். இது பொய் அல்ல. சேஷதேவரின் தலைகளையே குடையாகக் கொண்டிருக்கும் பரமாத்மனுக்கு ஜீவபஞ்சகவ்ராத என்பவர்கள் எப்போதும் வேறுபட்டு இருக்கின்றனர்.

 

ஜீவபஞ்சக என்றால் என்ன?. பாகவத 10ம் ஸ்கந்தம் 1ம் அத்தியாயம் 42ம் ஸ்லோகத்தில் ஆத்மபஞ்சஸுஎன்னும் பதத்திற்கு வியாக்யானம் செய்யும் சந்தர்ப்பத்தில், ஆத்ம பஞ்சஸு = தேவ, கந்தர்வ, பித்ரு, மனுஷ்ய, அசுர பேதேன பஞ்சானாம் ஆத்மனாம் மத்யேஎன்று அர்த்தம் சொல்லியிருப்பார்கள். அதே அபிப்பிராயத்தையே இங்கும் எடுத்துக் கொள்ளவேண்டும்.

 

பின்னபாத என்றால், ‘பாதோஸ்ய விஷ்வபூதானிஎன்னும் ஸ்ருதியும், பாகவத 2ம் ஸ்கந்தம் 6ம் அத்தியாயத்தில், ‘பாதோஸ்ய ஸர்வபூதானி பும்ஸ: ஸ்திதி விதோவிது:என்னும் ஸ்லோகத்தின் வியாக்யானத்தில், சர்வபூதானி = சர்வ ஜீவா: அஸ்ய புருஷஸ்ய பாத: பின்னாம்ஷ: இதிஸ்திதிவித: விது:என்று சொல்லியிருக்கிறார்கள். இதிலிருந்து சர்வ ஜீவர்களும் பரமாத்மனின் பின்னாம்ஷர்கள் என்று அர்த்தம் வருகிறது. அதே அர்த்தத்தையே தாசார்யரும் இங்கு சொல்லியிருக்கிறார். 

 

தி3வியொளிப்பவு மூரு பாத33

ளவனியொளகி3குதொ3ந்து3 ஈ வித4

கவிபி4ரீடித கரெஸுவ சதுஷ்பாது தானெந்து3 |

இவன பாத3சதுஷ்டயக3ளனு

4வகெ தந்து3 நிரந்தரதி3

த்த4வன 2 ர்வாந்தராத்மகனெந்து3 ஸ்மரிஸுதிரு ||19

 

மூரு பாதகளு = அனந்தாஸன, வைகுண்ட, நாராயண என்னும் மூன்று ஸ்வரூபாம்சங்கள்

திவியொளிப்பவு = பிரம்மாண்டத்திற்கு வெளிப்புறத்தில் இருக்கின்றன

அவனியொளகிஹதொந்து = (முந்தைய பத்யத்தில் கூறியதைப் போல) இந்த பூமியில் அனைத்து பிராணிகளும் பின்னாம்சர்கள் என்பது ஒரு பாதம்.

ஈ வித கவிபிரீடித = ஞானிகளால் வணங்கப்படும் ஸ்ரீஹரி

சதுஷ்பாது தானெந்து = 4 விதமான அம்ஷங்கள் உள்ளவன் என்று அழைக்கப்படுகிறான்

இவன பாதசதுஷ்டயகள = இந்த பரமாத்மனின் 4 அம்சங்களையும்

அனுபவகெ தந்து = அனுபவத்திற்குக் கொண்டு வந்து

நிரந்தரதி = எப்போதும்

உத்தவன சக = ஸ்ரீகிருஷ்ணன்

சர்வாந்தராத்மகனெந்து = அனைவரின் உள்ளும் இருக்கிறான் என்று

ஸ்மரிஸுதிரு = நினைத்திரு.

 

முந்தைய பத்யத்திலும், இந்த பத்யத்திலும் சொன்ன பாத என்னும் சொல்லிற்கு அம்ஷ என்று அர்த்தம். பரமாத்மனுக்கு 4 பாதங்கள் என்றால், 4 அம்சங்கள் என்று அர்த்தம். பூமியில் இருப்பது ஒரு அம்சம். அதையே பின்னாம்சம் என்று முந்தைய பத்யத்தில் பார்த்தோம். மிச்சமிருக்கும் மூன்று பாதங்களும் த்ரிபாதஸ்யா ம்ருதம்திவிஎன்ற ஸ்ருதி விளக்குகிறது.

 

இதே அர்த்தத்தையே பாகவத 2ம் ஸ்கந்தம் 6ம் அத்தியாயத்தில் 96ம் ஸ்லோகம் : பாதாஸ்த்ரயோ பஹிஸ்த்வாஸன்ன ப்ரஜானாம் ய ஆஸ்ரயா:’. பிரம்மாண்டத்திற்கு வெளியே மூன்று பாதங்கள் உள்ளன. அந்த பாதங்களே பிரம்மாதி தேவதைகள் வசிப்பவையாகும். அந்த பாதங்கள் எவை என்றால், அந்த ஸ்லோகத்தின் வியாக்யானத்தில்:

 

அனந்தாஸன வைகுண்ட நாராயணா: ஏஷுலோகேஷு வஸந்தீதி பாவ: || மற்றும்

தாத்பர்ய வாக்கியம்:

அனந்தாஸன வைகுண்ட நாராயண புராணிது

 

என்னும் வாக்கியங்களால், அனந்தாசனத்தில் இருக்கும், சேஷசாயியான பத்மனாப ரூபம் ஒன்று. வைகுண்ட லோகத்தில் இருக்கும் வாசுதேவ ரூபம் ஒன்று. ஸ்ருஷ்டியின் ஆரம்பத்தில், பிரம்மாண்டத்தை ஸ்ருஷ்டித்து தண்ணீரில் படுத்திருந்த நாராயண ரூபம் ஒன்று.

 

ஆபோனாரா இதிப்ரோக்த: ஆபோவை நரஸூனவ: ||

அயனந்தஸ்ய தா: பூர்வந்தேன நாராயண: ஸ்ம்ருத: ||

 

என்னும் பாகவத வாக்கியத்திற்கேற்ப தண்ணீருக்கு நார என்று பெயர். அவற்றிற்கு ஆதரவு அளிப்பவன் ஆகையால், நாராயணன் என்று பெயர் என்று சொல்லியிருக்கின்றனர்.

 

இந்த ஆதாரத்தின் பேரில் உதகத்திற்கு ஆஸ்ரயனான நாராயண ரூபம் ஒன்று. ஆக மொத்தம், இவை மூன்று பாதங்கள். அதாவது மூன்று ஸ்வரூபாம்சங்கள் என்று அர்த்தம்.

 

இத்தகைய 4 அம்சங்கள் உள்ளவன் பரமாத்மன் என்று அறிந்து, அதை உங்களின் அனுபவத்திற்குக் கொண்டு வந்து, தினந்தோறும் சர்வாந்தராத்மகனான பரமாத்மனை நினைக்க வேண்டும் என்பது கருத்து.

 

வம்ஷபா33லு பெ3லெய கண்டு3

ரம்3லி ஷோபி3புது3 பா333

வம்ஷ பாஷதி3 கட்டி ஏருவ டொ3ம்ப3 மஸ்தககெ3 |

கம் மர்த4ன தா3ரிகெ3 நி

ஸ்ஸம்ஷயதி3 ந்தி3தெ3 நா வி

த்3வம்ஸனெந்து3 அஹங்கரிஸெ4வகு3ணதி33ந்தி4ஸு||20

 

வம்ஷ = தடிமனான மூங்கில்

பாகலு = வளைந்திருக்க

பெளெயுவது கண்டு = அதனை பல்லக்கிற்கு பயன்படுத்தலாம் என்று

நரம்சதலி = பல்லக்கைத் தூக்கும் மனிதனின் தோளில் வைத்தால்

ஷோபிபுது = நன்றாக இருக்கும்

பாகதவம்ஷ = வளையாத மூங்கிலை

பாஷதி கட்டி = கயிற்றால் கட்டி

ஏருவ டொம்ப மஸ்தககெ = கழைக்கூத்தாடி அதன் மேல் ஏறி வித்தை காட்டுவான்

கம்ஸமர்த்தன = ஸ்ரீகிருஷ்ணனின்

தாசரிகெ = அவனின் பக்தர்களுக்கு

நிஸ்ஸம்ஷயதி = சந்தேகமே இல்லாமல்

எரகதெ = வணங்காமல்

நானு வித்வம்ஸனெந்து = அஹங்ககரிஸெ = நான் கற்றறிந்தவன் என்ற கர்வத்தினால்

பவகுணதி = சம்சாரம் என்னும் கயிற்றால்

பந்திஸுவ = கட்டுவான்

 

தடியான மூங்கிலை அது வளரும்போது, வளைத்துக் கட்டினால், அது நன்றாக வளர்ந்தபிறகு, அதனை மனிதர்கள் பல்லக்கிற்காக கட்டி தங்கள் தோள்களில் வைத்து தூக்கிச் செல்வர். ஆனால், அப்படி வளையாமல் நேராக நின்றிருக்கும் மூங்கிலை, கூத்தாடிகள் கொண்டு வந்து, நடுவில் நிற்கவைத்து, 4 பக்கங்களிலும் கயிற்றால் அதனைக் கட்டி, அதன் மேல் ஏறுவார்கள்.

 

அதைப்போலவே, ஸ்ரீபரமாத்மன் தன் பக்தர்களுக்கு, தலை குனிந்து வணங்காதவர்களை, சந்தேகமே இல்லாமல், சம்சாரம் என்னும் கயிற்றில் கட்டுவான். தலை வணங்கியவர்களை காப்பான் என்று அர்த்தம்.

 

ஜ்யோதிரூபகெ3 ப்ரதிமெக3ளு ஸா

ங்கேதிகாரோபித ஸுபௌருஷ

தா4துப்தக தை4ர்ய ஷௌர்யௌதா3ர்ய சாதுர்ய |

மாது மான மஹத்வ ஹன ஸு

நீதி நிர்மல தே3ஷ பி3ராஹ்மண

பூ4தபஞ்சக பு3த்தி3 மொத3லாதி3 இந்தி3ரியஸ்தா2||21

 

ஜ்யோதிரூபகெ = தானே ஒளிபொருந்தியவனான பரமாத்மனுக்கு

ப்ரதிமெகளு = ஜடரூபமான ஷிலா பிரதிமைகள், பஞ்சலோக பிரதிமைகள் இவை

சாங்கேதிக = குறியீடுகள்

ஆரோபித = பரமாத்மனின் ஸ்மரணையின் நினைவுக்காக என்று இருக்கின்றன.

ஆனால், பரமாத்மன் அனேக இடங்களில் எப்போதும் இருக்கிறான். அவை அனைத்தையும் ப்ரதிமைகள் என்று அறியவேண்டும். அவை எவை என்றால்:

ஸுபௌருஷ = புருஷ சம்பந்தமான

தாதுஸப்தக = த்வக், சர்ம முதலான 7 தாதுகள்

தைர்ய = வீரம்

ஷௌர்ய = வலிமை

ஔதார்ய = ஈகை

சாதுர்ய = அறிவாளி

மாது = பகவத் சம்பந்தமான ஸத்வமான பேச்சுக்கள்

மான = கௌரவம்

மஹத்வ = ஆளுமை

ஸஹன = சகிப்புத்தன்மை

சுநீதி = உத்தமமான நீதி

நிர்மல தேஷ = சுத்தமான இடம்

பிராமண = பிராமணர்கள்

பூதபஞ்சக = ப்ருத்வியாதி ஐந்து பூதங்கள்

புத்தி மொதலாதி = புத்தி முதலான

இந்திரிய = இந்திரியங்கள்

இவை அனைத்தும்

ஸ்தான = பரமாத்மனின் வசிப்பிடங்கள் ஆகும்.

 

உலகத்தில் தாமிரம், பித்தளை, வெள்ளி, தங்கம் ஆகியவற்றில் சிலைகளை செய்து, அதற்கு ராம கிருஷ்ணன் என்று பெயர் வைத்து பூஜை செய்கின்றனர். தேஜோமயனான பரமாத்மனே இந்த பிரதிமைகள் அல்ல. பரமாத்மன் ஜடம் அல்ல. நமக்கு தியானம் செய்வதற்காக ஏதாவது ஒரு ரூபத்தை மனதில் நினைத்து அதனை தியானம் செய்ய வேண்டியிருக்கிறது. அதற்காகவே, பிரதிமைகளில் குறியீடாக ராம, கிருஷ்ணாதி நாமங்களை வைத்திருப்பார்கள். ஆகையால், அவற்றில் பரமாத்மனின் சன்னிதானத்தை அறியவேண்டும். ஆனால், பிரதிமையே தேவர் என்று அறிந்து, பிற இடங்களில் இருக்கும் பகவத் ரூபங்களை அறியாமல், அவை அனைத்தையும் புறக்கணித்து, பிரதிமைகளின் பூஜையை செய்தால், பகவந்தன் அந்த பூஜையை ஏற்றுக் கொள்வதில்லை.

 

ஆகையால், இந்த பத்யத்தில் சொல்லியிருக்கும் 7 தாதுக்களிலும், தைர்ய முதலானவகளிலும், பகவத் ரூபங்களை சிந்திக்க வேண்டும். தைர்யாதிகள் கண்ணிற்கு தெரிவதில்லை. அவற்றில் பகவத் ரூபங்களை எப்படி சிந்திப்பது என்றால்:

 

தைர்யாதிகள் உள்ள மனிதர்களில் தைர்யரூபியாக இருந்து, இவன் தைர்யசாலி, இவன் பலசாலி என்னும் பெயர், பரமாத்மனே பெறுகிறான் என்று அறிந்து, உபாசனை செய்யவேண்டும் என்பது கருத்து.

 

ஜீவராஷியொளம்ருத ஷாஷ்வத

ஸ்தா2வரக3ளொளு ஸ்தா2ணு நாமக

ஆவகாலத3லிப்ப அஜித அனந்தனெந்தெ3னிஸி |

கோவிதா3ம்பதி கா3யனப்ரிய

ஸாவயவ ஸாஹஸ்ர நாம ப

ராவரேஷ பவித்ரகர்ம விபஸ்சித ஸுதா4||22

 

கோவிதாம்பதி = வேத வேதாந்தங்களில் சந்தேகங்கள் அற்ற, அர்த்த ஞானமுள்ள ஞானிகளுக்கு ஸ்வாமியான

காயனப்ரிய = சாமகான மற்றும் தோடி, பைரவி முதலான ராக ஞானத்தினால், சுஸ்வரத்துடன் தன் மகிமைகளைப் பாடினால், மிகவும் மகிழும்

ஸாவயவ = ஆனந்தமயனான கரசரணாதி அங்கங்களைக் கொண்ட

சஹஸ்ர நாம = சஹஸ்ர நாமங்களால் அழைத்துக் கொள்ளும்

பராவரேஷ = உத்தமமான பிரம்மாதிகள் முதல் த்ருண ஜீவர்கள் வரையிலான அனைவருக்கும் ஈஸ்வரனான

பவித்ரகர்ம = மங்களகரமான கர்மங்களைக் கொண்ட

விபஸ்சித = ஞானிகளுக்கு

சுதாம = உத்தமமான இருப்பிடமான ஸ்ரீபரமாத்மன்

ஜீவராசிகளில்

அம்ருத = மரணம் இல்லாததால் அம்ருத நாமகன்

ஷாஷ்வத = நிரந்தரமானவன்

ஸ்தாவரகளொளு = ஸ்தாவரங்களில்

ஸ்தாணு நாமகனு = ஸ்தாணு நாமக பெயரால்

அஜிதானந்தனெந்தெனிஸி = அஜித, ஆனந்த என்று அழைத்துக்கொண்டு

ஆவகாலதலி = அனைத்து காலங்களிலும் இருக்கிறான்.

 

எப்போதும், யாராலும் வெல்லப்பட முடியாதவன் ஆகையால், அஜித என்று பெயர்.

ஜீவராசிகளில் அம்ருத என்னும் பெயரால் நிரந்தரமாக இருக்கிறான். ஸ்தாவரங்களில் ஸ்தாணு நாமகனாக அனைத்து காலங்களிலும் இருக்கிறான்.

 

மற்ற பதங்களுக்கு பத்ய அர்த்தங்களே தெளிவாக இருக்கின்றன.

 

மாத4வன பூஜார்2வாகி3 நி

ஷே24 கர்மவ மாடி34

ம்பாதி3லு த்புண்ய கர்மக3ளெனிஸி கொளுதிஹவு |

ஸ்வோத3ரம்ப4ரணார்த்த நித்யதி3

ஸாது3கர்மவ மாடி33ரு ரி

ஐது3வனு தே3ஹாந்தரவ ந்தே3ஹ வினிதில்ல ||23

 

மாதவன பூஜார்த்தவாகி = பரமாத்மனின் பூஜைக்காக

நிஷேத கர்மவ மாடி = செய்யக்கூடாத செயல்களை செய்து

தன சம்பாதிஸலு = செல்வத்தை சம்பாதித்தால்

சத்புண்யகர்மகளு = சத்புண்ணிய கர்மங்கள்

எனிஸி கொளுதிஹவு = என்று சொல்லிக் கொள்கின்றன

ஸ்வோதரம்பரணார்த்த = தன் மனைவி, மக்கள், குடும்பம் ஆகியோருக்கு உணவு அளிப்பதற்காக

நித்யதி = தினந்தோறும்

சாதுகர்மவ மாடிதரு சரி = சத்கர்மங்களை செய்வதுபோல நடித்தால்

தேஹாந்தரவ = மறுபடி பூமியில் பல பிறவிகளை

ஐதுவனு = அடைகிறான்

சந்தேஹ வினிதில்ல = இந்த விஷயத்தில் சிறிதும் சந்தேகம் இல்லை

 

பகவத்ப்ரீதிக்காக தேவாலயம், தோட்டம் ஆகியவற்றைக் கட்டுவதற்காக யாசனைகளை செய்து, மிக அதிகமாக செல்வங்களை சேர்த்து, பகவத்ப்ரீதிக்காக அந்த சத்காரியங்களை செய்தால், அவை சத்காரியங்கள் என்று அழைத்துக் கொள்கின்றன.

 

மனதில் தன் தேக போஷணைக்காக என்று நினைத்து, பிராமண போஜனாதி நிமித்தங்களை வெளியே காட்டி, பணத்தை சம்பாதித்து, பிராமண சந்தர்ப்பணை முதலானவற்றை செய்தாலும், பாவ கர்மத்தின் பலனாக, மறு பிறவிகளை அடைகின்றனர். ஆகையால், எந்த கர்மத்தை செய்தாலும், பகவத் ப்ரீதிக்காகவே செய்யவேண்டும் என்பது கருத்து.

 

அபக3தாஸ்ரய எல்லரொளகி3

த்து3பமனெனிப அனுபமரூபனு

ஷபரகேதனஜனக மோஹிப மோஹகன தெரதி3 |

தபனகோடி மப்ரபா4ஸித

வபுவெனிப க்ருஷ்ணாதி3 ரூபக

விபக3ளந்துண்டு3ணிப ர்வத்ரத3லி நெலெஸித்து3 ||24

 

அபகதாஸ்ரய = யாரையும் சார்ந்திருக்காத

அனுபமரூபனு = ஒப்புமை இல்லாத ஸ்வரூபம் கொண்டவன்

எல்லரொளகித்து = அனைவரின் உள்ளும் இருந்து

உபமனெனிப = மனிதனைப் போல, மிருகத்தைப் போல என்று ஒப்புமை கொண்டவன் என்று அழைத்துக் கொள்கிறான்

ஷபரிகேஷன ஜனக = மன்மதனின் தந்தையான ஸ்ரீஹரி

தபனகோடி ஸமப்ரபா = கோடி சூரியர்களின் ஒளியைக் கொண்டவனானாலும்

கிருஷ்ணாதி ரூபக = கிருஷ்ணாதி அவதாரங்களில்

த்விபதனந்தெ = சாதாரண மனிதனைப் போல

அஸித = கருப்பு

வபுவெனிப = வண்ணம் கொண்ட சரீரம் கொண்டவன் என்று அர்த்தம்

மோஹகன தெரதி = நல்லாடைகளை அணிந்து மக்களை மயக்குபவனைப் போல

மோஹிப = ஜீவர்களை கவர்கிறான்

சர்வத்ரதலி நெலெசித்து = அனைத்து இடங்களிலும் நிலைத்திருந்து

உண்டுணிப = தான் உண்டு, ஜீவர்களுக்கும் உண்ண வைத்தான்.

 

தானே அனைவருக்கும் ஆதரவு அளிப்பவன். தனக்கு என்று யாருடைய ஆதரவும் தேவையில்லை. தான் ஒப்புமை இல்லாதவனானாலும், மனுஷ்யாதிகளில் இருந்து, மனிதனைப் போல என்று சொல்லிக் கொள்கிறான். கோடி சூரியர்களின் ஒளியைப் பெற்றவன், கிருஷ்ணாவதாரத்தில் மனித உருவத்தைப் பெற்று, கருப்பு, வெள்ளை, முதலான சாதாரண வர்ணம் கொண்டவனாக மக்களை மயக்கினான். அனைத்து இடங்களிலும் வசித்திருந்து, விஷய போகாதிகளையும், அன்னாதிகளையும் தான் உண்டு, ஜீவர்களுக்கும் உண்வித்தான்.

 

அட3வியொளு பி3த்தத3லெ பெ3ளெதி3

கி333 மூலிகெ கலஜீவர

ஒடலொளிப்பாமயவ பரிஹர கை3ஸுவந்த33லி |

ஜடஜம்ப4வ ஜனக த்ரிஜக

த்3தொ3டெ3ந்தெயிஸெனலு அவரி

த்தெ3டெ3கெ3 பந்தொ33கு3வனு ப4க்தர பி3டெ3ய மீரதெ3லெ ||25

 

அடவியொளு = காடுகளில்

பித்ததலெ பெளதிருவ = தானாகவே விதை விழுந்து, வளர்ந்திருக்கும்

கிடத மூலிகெ = மூலிகைகள்

சகலஜீவர = அனைத்து ஜீவர்களின்

ஒடலொளிப்ப = சரீர சம்பந்தமான

ஆமயவ = நோயினை

பரிஹர் கைசுவந்ததலி = பரிகாரம் செய்வதைப் போல

த்ரிஜத்தொடெய = மூன்று உலகங்களின் தலைவனே

சந்தெயிஸெனலு = என்னை காப்பாற்று என்றால்

ஜடஜசம்பவ ஜனக = ஜடஜ என்னும் சொல்லில் இருக்கும் ட என்னும் எழுத்து ல என்றும் படிக்கலாம். ஜ-ட-ல இவற்றிற்கு பரஸ்பரம் பேதம் இல்லை. ஆகையால், ஜடஜ = ஜலஜ. ஜலஜ சம்பவர், பிரம்மதேவர் . அவரின் ஜனக = தந்தையான ஸ்ரீபரமாத்மன்

பக்தர பிடிய மீரதலெ = பக்தர்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்தாமல்

அவரித்தெடெகெ = அவர்கள் இருக்கும் இடத்திற்கு

பந்தொதகுவனு = வந்து நிற்பான்.

 

நம் முயற்சி இல்லாமலேயே, நாம் விதையை விதைக்காமல், காட்டில் தானாகவே வளர்ந்திருக்கும் மரத்தின் மூலிகையானது, நோயாளியின் நோய்களை பரிகாரம் செய்கிறது. அதைப் போலவே, ஸ்ரீபரமாத்மன், நாம் அவனின் மகனோ, நண்பனோ இல்லாவிட்டாலும், மூன்று உலகங்களின் தலைவனே, என்னை காப்பாற்று என்று வேண்ட, பக்தர்களின் வேண்டுதல்களுக்கு செவிசாய்த்து, அவர்கள் இருக்கும் இடத்திற்கே வந்து அவர்களின் கஷ்டங்களை போக்குகிறான்.

 

ஸ்ரீனிகேதன தன்னவர தே3

ஹானு பந்தி43ளந்தெ அவ்யவ

தா4னத3லி நெலெஸிப்ப ர்வத3 கலகாமத3னு |

ஏனு கொட்டுத3 பு4ஞ்சிஸுத ம

த்தானெயந்த3தி3 ஞ்சரிஸு

த்தேனு பே33தெ34ஜிஸுதிரு அவனங்க்4ரி க1மலக3||26

 

ஸ்ரீனிகேதன = லட்சுமிதேவியை தன் மார்பில் தரித்திருப்பவனான ஸ்ரீஹரி

தன்னவர = தன் பக்தர்களை

தேஹானு பந்திகளந்தெ = அவரது உறவினர்களைப் போலவே

சர்வத = எப்போதும்

சகலகாமதனு = அனைத்து மனோபீஷ்டங்களை நிறைவேற்றுவதற்காக

அவ்யவதானதலி = அவர்களை விட்டுப் பிரியாமல்

நெலஸிப்ப = நிலைத்திருப்பான்

ஏனு கொட்டுத = சுகம் துக்கம் என எதைக் கொடுத்தாலும்

புஞ்சிஸுத = அதை அனுபவித்தவாறு

மத்தானெயந்ததி = பயமில்லா யானையைப் போல

சஞ்சரிஸு = சஞ்சரித்திரு

மத்தேனு பேடதெ = வேறு எதையும் அவனிடம் வேண்டாமல்

அவனங்க்ரி கமலகள = அவன் பாதாரவிந்தங்களை

பஜிஸுதிரு = வணங்கிக் கொண்டிரு.

 

ஸ்ரீபரமாத்மன், தன் பக்தர்களை, தன் உறவினர்கள் போலவே நினைத்து, அவர்களின் அருகிலேயே இருந்து, அவரவர்களின் மனோபீஷ்டங்களை நிறைவேற்றுகிறான். ஈஸ்வர சங்கல்பத்தால் எது வந்தாலும், அதற்கே மகிழ்ந்தவாறு, காம்ய பலன்களை வேண்டாமல், அவனின் பாத கமலங்களை வணங்கியவாறு, வேறு யாருடைய தயவு தாட்சிண்யத்தையும் எதிர்பார்க்காமல், மதம் பிடித்த யானையைப் போல சஞ்சரித்திரு.

 

பே333லெ கொடு3திப்ப ஸுரரிகெ3

பேடி33ரெ கொடு3திஹனு நரரிகெ3

பேடி3பளலுவ தை3த்யரிகெ3 கொட3னொம்மெ புருஷார்த்த2 |

மூட3ரனுதின த4ர்ம கர்மவ

மாடி33ரு ரி அஹிக ப2லக3

நீடி3 உன்மத்தரனு மாடி3 மஹானிரயவீவ ||27

 

சுரரிகெ = தேவதைகளுக்கு

பேடதலெ கொடுதிப்ப = அவர்கள் எதையும் வேண்டாமலேயே, அவர்களுக்குக் கொடுப்பான்

நரரிகெ = மனுஷ்யர்களுக்கு

பேடிதரெ கொடுதிஹனு = அவர்கள் எதையாவது வேண்டினால், அதை அவர்களுக்குக் கொடுக்கிறான்

பேடி பளலுவ தைத்யரிகெ = வேண்டித் துதிக்கும் (மன்றாடும்) தைத்யர்களுக்கு

கொடனொம்மெ புருஷார்த்த = புருஷார்த்தங்களை ஒரு முறைகூட கொடுக்க மாட்டான்

மூடரு = மூடர்கள் (நித்ய சம்சாரிகள்)

அனுதின தர்ம கர்மவ மாடிதரு சரி = தினந்தோறும் புண்ணியத்தைப் பெற்றுத் தரும் தர்ம கர்மங்களை செய்தாலும்கூட

அஹிக பலகள நீடி = ஐஹிக பலன்களைக் கொடுத்து

உன்மத்தரனு = அவர்களை அதிலேயே ஆசைப்பட வைத்து

மஹானிரயவீவ = மஹா கோரமான நரகத்தை (அந்தம்தமஸ்ஸை) அவர்களுக்குக் கொடுப்பான்

 

உத்தம, மத்யம, அதம, அதமாதம பக்தர்களின் சாதனையின் பலன்களை சொல்லியவாறு, உத்தம பக்தர்களுக்கு அவர்கள் கேட்காமல் இருந்தாலும், அவர்களுக்கு உத்தம கதியைக் கொடுக்கிறான். மத்யம பக்தர்கள் வேண்டிக் கொண்டால், அவர்களுக்கு அவற்றைக் கொடுக்கிறான். அதம பக்தர்கள், வேண்டிக் கொண்டாலும் அதை அவர்களுக்குக் கொடுப்பதில்லை. அதமாதமர்கள் புண்ய கர்மங்களை செய்தாலும், அவற்றின் பல ரூபமான உத்தம கதியைக் கொடுக்காமல், தற்காலிகமான அஹிக பலன்களைக் கொடுத்து, அவர்களை கர்வம் கொள்ளச் செய்து, அதன் மூலம் நரகத்திற்கு அனுப்பி வைக்கிறான்.

 

தரணி ர்வத்ரத3லி கிரணவ

ஹரஹி தத்த1த்வஸ்துக3ளனனு

ரிஸி அத3ரத3ரந்தெ சா2யவ கங்கொ3ளிப தெரதி3 |

அரித3ரேஜானேஜ ஜக3தொ3

கி3ருவ சா2யாதபனெனிஸி

ங்கருஷணாஹ்வய அவரவர யோக்3யதெக3ளந்திப்ப ||28

 

தரணி = சூரியன்

சர்வத்ரதலி = அனைத்து இடங்களிலும்

கிரணவஹரஹி = தன் கிரணங்களை பரப்பி

தத்தத் வஸ்துகளனு அனுசரிஸி = அந்தந்த பொருட்களுகேற்ப

அதரந்தெ = அதைப் போலவே

சாயவ கங்கொளிப தெரதி = அதன் நிழலும் இருக்குமாறு செய்வதைப் போலவே

அரிதர = சக்ரபாணியான

சங்கருஷணாஹ்வய = சங்கர்ஷண நாமகன்

ஏஜ = சேதனர்

ஆனேஜ = ஜடர்கள்

ஜகதொளகெ = இப்படி சேதன, ஜடாத்மகமாக இருக்கும் உலகத்தில்

இருவ = இருக்கும்

சாயாதபனெனிஸி = சிலருக்கு வெயிலாகவும், சிலருக்கு நிழலாகவும்

அவரவர யோக்யதெகளந்திப்ப = அவர்வர்களின் யோக்யதைக்கேற்ப, அவர்களில் இருந்து, பலன்களைக் கொடுக்கிறான்.

 

சூரியனின் கிரணங்கள், பூமியில் இருக்கும் மனிதன், பசு, மரங்களில் மீது விழும்போது, அந்த நிழலும் அவர்களைப் போலவே இருக்கின்றன. மரத்தின் நிழல் மரத்தைப் போலவும், மனுஷ்யாதிகளின் நிழல் அவர்களைப் போலவும் இருக்கின்றன. அதைப்போலவே, சக்ரபாணியான ஸ்ரீசங்கர்ஷணன், ஸ்தாவர ஜங்கமாத்மக ப்ரபஞ்சத்தில், அந்தந்த ஆகாரனாக அங்கங்கு இருந்து பூமியில் எப்படி சில இடங்களில் வெயில், சில இடங்களில் நிழல் இருக்கிறதோ, அதைப் போல தானும் பக்தர்களுக்கு நிழலைப் போல, தைத்யர்களுக்கு வெயிலைப் போல, அவரவர்களின் யோக்யதைக்கேற்ப இருக்கிறான்.

 

ஈ வித3தி3 ர்வத்ர லகுமி

பூ4 வனிதெயர கூடி3 தன்ன க

லா விஸேஷக3ளெல்ல கடெ3யலி தும்பி3 ஸேவ்யதம |

ஸேவகனு தானெனிஸி மாயா

தே3வி ரமண ப்ரவிஷ்டரூபக

ஸேவெமாள்ப ஷரண்ய ஷாஷ்வத கருணி கமலாக்‌ஷ ||29

 

ஈ விததி = இந்த விதமாக

சர்வத்ர = அனைத்து இடங்களிலும்

லகுமி பூ வனிதெயர கூடி = ஸ்ரீதேவி பூதேவி என்னும் மனைவியருடன் கூடி

தன்ன கலாவிசேஷகள = தன் அம்சரூபங்களை

எல்ல கடெயலி தும்பி = பிரம்மாண்டத்தின் அனைத்து இடங்களிலும் பரப்பி

ஷரண்ய = வணங்கப்படுவதற்கு தகுதியானவனான

ஷாஷ்வதகருணி = பக்தர்களிடம் எப்போதும் கருணை உள்ளவனான

கமலாக்‌ஷ = தாமரைக் கண்ணனான

மாயாதேவி ரமண = ஸ்ரீவாசுதேவன்

ஸேவ்யதம = அனைவரிடமிருந்தும் சேவை பெற்றுக் கொள்பவன் ஆனாலும்

ப்ரவிஷ்டரூபதலி = உலகத்தில் தன் சிறந்த ரூபங்களால்

ஸேவகனு தானெனிஸி = சேவை செய்பவர்களில் தானே அந்தர்யாமியாக இருந்து

ஸேவெமாள்பனு = சேவைகளை செய்கிறான் (செய்விக்கிறான்).

 

மாயாரமணனான வாசுதேவன், ஸ்ரீ பூ சமேதராகி அனைத்து இடங்களிலும் வியாப்தனாக இருந்து, தான் வாசுதேவாதி ரூபங்களால் சேவையை ஏற்றுக் கொள்கிறான். பிரம்மாதிகளில் தன் அம்ச ரூபங்களால் இருந்து, தன் சேவைகளை தானே சேவகனாக செய்து கொள்கிறான்.

 

ப்ரணவ காரண கார்ய ப்ரதிபா

த்3யனு பராத்பர சேதனா சே

தன விலக்‌ஷணனந்த த்கல்யாண கு3ணபூர்ண |

அனுபமனுபாஸித கு3ணோத3தி4

அனக4னஜிதனனந்த நிஷ்கி

ஞ்சன ஜனப்ரிய நிர்விகார நிராஸ்ரயாவ்யக்த ||30

 

ப்ரணவ காரண = கார்ய ரூபம் தேகம். காரணம் ப்ரணவம். பரமாத்மன் ப்ரணவ ரூபனாக காரணனாக இருந்து கார்யரூபமான வேத ப்ரதிபாத்யனாக இருக்கிறான்.

பராத்பர =

பராத் = உத்தமரான லட்சுமி பிரம்மாதிகளைவிட

பரன் = உத்தமன்

சேதனாசேதன விலக்‌ஷண = பரமாத்மன் ஜடாத்மகனும் அல்ல. பிரம்மாதி சேதனனும் அல்ல. இந்த இரண்டைவிடவும் வேறுபட்டவன் என்று அர்த்தம்.

அனந்த சத்கல்யாண குணபூர்ண = அனந்தமான மங்களகரமான நற்குணங்களைக் கொண்டவன்

அனக = பாபங்கள் இல்லாதவன்

அஜித = யாராலும் வெல்லப்பட முடியாதவன்

அனந்த = அனந்த ரூபன்

நிஷ்கிஞ்சன ஜனப்ரிய = லௌகிகமான பொருட்களின் அபிமானத்தை விட்டு பரமாத்மனே செல்வம் என்று நம்பும் பக்தர்களிடம் அன்பு கொண்டவன்

நிர்விகார = உருவ வளர்ச்சி / க்‌ஷீணம் இல்லாதவன்

நிராஸ்ரய = யாரையும் ஆதரவு கேட்காதவன் (யாருடைய உதவியும் தேவைப்படாதவன்)

அவ்யக்த = சாமன்யரான மக்களுக்கு புலப்படாதவன்.

 

கோ3பபீ4ய ப4வாந்த4 காரகெ

தீ3ப ஒத33லு கலஸு23

நோபரிக்3ருஹ வெனிஸுதலிப்பது3 ஹரிகதா2ம்ருதவு |

கோ3பதி ஜக3ன்னாத2விட்ட2

மீபத3லி நெலெஸித்து34க்தர

நாபவர்க3ர மாடு3வனு மஹது3க்க ப4வதி3ந்த3 ||31

 

கோபபீய பவாந்தகாரகெ =

கோ = வேத ஸ்வரூபரான துர்காதேவி. அவரின் கணவனாக இருந்து காப்பதால், பரமாத்மனுக்கு கோப என்று பெயர்.

பீய = பரமாத்மனை காண விடாமல், அவரை சேரவிடாமல் செய்வது சம்சாரம் (வாழ்க்கை).

பவாந்தகாரகெ = இத்தகைய பரமாத்மனிடம் பயத்தைக் கொடுக்கும் சம்சாரம் என்னும் கும்மிருட்டுக்கு

தீப ஒதகலு = தீபத்தைப் போல இருக்கும்

சகலசுக சதனஓபரிக்ருஹவு = சமஸ்தமான சுகம் என்னும் வீட்டிற்கு மேல் உப்பரிகை

எனிஸிதலிப்புது = என்று இருப்பது

ஹரிகதாம்ருதவு = ஹரிகதாம்ருதம்

இதனைக் குடிக்கும் பக்தர்களின்

சமீபதலி நெலெஸித்து = அருகில் இருந்து

கோபதி = வேதாபிமானியான ரமாபதியான

ஸ்ரீஜகன்னாதவிட்டலன், அவர்களை

மஹதுக்க பவதிந்த = மிகவும் துக்ககரமான சம்சாரத்திலிருந்து

அபவர்கர = முக்தர்களாக

மாடுவனு = செய்வான்.

 

சம்சார வாழ்க்கையில், நான், எனது, குடும்பம், என்னும் அபிமானத்தினால் பரமாத்மனை மறந்துவிடுவர். ஆகையால், பரமாத்மன் நம்மை நரகத்தில் தள்ளி கஷ்டப்படுத்துவான் என்னும் பயம் உண்டாகும். ஆகையால், தாசார்யர், சம்சார வாழ்க்கையை கோபபீய என்றார்.

 

வேதாபிமானியான ரமாதேவி, அவளுக்கு பதியானதால் காம்பாதீதி கோப:என்ற இலக்கணத்தால், பரமாத்மனுக்கு கோப என்று பெயர். சம்சாரத்தில் அவன் பயம் இருந்தே இருக்கிறது. இத்தகைய சம்சாரம் என்னும் கோரமான இருட்டிற்கு ஹரிகதை என்பது தீவட்டி போல இருக்கிறது. அதாவது, அஞ்ஞான இருட்டினை பரிகரித்து, ஞானோதயத்தைக் கொடுக்கிறது என்று அர்த்தம்.

 

அனைத்து சுகங்களைக் கொண்ட, வசிப்பதற்கு யோக்யமான வீட்டின், மேல் உப்பரிகையைப் போல இருக்கிறது இந்த ஹரிகதாம்ருதம். ஸ்வரூபானந்தத்தைக் கொடுக்கும் தகுதியைக் கொண்டது என்று அர்த்தம். இத்தகைய ஹரிகதாம்ருதத்தை பானம் செய்யும் பக்தர்களின் சமீபத்தில், ஸ்ரீஜகன்னாதவிட்டலாத்மக ஸ்ரீஹரி நிலைத்திருந்து, மஹா துக்கத்தை தரக்கூடிய சம்சாரத்திலிருந்து அவர்களை விடுவித்து, முக்தர்களாக மாற்றுவான்.

 

பிம்பாபரோக்‌ஷ சந்தி என்னும் 24ம் சந்தியின் தாத்பர்யம் இத்துடன் முடிந்தது.

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து

 

***

No comments:

Post a Comment