ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Wednesday, August 19, 2020

21-30 சர்வ ஸ்வாதந்த்ர்ய சந்தி

 ஹலத4ரானுஜ மாள்ப க்ருத்யவ

திளியதெ3 அஹங்காரதி3ந்தெ3

ந்னுளிது3 ஸுவிதி4னிஷேத4 பாத்ரரு இல்லவெம்பு3வகெ3 |

2லக3ள த்3வய கொடு3வ தை3த்யர

கலுஷகர்மவ பி3ட்டு புண்யவ

ஸெளெது3 தன்னொளகி3ட்டு க்ரமதி3ம் கொடு3வ ப4குதரிகெ3 ||21

 

ஹலதரானுஜ = கலப்பையை தரித்த பலராமன்; அவன் தம்பியான ஸ்ரீகிருஷ்ணன்

மாள்ப க்ருத்யவ = நம்முள் இருந்து செய்யும் செயல்களை

திளியதே = அறியாமல்

அஹங்காரதிந்த = கர்வத்தால்

என்னுளிது = என்னை விட்டு

விதியு = செய்யவேண்டிய செயல்களை செய்வதற்கும்

நிஷேத = செய்யக்கூடாத செயல்களை விடுவதற்கும்

பாத்ரரு = அருகதை உள்ளவர்கள்

இல்லவெம்புவகெ = இல்லை என்று சொல்லும் தமோ யோக்யர்களுக்கு

பலகள த்வய = இரு வித பாப பலன்களை; அதாவது, பக்தர்கள் செய்யும் பாப கர்மங்களின் பலன் ஒன்று. தான் செய்த பாவ கர்மத்தின் பலன் ஒன்று என இரு வித பாப பலன்களை

கொடுவ = அத்தகையவர்களுக்குக் கொடுக்கிறான்

தைத்யர கலுஷகர்மவ பிட்டு = தைத்யர்கள் செய்யும் பாப கர்மத்தின் பலன்களை, தைத்யர்களின் பாகத்திற்கே விட்டு

புண்யவ செளெது = அவர்கள் செய்த புண்ய கர்மங்களை எடுத்து

தன்னொளகிட்டு = தனக்குள் வைத்து; தான் வைத்துக்கொண்டு

க்ரமதிம் = கிரமத்தினால்

கொடுவ பகுதரிகெ = தன் பக்தர்களுக்குக் கொடுக்கிறான்.

 

நமக்குள் இருந்து, ஸ்ரீபரமாத்மன், புண்யபாபாதி கர்மங்களை செய்விப்பதை அறியாமல், கர்வத்தினால் விதி- நிஷேத கார்யங்களை, நானே செய்தேன்; புண்யம் செய்பவனும், பாவம் செய்பவனும் நானே என்று சொல்பவனுக்கு பரமாத்மன், அவர்கள் செய்த பாப கர்மங்களின் பலன்களை அவர்களிடமே வைத்து; அதனுடன், பக்தர்கள் செயும் பாப கர்மத்தின் பலன்களையும் அவர்களுக்கே கொடுக்கிறான். தைத்யர் செய்த பாப கர்மங்களை தைத்யர்களிடமே வைத்து, அவர்கள் செய்த புண்ய கர்மங்களை தான் எடுத்து தனக்குள் வைத்துக்கொண்டு பக்தர்களுக்கு படிப்படியாக பிரித்துக் கொடுக்கிறான்.

 

தோயஜாப்தன கிரண வ்ருக்‌ஷ

ச்சாய வ்யக்திஸுவந்தெ க1மலத3

லாயதாக்‌ஷனு ர்வரொளு வ்யாபிஸி3 காரணதி3 |

ஹேய த்கு3ண கர்ம தோர்ப்புவு

நியாயகோவித3ரிகெ3 நிரந்தர

ஸ்ரீயரஸ ர்வோத்தமோத்தமனெந்து3 பேளுவரு ||22

 

தோயஜாப்தன = தண்ணீரில் பிறக்கும் தாமரையின் நண்பனான

கிரண = சூரியனின்

வ்ருக்‌ஷச்சாய = மரத்தின் நிழல்

வர்த்திசுவந்தெ = தெரிவதைப்போல

கமலதளாயதாக்‌ஷனு = தாமரைக் கண்ணனான ஸ்ரீஹரி

சர்வரொளு = அனைவரிலும்

வியாபிஸித காரணதி = வியாபித்திருக்கும் காரணத்தால்

ந்யாய கோவிதரிகெ = நியாயத்தை நன்றாக அறிந்தவர்களுக்கு

ஹேய = நீசமான பாப கர்மங்கள்

சத்குண = உத்தமமான புண்யகர்மங்கள்

தோர்ப்புது = கிடைக்கிறது

நிரந்தர = எப்போதும்

ஸ்ரீயரஸெ = லட்சுமிபதியே

சர்வோத்தமோத்தமனெந்து = சர்வோத்தமரான பிரம்மாதிகளுக்கு உத்தமர் என்று

பேளுவரு = சொல்வார்கள்

 

சூரியனின் ஒளியில், மரத்தின் நிழல் தெரிவதைப்போல, பரமாத்மன் அனைத்து இடங்களிலும் வியாப்தனாக இருப்பதாலேயே, ஜீவனின் புண்ய பாபாதி கர்மங்கள் தெரிகின்றன. ஆகையாலேயே, ஞானிகள் இத்தகைய ஸ்ரீலட்சுமிபதியே பிரம்மதேவர் முதலான அனைத்து தேவதைகளைவிட உத்தமன் என்று கூறினர்.

 

மூல காரண ப்ரக்ருதி எனிப ம

ஹாலகுமி எல்லரொளகி3த்து3 ஸு

லீலெகை3யுத புண்ய பாபக3ளர்ப்பிபளு பதிகெ3 |

பா3லக33லொளு பி3த்த ஜல கீ

லாலவெனிபுதெ3 ஜீவக்ருத க

ர்மாளி த1த்3வது ஷுப4வெனிஸுவுது3 எல்லகாலத3லி ||23

 

மூலகாரண ப்ரக்ருதி = ஜகத்திற்கு மூலகாரணளான மூலப்ரக்ருதி

எனிப = என்று அழைக்கப்படும்

மஹாலகுமி = மஹாலட்சுமி

எல்லரொளகித்து = அனைவருக்குள்ளூம் இருந்து

சுலீலெகயுத = கணவனான பரமாத்மனுடன் தான் ப்ரக்ருதி சம்பந்தமான சத்வாதி குண காரியங்களை செய்த பின்

பதிகெ = பதியான பரமாத்மனுக்கு

புண்யபாபகளர்ப்பிஸலு = ஜீவர்கள் செய்யும் புண்ய பாபங்களை சமர்ப்பிக்கிறாள்.

பாலகடலொளு = பாற்கடலில்

பித்த ஜல = விழுந்த நீர்

கீலாலவெனிபுதெ = நீர் எனப்படுகிறதா? இல்லை. அது பாலாகவே மாறுகிறது

தத்வது = அதைப் போல

எல்ல காலதலி = அனைத்து காலங்களிலும்

ஜீவக்ருத = ஜீவர்களால் செய்யப்பட்ட

கர்மாளி = கர்மங்களை

ஷுபவெ எனிபுது = புண்ய கர்மங்களே ஆகிறது.

 

உலகத்திற்கு காரணபூதளான, மூலப்ரக்ருதி எனப்படும், லட்சுமிதேவி, தன் பதியுடன் அனைவரிலும் இருந்து, ப்ரக்ருதி சம்பந்தமான சத்வ ரஜஸ் தமோ குண காரியங்களை செய்தவாறு அவரவர்களால் செய்யப்பட்ட புண்யபாவங்களை, பதியான பரமாத்மனுக்கு அர்ப்பிக்கிறாள். ஆனால், ஜீவக்ருத பாவ கர்மங்களை பரமாத்மனுக்கு அர்ப்பிப்பதால், பரமாத்மனுக்கு பாப சம்பந்தத்தினால் துக்கம் வருகிறதா என்னும் சந்தேகம் இந்த ஆதாரத்தினால் பரிகாரம் ஆகிறது.

 

பாற்கடலில் நீர் விழுந்தால், அங்கிருக்கும் பால் கெட்டுப்போகுமோ? இல்லை. நீரே பால் ஆகிறது. கங்காதி மகா நதிகள் அனைத்தும், உப்புக்கடலில் சேரவும், கடல் நீர் அனைத்தும் இனிப்பாகிறதா? இல்லை. நீர் மட்டும் உப்பாகிறது. அதுபோலவே, பாற்கடலில் விழுந்த நீர் அனைத்தும் பாலே ஆகிறது. அப்படியே, பரமாத்மனில் சேர்ந்த பாப கர்மங்கள் அனைத்தும் சுபமே (புண்ய கர்மங்களே) ஆகின்றன.

 

ஞான ஸு23லபூர்ண விஷ்ணுவி

கே3னு மாள்பவு த்ரிகு3ணகார்ய க்ரு

ஷானுவின க்ருமி கவிது33க்‌ஷிபுது3ண்டெ லோகதொ3ளு |

ஈ நலினஜாண்ட3வனு பி3ரம்மே

ஷானமுக்2ஸுராஸுரர கா

லானலன வோள்னுங்கு3வகெ3 ஈ பாபக3ள ப3யவெ ||24

 

ஞான சுக பலபூர்ண விஷ்ணுவிகெ = ஞானானந்த பலங்களால் பூர்ணனான விஷ்ணுவிற்கு

த்ரிகுணகார்ய = ப்ராக்ருதமான சத்வ ரஜஸ் தமோ குண காரியங்கள்

ஏனு மாளவு = என்ன செய்யும்?

லோகதொளு = உலகத்தில்

க்ருஷானுவின = நெருப்பினை

க்ரிமி கவிது = புழுக்கள் மென்று

பக்‌ஷிபுதுண்டெ = தின்னுவதுண்டா?

ஈ நலினஜாண்டவனு = இந்த பிரம்மாண்டத்தை

பிரம்மேஷான முக்ய சுராசுரர = பிரம்ம ருத்ர முதலான தேவதைகளை மற்றும் தைத்யர்களை

காலானலனவோல் = காலாக்னியைப் போல

நுங்குவகெ = விழுங்குபவனுக்கு

ஈ பாபகள பயவெ = இந்த பாவங்களைப் பற்றி பயமா?

 

சம்பூர்ணமான ஞானானந்த ஸ்வரூபமான ஸ்ரீவிஷ்ணுவை, ப்ரக்ருதி சம்பந்தமான, சத்வ ரஜஸ் தமோ குணகாரியங்கள் என்ன செய்துவிடும்? உலகத்தில் நெருப்பினை, புழுக்கள் மென்று தின்னுகிறதா? நெருப்பில் விழுந்து தாம் உயிரை விடுகின்றன. அதைப்போல, த்ரிகுண சம்பந்தமான கர்மங்கள் பரமாத்மனை என்ன செய்துவிடும்? கர்மங்கள் மட்டும் சுட்டுப் போகின்றன. பிரம்ம ருத்ர முதலான ஸ்தாவர ஜங்கமாத்மகமான இந்த பிரம்மாண்டத்தையே, பிரளய காலத்தில் காலாக்னியைப் போல விழுங்கும் ஸ்ரீஹரிக்கு, இந்த அல்பமான பாவங்களின் பயம் உண்டா? என்றைக்கும் இல்லை என்பது கருத்து.

 

மோத3ஷிர த3க்‌ஷிணஸுபக்‌ஷ ப்ர

மோத3 உத்தரபக்‌ஷவெந்து3 ரு

கா3தி3 ஸ்ருதிக3ளு பேளுவுவு ஆனந்த3மய ஹரிகெ3 |

மோத3 வைஷிஸு2விஸிஷ்ட ப்ர

மோத3 பாரத்ரிக ஸு2ப்ரத3

நாத3காரணதி3ந்த3 மோத3 ப்ரமோத3னெனிஸுவனு ||25

 

ஆனந்தமய ஹரிகெ = ஆனந்தஸ்வரூபனான ஸ்ரீஹரிக்கு

மோத = மகிழ்ச்சி

ஷிர = தலை

தக்‌ஷிணபக்‌ஷ = வலது பாகம்

ப்ரமோத = விசேஷமான மகிழ்ச்சி

உத்தரபக்‌ஷ = இடது பாகம்

எந்து = என்று

ருகாதி ஸ்ருதிகளு பேளுவுவு = ருகாதி வேதங்கள் சொல்கின்றன

மோத = மோத என்றால்

வைஷிக சுக விசேஷ = விஷய சம்பந்தமான சுக விசேஷம்

ப்ரமோத = ப்ரமோத என்றால்

பாரத்ரிக சுக = பரலோகத்தின் சுகம்

ப்ரதனு = இந்த இரு விதமான சுகங்களையும் கொடுப்பவன்

ஆதகாரணதிந்த = ஆகையால்

மோத ப்ரமோதனெனிஸுவனு = மோத பிரமோத என்று அழைக்கப்படுகிறான்.

 

பரமாத்மன் ஆனந்த ஸ்வரூபன் என்று ஸ்ருதி ஸ்ம்ருதிகளிலிருந்து தெரியவருகிறது. அஸ்யப்ரிய்மேவஷிர: | மோதோ தக்‌ஷிண பக்‌ஷ: | ப்ரமோத உத்தர பக்‌ஷ: | ஆனந்த ஆத்மா || ‘ என்று தைத்திரிய உபநிஷத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. மற்றும் விஷ்ணு ரஹஸ்ய 21ம் அத்தியாயத்தில்:

 

ப்ரியமஸ்யஷிரோ மோதோ தக்‌ஷிண: பக்‌ஷ உச்யதே |

ப்ரமோத உத்தர: பக்‌ஷ ஆத்மானந்த இதீரித: ||57

வஸ்துவிஞ்ஞாஜனம் சௌக்யமானந்த இதிகீர்த்தித: |

மோதோவிஷயஜம் சௌக்யம் தத்ர வஸ்து விசேஷத: ||58

 

இதே அர்த்தத்தையே தாசராயர் இந்த பத்யத்தில் சொல்கிறார்.

 

ஆனந்தஸ்வரூபனான ஸ்ரீஹரிக்கு ப்ரியமே தலை. மகிழ்ச்சியே வலது பாகம். விசேஷமான மகிழ்ச்சி இடது பாகம். ஆனந்தமே ஆத்மன். ஆனந்தம் என்றால், வஸ்துகளின் ஞானத்தினால் ஆகும் சுகம். பரமாத்மனுக்கு பிரபஞ்சத்தின் அனைத்து வஸ்துவின் ஞானம் இருப்பதால், ஆனந்தஸ்வரூபன் என்று பெயர் இருக்கிறது.

 

மோத என்றால் விஷய போகங்களால் ஆகும் சுகம். ப்ரமோத என்றால், புதிய வஸ்துகளால் ஆகும் விசேஷ சுகம். இந்த சுகம் பரலோகத்தில் மட்டுமே கிடைக்கிறது. ஆகையால், தாசராயர், ப்ரமோத என்றால், பாரத்ரிக சுகம் என்று கூறுகிறார். பிறருக்கு உதவி செய்வதால் வரும் சுகத்திற்கு ப்ரிய என்று பெயர். ஆனந்த ஸ்வரூபனான ஸ்ரீஹரிக்கு, ப்ரிய, மோத, ப்ரமோத, ஆகியவை அங்காங்களாக (உறுப்புகளாக) இருக்கிறது. இப்படி பரமாத்மனை அறிந்து உபாசனை செய்பவர்களுக்கு ப்ரிய, மோத, ப்ரமோத ஆகிய சுகங்களை கொடுப்பதால், மோத ப்ரமோத முதலான பெயர்கள் பரமாத்மனுக்கு வந்திருக்கிறது என்பது கருத்து.

 

எந்தி3கா33ரு வ்ருஷ்டியிந்த3

ஸுந்த3ரெயொளிப்பகி2ல ஜலதி3ம்

ஸிந்து3 வ்ருத்தி3யனைது3வதெ3 பா4ரதி3ரெ பரித3ஹுதெ3 |

குந்து3 கொரதெக3ளில்லதிஹ ஸ்வா

நந்த3 ம்பூர்ண ஸ்வபா4வகெ3

3ந்து3மாடு3வுதே3னு கர்மாகர்மஜன்ய ப2||26

 

எந்திகாதரு = என்றாவது ஒரு சமயம்

வ்ருஷ்டியிந்த = மழையால்

வசுந்தரெயொளு = பூமியில்

இப்ப = இருக்கிறான்

அகிளஜலதிம் = அனைத்து தேசத்தின் நீரினால்

ஸிந்து = சமுத்திரம்

வ்ருத்தியனைதுவுதெ = வளர்கிறதோ?

பாரதிரெ = மழை நீர் சமுத்திரத்தில் சேராதிருந்தால்

பரிதஹுதெ = நீரின்று கடல் வற்றிப் போகுமா?

குந்து கொரதெகளில்லதிக = எந்தவிதமான தோஷங்களாகட்டும், குறைகளாகட்டும் இல்லாதிருக்கும்

ஸ்வானந்த சம்பூர்ண ஸ்வபாவகெ = தன் ஆனந்தத்தினாலேயே பூர்ணனாக இருக்கும் ஸ்வபாவம் கொண்ட ஸ்ரீஹரிக்கு

கர்மாகர்ம ஜன்யபல = ஜீவர்கள் செய்யும் புண்யபாபாதி கர்மபலன்கள்

பந்து மாடுவுதேனு = எதுவும் செய்யாது (லாபமும் இல்லை; நஷ்டமும் இல்லை).

 

உலகத்தில் மழை பெய்து, ஆறுகளில் வெள்ளம் வந்து, அந்த நீர் கடலில் சென்று சேர்ந்தால், கடலில் நீர் அதிகமாவதோ, அந்த ஆற்று நீர் கடலில் சேராவிட்டால், கடல் நீர் குறைவதோ இல்லை. அதுபோலவே, ஆனந்தஸ்வரூபனான ஸ்ரீஹரிக்கு, ஜீவர்கள் செய்யும் புண்ய பாப பலன்களால் ஆகும் லாப நஷ்டாதிகள் என்றும் இல்லை. ஜீவர்கள் தத்தம் சாதனைகளுக்காக புண்ய பாபங்களை, சமர்ப்பணம் செய்யவேண்டுமே தவிர, அதனால் பரமாத்மனுக்கு ஆகவேண்டியது ஒன்றும் இல்லை.

 

தே3ஹவ்ருக்‌ஷதொ3ளெரடு3 பக்‌ஷிக3

ளிஹவு எந்தி3கு3 பி33தெ3 பரம

ஸ்னேஹதி3ந்த3லி கர்மஜ ப2லக3ளும்ப3 ஜீவக23 |

ஸ்ரீஹரியு தா ஸாரபோ4க்தனு

த்3ரோஹிஸுவ கல்யாதி3 தை3த்ய

மூஹகீவ விஷிஷ்டபாபவ லேஷவெல்லரிகெ3 ||27

 

தேஹவ்ருக்‌ஷதொளு = தேகம் என்னும் மரத்தில் (ஜீவனின் ஸ்வரூப தேகத்தில்)

எரடு பக்‌ஷிகளு = ஜீவ பரமாத்மன் என்னும் இரு பறவைகள்

எந்திகு பிடதெ = என்றும் (அனாதி காலத்திலிருந்து) அவை ஒன்றையொன்று பிரியாமல்

பரம ஸ்னேஹதிந்தலி = மிகுந்த நட்புடன்

இஹவு = இருக்கின்றன

ஜீவகக = ஜீவன் என்னும் பறவை

கர்மஜ = கர்மங்களால் வந்த

பலகள = பலன்களை

உம்ப = உண்கிறான் (புண்யபாபங்களில் பலன்களான சுகதுக்கங்களை அனுபவிக்கிறான்)

ஸ்ரீஹரியு

தா = தான்

ஸாரபோக்தனு = ஸ்ரீஹரி அதில் சாரமான புண்யபலன்களை மட்டும் ஏற்றுக் கொள்கிறான்

த்ரோஹிஸுவ = தன்னிடம் த்வேஷம் செய்யும்

கல்யாதி தைத்ய சமூஹகீவ = கலி முதலான தைத்ய சமூகத்தை சேர்ந்த

எல்லரிகெ = அனைவருக்கும்

விஷிஷ்ட பாபக்லேஷவ = அனைத்து பாப கர்மங்களின் பலன்களான கஷ்டங்களை

ஈவ = கொடுக்கிறான்.

 

ஜீவர்களின் ஸ்வரூப மற்றும் ஸ்தூல தேகம் என்னும் இந்த இரண்டும், மரங்களாக இருக்கின்றன. அனாதி காலத்திலிருந்து ஸ்வரூப தேகம் இருக்கிறது. ஸ்தூல தேகம் அழிகிறது. த்வாஸுபர்ணா என்னும் ஸ்ருதியில் அனாதி காலத்தை சொல்லியிருப்பதால், இங்கு ஸ்வரூப தேகத்தையே எடுத்துக் கொள்ளவேண்டும். தாசராயரும் எந்திகு பிடதேஎன்று குறிப்பிட்டு சொல்லியிருப்பதால், அதை அனாதி காலத்திலிருந்துஎன்றே எடுத்துக் கொள்ளவேண்டும். இதன் அர்த்தம் இதுவே:

 

ஸ்வரூப தேகம் என்னும் மரத்தில் இதய கமலம் என்னும் கூட்டினை வைத்துக் கொண்டு, ஜீவ பரமாத்மன் என்னும் இரு பறவைகள், அனாதி காலத்திலிருந்தே இருக்கின்றன. இந்த பறவைகளில் ஜீவனின் ஸ்தூல தேக சம்பந்தத்தினால் செய்யும் புண்ய பாப கர்மங்கள் இரண்டின் பலன்களையும், ஜீவன் என்னும் பறவை மட்டும் ஏற்றுக் கொள்கிறது. ஒரு மரத்தில் உணவு கிடைக்கவில்லையெனில், பறவைகள் எப்படி பறந்து இன்னொரு மரத்தைச் சேர்ந்து அங்கு உணவு உண்கிறதோ, அப்படியே, இந்த ஸ்தூல தேகம் போனால், ஜீவன் இன்னொரு தேகத்தைச் சேர்ந்து கர்மபலனை அனுபவிக்கிறான்.

 

பரமாத்மன் என்னும் பறவை மட்டும் இந்த கர்மபலன்களை உண்பதில்லை. ஜீவனின் நலனுக்காக புண்ய பலன்களின் சாரத்தை மட்டும் ஏற்றுக்கொள்கிறான். த்வாஸுபர்ணா ஸயுஜாஎன்னும் ஸ்ருதி இவ்வாறு சொல்கிறது. ஸ்ரீமன் மத்வாசார்யர், இந்த ஸ்ருதியையே, த்வைத மதத்திற்கு ஆதாரமாக தமது பாஷ்யாதிகளில் உதாரணம் கூறியிருப்பார். ஏனெனில், இந்த ஸ்ருதியில் :

 

* அனாதி காலத்திலிருந்து ஜீவனும் பரமாத்மனும் வெவ்வேறாக இருக்கிறார்கள் என்றும்

* ஜீவ பரமாத்ம பேதத்தை தெளிவாகவும்

 

சொல்லப்பட்டிருக்கிறது. இதன் அர்த்தத்தையே விஷ்ணு ரஹஸ்ய 21ம் அத்தியாயத்தில்:

 

தேஹவ்ருக்‌ஷே ஸமாஸீனௌ ஸகாயௌ பக்திணௌ சிரம் ||62

தயோர்மத்யேது யோஜ்யாயாம் ஸ்தஸ்ய ஸ்வாத்வேவ பிப்பலம் ||

இதி ப்ரஹஸ்ருதிஸ்ஸாக்‌ஷாத்கார போக்தா ஹரிஸ்தத: ||63

 

தேகம் என்னும் மரத்தில் அனாதி காலத்திலிருந்து இரு பறவைகள் நட்புடன் வசித்துக் கொண்டிருக்கின்றன. இவற்றில் எது உத்தம பறவையோ என்றால், பரமாத்மன் என்று அர்த்தம். அந்த பறவைக்கு பிப்பல என்னும் கர்மபலன் மிகவும் ருசிகரமாக இருக்கிறது. ஆகையால், பரமாத்மன் ஸாரபோக்தன் என்று ஸ்ருதி சொல்கிறது என்று சொல்கிறார்கள். இருக்கும் இரு பறவைகளில் ஒரு பறவைக்கு அந்த பலன் ருசிகரமாக இருந்தது என்றபிறகு, இன்னொரு பறவைக்கு அந்த பலன் ருசிக்கவில்லை என்று தனியாக சொல்லவேண்டியதும் இல்லை.

 

இதிலிருந்து ஜீவன், பிப்பல என்னும் கர்மபலன்களை அனுபவிக்கிறான் என்று தெளிவாக புரிகிறது. இதே அர்த்தத்தையே தாசார்யர் இந்த பத்யத்தில் சொல்லியிருக்கிறார். பரமாத்மன் ஜீவனுடன் தேகத்தில் இருந்து புண்ய பாப கர்மங்களை செய்வித்து, சுபங்களை தான் ஸ்வீகரித்து, புண்ய பலன்களை யோக்யரான தேவதைகளுக்கும், மிஸ்ர பலன்களை மனிதர்களுக்கும், பாப பலன்களை தைத்யர்களுக்கும் கொடுக்கிறான் என்பது கருத்து.

 

த்3யுமணிகிரணவ கண்ட3 மாத்ரதி3

திமிர ஓடு3வ தெரதி3 லக்‌ஷ்மி

ரமண நோடி33 மாத்ரதி3ந்த34னாஷவைது3வது3 |

1மலம்ப3வ முக்2யரெல்லா

ஸுமனரொளிஹ பாபராஷிய

நமரமுக2 நந்த33லி ப4ஸ்மவ மாள்ப ஹரி தானு ||28

 

த்யுமணிகிரணவ = சூரியனின் கிரணங்களை

கண்ட மாத்ரதி = கண்ட உடனேயே

திமிர ஓடுவ தெரதி = இருட்டு ஓடுவதைப்போல

லட்சுமிரமண நோடித மாத்ரதிந்த = லட்சுமிபதியான ஸ்ரீஹரி பார்த்த உடனேயே

அகனாஷவைதுவுது = பாபங்கள் நாசம் ஆகின்றன

கமல சம்பவ முக்ய = பிரம்மதேவர் முதலான

எல்லா சுமனசரொளு = அனைத்து தேவதைகளில்

இஹ = இருக்கும்

பாபராஷியனு = பாபராசிகளை

அமரமுக நந்ததலி = தேவதைகளுக்கு முகமாக இருக்கும் அக்னியைப் போல

ஹரி தானு = ஸ்ரீஹரி தானே

பஸ்மவ மாள்ப = சுட்டுப் பொசுக்குகிறான்.

 

தமஸ்ஸூர்யம் யதானைவ பஷ்யேத்தத்வத்தரின் நஹி |

பாபம் கர்ம நிரீக்‌ஷித துராதேவ வினஷ்யதி ||

பிரம்மாதி தேவபாகாம்ஸ்து தூலவத்தஹதேஹரி: ||65

 

இருட்டானது, எப்படி எப்போதும் சூரியனைப் பார்ப்பதில்லையோ, அப்படியே பாபகர்மங்களும் பரமாத்மனை பார்ப்பதேயில்லை. தூரத்திலிருந்தே நாசமடைகின்றன. பிரம்மாதி தத்வாபிமானி தேவதைகள், கலி முதலான தைத்யர்களில் இருந்து செய்யும் பாவங்களை, பரமாத்மன் அக்னியைப் போல சுடுகிறான்.

 

இதே அர்த்தத்தையே தாசார்யர் இங்கு சொல்கிறார். சூரிய ஒளியைக் கண்டதும் இருட்டு எப்படி நாசம் அடைகிறதோ, அப்படி, ஹரியைக் கண்டதும் பாபங்கள் நாசம் அடைகின்றன. பிரம்மாதிகளில் இருக்கும் பாபங்களை அக்னியைப் போல பரமாத்மன் சுட்டு பொசுக்கி விடுகிறான்.

 

சதுரஷத பா43தி த3ஷாம்ஷதொ3

ளிதர ஜீவரிகீ3வ லேஷவ

தி3திஜ தே3வர்க3ளிகெ3 கொடு3வ விஸிஷ்ட து3க்க2 ஸு2 |

மதிவிஹீன ப்ராணிக3ளிகா3

ஹுதிய ஸு2 ம்ருதி து3க்கவரயோ

க்3யதெயனரிது பிபீல மஷகாதி33ளிகீ3வ ஹரி ||29

 

சதுரஷத பாகதி = 400 பாகங்களில்

தஷாம்ஷதொளு = 10 பாகங்களில்

லேஷ = மிகச்சிறிய அளவினை

இதர ஜீவரிகெ = எறும்பு, கொசு முதலான ஜீவர்களுக்கு

ஈவ = கொடுக்கிறான்

திதிஜ = தைத்யர்களுக்கும்

தேவதெகளிகெ = தேவதைகளுக்கும்

விசிஷ்ட துக்க சுக = அவரின் யோக்யதைக்கேற்ப அதிகமான துக்கங்களை தைத்யர்களுக்கும், சுகங்களை தேவதைகளுக்கும்

கொடுவ ஹரி = ஸ்ரீஹரி கொடுக்கிறான்

மதிவிஹீன ப்ராணிகளிகெ = புத்தி இல்லாத பசு முதலான பிராணிகளுக்கும்

பிபீல = எறும்புகள்

மஷகாதிகளிகெ = கொசுக்களுக்கும் மற்றும் இதே போன்ற பிராணிகளுக்கும்

ஆஹுதிய = ஆகாரத்தை

சுக = சுகங்களை

ம்ருதி = மரணத்தை

துக்க = அவர்களின் யோக்யதைக்கேற்ப துக்கத்தை

ஈவ = கொடுக்கிறான்.

 

ஸ்ரீபரமாத்மன், தனது ஸ்வாதந்த்ர்யத்தின் 400ல் 10 அம்சத்தை அனைத்து ஜீவர்களுக்கும் கொடுத்திருக்கிறான். அந்த 10 அம்சத்தில் அல்ப பாகங்களை மட்டும் பசு, எறும்பு, கொசு முதலான அஞ்ஞானி பிராணிகளுக்குக் கொடுத்திருக்கிறான். தேவதைத்யர்களுக்கு அதிகமான ஸ்வாதந்த்ர்யம் இருப்பதால், அதிகமான சுகதுக்கங்களை அவர்கள் அனுபவிக்கின்றனர். அல்ப பிராணிகளான பசு, பறவை, எறும்பு ஆகியவற்றிற்கு அவற்றின் யோக்யதைக்கேற்ப ஆகாரத்தைக் கொடுத்து, அவற்றிற்கும் சுக துக்க ஜனன மரணாதிகளைக் கொடுக்கிறான்.

 

இந்த விஷயங்கள், தத்த ஸ்வாதந்த்ர்ய சந்தியில், விஷ்ணு ரஹஸ்ய ஆதாரங்களின்படி, விவரமாக விளக்கப்பட்டுள்ளது.

 

நித்ய நிரயந்தாக்2ய கூபதி3

ப்3ருத்யரிந்தொ33கூ3டி3 புனரா

வர்த்திவர்ஜித லோகவைது3வ கலியு த்3வேஷத3லி |

த்யலோகாதி3ப சதுர்முக2

1த்வதே3வர்க3ஹித நிஜ

முக்தியைது3வ ஹரிபதா3ப்ஜவ ப4ஜிஸி ப4கு3தி1யலி ||30

 

கலியு = கலி

த்வேஷதலி = பரமாத்மனிடம் த்வேஷத்தைக் காட்டி

ப்ருத்யரிந்தொடகூடி = தன் குழுவினரான விப்ரசித்தி முதலான தைத்யர்களுடன் சேர்ந்து

புனராவர்த்திவர்ஜித = சென்றால் மறுபடி திரும்பி வராத

நித்யனிரலு = நித்யமான அந்தம்தமஸ் என்னும்

அந்தாக்யகூபதி = இருட்டான கிணறுகளைக் கொண்ட

லோகவ = உலகத்தை

ஐதுவ = அடைகிறான்

ஸத்யலோகாதிப = சத்யலோகத்திற்கு அதிபதிகளான

சதுர்முக = நான்முக பிரம்மதேவர்

தத்வதேவர்கள ஸஹித = தத்வாபிமானி தேவதைகளுடன்

பகுதியலி = மிகுந்த பக்தியுடன்

ஹரிபதாப்ஜவ பஜிஸி = பரமாத்மனின் பாதாரவிந்தங்களை துதித்து

முக்தியைதுவ = முக்தியை அடைகிறார்கள்.

 

கலி, தன் குழுவினர்களான விப்ரசித்தி முதலான தைத்யர்களுடன் சேர்ந்து, பரமாத்மனிடம் த்வேஷத்தை செய்து, பிரளயகாலத்து இருட்டில், சென்றால் திரும்பி வராத, நிரந்தரமான லோகத்தில் இருக்கும் அந்தம்தமஸ்ஸை அடைகின்றனர். பிரம்மதேவர், ருத்ராதி தேவதைகளுடன் பரமாத்மனில் திடமான பக்தியை செய்து, அவனின் பாதாரவிந்தங்களை பஜித்து, முக்தியை சேர்கின்றனர். முக்தியோக்யர் அனைவருக்கும் பிரளய ஆரம்பத்தில், பிரம்மதேவருடன் விரஜா நதி ஸ்னானம் செய்து, லிங்க சரீரம் பங்கமாகி, முக்தி ஆகின்றது.

 

இதைப்போல, தமோயோக்யர் அனைவருக்கும், அதே சமயத்தில், கலியுடன் வாயுதேவரின் கதா அடியுடன் லிங்க சரீரம் பங்கமாகி, திரும்பி வரமுடியாத லோகத்தில் இருக்கும் நித்யதுக்கமயமான அந்தம்தமஸ்ஸிற்கு செல்கின்றனர் என்பது கருத்து. 

No comments:

Post a Comment