ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Wednesday, February 12, 2020

#6 - கருணா சந்தி

#6 - கருணா சந்தி

மனதொ3ளகெ3 தானித்து3 மனவெ
ந்தெ3னிஸிகொம்பனு மனத வ்ருத்திக3
ளனுசரிஸி போ433ளனீவனு த்ரிவித4 சேத1னக்கெ |
மனவனித்தரெ த1ன்னனீவனு
1னுவ த3ண்டிஸி தி3னதினதி3 சா
4னவ மாள்பரிகித்தபனு ஸ்வர்க்காதி3 போ433||6

மனதொளகெ = மனதின் உள்ளே
தானு = ஸ்ரீபரமாத்மன்
இப்ப = இருக்கிறான் (ஆகையால்)
மனவெந்து = மனம் என்று
எனிஸிகொம்பனு = அழைத்துக் கொள்கிறான்
த்ரிவித சேதனக்கெ = சாத்விக, ராஜஸ, தாமஸ என்னும் மூன்று வித ஜீவராசிகளுக்கு
மனத வ்ருத்திகளனுஸரிஸி = அவரவர்களின் யோக்யதைக்கேற்ப இருக்கும் மனோவ்ருத்தியை அனுசரித்து
போகங்கள = சுக, துக்க, சுகதுக்க என்னும் மூன்று வித அனுபவங்களையும்
ஈவனு = கொடுக்கிறான்
மனவனு = மனதினை
இத்தரெ = கொடுத்தால் (பரமாத்மனிடம் மனதை வைத்தால்)
தன்னனு = தன் ரூபத்தையே
ஈவனு = கொடுக்கிறான் (காட்டுகிறான்)
தனுவ = சரீரத்தை
தண்டிஸி = சாந்திராயணாதி விரதங்களினால் தண்டித்து
தினதினதி = தினந்தோறும்
சாதனவ மாள்பரிகெ = சாதனையை செய்பவர்களுக்கு
ஸ்வர்க்காதி போககள = ஸ்வர்க்காதி போகங்களை 
இத்தபனு = கொடுக்கிறான். 

பொருள்:
ஸ்ரீபரமாத்மன், அனைவரின் மனங்களிலும் இருந்து, மனம் என்னும் பெயரில் அழைக்கப்படுகிறான். சாத்விக, ராஜஸ, தாமஸ என்னும் மூன்றுவித ஜீவராசிகளுக்கு அவரவர்களின் தகுதிக்கேற்ப மனதைக் கொடுத்து, கர்மங்களை செய்வித்து, பலன்களைக் கொடுக்கிறான். மனதினை ஒருமுகப்படுத்தி பரமாத்மனில் நிலைநிறுத்தி பஜிப்பவர்களுக்கு தன் ரூபத்தை காட்டுகிறான். உடலை வருத்தி, விரதங்களை செய்பவர்களுக்கு ஸ்வர்க்கத்தை மட்டுமே கொடுக்கிறான். ஆகையால் மனதினை பரமாத்மனில் வைத்து பஜிப்பவர்களுக்கு மட்டும், பகவந்தனின் பரமானுக்கிரகம் ஆகிறது என்பதே இந்த பத்யத்தின் பொருள். 

’மனதொளகெ தானித்து மனவெந்தெனிஸி கொம்பனு’ பாகவத 3ம் ஸ்கந்தத்தில் ‘மனோமயம் தேவமயம் விகார்யம்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. மனோமயம் என்றால் மனதில் நிறைந்திருப்பவன் என்று பொருள். அதாவது, மனதினுள் இருந்து, அதே பெயரில் அழைக்கப்படுபவன். அதே ஸ்லோகத்தின் பாகவத தாத்பர்யத்தில் 

மனஸ்திதோ ஹரிர்நித்யம் சர்வதேவேஷு சம்ஸ்தித: | 
தேவ ப்ரதானர்கா லோர்கா கரோத்யனுகத: சதேதிவாராஹே ||

ஸ்ரீஹரி மனதில் இருந்து மனோநியாமகனாகி, அனைத்து தேவதைகளிலும் இருந்து, தேவதைகளை முன்னிறுத்தி அனைத்து மக்களின் மூலமாக காரியங்களை செய்ய வைக்கிறான். இதற்கு ஆதாரமாக வராக புராணத்து வாக்கியம் ஒன்று இருக்கிறது. 

தத்தத்வஸ்துஷு ஸர்வேஷு தத்ததாகாரத: ஸ்தித: |
தத்தத்ஷப்தைஸ்ச பகவானோச்யதே நிஜஷக்தித: ||

ஸ்ரீபரமாத்மன் ஒவ்வொரு பொருட்களிலும் இருந்து அதன் வடிவத்தைப் பெற்று, அந்தந்த பெயரில் அழைக்கப்படுகிறான். அதாவது குடத்தில் குடமாக இருக்கிறான். படத்தில் படமாக இருந்து அப்படியே அழைக்கப்படுகிறான். ‘ஸர்வநாமா சர்வகர்மா’ என்னும் ஸ்ருதி வாக்கியத்தை அனுசரித்து, அனைத்து பெயர்களும் பரமாத்மனுடையதே ஆகியிருக்கின்றன. மனங்களில் மனோ நியாமகனாக இருப்பதால், அவனுக்கு மனம் என்று பெயர் வந்தது. 

வர்ணஸ்தோ வர்ண நாமாஸௌஸ்வரஸ்த: ஸ்வர: நாமக |
மனஸ்தஸ்சமனோ நாமா தன்னாமா சக்‌ஷுராதிக: ||
(பாகவதம் 11ம் ஸ்கந்தம்)

இந்த ஆதாரத்தின்படி மேற்சொன்ன அர்த்தம் நிரூபணமாகிறது. இதற்கு பரமாத்மனின் பரம சாமர்த்தியமே காரணம். ‘மனத மன: ததாதீதி மனத:’ அதாவது, மூன்றுவித ஜீவர்களின் கர்மங்களை அனுசரித்து மனதைக் கொடுப்பவனாகையால், மனத - மனதைக் கொடுக்கும் பரமாத்மன் என்று பொருள். சாத்விக, ராஜஸ, தாமச ஜீவிகளுக்கு அவரவரகளின் யோக்யதைக்கேற்ப, மனதைக் கொடுத்து, அதற்கேற்ப பலன்களைக் கொடுப்பவன். இதிலிருந்து அனைவரின் மனதிற்கும் காரணம் பரமாத்மனே என்பது சித்தமாகிறது. இதிலிருந்து அனைத்து இந்திரியங்களின் செயல்களும் பரமாத்மனாலேயே ஆகின்றன என்றும் சொல்லவேண்டும். அப்படியெனில், தத்வாபிமானி தேவதைகளின் வேலை என்ன? 

தத்வாபிமானி தேவதைகள் இந்திரியங்களை வழிநடத்துகின்றன என்று பல ஆதாரங்கள் சொல்கின்றன. ஆகையாலேயே, நாம் தினமும் காலையில் எழுந்தவுடன் 

நமோஸ்து தாத்விகாதேவா: விஷ்ணு பக்தி பராயணா: |
தர்ம மார்க்கெ ப்ரேரயந்து பவந்த: சர்வ ஏவஹி: ||

’ஹே விஷ்ணு பக்தர்களான தத்வாபிமானி தேவதைகளே! உங்களை வணங்குகிறேன். நீங்கள் அனைவரும் என் இந்திரியங்களை அதர்ம வழியில் செல்லவிடாமல், தர்மத்தின் வழியிலேயே நிறுத்துங்கள்’ என்று பிரார்த்திக்க வேண்டும் என்று ஸ்ம்ருதி வாக்கியம் இருக்கிறது மற்றும் 

ஆத்மனோ பஜனே வ்ருத்திமுத்தாப்ய பலதாஸுரா: |
உத்தமானாம் ஜனானாந்து நிக்ருஷ்டானாம் நிபர்யய: ||
(பாகவத 11ம் ஸ்கந்தம்)

உத்தம ஜீவர்களின் நலனுக்காக தேவதைகள் பரமாத்மனை சர்வோத்தமன் என்று அறிந்து பஜனை செய்வதுடன், தாரதம்யத்தின் வழி தம்மை வணங்குமாறும் வேண்டி, கர்மங்களை செய்வித்து, பலன்களைக் கொடுக்கின்றனர். அயோக்யர்களுக்கு இதற்கு எதிர்ப்பதமாக, அதாவது, பரமாத்மனிடமும் தம்மிடமும் த்வேஷ புத்தியை உண்டாக்கி, அதற்குத் தக்க பலன்களையே கொடுக்கின்றனர் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதிலிருந்து, தத்வாபிமானி தேவதைகளுக்கு நற்காரியங்களில் புத்தியை செலுத்தக்கூடிய ஸ்வாதந்த்ர்யம் இருக்கிறது என்பதை அறியலாம். 

இப்படியிருக்கையில், தாசராயரின் வியாக்யானமும், அதற்கு அவர் கொடுத்திருக்கும் ஆதாரங்களையும் பார்த்தால், மேற்சொன்னதற்கு எதிர்ப்பதமாக இருப்பதைக் காணலாம். இதற்கு என்ன பரிகாரம் எனில்:

மனதிற்கும், பிற இந்திரியங்களுக்கும், தத்வாபிமானி தேவதைகளே வழி நடத்துபவர்களாக இருந்தாலும், அந்த தத்வாபிமானி தேவதைகளிலும், இந்திரியங்களிலும், அந்தந்த ரூபங்களில் இருந்து பரமாத்மனே முக்கிய ப்ரேரகனாக (வழி நடத்துபவனாக) இருக்கிறான். ஸ்ரீபரமாத்மன் தத்வாபிமானி தேவதைகளில் இருந்து வழி நடத்துவதால், தத்வாபிமானி தேவதைகளே ப்ரேரகர்கள் என்று பெயர் பெற்றனர். 

ஒரு அரசாட்சியில், அதிகாரிகளின் மேற்பார்வையில் மக்கள் எப்படி செயல்களை செய்கின்றனரோ, அது அரசனின் ஆணையில்லாமல் நடக்காது. அப்படியே, தத்வாபிமானி தேவதைகளுக்கு ஸ்வதந்த்ரமாக வழி நடத்தும் திறன் இல்லையாகையால், பரமாத்மனே ஸ்வதந்த்ர ப்ரேரகன் என்று அறியவேண்டும். த்ரிவித ஜீவர்கள் அவரவர்களின் தகுதிக்கேற்ப வழி நடத்தப்படுகின்றனர். பக்தர்களில் உத்தமர், மத்யமர், அதமர் என்று மூன்று விதங்கள் உண்டு. உத்தம பக்தர் என்றால்: 

பூர்ணத்வாதாத்மஷப்தோக்த: கஸ்சித்ஸர்வ நரோத்தம |
ஸோபி நாராயணோ நான்ய: ஸ ச சர்வேஷு சம்ஸ்தித: ||
தத்வஷா இதரேஸர்வே ஸ்ரீ பிரம்மேஷ புரஸ்ஸரா: |
ஸஏவது ஸ்வபக்தேஷு ஸ்தித்வானுக்ரஹ காரக: ||
அஞ்ஞேஷ்வ ஞானயந்தாச த்விபத்ஸு த்வேஷகாரக: |
அதஸ்தத் ப்ரேரணா தேவ ப்ரேமாத்யாம மஜக்ஞரே ||
இதி பஷ்யதியோ புத்த்யாஸது பாகவதோத்தம: ||
(பாகவத 11ம் ஸ்கந்தம்)

இதன் பொருள்:
பரமாத்மன் பூர்ணன் ஆகையால், அவனுக்கு ஆத்மன் என்று பெயர். அவன் அனைத்து பிராணிகளைவிட உத்தமன். அவனே ஸ்ரீமன் நாராயணன். அவன் அனைத்து பிராணிகளிலும் நிலைத்திருக்கிறான். ரமா பிரம்மாதிகள் அனைவரும் அவன் வசமே இருக்கின்றனர். அவனே தன் பக்தர்களுக்கு அருள் புரிபவன். அஞ்ஞானிகளுக்கு அஞ்ஞானத்தைக் கொடுப்பவன். த்வேஷிகளில் த்வேஷத்தை உண்டுபண்ணுபவன் அவனே. மேலும் அவனது வழி நடத்துவதன் பேரிலேயே, ஒருவருக்கு அவன் மேல் அபிமானம் வருகிறது என்று யார் அறிந்திருக்கிறார்களோ அவனே பாகவதோத்தமன்.

பாற்கடலில் வசிப்பவனான பரமாத்மன் சர்வோத்தமன் என்று அறிந்து அவனில் அன்பு வைத்து, அவன் பக்தர்களிடம் நட்பு பாராட்டுவர். பரமாத்மனின் ஸ்வரூபத்தை அறியாத மக்களிடம் - கருணை, பகவத் விஷயங்களில் ஸ்ரத்தை என இவை அனைத்தும் இருந்தாலும், உலகம் அனைத்தும் பகவத் அதீனம் என்பதை அறியாமல் இருப்பவன் மத்யம பக்தன். அதம பக்தன் என்றால்: பிரதிமைகளில் மட்டுமே பகவந்தன் இருக்கிறான் என்று அறிந்து, பிற அனைத்து இடங்களிலும் அவனே இருக்கிறான் என்பதை அறியாமலும், அவனின் பக்தர்களில் தாரதம்யத்தை அறியாமல் இருப்பதும், தானே சிறந்த பக்தன் என்று அவன் பக்தர்களை புறக்கணித்தலும், அல்லது, பரமாத்மனின் முக்கிய பக்தர்களை நினைக்காமல் அவர்களை எதிர்ப்பதும், பிரம்மாதிகளை மனிதர்களைவிட கொஞ்சம் உயர்ந்தவர்களாக இருக்கலாம் என்று அறிதலும், விஷ்ணுகூட நம்மைவிட கொஞ்சம் உத்தமராக இருக்கலாம் என்று அறிதலும் உள்ளவனே அதம பக்தன். 

இவரது பக்திக்கு உத்தமரான தேவதைகளின் விருப்பப்படி நரகவாசம் கிடைக்கிறது. மத்யம பக்தர் நரகத்திற்குப் போவதில்லை. ஸ்வரக்க பலன்களையே பெறுகின்றனர். சில காலம் கழித்து, மனிதனாகப் பிறந்து சுகத்தை அனுபவிக்கிறான். யார் பாகவதோத்தமனோ அவனே உத்தமமான முக்தியைப் பெறுகிறான். உத்தம பாகவதர் அனைவரும் சாத்விகராகவே இருப்பர். மத்யம பக்தரே ராஜசர். அதம பக்தர்களை தாமச ராஜஸர் என்று அறியலாம். அது ஏனென்றால்: பிரம்மாதி தேவதைகளை புறக்கணிப்பதால். அது மிகவும் பாவமான செயலாகும். இத்தகையவர்கள் ஒருவேளை பரமாத்மனிடம் பக்தி செய்தாலும், அந்த பக்தியை பரமாத்மனே அழித்துவிடுவான். இப்படியாக பரமாத்மனிடமே த்வேஷத்தைக் கொண்டு, இறுதியாக தமஸ்ஸிற்குப் போகும் நிலை வந்துவிடும். ஆகையால், தேவதைகளை தாரதம்யத்திற்கேற்ப அறிந்து பூஜிக்கவேண்டும். 

தாமசர்கள்? அவரே தமோயோக்யர் என்று பெயர் பெற்றவர்கள். அவர்களின் லட்சணம் எவை? பரமாத்மனுக்கும் தமக்கும் பேதம் இல்லையென்றும், தாமே அவன் என்றும் உபாசனை செய்வர். இவர்களின் நட்பைக்கூட விரும்பக்கூடாது. இவர்களின் நண்பர்களும் தமஸ்ஸிற்கே போவார்கள். பாகவத ஐந்தாம் ஸ்கந்தத்தில் ‘தமோத்வாரம் யோஷிதாம் ஸங்கி ஸங்கம்’ - அதாவது, ‘ஸ்த்ரி’களின் சேர்பவர்களின் நட்பே தமஸ்ஸிற்குக் காரணம் என்று அர்த்தம். மேலும் 11ம் ஸ்கந்தத்தில் ‘ஸ்த்ரி சங்க சங்கினாம் சங்க த்வாக்ச தூரத ஆத்மர்வா’ - பெண்களுடன் சேர்பவர்களின் நட்பைக் கொண்டவர்களை விலக்கவேண்டும். இதனால் சாமான்யரான கிருஹஸ்தர்களின் நட்பையே விடவேண்டுமா என்ற சந்தேகம் வரலாம். அல்லது, பிற பெண்களுடன் சேர்பவர்களின் நட்பை விடவேண்டும் என்று மட்டும் அர்த்தம் செய்யலாம். ஆனால், அதுகூட தவறான அர்த்தத்தையே தருகிறது. ஏனெனில், சாமான்யர்களான பர-ஸ்த்ரி-சங்கத்தினால் சில காலம் நரகவாசம் ஆகுமே தவிர, தமஸ் வருவதில்லை. இப்படியிருக்கையில், ஸ்த்ரி சங்கம் வைத்திருப்பவர்களின் நட்பை தமஸ்ஸிற்கான காரணம் என்று சொன்னால், அது சித்தாந்தத்திற்கு எதிராகிறது. 

இதற்கு ஸ்ரீமதாசார்யர், தாத்பர்யத்தில் விளக்கம் அளித்திருக்கிறார். 11ம் ஸ்கந்தத்தின் ‘ஸ்த்ரி சங்க சங்கினாம்’ என்னும் ஸ்லோகத்தின் தாத்பர்யத்தில் ‘சேஷவேத்யன்யதா புத்தி: ஸ்யைவ ஸ்த்ரி பரிகீர்த்திதா’ - பரமாத்மனிடம் பக்தி இல்லாமை. அதாவது, உண்மையான விஷயங்களான, பரமாத்மன் ஸ்வதந்த்ரன், நான் அஸ்வதந்த்ரன். அனாதி காலத்திலிருந்து பரமாத்மனுக்கும் ஜீவனுக்கும் பேதம் இருக்கிறது ஆகியவற்றிற்கு எதிராக, நானே பரமாத்மன் என்று அ-பேத சிந்தனை செய்யும் புத்திக்கு ‘ஸ்த்ரீ’ என்று பெயர். இந்த புத்தி யாருக்கு இருக்கிறதோ, அவனே ‘ஸ்த்ரீ’ சங்கம் அடைந்தவன். அவனது நட்பு தமஸ்ஸிற்கு வழியாகும். இப்படி, ஸ்த்ரி சங்கத்தின் நட்பிற்கு தமஸ் என்று சொன்னபிறகு, ஸ்த்ரி சங்கத்திற்கு தமஸ் என்று தனியாக சொல்லவேண்டுமா? பர-ஸ்த்ரி சங்கத்திற்கு தமஸ் இல்லை என்றபோதிலும், 'ஸ்த்ரி’ சொல்லுக்கு புத்தி என்று ஒரு அர்த்தமும் இருக்கிறது என்று மத்வாசார்யர் சொல்லியிருக்கிறார். ஆசார்யர், பர-ஸ்த்ரி சங்கத்திற்கு நரகம்தான் பலனே தவிர, தமஸ் ஆவதில்லை என்று எந்த ஆதாரத்தின் பேரில் சொல்லியிருக்கிறார் என்றால், ஆசார்யர், தர்ம தத்வங்களில் இருக்கும் ஆதாரங்களை உதாரணம் தருகிறார். அது என்னவெனில்:

பரதாரத்ருஷிப்ரோக்தா க்‌ஷுத்ரபாதக சங்ஞிதா |
உபபாதகம் தட்கதிஸ்சவர்ண பாஹ்யேஷு பாதகம் ||
மஹாபாதக சஞ்ஞந்து பித்ராதேர்தார தக்‌ஷணம்|
தாரத்ருஷ்டி: ஸ்வோத்தமானாம் மானுஷாணாம் ஸ்வபாவத: ||
ஸமஹா பாதகம்ப்ரோக்‌ஷம் தத்கதி: சுமஹத்தர: |
ரிஷிதாரேஷு மனஸோ கதிரேவததோதிகா ||
தேவதாராபி காமானாம் சங்கி சங்கஸ்ததோதிக: |
கிமுவிஷ்ணோஸ்ததோ யோஷித்ஸங்கஸ்யவ்யத்யயஸ்திதே: ||
ந சமம் பாதகம்க்வாபி நஹிஸ்வ ஸ்த்ர்யபிகாமின: |
அவஞ்ஞதா மாதவாதேஸ்த ஸ்மாத்தந்தூரத ஸ்த்யஜேத் ||
மானஷோஷுது து:கித்வம் க்‌ஷுத்ரபாதக ஜங்கலம் |
உபபாதக தஸ்சாபி நரகம் யுகமாத்ரகம் |
சதுர்யுகாவஸானந்து பாதகஸ்ய பலம் ஸ்ம்ருதம் ||
மஹாபாதக ஜன்யஞ்ச கல்பாவதி ஸமீரிதம் |
சுமஹாபாத காஸ்சாபியாவத்பிரம்ம லயோபவேத் ||
தத்பராணாம் பாதகானாம் பலமந்தம் தம: ஸ்ம்ருதம் |
அதோதோது:க்க மதுலம் விஷ்ணு தாராபிமர்ஷனம் |
வராதபிஹி தாராணாம் தக்‌ஷணம் கோப காரணம் |
தஸ்மாத்தேய: ஸதாவந்த்யா அக்னிவன்னாபி காமத ||

இந்த வாக்கியங்களினால் நரக பலன் கிடைக்கக்கூடிய பாவங்கள் எவை? தமஸ் கிடைக்கக்கூடிய மகாபாவங்கள் எவை என்பதை விவரிக்கிறார். 

பர-ஸ்த்ரியரை சங்கம் செய்யவேண்டும் என்னும் சிந்தனையுடன் பார்க்கும் செயல் ‘க்‌ஷுத்ரபாதகம்’ என்று அழைக்கப்படுகிறது. அந்த சங்கத்தை செய்த பாவம் உபபாதகம். நான்கு வர்ணத்தவர்களை தவிர மற்ற, ம்லேச்ச, சாண்டால ஆகிய ஸ்த்ரிகளை சங்கமித்தால் அது பாதகம் என்று அழைக்கப்படுகிறது. தந்தை போன்றவர்கள் சங்கமித்த பெண்களை தான் சங்கமித்தால் அதற்கு மஹாபாதகம் என்று பெயர். தன்னைவிட உத்தமரானவரின் மனைவியை விரும்பி பார்ப்பது மஹாபாதகம் எனப்படுகிறது. அவர்களை சங்கமிப்பது அதைவிட கொடிய பாவம் ஆகும். அதைவிட ரிஷி மனைவிகளிடம் மனம் வைப்பது பெரிய பாவம் ஆகும். அதைவிட பெரிய பாவம், தேவதா ஸ்த்ரியர்களை விரும்புவது மற்றும் அவர்களிடம் நட்பு பாராட்டுவது. இதைவிட, பரமாத்மனின் மனைவியான லட்சுமிபதி தானே ஆவேன் என்பவனின் நட்பு அனைத்தையும்விட கொடிய பாவமாகும். இதற்கு சமமான பாவம் உலகத்தில் இல்லவேயில்லை. அதற்காகவே, ’ஸ்த்ரி’ என்பதற்கு தவறான ஞானம் என்று அர்த்தம் செய்தார். அப்படியில்லையெனில், சொந்த ஸ்த்ரியை சங்கமம் செய்தால்கூட தமஸ் கிடைக்கிறது என்று சொல்லவேண்டும் என்று, பல ஆதாரங்களின்படி விவரித்திருக்கிறார். மேலும் இந்த பாவங்களின் பலன்களை தாரதம்யத்தின்படி விளக்குகிறார். 

க்‌ஷுத்ர பாதகத்தின் பலன், மனிதப்பிறவியில் சில காலம் துக்கங்களை அனுபவிப்பதாகும். மேலும் பல ஆண்டுகளுக்கு நரகவாசம் அனுபவிப்பதாகும். உபபாதகத்திற்கு ஒரு யுகம் வரைக்கும் நரகவாசமே பலன். பாதகத்திற்கு நான்கு யுகங்கள் வரைக்கும் நரகவாசம். மஹாபாதகத்திற்கு பிரம்மதேவரின் ஒரு தின கல்பத்தின் வரைக்கும் நரகவாசம் என்று அறியவேண்டும். சுமஹாபாதகத்தின் பலன் ஒரு பிரம்மகல்பத்தின் வரைக்கும் நரகம். இதையும்விட அதிகமான பாதகங்களுக்கே மறுபடி திரும்பமுடியாத அந்தந்தமஸ் ஆகும். ஆகையால், இவற்றைவிட குறைந்த தவறுகளுக்கு தமஸ் இல்லை என்று நிரூபணம் ஆகிறது. மேலும் ஐந்தாம் ஸ்கந்தத்தில் ‘தமோ த்வாரம் யோஷிதாம் சங்கி சங்கம்’ - ஸ்த்ரி சங்கத்திற்கு தமஸ் சாதனையென்று சொல்லியிருப்பதால், ஸ்த்ரி என்றால் தவறான புத்தி என்று அறியவேண்டும். 

பாவங்கள் அதிகரிக்க, அதற்கேற்ப துக்கங்களும் அதிகரிக்கும். நானே பரமாத்மன் என்று சொன்னால், லட்சுமிக்கு நானே கணவன் என்று சொன்னது போல ஆகிறதல்லவா? உலகத்தில் ‘உன் மனைவி’ என்று சொன்னால் எவ்வளவு கோபம் வருமோ, ‘உன்னை கொல்வேன்’ என்று சொன்னால்கூட அவ்வளவு வருவதில்லை. ஆகையால், இது அனைத்தையும்விட அதிகமான பாவம். ஆகையாலேயே, இத்தகையவரின் நட்பும்கூட தமஸ்ஸிற்கு வழி என்று அறியவேண்டும். இதுவே பாகவத தாத்பர்யத்தின் ஸ்லோக அர்த்தம். 

இப்படியாக பரமாத்மன், ஜீவனின் யோக்யதையை, செயல்களை அறிந்து, அவன் மனதினை வழிநடத்தி, அவனில் இருந்து, செயல்களை செய்து, செய்வித்து, மூன்றுவித ஜீவர்களுக்கு அவரவர்களின் செயல்களுக்கேற்ப பலன்களைக் கொடுக்கிறான். ஜீவன் எப்படி அனாதியோ, அவனது கர்மங்களும் அனாதியே. எப்படி மாம்பழத்தில் இனிப்பும், வேப்பங்காயில் கசப்பும் தாமாகவே இருக்கின்றதோ, அப்படியே, சாத்விகர், ராஜஸர், தாமஸர் என்னும் த்ரிவித ஜீவர்களும் அனாதியானவர்கள். ஆகையால், அவரவர்களின் தகுதிக்கேற்ப அவர்கள் செய்யும் பக்தி, த்வேஷங்களுக்கு, முக்தி, தமஸ் ஆகியவற்றைக் கொடுக்கக்கூடிய குலத்திலேயே அவர்களை பிறக்கவைத்து அதற்கேற்பவே மனதினையும் கொடுத்து, செயல்களை செய்வித்து, முக்தியையோ, மிஸ்ர-லோகத்தையோ, தமஸ்ஸினையோ கொடுக்கிறார். 

செயல்களுக்கேற்ப பலன்களைக் கொடுப்பதால், பரமாத்மனுக்கு வைஷம்ய, நைர்குண்ய ஆகிய தோஷங்கள் சேர்வதில்லை என்று அறியவேண்டும். ‘மனவனித்தரெ தன்னவீவனு’. பாகவத 10ம் ஸ்கந்தத்தில், கோபிகா ஸ்த்ரியர், ஸ்ரீகிருஷ்ணனின் அங்க சங்கத்தினால் திருப்தியடைய, பரமாத்மன் அவர்களுடைய கர்வத்தை அடக்க, அவர்களின் கண்களிலிருந்து மறைந்தான். 

அப்போது கோபியர்கள் வனத்தில் எங்கு தேடினாலும் ஸ்ரீகிருஷ்ணன் கிடைக்கவில்லை. பிறகு அவர்கள் தத்தம் செயல்களை விட்டுவிட்டு, பரமாத்மனின் பாதாரவிந்தங்களிலேயே மனதை வைத்து, அந்த கிருஷ்ணனின் விஷயங்களைப் பற்றியே பேசியவாறு, அது சம்பந்தமான செயல்களையே செய்தவாறு, தம் உயிர்களை அவனிடம் ஒப்படைத்து, அவனின் குணங்களையே பாடியவாறு, வீடுகளைத் துறந்து, பைத்தியங்களைப் போல, தம் தேகங்களையே மறந்து பரமாத்மனை துதிக்க, பரமாத்மன் பிரத்யட்சமானான். எனில், அவர்களுக்கு தன்னையே கொடுத்தான். இஹத்தில், ஆலிங்கனங்களை செய்து அவர்களுக்கு தன்னையே கொடுத்தான். பரத்தில், தன் உலகத்தையே அவர்களுக்குக் கொடுத்தான். இதே கோபியர்களுக்கு, பரமாத்மன் தன்னை உபாசனை செய்யும் கிரமத்தை உபதேசிக்கிறான். 

யதா அதனோலப்ததனே வினஷ்டே தச்சிந்தயான்யன்னிப்ருதன்னவேத |
ஏவம் மதார்த்தார்பித லோகவேத ஸ்வானாம்ஹி வ்யோமய்யனு வ்யத்தயோ பலா: ||

ஹே கோபிகா ஸ்த்ரியர்களே. எப்படி ஒரு ஏழைக்கு செல்வம் கிடைத்து அது தொலைந்தும் போனால், அவன் எந்தவொரு வேலையும் செய்யாமல், அதைப் பற்றியே சிந்தித்து அமர்ந்திருப்பானோ, அதைப்போல அனைத்தையும் என்னிடம் ஒப்படைத்த உங்கள் மனது வேறைதையும் பற்றி சிந்திக்காது. இப்படி பல உதாரணங்களைச் சொல்லலாம். ஆகையாலேயே தாசராயரும் ‘மனவனித்தரெ தன்னனீவனு’ என்று சொல்லியிருக்கிறார். 

தனுவ தண்டிஸி தினதினதி சாதனவ மாள்பரிகித்தபனு ஸ்வர்க்கதி லோககள:

நற்பலன்களுக்காக மக்கள் உபவாசம், சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கும் விரத நியமங்கள், யாக தானங்களை தங்கள் உடலை வருத்தி சாதனைகளை செய்தால், அவர்களுக்கு ஸ்வர்க்காதி லோகங்களைக் கொடுக்கிறான். அவர்களின் யோக்யதையும் அவ்வளவே. அவர்களின் மனது பரமாத்மனின் த்ருட பக்தியினால் நிற்பதில்லை. இதற்கு ஒரு உதாரணம் கொடுக்கலாம். பாகவத 10ம் ஸ்கந்தம். ஸ்ரீகிருஷ்ணன் தன் சக இடையர்களுடன் ஒரு நாள் மாடுகளை மேய்த்தவாறு, கோகுலத்தை விட்டு பல தூரம் வந்துவிட்டிருந்தான். அனைவரும் சரியான பசி. ‘கிருஷ்ணா! கிருஷ்ணா! எங்களுக்கு பசி அதிகரித்துக் கொண்டே போகிறது. எங்களுக்கு சாப்பிடுவதற்கு ஏதாவது ஏற்பாடு செய்’ என்றனர். ‘ஹே கோபாலகர்களே. இங்கு கொஞ்சம் தூரத்தில் சில பிராமணர்கள் ஒரு யாகத்தை செய்கின்றனர். அவர்களிடம் போய், நான் இங்கு வந்திருக்கிறேன் என்று சொல்லி, அன்னம் வாங்கிக் கொள்ளுங்கள்’ என்றான். 

க்‌ஷுத்ரா ஷாபூரி கர்மாண: பாலிஷா வ்ருத்தமானின: |
தத்பிரம்மபரமம் ஸாக்‌ஷாத் பகவந்த மதோக்‌ஷஜம் ||
மனுஷ்யா புத்யாதுஷ்ப்ரக்ஞா மர்த்யாத்மனோ நஜக்ஞரே ||

அப்படியே அந்த சிறுவர்களும் போய் உணவைக் கேட்க, அல்பமான ஆசையுள்ளவர்களாகவும், மிகவும் கஷ்டமான செயல்களை செய்பவர்களாகவும், சிறுபுத்தி உள்ளவர்களாகவும், தாமே பெரியவர்கள் என்னும் சிந்தனையில் அந்த பிராமணர்கள் இருந்ததினாலும், அந்த பரபிரம்ம ஸ்வரூபனான ஸ்ரீகிருஷ்ணனை சாதாரண மனிதன் என்று எண்ணி, அவர்களுக்கு உணவைக் கொடுக்க மறுத்தனர். வருத்தத்துடன் திரும்பி வந்த சிறுவர்கள், ஸ்ரீகிருஷ்ணனிடம் அந்தக் கதையைக் கூற, ஸ்ரீகிருஷ்ணனோ ‘நன்று. நீங்கள் மறுபடி அங்கு போய், அந்த பிராமணர்களின் மனைவிகளிடம் நான் வந்திருப்பதாகச் சொல்லி, உணவைக் கேளுங்கள்’ என்றான். அப்படியே அந்த சிறுவர்களும் அந்த பிராமணர்களின் மனைவிகளிடம் உணவைக் கேட்டனர். 

ஸ்ருத்வாச்யுத முபாயாந்தம் நித்யம் தத்தர்ஷனோத்ஸுகா: |
தத்கர்த்தக்‌ஷிப்த மனஸோ பபூவுர்ஜாத ஸம்ப்ரமா: ||
சதுர்வீதம் பஹுகுண மன்னமாதாய பாஜனை: |
அபிஸஸ்ரு: ப்ரியம் சர்வா: சமுத்ரமிவனிம்மகா: ||
நிஷித்யமானா: பதிபிர்ப்ராத்ருபிர் பந்து பிஸ்ஸுதை: |
பகவத்யுத்தம ஸ்லோகே தீர்க்க ஸ்ருதப்யுதாஷயா: ||

ஸ்ரீகிருஷ்ணன் அவர்களுக்குப் பக்கத்திலேயே வந்திருக்கிறான் என்ற செய்தியைக் கேட்ட அந்த பிராமணர்களின் மனைவிகள், தினந்தோறும் அவனைக் காணவேண்டுமென்றே பூஜைகளை செய்து வந்த காரணத்தால், உடனே அவனைக் காணப் புறப்பட்டனர். தினந்தோறும் அவனின் மகிமைகளைக் கேட்டுக்கேட்டு, மனம் முழுவதும் பரமாத்மனிடமே நிலைத்திருந்தது. உடனடியாக பக்‌ஷ்ய, போஜ்யங்களை எடுத்துக்கொண்டு, பெரிய ஆறுகள் கடலைச் சேரும் வேகத்தில் புறப்பட்டேவிட்டனர். அவர்களின் கணவர்கள் எவ்வளவு தடுத்தாலும், அவற்றைக் கேட்காமல், புண்யகீர்த்தியான பரமாத்மனின் மகிமைகளை பல நாட்களாகக் கேட்டு, அவன் மேல் வைத்திருக்கும் பூரண நம்பிக்கையினால், கிருஷ்ணன் இருக்குமிடத்திற்கு வந்தனர். ஸ்ரீபரமாத்மன், அவர்களை வரவேற்று அவர்கள் கொடுத்த உணவினை ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு அருள் புரிந்து, ஞானோபதேசத்தைக் கொடுத்து அனுக்கிரத்தான். 

இந்தப் பெண்கள் பரமாத்மனைக் கண்டு திரும்பி வந்திருப்பதைப் பார்த்த அந்த கணவர்கள், மிகுந்த கவலையுடன் ‘அடடா. இந்தப் பெண்களுக்கு பரமாத்மனிடம் இருக்கும் பக்திகூட நமக்கு இல்லையே. இவர்களுக்கு, பிராமணர்களின் தகுதியான உபநயனம், சம்ஸ்காரங்கள், குருகுலவாசம், தவம், மீமாம்ஸாதி சாஸ்திர ஞானம் இவை எதுவுமே இல்லையென்றாலும், பரமாத்மனிடம் திடமாக பக்தி மட்டும் இருக்கிறது. நாம் அவை அனைத்தையும் பெற்றிருந்தாலும், நமக்கு இத்தகைய பக்தி இல்லையே. நம் பிறப்பிற்கும், கல்விக்கும், செயலுக்கும் சம்பந்தமே இல்லையே. ஸ்ரீபரமாத்மன், நமக்கு தன் மகிமைகளை நினைவுபடுத்தி, நமக்கு அருள்வதற்காகவே இந்த உணவைக் கேட்டிருக்கிறான். இல்லையேல், பூர்ணகாமனான பரமாத்மனுக்கு நம் உணவுதான் வேண்டியிருந்ததா?’ என்றெல்லாம் சிந்தித்து தாமும் தன்யராகவேண்டும் என்று நினைத்தனர். 

ஆகையால், வெறும் தேக தண்டனை செய்து, காம்ய விரதாதிகளை செய்வதனால் கிடைக்கும் பலன், தற்காலிகமான ஸ்வர்க்கமே என்று இதிலிருந்து அறியவேண்டும். ஆனால், நித்யகர்மங்களான சந்தியாவந்தனம், ஏகாதசி முதலான விரதங்கள் ஆகியவற்றை விடவேண்டும் என்று பொருள் அல்ல. 

நகர்மணா மனாரம்பான் ம்யைஷ்யர்ம்யம் புருஷோஷ்னுதே |
நசஸன்யஸனா தேவஸித்திம் ஸமதிகச்சதி ||
நியதம் குருகர்மத்வம் கர்மஜ்யாயோஹ்ய கர்மண: |
ததர்த்தம் கர்மகௌந்தேய முக்தஸங்க: ஸமாசர ||
(பகவத் கீதை)

அனைத்து கர்மங்களையும் விடுவதே நைஷ்காம்யம் என்றில்லை. காம்யகர்மங்களை விடுவதாலேயே புருஷர்கள் சத்கதியை அடைவதில்லை. வர்ணாசிரமத்திற்கேற்ப நித்யகர்மங்களை செய். ‘தஸ்மாதஸக்த: ஸததம் கார்யம் கர்ம ஸமாசர’ அதாவது, கர்மத்தின் பலனை எதிர்பார்க்காமல், ஸ்ரீவிஷ்ணு ப்ரீதிக்காக கர்மத்தை செய் என்று பொருள். இதுவே கீதா ஸ்லோகத்தின் சாமான்ய பொருள் ஆனாலும், இதற்கு ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகள் தனது வியாக்யானத்தில் இவ்வாறு விளக்கம் அளித்திருக்கிறார். 

’நசேதிஸன்யஸனாத் காம்யகர்மா கரணாதேவ | தன்மாத்ராதிதி யாவத் | அனேன நிவ்ருத்த கர்மகரண முபலக்‌ஷ்யைதே | நிவ்ருத்த கர்மகரண மாத்ரத்ஸித்தி மோக்‌ஷம் புருஷோ ந ஸமதிகச்சதி | நப்ராப்னோதி | கிந்து தேனாந்த: கரண ஷுத்தி விஷய வைராக்யஸ்ரவண மனனத்யான ஞானத்வாரைவ | நசஸன்யஸனாதேவ |’

காம்ய கர்மங்களை விடுவதால் மட்டும் முக்தி கிடைக்காது. அதாவது, விதிக்கப்பட்ட கர்மானுசரணங்களை செய்தே ஆகவேண்டும் என்று குறிப்பிடுகிறார். ஆனாலும், இத்தகைய கர்மானுஷ்டானங்களை செய்வதால் மட்டுமே புருஷர்கள் முக்தியை அடைவதில்லை. பின் வேறு எதனால் முக்தி என்றால், அந்த:கரண சுத்தியினாலும், விஷய சுகங்களில் வைராக்கியங்களாலும், பரமாத்மனின் கதைகளைக் கேட்டு, அதை மனனம் செய்வதாலும், மெய்மறந்து தியானம் செய்வதாலும், அதிலிருந்து கிடைக்கும் ஞானத்தினால் மட்டுமே முக்தி கிடைக்கிறது என்கிறார். 

ஆகவே, முக்கியமான நித்யகர்மங்களை செய்தவாறு, பரமாத்மனின் மகிமைகளை பிறர் பாடும்போது தானும் கேட்டவாறு, கேட்டவற்றின் உண்மையான அர்த்தத்தினை புரிந்துகொண்டு, மனதில் தியானம் செய்துகொண்டிருப்பதாலேயே, முக்தி கிடைக்கிறது என்பதே தாசராயரின் அபிப்பிராயம் என்று அறியவேண்டும். இதே அபிப்பிராயத்தையே ஸ்ரீஜகன்னாததாசர் தன் இன்னொரு பத்யத்தில் ‘ஸ்வோசித கர்மங்களா சரிசுதபலு’ என்றிருக்கிறார். இவற்றிலிருந்து தெரிய வந்த விஷயங்கள் என்னவெனில் : அகத்தூய்மை, விஷய வைராக்யம், ஸ்ரவணம், மனனம், த்யானாதிகள் இல்லாமல் வெறும் தேகத்தை தண்டித்து செய்யும் விரதங்களால் ஆவதில்லை. இந்த விரத நியமங்களின் பலன், வெறும் ஸ்வர்க்கமே தவிர, அவை முக்திக்கு சாதனம் ஆவதில்லை. 

***



1 comment: