#8 - கருணா சந்தி
(ஸ்ரீஹரி) ஜகவனெல்லவ = உலகங்கள் அனைத்தையும்
நான்மொகனொளகெ = நான்முக பிரம்மனில் உள்ளே, இருந்துகொண்டு
நிர்மிஸுவ = படைப்பான்
ஸலஹுவ = தான் காப்பாற்றுவான்
ககன கேஷனொளித்து = ருத்ரதேவரில் இருந்து
லோககள = அனைத்து உலகங்களையும்
சம்ஹரிஸுவனு = அழிப்பான்
ஸ்வகதபேதவிவர்ஜிதனு = தன் ரூபங்களில் பரஸ்பரம் வேறுபாடுகள் இல்லாதவன்
சர்வக = அனைத்து இடங்களிலும் இருப்பவன்
சதானந்தைக தேஹனு = அனைத்து காலங்களிலும் ஆனந்த ஸ்வரூபம் உள்ளவன்
பகெபகெய நாமதலி = அனைத்து எழுத்துக்களாலும் அழைக்கப்படுபவன். பிரம்ம, ருத்ர, இந்திரன் முதலான பெயர்களும்
அவனையே குறிக்கின்றன. மத்ஸ்ய, கூர்ம, ராம, கிருஷ்ண என பல பெயர்களால்
கரெசுவ = அழைக்கப்படுகிறான்
பக்தரனு = தன் பக்தர்களை
பொரெவ = காப்பாற்றுகிறான்
***
ஜக3வனெல்லவ நிர்மிசுவ நா
ந்மொகனொளகெ3 தானித்து3 சலஹுவ
க3க3னகேஷனொளித்து
சம்ஹரிசுவனு லோகக3ள |
ஸ்வக3தபே4த3 விவர்ஜிதனு ச
ர்வக3 ஸதானந்தெ3ய்கதே3ஹனு
ப3கெ3ப3கெ3ய நாமத3லி கரெசுவ ப4குதரனு பொரெவ ||8(ஸ்ரீஹரி) ஜகவனெல்லவ = உலகங்கள் அனைத்தையும்
நான்மொகனொளகெ = நான்முக பிரம்மனில் உள்ளே, இருந்துகொண்டு
நிர்மிஸுவ = படைப்பான்
ஸலஹுவ = தான் காப்பாற்றுவான்
ககன கேஷனொளித்து = ருத்ரதேவரில் இருந்து
லோககள = அனைத்து உலகங்களையும்
சம்ஹரிஸுவனு = அழிப்பான்
ஸ்வகதபேதவிவர்ஜிதனு = தன் ரூபங்களில் பரஸ்பரம் வேறுபாடுகள் இல்லாதவன்
சர்வக = அனைத்து இடங்களிலும் இருப்பவன்
சதானந்தைக தேஹனு = அனைத்து காலங்களிலும் ஆனந்த ஸ்வரூபம் உள்ளவன்
பகெபகெய நாமதலி = அனைத்து எழுத்துக்களாலும் அழைக்கப்படுபவன். பிரம்ம, ருத்ர, இந்திரன் முதலான பெயர்களும்
அவனையே குறிக்கின்றன. மத்ஸ்ய, கூர்ம, ராம, கிருஷ்ண என பல பெயர்களால்
கரெசுவ = அழைக்கப்படுகிறான்
பக்தரனு = தன் பக்தர்களை
பொரெவ = காப்பாற்றுகிறான்
ஸ்ரீபரமாத்மன், பிரம்மதேவருக்குள் இருந்து அனைத்து உலகங்களையும் படைக்கிறான். தானே விஷ்ணு ரூபத்தினால் அனைவரையும் காக்கிறான். ருத்ர தேவருக்குள் இருந்து அனைத்தையும் அழிக்கிறான். தன் அவதார, மூல, பிம்ப, க்ரியா ரூபங்களுக்குள்ளும், தன் தேகத்தில் இருக்கும் உறுப்புகளுக்குள்ளும் எவ்வித வேறுபாடுகளும் இல்லாதவன். அனைத்து இடங்களிலும் நிலைத்திருப்பவன். சச்சிதானந்த ஸ்வரூபன். பற்பல பெயர்களால் அழைக்கப்படுபவன். தன் பக்தர்களை பல விதங்களில் காப்பாற்றுபவன்.
பிரம்மணிஸ்தோ ஸ்ருஜத்விஷ்ணு: ஸ்தித்வா ருத்ரேத்வ பக்ஷயத் |
ப்ருதக் ஸ்தித்வா ஜகத்பாதி தத்பிரம்மாத்யயோ ஹரி: ||
ஸ்ரீபரமாத்மன் பிரம்மதேவரின் தேகத்தில் இருந்து படைக்கிறான். ருத்ரதேவரில் நின்று அழிக்கிறான். தான் தனியாக நின்று அனைத்தையும் காக்கிறான். இப்படி விஷ்ணுவே, பிரம்ம, ருத்ரன் என்று அழைத்துக்கொண்டு ஸ்ருஷ்ட்யாதிகளை செய்கிறான் என்று பிரம்மாண்ட புராணத்தின் வாக்கியம் சொல்கிறது. மேலும்,
விஷ்ணுரேவ ஹரிஸ்ஸாக்தாத் தாவுபௌன ஹரி: ஸ்ம்ருதௌ |
ஆவிஷ்டரூபௌ விக்ஞேஸௌ ப்ரம்மருத்ராபிதாயகௌ ||
என்னும் விஷ்ணு ரகசியத்தின் ஆதாரத்தினால் தெரிய வரும் விஷயம் என்னவெனில்: பிரம்மருத்ரரே விஷ்ணு என்று அறியக்கூடாது. விஷ்ணு நாமகனான பரமாத்மனே பிரம்ம, ருத்ரர்களில் ஒரு விசேஷ அம்சத்துடன் இருந்து, பிரம்ம, ருத்ரர் என்று அழைத்துக் கொள்கிறான் என்று நினைக்கவேண்டும்.
ஸ்வகதபேத விவர்ஜித - மகாபாரத தாத்பர்ய நிர்ணயத்தில்
நிர்தோஷ பூர்ண குணவிக்ரக ஆத்மதந்த்ரோ நிஸ்சேதனாத்மக ஷரீர குணைஸ்சஹீன |
ஆனந்தமாத்ர கரபாத முகோதராதி; சர்வத்ர ச ஸ்வகதபேத விவர்ஜிதாத்மா ||
என்று சொல்லியிருக்கிறார். இதன் பொருள்:
ஸ்ரீஹரி, தோஷங்கள் அற்ற அனேக குணங்களை பூரணமாக உள்ள ஸ்வரூபன். ஸ்வதந்த்ரன். சேதனாத்மக சரீரம் இல்லாதவன். வெறும் ஆனந்தத்தையே கொடுக்கக்கூடிய கை, பாதம், முகம், வயிறு ஆகியவற்றைக் கொண்டவன். அனைத்து இடங்களிலும் இருக்கக்கூடிய ரூபங்களில் பேதங்கள் இல்லாதவன். தன் அங்கங்களில், நம்மைப் போல கண்களாலேயே பார்க்க வேண்டும், காதுகளாலேயே கேட்க வேண்டும் என்னும் தர்மங்கள் அவனுக்கு இல்லை. நாம் கை, கால்களினால் செய்யக்கூடிய வேலைகளை, பரமாத்மன் தன் ஒரு முடியினாலும், நகத்தினாலும் கூட செய்யத்தக்கவன். ஆகையால் ‘ரோமஸ்ச பூர்ண: நகஸ்சபூர்ண:’ ஆகிய வாக்கியங்களால் பரமாத்மனை வேதங்கள் புகழ்கின்றன.
சர்வக - அனைத்து இடங்களிலும் நிலைத்திருப்பவன். ’அந்தர்பஹிஸ்ச தத்சர்வம் வியாப்த நாராயணாஸ்தித:’ என்னும் வேத வாக்கியத்தின்படி, உள்ளே, வெளியே, அனைத்து இடங்களிலும் என பரமாத்மன் வியாபித்திருக்கிறான். ‘ஸதானந்தைக தேஹனு’ அனைத்து காலங்களிலும் ஆனந்தத்தை மட்டுமே அனுபவிக்கும் சரீரத்தை உள்ளவன் என்று பொருள். இதற்கு ஆதாரம், பாகவத 11ம் ஸ்கந்தத்தின் தாத்பர்யத்தில் :
அனத்ருத்வம் ஹரேர் து:கானத்ருத்வா துச்யதே ஸதா |
விஷயான்விதாபி பூர்ணத்வாத்ஸ்வரூபானந்த போகின: |
ஸுகமத்தேவஹி ஸதா ஸர்வத்ராபிதம் விபு: ||
என்று சொல்லியிருக்கிறார்.
மற்றும்:
த்வா ஸு பர்ணா சயுஜா சகாயா சமானம் வ்ருக்ஷம் பரிஷஸ்வஜாதே |
தயோரன்ய: பிப்பலம் ஸ்வாத்வத்வனஷ்னன்னயோ அபிஷாகதீதி ||
என்னும் ஸ்ருதியில், ஒரு மரத்தில் இரு பறவைகள் இரு கூடுகளை கட்டிக்கொண்டு வசித்துவந்தன. அதில் ஒரு பறவை அந்த மரத்தில் இருந்த சுவையான பழங்களை சாப்பிட்டுவந்தது. ஆனாலும் அது பலவீனமாக இருந்தது. மற்றொரு பறவை அந்த பழங்களை தின்னாவிட்டாலும், அது திடகாத்திரமாக இருந்தது. இந்த வாக்கியத்தில், ஜீவ, பரமாத்மனின் சிறப்புகள் சொல்லப்பட்டிருக்கின்றன. இதில் ஜீவன், உலகம் என்னும் மரத்தில் இருக்கும் தேகம் என்று கூட்டில், பாவ புண்ணியங்களின் பலன்களான, சுக துக்கங்களை அனுபவித்து வாழ்கிறான் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
பரமாத்மன் பலன்களை உண்பதில்லை. அதாவது, அவனுக்கு சுக துக்கங்கள் இரண்டும் கிடையாது என்பது பொருள். ஸ்ரீமதாசார்யர் உதாரணத்துடன் சொல்லும் விஷயம் என்னவெனில்: பரமாத்மன் ‘அனத்தா’ அதாவது உண்பவனல்ல. துக்கத்தை அனுபவிப்பதில்லை ஆதலால் ‘அனத்தா’ என்று அவருக்குப் பெயர். ‘அத்தா’ என்னும் பெயரும் உண்டு. விஷய போகங்கள் இல்லை என்றாலும், ஸ்வரூபானந்தத்தை தினந்தோறும் அனுபவித்துக் கொண்டிருக்கும் ஸ்வாமி, அனைத்து ஜீவர்களில் இருக்கும் சுகங்களை மட்டும் தினந்தோறும் அனுபவித்து வருகிறான். ‘ஸ்வாத்வத்தி’ என்னும் பதத்தினால் ஜீவன்கூட சுவையான பழங்களை மட்டுமே உண்கிறான் என்று வேதங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இதன் பொருள் என்னவெனில்: சுவையில்லாத பதார்த்தங்களை சுவையுள்ளவையாக சிந்தித்து ஜீவன் உண்கிறான். ஆகையால், ஆனந்த ஸ்வரூபமான தேகத்தினால் கூடியிருக்கிறான் என்று அறியவேண்டும். இதுவே மேற்சொன்ன பாகவத ஸ்லோக அர்த்தம். இதையே தாசராயர் - சதானந்தைக தேஹனு என்று பாடியிருக்கிறார்.
பக்தரனு பொரெவ - அனைத்து விதங்களிலும் பக்தர்களைக் காக்கிறான். அல்லது ‘பகெபகெய நாமதலி கரெசுவ பகுதரனு’ என்று ஒரே வாக்கியமாக இதை சொல்லலாம். ராம, கிருஷ்ண, வேதவியாஸ, விட்டல, ஸ்ரீனிவாஸ, நாரசிம்ம ஆகிய பற்பல பெயர்களால் பரமாத்மனை அழைத்தவாறு, பஜனை செய்துகொண்டிருக்கும் தன் பக்தர்களை ‘பொரெவ’ அனைத்து காலங்களிலும் காப்பாற்றுவான் என்று பொருள்.
No comments:
Post a Comment