#18 - கருணா சந்தி
புவனபாவன சரித = 14 உலகங்களையும் பவித்ரமாக ஆக்கும் சரிதத்தைக் கொண்டவன்
புண்யஸ்ரவணகீர்த்தன = புண்யகரமான ஸ்ரவண கீர்த்தனைகளைக் கொண்டவன் (கதை கேட்பதும், அவனைப் பற்றி பாடுவதும்கூட புண்ணியகரமானது). அவனின் மகிமைகளை ஸ்ரவணம் செய்பவர்களுக்கும், பாடுபவர்களுக்கும் புண்ணியத்தைக் கொடுப்பவன் என்னும் கருத்து.
பாபனாஷன = பாவங்களை நாசம் செய்பவன்
கவிபிரீடித = பிரம்மாதிகளால் வணங்கப்படுபவன்
கைரவதளஷ்யாம = குவளை மலரின் இதழ்கள் போல நீல வண்ண தேகமுடையவன்
நிஸ்ஸீம = அபரிமிதமான குணரூபங்களைக் கொண்டவன்
ஹிந்தெ = முன்னர், சாக்ஷுஷ மன்வந்தரத்தில்
யுவதிவேஷதி = பெண்ணின் ரூபத்தில்
கௌரிதவன = உமாபதியான ருத்ரதேவரை
மோஹிஸி, கெடிஸி = அவரை தன் மேல் ஆசைப்பட வைத்து
உளிஸிதனு = பின் அவரைக் காப்பாற்றினான்
ஈ ஜகத்ரயதி = மூன்று உலகங்களிலும்
அவனு = எந்த புருஷன் (யாரும்)
இவன மாயவ = இவனின் மாயையை
கெலுவனு = வெல்பவன் யாருமில்லை.
பொருள்:
***
பு4வனபாவன சரித புண்ய
ஸ்ரவணகீர்த்தன பாபநாஷன
கவிபி3ரீடி3த கைரவதல ஷ்யாம நிஸ்ஸீம |
யுவதிவேஷதி3 ஹிந்தே3 கௌ3ரி
த4வன மோஹிஸி கெடி3ஸி உளிசித3
இவன மாயவ கெ3லுவனாவனு ஈ ஜக3த்ரயதி3 ||18புவனபாவன சரித = 14 உலகங்களையும் பவித்ரமாக ஆக்கும் சரிதத்தைக் கொண்டவன்
புண்யஸ்ரவணகீர்த்தன = புண்யகரமான ஸ்ரவண கீர்த்தனைகளைக் கொண்டவன் (கதை கேட்பதும், அவனைப் பற்றி பாடுவதும்கூட புண்ணியகரமானது). அவனின் மகிமைகளை ஸ்ரவணம் செய்பவர்களுக்கும், பாடுபவர்களுக்கும் புண்ணியத்தைக் கொடுப்பவன் என்னும் கருத்து.
பாபனாஷன = பாவங்களை நாசம் செய்பவன்
கவிபிரீடித = பிரம்மாதிகளால் வணங்கப்படுபவன்
கைரவதளஷ்யாம = குவளை மலரின் இதழ்கள் போல நீல வண்ண தேகமுடையவன்
நிஸ்ஸீம = அபரிமிதமான குணரூபங்களைக் கொண்டவன்
ஹிந்தெ = முன்னர், சாக்ஷுஷ மன்வந்தரத்தில்
யுவதிவேஷதி = பெண்ணின் ரூபத்தில்
கௌரிதவன = உமாபதியான ருத்ரதேவரை
மோஹிஸி, கெடிஸி = அவரை தன் மேல் ஆசைப்பட வைத்து
உளிஸிதனு = பின் அவரைக் காப்பாற்றினான்
ஈ ஜகத்ரயதி = மூன்று உலகங்களிலும்
அவனு = எந்த புருஷன் (யாரும்)
இவன மாயவ = இவனின் மாயையை
கெலுவனு = வெல்பவன் யாருமில்லை.
பொருள்:
ஸ்ரீபரமாத்மன் 14 உலகங்களையும் பவித்ரமாக ஆக்கும் சரித்திரத்தைக் கொண்டவன். தன் கதையை கேட்பவருக்கும், கொண்டாடுபவர்களுக்கும் புண்ணியத்தைக் கொடுப்பவன். அவர்களின் பாவத்தை போக்குவான். பிரம்மாதிகளால் போற்றப்படுபவன். குவளை மலர் இதழ்களைப் போல உத்தமனான நீல வர்ண தேகத்தைக் கொண்டவன். அபரிமிதமான நாம ரூபங்களைக் கொண்டவன் ஆகையால், நிஸ்ஸீம என்ற பெயர் பெற்றவன்.
யுவதி வேஷதி ஹிந்தெ கௌரிதவன மோஹிஸி - க்ருதயுகத்தில் தேவ தைத்யர்கள் அனைவரும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்தபோது ஸ்ரீபரமாத்மன், தைத்யர்களை ஏமாற்றி தேவதைகளுக்கு அமிர்தத்தை பங்கிட்டுக் கொடுத்தான் என்னும் விஷயத்தை ருத்ரதேவர் கேட்டு, ஸ்ரீபரமாத்மனிடம் வந்து ஸ்தோத்திரம் செய்து ‘நீ தைத்யர்களை ஏமாற்றுவதற்காக எடுத்த ஸ்த்ரீ ரூபத்தை எனக்குக் காட்டுவாயாக’ என்றார். அதற்கு பரமாத்மன் ‘ஈஸ்வரா! தைத்யர்கள் தேவதைகளிடமிருந்து அமிர்த கலசத்தை அபகரித்துப் போக, அவர்களை வஞ்சித்து, தேவதைகளுக்கு அமிர்தத்தை பகிர்ந்து கொடுக்க, அந்த ரூபத்தை நான் எடுத்தேன். அது அவர்கள் பார்த்து ஏமாற்றம் அடைவதற்காக எடுத்த ரூபம். ஆனாலும், நீ விரும்பியதால், உனக்கு அதை காட்டுகிறேன்’ என்று சொல்லி, ஸ்ரீஹரி மறைந்தார். ருத்ரதேவர் பார்வதி சமேதராக, அனைத்து இடங்களிலும் ஸ்ரீஹரியை தேடினார்.
அப்போது பக்கத்தில் இருந்த ஒரு தோட்டத்தில், பாட்டு பாடும் ஒலியும், அதற்கேற்ப நடனமாடுவதும், கைகளில் இரு பந்துகளை ஏந்தி விளையாடியவாறு, அற்புத அழகினைக் கொண்ட ஒரு பெண் வருவதை ருத்ரதேவர் கண்டார். ஸ்ரீஹரியின் மாயையை வெல்பவர் யார்? உடனடியாக ருத்ரர் காமத்திற்கு அடிமையானார். அதற்குள் அந்தப்பெண் ருத்ரதேவருக்கு அருகில் வர, காற்று அவளின் வஸ்திரத்தை அபகரித்தது. ’பவான்யா அபி பஷ்யந்த்யாகதஹ்ரீ ஸ்தத்பதன்யயௌ’ - பார்வதிதேவி பார்த்திருக்க, ருத்ரதேவர், அந்தப் பெண்ணை நெருங்கி, அவள் முடியில் கைவைத்துப் பிடித்து, அவளை கட்டியணைக்க முயன்றார். அவளோ அவரிடமிருந்து தப்பி ஓடியபோது, ருத்ரரும் அவளை துரத்திப் பிடிக்க முயல, அவரால் அது முடியவில்லை.
வெகு சமீபத்தில் ஓடிக்கொண்டிருந்த பெண்ணைப் பார்த்ததால், அவரது மனம் சஞ்சலப்பட்டு, அவரது வீர்யம் வெளிப்பட்டது. அந்த இடங்கள் அனைத்தும் சிவ-ஸ்தலங்கள் ஆயின. சில காலம் கழித்து, ருத்ரருக்கு, அந்தப் பெண் ஸ்ரீபரமாத்மனே என்கிற உண்மை புலப்பட்டது. உடன் பெண் மறைந்தாள். ருத்ரரும் வெட்கத்துடன் தலைகுனிந்து, பார்வதியிடம் வந்தார். அப்போது ஸ்ரீபரமாத்மன் தன் உண்மை ரூபத்தினால் ருத்ரருக்கு தரிசனம் அளித்து, அவரை சமாதானப்படுத்தி மறைந்தார். மகானுபாவரான மன்மதனையே தகித்த ருத்ரரின் கதியே இப்படியானால், உலகத்தில் வேறு யார் இவரது மகிமைகளை வெல்லமுடியும்? இதே அபிப்பிராயத்தையே தாசராயர் இங்கு சொல்லியிருக்கிறார்.
No comments:
Post a Comment