#2 - கருணா சந்தி
மளெய நீரோணியலி ப1ரியலு
ப3ளசரூரொளகி3த்த3 ஜனரா
ஜலவு ஹெத்தொ3ரெகூ3டே3 மஜ்ஜன பான கை3த3பரு |
கலுஷ வசனகளாதொ3டெ3யு பா3
ம்பொ3ளெய பெ1த்தன பா1த3மஹிமா
ஜலதி பொக்குதரிந்த3 மாண்த3பரெ மஹிசுரரு ||2
மளெயநீரு, ஓணியல்லி = தெருவின் ஓரத்தில், சாக்கடைகளில் மழைநீர்
பரியலு = ஓடிக்கொண்டிருப்பதை, ஊரில் இருக்கும் மக்கள்
பளஸலு = பயன்படுத்த மாட்டார்கள்
ஆ ஜலவு = அதே நீரானது
ஹெத்தொரெகூடெ = பெரிய ஆற்றில் போய் சேர்ந்தால்
மஜ்ஜனபான கெய்தபரு = குளித்து, குடிப்பதற்கு பயன்படுத்துவர். அதுபோலவே,
இவு = இந்த கிரந்தத்தில் இருக்கும் என் வசனங்கள்
கலுஷவசனகளாதரு = பேசுமொழியில் எழுதப்பட்டிருந்தாலும்
பாந்தொளெயபெத்தன = கங்கையைப் பெற்ற ஸ்ரீபரமாத்மனின் பாத மகிமைகளைப் போல
பொக்கதரிந்த = பாத மகிமை என்னும் கடலைப் பற்றி சொல்லியிருப்பதால்
மஹிசுரரு = பிராமணர்கள்
மாள்தபரெ = ஏற்றுக்கொள்ளாமல் இருப்பார்களோ? (அதாவது ஏற்றுக்கொள்வர் என்று பொருள்)..
பொருள்:
மழை பெய்யும்போது, அந்த நீரானது, சந்து தெருக்களின் ஓரத்தில் ஓடும்போது, அதை யாரும் பயன்படுத்துவதில்லை. அதே தண்ணீரானது, பெரிய ஆற்றினில் போய் சேரும்போது, எப்படி அதில் ஸ்னானாதிகளை செய்கின்றனரோ, அதுபோலவே, என் கிரந்தங்களில் என்ன தோஷங்கள் இருந்தாலும் இது சம்ஸ்கிருத மொழியாக இல்லாதிருந்தாலும், ஸ்ரீபரமாத்மனின் பாத சரித்திரத்தைப் பற்றி பேசுவதினால், அதாவது, இதில் பகவந்தனின் மகிமைகளே சொல்லியிருப்பதால், பிராமணர்கள் இதனை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கமாட்டார்கள்.
சிறப்புப் பொருள்:
ஸ்ரீமத் டீகாசார்யர் (ஜயதீர்த்தர்) சொல்வது இது.
கங்கா சங்கேன நைர்மல்யம் ரத்யாத்பிர்லப்யதேயதா |
வாசோவிஷுத்திஸித்யர்த்தம் சங்கம்யந்தே குரோர்கிர: ||
அதாவது, தெரு ஓரத்தில் ஓடும் மழை நீரானது, கங்கையை சேர்ந்தவுடன் எப்படி புனிதமாக கருதப்படுகிறதோ, அதைப் போலவே நம் வாக்கு புனிதமடைவதற்கு, டீகா ரூபமான இந்த வாக்கியங்களை, குருகளின் மூல கிரந்தத்தில் சேர்க்கிறோம். - என்று பிரம்மசூத்ர பாஷ்யத்தின் டீகா கிரந்தமான தத்வபிரகாசிகையில் சொல்லியிருக்கிறார். அதே கருத்தினையே தாசராயர் இந்த பத்யத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
மழை நீரானது தெருவோரங்களில் ஓடும்போது, மக்கள் அதனை பயன்படுத்தாமல் இருந்தாலும், அதே நீரானது ஒரு பெரிய ஆற்றினை அடைந்ததும் அதை எப்படி பயன்படுத்தத் துவங்குகின்றனரோ, அதைப்போலவே இந்த கிரந்தமானது பேசுமொழியான கன்னடத்தில் இருந்தாலும், அப்ராக்ருதமான பகவந்தனின் மகிமைகளையே பேசுவதால், இதனை ப்ராக்ருதம் என்று உதாசீனம் செய்யாமல் ஏற்றுக்கொள்வர் என்னும் நம்பிக்கையில் இதை இயற்றியிருக்கிறேன் என்கிறார் தாசராயர்.
சிலர் சம்ஸ்கிருத கிரந்தங்களே சிறந்தவை என்றும், பேசுமொழியில் இருக்கும் கிரந்தங்களை படிக்கக்கூடாது என்றும் சொல்வர். ஆனால் இந்த அபிப்பிராயம் உள்ளவர்கள், புராணங்களில் அங்கங்கு சொல்லப்பட்டிருக்கும் சம்ஸ்கிருத சொற்களை சரியாகப் புரிந்துகொள்ளாமல், வெறும் மொழியின் ஆசையில் அதை புரிந்துகொண்டு, அநியாயமாக பெரியவர்களின் துரோகத்தை சம்பாதித்துக் கொள்கின்றனர். உலகத்தில் சம்ஸ்கிருதமே சிறந்த மொழி என்றும், அதற்கே மகிமைகள் உள்ளன என்றும் அறிந்து, சம்ஸ்கிருதம் அறிந்தவர்களே முக்திக்கு செல்வர் என்றும் சொல்வர். கன்னட மொழி ஒதுக்கப்பட்ட மொழியாக இருந்திருந்தால், ஸ்ரீபாதராஜர், ஸ்ரீவியாசராஜர், ஸ்ரீவாதிராஜர்களே ஆகட்டும் கன்னடத்தில் பதங்களை செய்திருப்பதால், அவர்கள் அனைவரும் நரகத்திகுச் செல்வர் என்று சொல்வது போலாயிற்று. சம்ஸ்கிருதம் வராத உத்தமரான தாசராயர்கள் அனைவருக்கும் தமஸ்ஸே கிடைக்கவேண்டுமாயிற்று. ஆகையால், சம்ஸ்கிருத சொற்களுக்கு, தவறான விளக்கங்களை புரிந்துகொள்பவர்களைப் பார்த்து வருத்தப்பட வேண்டியதாகிறது.
பாகவத 11ம் ஸ்கந்தத்தின் தாத்பர்யத்தில் ‘கர்தபயானம சம்ஸ்க்ருத வாணி இத்யாதே:’ என்று பொருளின் புனிதம், புனிதத்தன்மை இல்லாமை ஆகியவற்றை சொல்லும்போது சம்ஸ்கிருதம் இல்லாத வாக்கியத்தை கழுதையின் வாகனத்திற்கு சமமாக சொல்லியிருக்கின்றனர். ஆனால், பண்டிதர்கள், சுதாதி கிரந்தங்களுக்கும், புராணங்களுக்கும் அர்த்தம் சொல்வதானால், அதை இந்த பேசுமொழியிலேயே சொல்லவேண்டியதாக இருக்கிறது. வீட்டில் குடும்பத்தினருடன் பேசும்போது பேசுமொழியிலேயே பேசவேண்டியதாக இருக்கிறது. இதையெல்லாம் கழுதையின் மேல் அமர்ந்தாற்போல என்று சொல்லமுடியுமா? இதையெல்லாம் யோசிக்காமல் மனதிற்கு தோன்றினாற்போல பேசினால், அனர்த்தமே ஆகும். பெரியவர்களின் துரோகமும் கூடவே வரும். ஆகவே, சம்ஸ்கிருத சொற்களுக்கு பேசுமொழியில் அர்த்தங்களை சொல்லியே ஆகவேண்டும்.
மேலும் 11ம் ஸ்கந்தத்தில், ‘புராணை: ப்ராக்ருதைரபி’ ப்ராக்ருதத்தினாலும் பரமாத்மனை ஸ்தோத்திரம் செய்யவேண்டும். இதுமட்டுமல்லாமல்
நயத்வஷஸ்சித்ரபதம் ஹரேர்யதோ ஜகத்பவித்ரம் ந க்ருணீத் கர்ஹிசித |
தத்வாயஸம் தீர்த்தமுஷந்தி மானஸானயத்ர ஹம்ஸான்ய வன்மிகன்ஷயா ||
சவாக்விஸர்கோஜன தாக விப்லவோ யஸ்மின்ப்ருதி ஸ்லோகமபத் பவத்யபி |
நாமன்யனந்தஸ்ய யஷோங்கிதானியஸ் புண்யந்தி காயந்தி க்ருணந்தி ஸாதவ: ||
என்னும் பாகவத வசனத்திற்கேற்ப, எந்தவொரு கிரந்தமும், எந்த மொழியில் இருந்தாலும், கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும் , அதில் பகவத் மகிமை இல்லாதிருந்தால், அந்த கிரந்தத்தை, காக்கைகள் குடிக்கும் நீர்நிலையில் மானச சரோவரத்தில் நீர் குடிப்பவைகளான அன்னப்பறவைகள் நீர் குடிக்க எப்படி விருப்பப்படாதோ, அதுபோலவே, பெரியவர்களான ‘ஹம்ஸ’ என்றால் சன்யாசிகளான சனகாதிகள் முதலானவர்கள் விரும்பமாட்டார்கள். அதனை அவர்கள் வயிற்றுப்பிழைப்பிற்காக பயன்படுத்தப்படுவது என்று நினைப்பார்கள். மாறாக, ஒவ்வொரு ஸ்லோகத்திலும் எதுகை மோனை ஆகியவை இல்லாதிருந்தாலும், அதில் பகவத் மகிமைகள் சொல்லப்பட்டிருந்தால், சன்யாசிகள் அந்த கிரந்தத்தை படித்துக் கேட்பதில் மகிழ்ச்சியடைவார்கள். இப்படியாக, பகவத் மகிமைகள் உள்ள கிரந்தத்தின் மகிமைகளை சொல்லியிருக்கிறார்கள்.
இப்படியிருக்கையில், சம்ஸ்கிருத மொழி ப்ராக்ருத மொழி என்றால் என்ன அர்த்தம்? சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருந்தாலும் காதம்பரி காவியங்கள் ஆகியன பகவத் மகிமைகளைப் பற்றி பேசாததால், ப்ராக்ருத கிரந்தங்கள் என்றும்; கன்னடத்தில் எழுதப்பட்ட கிரந்தமானது அப்ராக்ருதனான பரமாத்மனின் மகிமைகளைப் பற்றி பேசினால் அவை சம்ஸ்கிருத கிரந்தங்களே என்பது ஸ்ரீமதாசார்யரின் வாக்கு என்று நினைக்கவேண்டும்.
மேலும் அ-காராதி 51 எழுத்துக்களே கன்னடத்திலும் இருப்பதால், அஜாதி பரமாத்மனின் ரூபங்களே இந்த எழுத்துக்களுக்கும் ப்ரதிபாத்யனாக இருக்கிறான் என்றும், இத்தகைய சிறந்த கிரந்தத்தை கன்னட மொழி என்று உதாசீனம் செய்பவர்கள், ஹரிகுருகளின் துரோகத்திற்கு ஆளாகிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.
இதைப்போலவே, பழங்கால மகாராஷ்டிரத்து கவி/பக்தர்களான துக்காராம், துளசிதாஸ், நாமதேவ, ஞானதேவ் என்று மிகச்சிறந்த பக்தர்கள் என்று புகழ்பெற்றிருக்கும் பலர் தத்தம் மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பர். அவர்களைப் போலவே, நம் தாசராயரும் இதை கலுஷவசன என்று எண்ணாமல், பகவத் மகிமை என்னும் கடலில் நுழைந்திருப்பதால், அனைத்தும் ஏற்றுக்கொள்ளத்தக்கதே என்று நினைக்கவேண்டும் என்கிறார். இவ்வளவு விளக்கங்களை சொல்லியும், மக்களுக்கு இதன்மேல் மரியாதை உண்டாகவில்லை எனில், அது குரங்கின் கையில் கிடைத்த பூமாலை போல என்று எண்ணவேண்டும். பரமாத்மன் ஒவ்வொருவரின் தகுதிக்கேற்ப அவரவர் மூலமாக சாதனைகளை செய்விக்கிறான். இதற்கு மேல் சொல்வதற்கு என்ன இருக்கிறது?.
***
No comments:
Post a Comment