#10 - மங்களாசரண சந்தி
வாமதேவ விரிஞ்சித1னய உ
மாமனோஹர உக்3ர தூ4ர்ஜடி
சாமஜாஜின வசனபூ4ஷண சுமனசோத்தம்ஸ |
கா1மஹர கைலாஸமந்தி3ர சோம
சூர்யானல விலோசன
காமித1ப்ரத3 கருணிசெமகெ3 சதா சுமங்க3லவ ||10பொருள்:
வாமதேவ = சாந்தமான ஸ்வபாவமுள்ள அல்லது தனது இடதுபாகத்திலிருக்கும் பரமாத்மனை எப்போதும் உபாசனை செய்துகொண்டிருப்பதால் வாமதேவ என்ற பெயர் கொண்ட,
விரிஞ்சிதனய = பிரம்மனின் மகனான
உமா மனோஹர = பார்வதி தேவியின், மனோஹர = மனதைப் பறிக்கும் (அதாவது உமாபதியான என்று பொருள்)
உக்ர = எதிரிகளுக்கு உக்ர ஸ்வரூபனான, அல்லது பிரளய காலத்தில் உக்ர ரூபத்தினால் பிரபஞ்சத்தை எரிப்பதால் உக்ர என்று பெயர் பெற்றவர்
துர்ஜடி = கங்கையைக் கொண்ட ஜடையுள்ள
ஸாமஜாஜின வஸன = ஸாமஜ = யானை. அஜின = தோலினால். வஸனெ = ஆடை.
பூஷண = அணிகலன்களாக உள்ள
ஸுமனஸோத்தம்ஸ = தேவோத்தமனான
காமஹர = மன்மதனை எரித்தவனான
கைலாஸ மந்திர = கைலாயத்தையே வீடாகக் கொண்ட
ஸோமசூர்யானலவிலோசன = ஸோம = சந்திரன். சூர்ய = சூரியன். அனல = அக்னி. என்று மூன்று தேவதைகளைக் கொண்ட மூன்று கண்களையுடையவன் (இட வல கண்களில் சந்திர சூரியர்கள். நெற்றிக்கண்ணில் அக்னி என்று அறியவேண்டும்).
காமிதப்ரத = வேண்டுபவர்களின் இஷ்டார்த்தங்களை நிறைவேற்றுபவர்.
***
No comments:
Post a Comment