#17 - கருணா சந்தி
ஜனப = அரசன்
மெச்சிதரெ = மகிழ்ச்சியடைந்தால்
தன வாஹன விபூஷண வசன பூமிய = பொருட்களை, குதிரை முதலான வாகனங்களை, நகைகளை, ஆடைகளை, நிலங்களை
ஈவ = கொடுப்பான்
லோகதொளு = உலகத்தில்
தனு = தன் சரீரத்தை
மனகள = தன் மனதையும்
இத்து = கொடுத்து
ஆதரிபருண்டேனு = ஆதரிப்பவர்கள் உண்டா என்று யோசித்துப் பார்
மஹாமஹிம = மிகச்சிறந்த புகழைக் கொண்ட ஸ்ரீபரமாத்மன்
அனவரத நெனெவவர = எப்போதும் தியானித்திருப்பவர்களை
அனந்தாஸனவெ மொதலாதாலயதலி = அனந்தாசன, ஸ்வேதத்வீப, வைகுண்ட ஆகிய தன் இல்லங்களில் வைத்து
அணுகனந்ததி = சிறு பாலகனைப் போல ஸ்ரீபரமாத்மன்
அவர வஷனாகுவ = அவர்களின் வசமாவான்.
பொருள்:
***
ஜனப மெச்சித3ரீவ த4ன வா
ஹன விபூ4ஷண வசன பூமிய
தனு மனக3ளித்தா த3ரிபருண்டேனு லோகதொ3ளு |
அனவரத நெனெவவரனந்தா
ஸனவே மொத3லாதாலயதொ3ளி
ட்டணுக3னந்ததி அவர வஷனாகு3வ மஹாமஹிம ||17ஜனப = அரசன்
மெச்சிதரெ = மகிழ்ச்சியடைந்தால்
தன வாஹன விபூஷண வசன பூமிய = பொருட்களை, குதிரை முதலான வாகனங்களை, நகைகளை, ஆடைகளை, நிலங்களை
ஈவ = கொடுப்பான்
லோகதொளு = உலகத்தில்
தனு = தன் சரீரத்தை
மனகள = தன் மனதையும்
இத்து = கொடுத்து
ஆதரிபருண்டேனு = ஆதரிப்பவர்கள் உண்டா என்று யோசித்துப் பார்
மஹாமஹிம = மிகச்சிறந்த புகழைக் கொண்ட ஸ்ரீபரமாத்மன்
அனவரத நெனெவவர = எப்போதும் தியானித்திருப்பவர்களை
அனந்தாஸனவெ மொதலாதாலயதலி = அனந்தாசன, ஸ்வேதத்வீப, வைகுண்ட ஆகிய தன் இல்லங்களில் வைத்து
அணுகனந்ததி = சிறு பாலகனைப் போல ஸ்ரீபரமாத்மன்
அவர வஷனாகுவ = அவர்களின் வசமாவான்.
பொருள்:
ஒரு அரசன், தன் சேவகனின் சேவையை மெச்சினால், அவனுக்கு பொருள், வாகனங்கள், நகைகள், ஆடைகள், நிலங்கள் ஆகியவற்றைக் கொடுத்து அவனை மகிழ்விப்பான். மகாமகிமையுள்ள ஸ்ரீபரமாத்மன், தன்னை எப்போதும் பஜிப்பவர்களை, தன்னைப் பார்த்து மகிழ்ச்சியடைவதற்காக, தன் தரிசனத்தையே கொடுக்கிறான். அவர்களை முக்தராக செய்து, அனந்தாசனம் முதலான தன் வீடுகளில் அவர்களை வைத்து மகிழ்ச்சியளிப்பான். இத்தகைய பிரபு இந்த உலகத்தில் வேறு யார் உளர்? ஆகையால், ஸ்ரீஹரியே தயா சமுத்திரன் என்கிறார்.
சிறப்புப் பொருள்:
தனுமனகளித்ததரிபருண்டேனோ - இங்கு தனு என்றால், சாத்விக மக்களுக்கு தேவதாதி சரீரங்களைக் கொடுத்து, முக்தி சாதனங்களைக் கொடுத்து, வைகுண்டாதி தன் இடங்களில் வைத்து ஆதரிக்கிறான் என்ற ஒரு அர்த்தத்தை சொல்லலாம். இன்னொரு அர்த்தம் - அவன் பக்தாதீனன் ஆகையால், அர்ஜுனாதிகளுக்கு தன் சரீரத்தையே கொடுத்து சாரதியாக இருந்து, அவர்களைக் காத்தான். நாரதாதிகளுக்கு அவர்கள் நினைத்த இடங்களிலேயே தரிசனம் கொடுத்திருந்தான். இதையே 1ம் ஸ்கந்த பாகவதத்தில் ‘அஹோ இவமே ஷீக்ரம் தர்ஷனம்யாதி சேதஸி’ - நான் பாடல்களைப் பாடத் துவங்கியவுடன், எதிரில் இருப்பவரை அழைத்தால் எப்படி உடனே வருவாரோ, அதுபோல, ஸ்ரீஹரி என் சித்தத்தில் தரிசனம் அளிப்பான் - என்று நாரதர் கூறுகிறார்.
தற்போது 400-500 ஆண்டுகளுக்கு முன்னர்கூட ஸ்ரீஹரி தன் அற்புத மகிமைகளைக் காட்டியிருக்கிறார். மகாராஷ்டிரத்தில் கொல்லாபுரத்தில் ‘சதி சக்குபாய்’ என்பவர் விட்டலனிடம் பரம பக்தியைக் கொண்டு, அவனை எப்போதும் ஆராதித்தவாறு இருந்து, பண்டரிபுரத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆஷாட சுத்த ஏகாதசியன்று நடக்கும் விழாவிற்காக போகும் தாசர்களுடன் தானும் அங்கு போவதற்கான முயற்சியை செய்துகொண்டிருக்க, அவளின் அத்தை, அவளை மிகவும் கண்டித்து, தண்டித்து, ஒரு தூணில் அவளைக் கட்டிப்போட்டு, 15 நாட்கள் வரை அவளுக்கு சாப்பாடு கொடுக்காமல் துன்புறுத்தினாள். சக்குபாய், ஸ்ரீஹரியிடம் தன் மனம், உடலை ஒப்படைத்து தொடர்ந்து அவனை நினைத்து வந்தாள்.
ஸ்ரீஹரியும் அவளுக்கு விடுதலையைக் கொடுத்து, அவளை பண்டரிபுரத்திற்கு அனுப்பிவிட்டு, அவள் யாத்திரையை முடித்துவரும் வரையில், தான் சக்குபாயைப் போல அந்த தூணில் கட்டப்பட்டு, அவள் திரும்பி வந்தபிறகு, மாயமானான். சக்குபாயின் அத்தை ஆகியோர் நடந்த விஷயங்களைக் கேள்விப்பட்டு, வியந்து வருத்தப்பட்டு, அவளிடம் அவர்களை மன்னிக்குமாறு வேண்டியவாறு, அவளின் அருளின்படி அனைவரும் இஹத்தில் சுகங்களை அடைந்தனர். இப்படி பரமாத்மன் பக்தர்களுக்கு தன் சரீரத்தையே கொடுப்பதால் ‘தனுமனகளித்தா’ என்று தாசராயர் கூறுகிறார்.
சிறிய குழந்தை எப்படி தன் பெற்றோரின் வசத்தில் இருக்குமோ, அப்படியே பரமாத்மனும் பக்தர்களின் வசத்தில் இருக்கிறான் என்பது பொருள். ஆகையாலேயே இவனை மகாமகிமை உள்ளவன் என்றும், கருணைக்கடல் என்றும் அழைக்கின்றனர்.
No comments:
Post a Comment