#16 - கருணா சந்தி
ஹரியு = ஸ்ரீபரமாத்மன்
ஏனு கருணாநிதியோ = எப்படிப்பட்ட கருணாமயியோ
மத்தேனு பக்தாதீனனோ = இன்னும் எப்படிப்பட்ட பக்தர்களின் வசமானவனோ
இன்னேனு ஈதன லீலெ = இப்படிப்பட்டவனின் லீலைகளை என்னவென்று சொல்லுவேன்
இச்சாமாத்ரதலி = தன் விருப்பத்தின்படி
ஜகவ = உலகத்தை
தானே ஸ்ருஜிசுவ = தானே உருவாக்குவான்
பாலிஸுவ = காப்பாற்றுகிறான்
நிர்வாண = வைகுண்ட முதலானவைகளை
லோகஸ்தானகளலி = ஆகிய இடங்களில் வைத்து,
ஆனந்த படிசுவனு = அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவான்
***
ஏனு கருணாநிதி4யோ ஹரி ம
த்தேனு ப4க்தாதீ3னனோ இ
ந்னேனு ஈதன லீலெ இச்சாமாத்ரத3லி ஜக3வ |
தானெ ஸ்ருஜிசுவ பாலிசுவ நி
ர்வாண மொத3லாதகி2ல லோக
ஸ்தா2னத3லி மத்தவரனிட்டா3னந்த3 ப3டிசுவனு ||16ஹரியு = ஸ்ரீபரமாத்மன்
ஏனு கருணாநிதியோ = எப்படிப்பட்ட கருணாமயியோ
மத்தேனு பக்தாதீனனோ = இன்னும் எப்படிப்பட்ட பக்தர்களின் வசமானவனோ
இன்னேனு ஈதன லீலெ = இப்படிப்பட்டவனின் லீலைகளை என்னவென்று சொல்லுவேன்
இச்சாமாத்ரதலி = தன் விருப்பத்தின்படி
ஜகவ = உலகத்தை
தானே ஸ்ருஜிசுவ = தானே உருவாக்குவான்
பாலிஸுவ = காப்பாற்றுகிறான்
நிர்வாண = வைகுண்ட முதலானவைகளை
லோகஸ்தானகளலி = ஆகிய இடங்களில் வைத்து,
ஆனந்த படிசுவனு = அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவான்
பொருள்:
ஸ்ரீஹரிக்கு சமமான இன்னொரு கருணாமயி இல்லை. அதேபோல பக்தர்களின் வசமாகும் தேவர்கள் வேறு யாரும் இல்லை. இத்தகையவனின் லீலைகளை விவரிக்கும் சாத்தியம் இல்லை. ஸ்ரீஹரி அவன் தன் மனதில் நினைத்தவுடனேயே, தன் விருப்பப்படி, ஸ்ருஷ்டி, ஸ்திதி, லய, மோக்ஷாதிகள் ஜீவராசிகளுக்குக் கிடைக்கின்றன.
சிறப்புப் பொருள்:
பக்தாதீனன் என்றால் பக்தர்களின் இஷ்டார்த்தங்களை நிறைவேற்றுபவன் என்று பொருள். மத்வாசார்யர் பதரிகாசிரமத்தில் நாராயணரூபியை தரிசனம் செய்தபோது - ‘அமராமரானுக நராசுராதிர்கா ! ஸ்ருஜிஸி ப்ரபாலயஸி ஹம்ஸி சந்ததம் ஸ்வகதிம் ப்ரயாபயஸி சைஷலீலயா’ என்று ஸ்தோத்திரம் செய்தார். இதன் பொருள்: ஸ்வாமி நீங்கள் அமராமரானுக நராசுராதிர்கா, அமரானுக = உபதேவதைகள். நர = மனுஷ்யர்கள், அசுராதிர்க = அசுரர்களே முதலானவர்களை, லீலயா = விளையாட்டாக, ஸ்ருஜிஸி = படைத்து, ப்ரபாலயஸி = காப்பாற்றி, ஹம்ஸி = அழித்து, ஸ்வகதிம் = ஜீவனின் யோக்யதைக்கேற்ப அதாவது மோட்சம், நித்ய சம்சாரம், அந்தந்தமஸ் ஆகியவற்றை, ப்ரயாபயஸி = கொடுக்கிறாயே’ என்று மத்வவிஜயத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த விஷயத்தையே தாசராயர் இங்கு சொல்கிறார்.
No comments:
Post a Comment