#22 - கருணா சந்தி
மனதொளகெ = (பக்தன்) தன் மனதில்
சுந்தர பதார்த்தவ = அழகான பூஜைக்குப் பயன்படும் பதார்த்தங்களை
நெனெது = நினைத்து
கொடெ = கொடுக்க
கைகொண்டு = அதனை ஏற்றி
பலு நூதன = மிகவும் புதியதான
சுஷோபித = மிகவும் மங்களகரமான
கந்த = நறுமணத்தாலும்
ஸுரஸ = நல்ல சுவையையும்
உபேத = கொண்ட
பலராஷி = பழங்களை
த்யுனதி = கங்கையின்
நிவஹகளந்தெ = நீரினைப் போல
கொட்டு அவரன்னு சதா = எப்போதும்
சந்தெயிஸுவனு = சமாதானம் செய்கிறான் (மகிழ்விக்கிறான்)
சத்குணவ = பரமாத்மனின் ஆனந்தாதி குணங்களை
கத்தவர = அபகரித்தவர்களை (சித்தத்தில் வைத்திருப்பவர்களை, அதாவது, மனதில் அவனின் குணங்களை தியானித்திருப்பவர்கள் என்று பொருள்)
அகவ = பாவங்களை
கதிவனு = போக்குவான்
அனகனெந்தெனிஸி = தான் பாவங்கள் அற்றவன் என்று சொல்லிக்கொண்டு
பொருள்:
***
மனதொ3ளகெ3 சுந்தர பதார்த்த2வ
நெனெது3கொ1டெ3 கைகொ1ண்டு3 ப3லு நூ
தன சுஷோபி4த1 கந்த4 சுரஸோபே4த3
பலராசி |
த்யுனதி னிவஹகளந்தெ1 கொட்டவ
ரனு சதா சந்தயிசுவனு ச
த்கு3ணவ க1த்த3வரக4வ க1தி3வனு அனக4னெந்தெ3னிஸி ||22மனதொளகெ = (பக்தன்) தன் மனதில்
சுந்தர பதார்த்தவ = அழகான பூஜைக்குப் பயன்படும் பதார்த்தங்களை
நெனெது = நினைத்து
கொடெ = கொடுக்க
கைகொண்டு = அதனை ஏற்றி
பலு நூதன = மிகவும் புதியதான
சுஷோபித = மிகவும் மங்களகரமான
கந்த = நறுமணத்தாலும்
ஸுரஸ = நல்ல சுவையையும்
உபேத = கொண்ட
பலராஷி = பழங்களை
த்யுனதி = கங்கையின்
நிவஹகளந்தெ = நீரினைப் போல
கொட்டு அவரன்னு சதா = எப்போதும்
சந்தெயிஸுவனு = சமாதானம் செய்கிறான் (மகிழ்விக்கிறான்)
சத்குணவ = பரமாத்மனின் ஆனந்தாதி குணங்களை
கத்தவர = அபகரித்தவர்களை (சித்தத்தில் வைத்திருப்பவர்களை, அதாவது, மனதில் அவனின் குணங்களை தியானித்திருப்பவர்கள் என்று பொருள்)
அகவ = பாவங்களை
கதிவனு = போக்குவான்
அனகனெந்தெனிஸி = தான் பாவங்கள் அற்றவன் என்று சொல்லிக்கொண்டு
பொருள்:
பரமாத்மனை பூஜிக்க வேண்டுமெனில் பாக்யவந்தர்களே ஆகவேண்டும். பூஜை சாமான்கள் இருந்தால் மட்டுமே பூஜை செய்யவேண்டும் என்று இல்லை. யாரேயாயினும் பரமாத்மனை பக்தியுடன் தன் மனதில் சிந்தித்து, தியான ஆவாஹனாதி ஷோடஷோபசார பூஜைகளை, வெளியில் காணும் பிரதிமைகளை பூஜிப்பதைப் போலவே, தம் மனதிலும் பூஜித்து, பக்ஷ்ய போஜ்யாதி பதார்த்தங்கள் போன்ற பூஜைப் பொருட்களை மனதிலேயே சிந்தித்து, சமர்ப்பித்து மானஸ பூஜையை செய்தால், பரமாத்மன் அதனை ஸ்வீகரித்து, நாம் இதுவரை எங்கும் காணாத புதிதான அதிஅற்புதமான நறுமணம் மற்றும் சுவையைக் கொண்ட பழங்களை, கங்கையில் நீர்த்துளிகளை எண்ணினால் எவ்வளவு வருமோ அவ்வளவு, அதாவது அபரிமிதமான அளவிற்குக் கொடுத்து, நம்மை அனைத்து காலங்களிலும் மகிழ்ச்சிப்படுத்துவான். தன் ஆனந்தாதி குணங்களை மனதில் அடக்கிக்கொண்டு தியானம் செய்பவர்களின் பாவங்களை போக்குகிறான். ஸ்வயம் தானும் எப்போதும் பாவங்கள் (தோஷங்கள்) அற்றவன் என்னும் பெயரைப் பெற்றிருக்கிறான் என்பது பொருள்.
சிறப்புப் பொருள்:
’மனதொளகெ சுந்தர பதார்த்தவ நெனெது கொடெ’, ‘சஞ்சிந்தயேத் பகவதச்சரணாரவிந்தம் வஜ்ராங்குச த்வஜசரோருஹ ராஞ்சனாட்யம்’, ‘த்யாயேத்தரின்மணி நிபம் ஜகதேகவந்த்யம்’, ‘த்யேயஸ்ஸதா சவித்ருமண்டல மத்யவர்த்தி’ - ஆகிய ஸ்தோத்திரங்களால், எந்த ரூபியான பகவந்தனை தான் (பகவந்தன்) ஆராதிக்க வேண்டுமென்று ஆசை உண்டாகிறதோ, அந்த ரூபத்தை மனதில் நினைத்து, தியான ஆவாஹனாதிகளால், மானசிகமான பதார்த்தங்களால் பூஜிக்கவேண்டும். அல்லது தனது உபாஸ்ய மூர்த்தியான ராம கிருஷ்ணாதிகளை, தன் பிம்பமூர்த்தியான பரமாத்மனில் ஐக்கிய சிந்தனை செய்து, அந்த ரூபத்தை பாதம் முதல் சிரம் வரைக்கும் நினைத்து, மனதிலேயே மண்டபங்களை, பக்ஷ்ய போஜ்யாதி உபகரணங்களை சிந்தித்து, துளசி, புஷ்பங்களை மனதில் நினைத்து, கந்த புஷ்ப நைவேத்தியங்களால், மனதிலேயே பூஜிக்கவேண்டும். இந்த விஷயம் தந்த்ரசாரத்தின்படி சொல்லப்பட்ட பூஜாவிதிகளில் இப்படியாக சொல்லப்பட்டிருக்கிறது.
ஸௌவர்ணை: ஸ்தாலிவர்ணை: மணிகண ரசிதை: கோக்ருதா சுபக்வா
பக்ஷ்யான் போஜ்யான்ஸ்ச லேஹ்யானபி பரமஹசோஷ்யமன்னம் நிதாய
நானாஷாகைருபேதந்ததிமது சு க்ருதம் க்ஷீர பானீய யுக்தம்
தாம்பூலஞ்சாபி விஷ்ணோ: ப்ரதி திவஸமஹம் மானஸே சிந்தயாமி ||
வீட்டில் தேவரபூஜை செய்யும்போது அனைவரும் இந்த ஸ்லோகத்தை சொல்வதுண்டு. ஆனால் நாம் மனதை வேறொரு இடத்தில் வைத்துவிட்டு, வாயில் ஸ்லோகத்தைமட்டும் சொல்லிவிட்டால் அது பலன்களைத் தருவதில்லை. பசிக்கிறது. சீக்கிரம் சாப்பிடவேண்டும் என்று சொன்ன மாத்திரத்திலேயே வயிறு நிரம்பிவிடுகிறதா? சாப்பாட்டை சாப்பிட்டே ஆகவேண்டும். நான் சாப்பிடப் போகிறேன் என்று மட்டும் சொன்னால் நிரம்பாத வயிறு, சாப்பிட்டபிறகுதான் நிரம்புகிறது. அதைப்போலவே இந்த ஸ்லோகமும் மனப்பாடமாக தெரிந்தாலும் தெரியாவிட்டாலும், அதில் சொல்லியிருப்பதைப் போல, மனதினை பரமாத்மனின் பாதாரவிந்தங்களில் வைத்து, தியானத்தில் இருந்து, அந்த பதார்த்தங்களை நினைக்கவேண்டும்.
அது ஏனென்றால்: நவரத்னங்களாலான தங்கத் தட்டு, கிண்ணங்களில், உத்தமனான பசுவின் நெய்யால் செய்ப்பட்ட பக்ஷ்ய போஜ்யங்களை, சாம்பார், ரசம், கூட்டு, பால், தயிர், நெய், தேன் ஆகியவற்றை வைத்திருக்கிறேன் என்று மனதால் அந்த பாத்திரங்களில் இந்த பதார்த்தங்களை வைத்திருப்பதாக நினைக்கவேண்டும். நாம் கண்களை மூடிக்கொண்டு அப்படி அவற்றை சிந்திக்கும்போது, அந்த பாத்திர பதார்த்தங்கள் அப்படியே நம் திருஷ்டிக்கு தென்படவேண்டும். அதாவது, ஒரு கிண்ணத்தில் நாம் நெய் வைத்திருக்கிறோம் என்று நினைக்கவேண்டுமெனில் அந்த பாத்திரத்தை, பதார்த்தத்தை அப்படியே நினைக்கவேண்டும். இப்படி சிந்திப்போம். ஒரு கிலோ அளவிற்கு உள்ள ஒரு பாத்திரம் எப்படி இருக்கவேண்டும் என்பதை நாம் மனதில் நினைத்தால் அது அப்படியே நம் கண்களுக்குத் தெரியவேண்டும். தங்கத்தால் செய்யப்பட்ட அந்த கிண்ணத்தில், வைரத்தால் இழைக்கப்பட்டால் எப்படி இருக்கும் என்று எண்ணி, அதையே நம் மனதில் நினைக்கவேண்டும். அதில் நெய் ஊற்றினால் எப்படி இருக்கும் என்பதை நினைக்கவேண்டும். இப்படியே சிரோடி முதலான பக்ஷ்ய போஜ்யாதிகளை, அதன் உருவங்களை அந்த பாத்திரங்களில் சிந்தித்து, ஒவ்வொரு பதார்த்தத்தையும் தனித்தனியாக பரிமாறுவதைப் போல, பரமாத்மனுக்கு சமர்ப்பிக்க வேண்டும். பிறகு தாம்பூலங்களை சிந்திக்க வேண்டும். இப்படியே தினந்தோறும் செய்யவேண்டும் என்பதே அந்த ஸ்லோகத்தின் அர்த்தம்.
இப்படியாக சிந்திக்க வேண்டுமே தவிர, வெறும் ஸ்லோகத்தை சொல்லிவிட்டால் எந்தவித பிரயோஜமும் இல்லை. வெளிப்புற பூஜாதி ஆடம்பரத்தைவிட மானசிக பூஜைக்கு பலன் அதிகம் என்பதே தாசராயர் அபிப்பிராயம். அதற்காக வெளியே செய்யும் பூஜையை விட்டுவிட வேண்டும் என்பது அர்த்தமல்ல. வெளிப்புற பூஜையை செய்தாலும், மானசிகமான பக்தி இல்லையேல், பிரயோஜனம் இல்லை. மானசிகமான பதார்த்தங்களை சிந்தித்து பூஜையை செய்வதால், கங்கையில் இருக்கும் நீர்த்துளிகள் எப்படி அளவுக்கதிகமாக இருக்கிறதோ, அதைப்போல (அவ்வளவு அதிகமாக) பரமாத்மனின் அருளால் இஹபரங்களில் சுகம் கிடைக்கிறது.
இதற்கு உதாரணமாக, த்ருவ, பிரகலாதர்களின் கதையை பார்க்கலாம். த்ருவன் தவம் செய்யும்போது எந்த பிரதிமைகளை பூஜித்தான்? பக்ஷ்ய போஜ்யாதி எந்த பதார்த்தங்களை அவன் சமர்ப்பித்தான்? மானசிக சங்கல்பத்தினாலேயே இஹ பரங்களில் பரம சுகங்களை அவன் பெறவில்லையா? பிரகலாதனும் இப்படியே செய்து பரமானந்தத்தைப் பெற்றான்.
இப்படி பலர் பகவந்தனை மனதில் சிந்தித்து, தன்யர் ஆகியிருக்கின்றனர். சுகாசார்யர் முதலான அனேக ஞானிகள், தத்தம் தகுதிக்கேற்ப பரமாத்மனின் குணங்களை போற்றி வந்தனர். புரந்தரதாசர், விஜயதாசர் ஆகியோர் பரமாத்மனின் குணங்களை மனதார நினைத்தவர்களே. ஆகையால், பரமாத்மன் அவர்களின் பாவங்களைப் போக்கினான். இல்லையேல், அவர்கள் முக்தியை அடைந்தது எப்படி? இப்படிப்பட்ட விஷயங்களையே இந்த பத்யத்தில் தாசராயர் சொல்லியிருக்கிறார்.
No comments:
Post a Comment