#14 - கருணா சந்தி
ஜனனியு = தாயானவள்
பாலகன = குழந்தையின்
கலபாஷெ = மழலைப் பேச்சினை
கேளி = கேட்டு
லகுமி லோல = லட்சுமிபதியான பரமாத்மன்
பகுதரு மாடுதிஹ = பக்தர்கள் செய்யும்
சம்ஸ்துதிகெ = சொல்லும் ஸ்தோத்திரங்களுக்கு / செய்யும் பூஜைகளுக்கு
ஹிக்குவனு = மகிழ்வான்
சுகபடுவந்தெ = மகிழ்ச்சி அடைவதைப் போல
தன்னவரல்லி = தன் பக்தர்களில்
ஹேளனவ = அவமானங்களை / திட்டுதல்களை
தாள = சகித்துக்கொள்ள
ஹெத்தெய்வ = தேவோத்தமன்
விதுரன ஆலயதி = விதுரனின் வீட்டில்
பாலுண்டு = உணவு உண்டு
குருபன = குருகுலபதியான துரியோதனனின் (அல்லது) திருதராஷ்டிரனின்
மானவெ = மானத்தை
கொண்ட = கொண்டான் (வாங்கினான்).
***
பா3லக1ன க1லபா4ஷெ ஜனனியு
கே1ளி சுக2படு3வந்தெ லகுமி
லோல ப4குத1ரு மாடு3திஹ ஸம்ஸ்துதிகெ3 ஹிக்3கு3வனு |
தாள தன்னவரல்லி மாடு3வ
ஹேளனவ ஹெத்தை3ய்வ விது3ரன
ஆலயதி3 பாலுண்டு3 கு3ருபன மானவனெ கொண்ட3 ||14ஜனனியு = தாயானவள்
பாலகன = குழந்தையின்
கலபாஷெ = மழலைப் பேச்சினை
கேளி = கேட்டு
லகுமி லோல = லட்சுமிபதியான பரமாத்மன்
பகுதரு மாடுதிஹ = பக்தர்கள் செய்யும்
சம்ஸ்துதிகெ = சொல்லும் ஸ்தோத்திரங்களுக்கு / செய்யும் பூஜைகளுக்கு
ஹிக்குவனு = மகிழ்வான்
சுகபடுவந்தெ = மகிழ்ச்சி அடைவதைப் போல
தன்னவரல்லி = தன் பக்தர்களில்
ஹேளனவ = அவமானங்களை / திட்டுதல்களை
தாள = சகித்துக்கொள்ள
ஹெத்தெய்வ = தேவோத்தமன்
விதுரன ஆலயதி = விதுரனின் வீட்டில்
பாலுண்டு = உணவு உண்டு
குருபன = குருகுலபதியான துரியோதனனின் (அல்லது) திருதராஷ்டிரனின்
மானவெ = மானத்தை
கொண்ட = கொண்டான் (வாங்கினான்).
பொருள்:
தன் குழந்தையின் மழலைப் பேச்சினைக் கேட்டு தாயானவள் மகிழ்ச்சியடைவதைப் போல, லட்சுமிவல்லபவன் தன் பக்தர்கள் செய்யும் மிகச்சிறிய ஸ்துதிகளைக் கேட்டு மகிழ்கிறான். தன் பக்தர்களை யாராவது அவமானம் செய்தால், அதைக்கண்டு சகிக்க மாட்டான். ஆகையால், பாண்டவர்களுக்கு அவமானம் செய்த துரியோதனனின் (திருதராஷ்டிரனின்) வீட்டில் உண்ணாமல், விதுரனின் வீட்டில் உணவை உண்டு துரியோதனனுக்கு அவமானம் செய்தான்.
சிறப்புப் பொருள்:
’லகுமிலோல’ என்னும் சொல், பரமாத்மனின் உன்னத பதவியைக் குறிக்கிறது. எவரின் மகிமைகளை ரமாபிரம்மாதிகள் முழுமையாக அறிந்து ஸ்தோத்திரம் செய்ய முடியாததாக இருக்கிறதோ, அத்தகைய மகிமைகளைக் கொண்டவன் என்னும் அர்த்தத்தைக் கொடுக்கிறது இந்த சொல். இத்தகைய மகிமைகளைக் கொண்டிருந்தாலும், சாமான்யரான பக்தர்கள் செய்யும் அல்ப ஸ்தோத்திரங்களாலேயே மகிழ்ச்சியடைகிறான் ஸ்ரீபரமாத்மன். சிறு குழந்தைகள் பேசும் மழலைப் பேச்சுகளுக்கு, தாயானவள் மிகவும் சந்தோஷப்படுகிறாள். தாய்க்கு குழந்தையிடம் இருக்கும் பிரியமே அதற்குக் காரணம். அதேபோல, பரமாத்மனுக்கு பக்தர்களிடம் இருக்கும் பிரியத்தை இந்த உவமை விளக்குகிறது. ஹிரண்யகசிபுவின் சம்ஹாரத்திற்குப் பிறகு, பிரம்மதேவர் கேட்டுக் கொண்டதைப் போல, பிரகலாதன் நரசிம்ம ரூபி பரமாத்மனிடம் வந்து ஸ்தோத்திரம் செய்துகொண்டிருந்தபோது, பரமாத்மன் மிகவும் மகிழ்ச்சியுடன் அதைக் கேட்டு, இவ்வாறு கூறினார்.
பிரஹ்லாத பத்ர பத்ரந்தெ ப்ரீதோஹந்தேsஸுரோத்தம |
ய ஏதத்கீர்த்தயேன்மஹ்யம் த்வயா கீதமிதம் நர: ||
த்வாஞ்சமாஞ்ச ஸ்மரன்காலே கர்மபந்தாத்விமுச்யதே ||
’ஹே மங்களஸ்வரூபனான, தைத்யர்களில் ஸ்ரேஷ்டனான பிரகலாதனே, நீ செய்த ஸ்தோத்திரத்திற்கு நான் மிகவும் மகிழ்ந்தேன். நீ செய்த இந்த ஸ்தோத்திரத்தை யார் படிக்கின்றரோ, யார் என்னையும், உன்னையும் காலையில் நினைக்கின்றரோ, அத்தகையவர்களை கர்ம பந்தனங்களிலிருந்து நான் விடுவிக்கிறேன்’ என்று பரமாத்மன் கூறினார்.
இப்படியே கஜேந்திரன் செய்த அனைத்து ஸ்தோத்திரங்களையும் கேட்டு மகிழ்ச்சியடைந்தான் பரமாத்மன். சித்ரகேது ராஜா, த்ருவ, அதிதி ஆகியோர் பரமாத்மனை துதித்தபோது, அவன் அவர்கள் முன் நின்று அவற்றைக் கேட்டு மகிழ்ச்சியடைந்து அவர்களுக்கு வரங்களைக் கொடுத்தான் என்பதை பக்தர்களின் சரித்திரங்களிலிருந்து படிக்கிறோம். அதனாலேயே ‘பக்தரு மாடுதிஹ சம்ஸ்துதிகெ ஹிக்குவனு’ என்று தாசராயர் கூறுகிறார்.
‘தாள தன்னவரல்லி மாடுவ ஹேளனவ’ ஸ்ரீகிருஷ்ணன் பாண்டவர்களின் தூதனாக துரியோதனனிடம் வந்தபோது, துரியோதனன் உணவை தயார் செய்து, ஸ்ரீகிருஷ்ணனை உணவு உண்ண அழைத்தபோது, ஸ்ரீகிருஷ்ணன், ’நான் உன் வீட்டில் உணவு உண்பதில்லை’ என்றான். அதற்கான காரணம் கேட்டபோது - ‘த்விஷதன்னம் நபோக்தவ்யம் த்விஷந்தம் நைவ போஜயேத்’. த்வேஷிகளின் வீட்டில் உணவு உண்ணக்கூடாது. த்வேஷிகளை தன் வீட்டிற்கு அழைக்கவும்கூடாது என்னும் நீதி சாஸ்திரம் உண்டு. ஆகையால், உன் வீட்டில் நான் உணவு உண்ண மாட்டேன் - என்றான். அதற்கு துரியோதனன் - ‘எனக்கும் உனக்கும் விரோதம் இல்லை. அப்படியிருக்கையில், என் வீட்டில் சாப்பிடாமல் இருக்க என்ன காரணம்?’ என்று கேட்க, ஸ்ரீகிருஷ்ணன் ‘பாண்டர்வா த்விஷஸே ராஜ்ய மம ப்ராணாஹி பாண்டவா:’ - ‘நீ பாண்டவர்களிடம் த்வேஷத்தை காட்டுகிறாய். பாண்டவர்கள் என் உயிருக்கு நிகரானவர்கள். ஆகையால், எனக்கும் நீ த்வேஷியே. ‘யர்ஸ்தா த்வேஷி சமாம் த்வேஷியஸ்தானனு சமாமனு’ யார் அவர்களிடம் த்வேஷம் காட்டுவார்களோ, அவர்கள் எனக்கு த்வேஷிகளே. யார் அவர்களிடம் நட்பு பாராட்டுகிறார்களோ, அவர்கள் என்னிடமும் நட்பு பாராட்டுவார்கள் என்று தெரிந்துகொள்’ என்றான். ஆகையால் ‘தாள தன்னவரல்லி மாடுவ ஹேளனவ’ என்கிறார் தாசராயர்.
விதுரன மனெயலி பாலுண்டு - இந்த வாக்கியத்தால் விதுரனின் வீட்டில் பால் மட்டும் குடித்தான் என்று தாசராயர் சொல்வது போல இருக்கிறது. அப்படி நினைத்தால், அது பாரதத்தின் வாக்கியத்திற்கு விரோதமாகும். பாரதத்தின் உத்யோக பர்வத்தில் :
தத:க்ஷணத்தான்னபானானி ஷுசீனி குணவந்திச |
உபாஹரதனேகானி கேஷவாய மஹாத்மனே |
தைஸ்தர்பயித்வா ப்ரதமம் பிராம்மணான்மதுசூதன: |
ததோனுயாயிபி: சார்த்தம் மருத்பிரிவவாஸவ: |
விதுரான்னானி புபுஜே ஷுசீனி குணவந்திச||
இதன் பொருள்:
ஸ்ரீகிருஷ்ணனுக்காக தயார் செய்த, ருசிகரமான, அற்புதமான உணவுகளை விதுரன் ஸ்ரீகிருஷ்ணனுக்கு படைத்தான். ஸ்ரீகிருஷ்ணன் முதலில் பிராமணர்களுக்கு உணவளித்து, பின் அந்த ருசிகரமான உணவினை ஸ்ரீகிருஷ்ணன் உண்டான். அப்படியெனில், தாசராயர் சொன்னதற்கு என்ன அர்த்தம்? என்றால், தாசராயர் சொன்ன ‘பாலு’ என்னும் சொல்லுக்கு சுவையான அல்லது தூய்மையான என்று அர்த்தம் கொள்ளவேண்டும். சுவையான என்று பொருள். தாசராயர் ‘உண்டனு’ என்று சொன்னதால், அது உணவை உண்டான் என்றே குறிக்கும். இல்லையேல் பால் ‘குடிதனு’ என்று அவர் சொல்லியிருக்க வேண்டும். உண்டனு என்பது பொதுவாக உணவை உண்பதற்கே பயன்படுத்தப்படுகிறதே தவிர, பால் உண்டனு என்று நாம் சொல்வதில்லை. இதிலிருந்து பாரத வாக்கியங்களுக்கும் நிர்ணய வாக்கியத்திற்கும் வேறுபாடு வருவதில்லை. இப்படியாக விதுரனின் வீட்டில் உணவை உண்டு, திருதராஷ்டிரனின் அல்லது துரியோதனின் மானத்தை அழித்தான் (வாங்கினான்) என்றதால், அவர்களை நிராகரித்து விதுரனின் வீட்டுக்கு வந்தது அவர்களுக்கு அவமானமானது என்று சொல்வதாக அறியலாம்.
No comments:
Post a Comment