ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Saturday, March 28, 2020

#20 - வியாப்தி சந்தி

#20 - வியாப்தி சந்தி

தே3வ மானவ தா3னவரு யெ
ந்தீ3வத3தி3 ஆவாக3 இப்ப1ரு
மூவரொளகி3வகி3ல்ல ஸ்னோஹோதா3ஸீன த்3வேஷ |
ஜீவ ரதி4காரானுசாரத
லீவ சுக2 சம்சார து3க்கவ
தானுணதெ அவரவரிகு3ணிசுவ நிர்க3தாஷனனு ||20

தேவமானவ தானவரு = தேவதைகள், மனிதர்கள் மற்றும் தைத்யர்கள்
எந்து ஈ விததலி = இந்த விதமாக 
இப்பரு = இருக்கிறார்கள்
மூவரொளு = இந்த மூன்று வகையானவர்களில்
இவகெ = இந்த பரமாத்மனுக்கு
ஸ்னேஹ = தேவதைகளில் நட்பாகட்டும்
உதாசீன = மனிதர்களில் உதாசீனமாகட்டும்
த்வேஷா = தானவர்களில் த்வேஷம் ஆகட்டும், இல்லை
ஜீவர = த்ரிவித ஜீவர்களின்
அதிகாரானுசாரதலி = யோக்யதைக்கேற்ப
சுக = தேவதைகளுக்கு சுகங்களை
சம்சார = மனிதர்களுக்கு கலவையான சுக துக்கங்களை
துக்கவ = தைத்யர்களுக்கு நித்ய துக்கத்தை
தா = தான்
உணதலெ = கொடுக்காமல்
அவரவரிகெ = அவரவர்களுக்கு
உணிசுவ = கொடுக்கிறான்
நிர்கத = இல்லாமல்
அஷனனு = ஆகாரம் உள்ளவன்

த்ரிவிதா ஜீவஸங்காஸ்து தேவமானுஷ தானவா: |
தத்ர தேவாமுக்தி யோக்யா: மானுஷேஷோத்தமஸ்ததா ||
மத்யமா மானுஷாயேது ஸ்ருதியோக்யாஸ்ததைவஹி |
அதமா நிரயான்யைவ தானவாஸ்து தமோலயா: ||
முக்திர்னித்யா தமஸ்சைவ நாவ்ருத்தி: புர்னரேதயோ: ||
தேவானாம் நிரயோனாஸ்தி தமஸ்சாபி கதஞ்சன: |
நாசுராணாம் ததா முக்தி: கதாசித்கேனசித்க்வசித் ||
மானுஷாணாம் மத்யமானாம் நசைதத்வ்யமவாப்யதே ||
(மகாபாரத தாத்பர்ய நிர்ணயம் 1-86-89)

ஜீவராசிகளில் தேவதைகள் என்றும், மனிதர்கள் என்றும், அசுரர்கள் என்றும் மூன்று வகைகள் உள்ளன. இதில் தேவதைகள் அனைவரும் மனுஷோத்தமர்கள் முக்தி யோக்யர்கள் ஆவர். மனிதர்களில் மத்யமர் எப்போதும் நித்ய சம்சாரிகள். மனிதர்களில் அதமர் நரகத்தை அனுபவிப்பவர்கள் ஆவர். தானவர்கள் அனைவரும் தமோயோக்யர்கள் ஆவர். இதில் முக்திக்கு சென்றவர்களுக்கும், தமஸ்ஸிற்கு சென்றவர்களுக்கும் மறுபிறவி இல்லை. தேவதைகளுக்கு நரகமோ, தமஸ்ஸோ என்றும் இல்லை. அசுரர்களுக்கு, எந்த சாதனைகளை செய்தாலும், எந்த காலத்திலும் முக்தி கிடையாது. மனிதர்களில் மத்யமர்களுக்கு முக்தியோ, தமஸ்ஸோ கிடையாது. இந்த அபிப்பிராயத்தையே தாசராயர் இந்த பத்யத்தில் சொல்லியிருக்கிறார். 

இப்படி தேவ மனித தானவ என்னும் மூன்று வித ஜீவராசிகளில், தேவதைகளில் பரமாத்மனுக்கு நட்போ, மனிதர்களில் உதாசீனமோ, தானவர்களில் த்வேஷமோ இல்லை. அனைவரையும் சமமாகவே பாவிக்கிறான். அப்படியெனில் ‘இந்த்ரஸ்யார்த்தெ கதம் தைத்யானவதீத்விஷமோயதா’ என்னும் பாகவத 7ம் ஸ்கந்தத்தில் பரமாத்மன் அனைவருக்கும் சமமானவன். அன்பானவன். இப்படியிருக்கையில், இந்திரன் மேல் இருக்கும் அன்பினால், தைத்யர்களைக் கொன்றது எதற்காக? என்று பரிக்‌ஷித் ராஜன் கேட்க, சுகாசார்யர் இப்படியாக அதற்கு பதில் சொல்கிறார். 

தேஷகால குணாம்ஸ்சைவ பக்தாதீனப்யவேக்‌ஷ்யது |
யோக்யதாஞ்ச ததா கர்ம சம இத்யபிதீயதே ||

என்னும் பாகவத தாத்பர்யத்தின் வசனத்தின்படி, தேச, கால, குணங்கள் ஆகியன, அவரவர்களின் கர்ம, யோக்யதை, இவற்றை அனுசரித்து அவரவர் செய்யும் பக்தி த்வேஷாதிகளுக்கேற்ப பலன்களைக் கொடுப்பதற்கு சமம் என்று பெயர். பக்தி செய்பவருக்கும், த்வேஷம் செய்பவருக்கும் ஒரே பலன்களைக் கொடுப்பதற்கு சமம் என்று பெயரில்லை என்கிறார். ஆகையால், பஜிப்பவர்க்கு அவர்களது பக்திக்கு தக்கவாறு பலன்களை, த்வேஷிப்பவர்க்கு அவர்களது த்வேஷத்திற்குத் தக்கவாறு பலன்களை கொடுப்பதற்கு சமம் என்று பெயர். 

தேவதைகள் பரமாத்மனை ஆராதனை செய்வதால் அவர்களுக்கு சுகங்களைக் கொடுக்கிறான். தைத்யர்கள் த்வேஷம் செய்வதால், அவர்களுக்கு துக்க பலன்களைக் கொடுக்கிறான் என்று அர்த்தம். இதையே இன்னும் விளக்கமாக சொல்கிறார். 

த்ரிவித ஜீவர்களின் அதிகாரத்திற்கேற்ப, தேவதைகளுக்கும் மனுஷ்யோத்தமர்களுக்கும், நித்ய சுகமயமான முக்தியையும், மானவ மத்யமர்களுக்கு நித்ய சம்சாரிக உலகத்தையும், தானவர்களுக்கு நித்ய துக்கமயமான தமஸ்ஸினையும் கொடுத்து, அதை அவர்கள் ஏற்குமாறு செய்கிறார். ஆகாரங்களை ஏற்காத பரமாத்மன், த்ரிவித ஜீவர்களிலும் இருந்து, அவர்களுக்கு சம்பந்தப்படாமல், சுகதுக்கங்களின் சம்பந்தம் இல்லாதிருக்கிறான். 


ஆனால், இதே சந்தியில் முன்னர் ‘தோதகனு தானாகி’ என்னும் பத்யத்தில் ‘கரணதொளித்து விஷயவனைதுவனு திளியதவனோபாதி புஞ்சிஸுத’ ஆகிய பத்யங்களில், பரமாத்மன் ஜீவர்களில் இருந்து சுகங்களை அனுபவிக்கிறான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் இங்கு பரஸ்பரம் வேறுபாடு வரவில்லையா? என்றால் அதற்கான தீர்வு பின்வருமாறு. ஜீவர்கள் தம் கர்மங்களை செய்தவாறு புண்ய சாதனங்களை செய்திருக்கும்போது, தம்முடைய சஞ்சித புண்ணியங்களை அனுபவிக்கின்றனர். அந்த ஜீவர்களுக்காக தானும் அந்த சுகங்களை பரமாத்மன் அனுபவிக்கிறான் என்பது முன்னர் பார்த்த பத்யத்தின் அபிப்பிராயம். இந்த பத்யத்தில், முக்தர் ஆனபிறகு, சுகமயமான ஸ்வரூபமுள்ள ஜீவர்களுக்கு சுகங்களைக் கொடுப்பது மட்டுமல்லாமல், தான் அதை ஏற்றுக்கொள்வதில்லை என்கிறார். இதனால் இதில் வேறுபாடு எதுவும் இல்லை என்று அறியவேண்டும். 

***


Friday, March 27, 2020

#19 - வியாப்தி சந்தி

#19 - வியாப்தி சந்தி

அணு மஹத்தினொளிப்ப க4ன பர
மணு வினொளக3டகி3சுவ சூக்‌ஷ்மவ
முணுகி3சுவ தே1லிசுவ ஸ்தூ2லக3ளிவன மாயவிது3 |
3னுஜ ரக்க1ரெல்ல ரிவனொளு
முனிது3 மாடுவதே3னுலூக2
வனிகெ13ளு தா4ன்யகள ஹணிவந்ததலி சம்ஹரிப ||19

அணு = மிகவும் சிறிய பொருட்களில் அதைவிட சிறியதாகவும்
மஹத்தினொளு = மிகப்பெரிய பொருட்களில் அதைவிட பெரியதாகவும், அதில் அந்த பொருட்களின் உருவமாகவும்
இப்ப = இருக்கிறான்
கன = பெரிய பொருட்களை
பரமணுவினொளகெ = மிகச்சிறிய பொருட்களின் உள்ளே
அடகிஸுவ = அடங்கியிருக்கிறான்
சூக்‌ஷ்மவ = மிகச்சிறிய பொருட்களை
முணுகிசுவ = நீரில் மூழ்கடிக்கும்
ஸ்தூலகள = மிகப்பெரிய பொருட்களை
தேலிசுவ = மிதக்க வைக்கும்
இது = இந்த அபாரமான சக்தி
அவன = ஸ்ரீபரமாத்மனின்
தனுஜரக்கஸரெல்லரு = தைத்ய அசுரர்கள் அனைவரும் சேர்ந்து
இவனொளு = இந்த பரமாத்மனில்
முனிது = த்வேஷம் செய்து ஆவதென்ன?
உலூகவனிகெகளு = மிகப்பெரிய பாத்திரங்கள்
தான்யகள = அரிசி முதலான தானியங்களை
ஹணிவந்ததலி = உமியைப் பிரித்து தானியங்களை மட்டும் வைத்துக் கொள்வதைப் போல
சம்ஹரிப = தேகங்களை அழித்து, ஜீவர்களை மட்டும் வைத்துக் கொள்கிறான்.

மிகச்சிறந்த சக்தி பரமாத்மனுடையது என்றும், ஜீவனுக்கும் பரமாத்மனுக்கும் எப்போதும் பேதம் இருக்கிறது என்றும் இந்த பத்யத்தில் தாசராயர் சொல்லியவாறு, ஜீவ பரமாத்மனின் பேதத்தை தெரிவிக்கும் வேத அர்த்தங்களை இங்கு விவரிக்கிறார். 

பரமாத்மன் மிகச்சிறந்த சக்தி உடையவன். எப்படியெனில்: ‘அணோரணீயான் மஹதோ மஹீயான்’ என்னும் வேத மந்திரத்தில் சொல்லப்பட்டிருப்பதைப் போல, மிகவும் சிறிய பொருட்களில் அதைவிட சிறியதாகவும், மிகப்பெரிய பொருட்களில் அதைவிட பெரியதாகவும் இருந்து அதை காக்கிறான். பாகவத 3ம் ஸ்கந்தத்தில் இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது. 

சரமஸ்து விஷேஷாணா மனோகாஸம்யுதஸ்யுய: |
பரமாணு: ஸவிக்ஞே யோன்ருணா மைக்யப்ரமோயத: ||
ஸதஏவபதார்த்தஸ்ய ஸ்வரூபாவஸ்திதஸ்யயத் |
கைவல்யம் பரம மஹானவிசேஷோ நிரந்தர: ||

இதன் பொருள் என்னவெனில்: ஏதேனும் ஒரு பொருளை, உதாரணத்திற்கு ஒரு தலைமுடியை முடியும்வரைக்கும் பிரித்து, அதை துண்டு துண்டாக வெட்டி, அதைவிட சிறியதாக முடி இருக்கமுடியாது என்று ஆக்கியபிறகு, அதையே பரமாணு என்று சொல்லலாம். அத்தகைய பரமாணு வஸ்துவில் அதைவிட சிறியதாக பரமாத்மன் இருக்கிறான். அவ்வளவு சூக்‌ஷ்ம ரூபியானாலும், ஸ்ரீபரமாத்மன், சங்கு சக்கர கதா பத்மங்களை நான்கு கரங்களிலும் ஏந்தியும், பீதாம்பரதாரியாகவும், கிரீட குண்டலங்களை தரித்தும், ஸ்ரீலட்சுமிதேவியின் இருப்பிடமான ஸ்ரீவத்ஸங்களுடனும், கௌஸ்துபாபரணத்துடனும், வனமாலையை தரித்திருக்கிறான். ஸ்ரீலட்சுமிதேவி அந்த பரமத்மனின் வக்‌ஷஸ்தலத்தில் நிலைத்திருக்கிறாள். ஸ்ரீலட்சுமிதேவி பரமாணுரூபியான பரமாத்மனின் வக்‌ஷஸ்தலத்தில் மிகவும் சூக்‌ஷ்ம ரூபத்தில் இருக்கிறாள் என்றால், பரமாத்மனைவிட சிறிய ரூபமாக லட்சுமிதேவிக்கு சொல்லவேண்டுமே தவிர, பரமாத்மனுக்கு எப்படி சொல்லலாம் என்றால்; பரமாத்மன் தன் விருப்பத்தின்படியே லட்சுமிதேவிக்கு இத்தகைய சூக்‌ஷ்ம ரூபத்தைக் கொடுத்து, தன் வக்‌ஷஸ்தலத்தில் வைத்துக்கொண்டிருக்கிறான் ஆகையால், அதுவே பரமாத்மனின் சாமர்த்தியம் ஆகையால், அ-ஸ்வதந்த்ரளான லட்சுமிதேவியை அணுரூபி என்று சொல்ல முடியாது என்று அறியவேண்டும். 

இதைப் போலவே, அனைத்தையும்விட மிகப்பெரியதான பொருட்களைவிட, பெரியதாக, அந்த பெரிய பொருட்களை தன்னில் அடக்கிக்கொண்டு, தானே அனைத்தையும்விட பெரியவன் என்று சொல்லி, அதனால் கைவல்யன் என்று பெயர் பெறுகிறான். அவனைவிட பெரியதான பொருள் வேறெதுவும் இல்லை என்று அர்த்தம். இதே அர்த்தத்தையே தாசராயர் இங்கு சொல்லியிருக்கிறார். 

மேலும், மிகப்பெரிய பொருட்களை பரமாணுவில் அடக்குகிறான். பிரளய காலத்தில், ஆலயிலையில் ஒரு குழந்தையைப் போல படுத்திருக்கும்போது, மார்க்கண்டேயர் அக்குழந்தையின் மூக்கு துவாரத்தில் நுழைந்து, பிரம்மாண்டத்தின் அனைத்து வஸ்துகளையும் பார்க்கிறார். கிருஷ்ணாவதாரத்தில், கிருஷ்ணன் மண் தின்றான் என்று நினைத்து, யசோதை அவனை வாய் திறக்கச் சொல்லி கேட்க, அவன் வாயில், மொத்த உலகத்தையும் கண்டு, வியப்படைந்தாள் என்று பாகவதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஸ்ரீபரமாத்மன், பரமாணு வஸ்துகளில் பரமாணுவாக இருந்தாலும், அந்த பரமாத்மனின் வயிற்றில் மிகப்பெரியதான பிரபஞ்சமே அடங்கியிருக்கிறது. ஆகையாலேயே, தாசராயர் ‘கனபரமாணு வினொளகடடிசுவ’ என்கிறார்.

சிறிய பொருட்களை தண்ணீரில் மூழ்கடிக்கிறான். பெரிய பொருட்களை மிதக்க வைக்கிறான். சிறிய பொருட்களான ராகி ஆகியவை தண்ணீரில் மூழ்கிவிடும். பெரியதான கப்பல்கள் மிதக்கின்றன. இவை அனைத்தும் அவனின் மாயை என்றே அறியவேண்டும். தானியங்களை உரலில் போட்டு, உலக்கையால் குத்தினால், உமிகள் பிரிந்து தானியங்கள் மட்டும் எப்படி தனியாக வருகின்றனவோ, அதுபோலவே, பரமாத்மன் தன்னை த்வேஷிக்கும் அசுர ராக்‌ஷசர்களின் தேகங்களை அழித்து, ஜீவர்களை பிரித்தெடுக்கிறான். இதனால், மூன்றுவித ஜீவர்களும் அனாதி காலத்திலிருந்தே பரமாத்மனிடமிருந்து வேறுபட்டிருக்கின்றனர் என்பது தெளிவாகிறது. இந்த விஷயத்தில் பாகவத 10ம் ஸ்கந்தத்தின், ஸ்ருதிகீதா தாத்பர்யத்தில், ஸ்ருதியை உதாரணம் காட்டியிருப்பர். அது எப்படியெனில்:

அபேதமேக மேகோஸ்மி நி:ஷ்ணாடபித்வாகி மூதித்ரய:கரந்தி |
களேன பர்ஷான் ப்ரதிஹன்மிபூரி கிம்மானிந்தந்தெ ஷத்ரவோனிந்த்ரா: ||
(ரிக்வேதம் 8-1-6)

இது ஸ்ரீபரமாத்மனின் வாக்கியம். இந்த உலகம் முழுக்க என்னுடன் போர் புரியவந்தால், நான் மட்டும் அதை எதிர்த்து நிற்பேன். இப்படிப்பட்ட உலகங்கள் இரண்டு என்னுடன் போர் புரிந்தாலும், நானே ஜெயிப்பேன். இத்தகைய உலகங்கள், மூன்று அல்லது அதைவிட அதிகம் ஆகட்டும், என்னை எதுவும் செய்யமுடியாது. உரலில் உலக்கையினால் குத்தி, தானியங்களை பிரித்தெடுப்பதைப் போல, அவர்களின் தேகங்களை நான் பிரித்தெடுக்கிறேன். உமி தனியாக வருவதைப் போல, அவர்களின் ஜீவன்களை பிரிக்கிறேன். அவர்கள் என்னை தூஷிக்கின்றனர்? தோஷங்கள் அற்றவனான என்னை என்ன சொல்லி தூஷிப்பர்? தோஷங்கள் இல்லையென்றாலும், ஏதோ ஒன்றை சொல்லி குற்றம் சாட்டுவர். ஆகையால் ‘அனிந்த்ரா’ சக்தி இல்லாதவர்கள் என்று ஸ்ருதி சொல்கிறது. 


இந்த ஸ்ருதியை, ஸ்ருதிகீதையில் 16வது ஸ்லோக ‘நஹிபரமஸ்ய’ என்னும் ஸ்லோகத்தில் - ‘அபரிமிதா த்ருவாஸ்தனுப்ய தோயதிஸர்வனஹி ஸஷாஷ்யதீதி நிகமோப்ரவ தேசததா’ - என்னும் வாக்கியத்திற்கு ஸ்ரீமதாசார்யர் தாத்பர்யத்தில் உதாரணம் கொடுத்திருக்கிறார். ஜீவர்கள் அனாதி காலத்திலிருந்து, வாயுதேவரின் அதீனத்தில், ஸ்வரூப தேகங்களைக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் அனைவரும் உனக்கு கட்டுப்பட்டவர்களே. தற்போது மேலே சொன்ன ‘அபேதம்’ என்னும் ஸ்ருதியும் இதையே சொல்கிறது. இந்த வாக்கியத்தினாலும், இந்த ஸ்ருதி வாக்கியத்தினாலும், ஜீவர்கள் அனாதி காலத்திலிருந்தும், இருக்கின்றனர். அவர்களின் தேகங்களை மட்டும் நாசம் செய்கிறேன் என்று சொன்னதால், ஜீவர்கள் வேறு பரமாத்மன் வேறு என்று தெரிய வருகிறது. 

***

Thursday, March 26, 2020

#18 - வியாப்தி சந்தி

#18 - வியாப்தி சந்தி

1வி ஹரின்மணி வித்3ருமத1
ச்சவிக3ளந்த3தி3 ராஜிசுத1 மா
4வ நிரந்தர தேவ தானவ மானவரொளித்து |
த்ரிவிதகு3ண கர்ம ஸ்வபா4வவ
பவனமுக தேவாந்தராத்மக1
திவ திவதி வ்யக்த1மாடு31 அவரொளித்து3ணிப1 ||18


பவி = வைரம்
ஹரின்மணி = நீலமணி
வித்ரும = பவளம்
சச்சவிகளந்ததி = மிகச்சிறந்த மணிகளைப் போல
ராஜிஸுவ = ஒளிர்ந்தவாறு
மாதவ = ஸ்ரீரமாபதி
நிரந்தர = எப்போதும்
தேவமானவதானவரொளித்து = தேவதைகளில், மனிதர்களில், தானவர்களில் இருந்து
த்ரிவித = மூன்று விதமான
குண = சத்வ ரஜஸ் தமோ என்னும் குணங்கள்
கர்ம ஸ்வபாவவ = மூன்று வித குணங்களின் ஸ்வபாவமான மூன்று வித கர்மங்களை
பவனமுக தேவாந்தராத்மக = வாயுதேவரில் தொடங்கி அனைத்து தத்வாபிமானி தேவதைகளில் அந்தர்யாமியாக இருந்து
திவசதிவசதி = தினந்தோறும்
வ்யக்திமாடுத = நிலைத்திருந்து
அவரொளித்து = த்ரிவித ஜீவர்களிலும், அந்தந்த தேவதைகளிலும் இருந்து
உணிப = த்ரிவித ஜீவர்களுக்கு சுக துக்கங்களின் கலவையான சுக துக்கங்களைக் கொடுக்கிறான். 

ஸ்ரீபரமாத்மன், சாத்விகர்களுக்கு வைரத்தைப் போல ஒளிபொருந்திய, ராஜசர்களுக்கு கருப்பு சேர்ந்த நீலமணி போலவும், தாமசர்களுக்கு பவளத்தைப் போலவும், இப்படி சிறந்த ஒளியுடன் ஒளிர்ந்தவாறு, தினந்தோறும் சாத்விகரான தேவதைகளிலும், ராஜஸரான மனிதர்களிலும், தாமசர்களான தானவர்களிலும் இருந்து, சாத்விகர்களால் சத்கர்மங்களையும், ராஜசர்களால் இருவித கர்மங்களையும், தாமசர்களால் கெட்ட செயல்களையும், அவரவர்களின் சுபாவத்திற்கேற்ப செய்வித்து, வாயுதேவர் முதலான தத்வாபிமானி தேவதைகளுக்குள் அவரவர் ரூபியாகவே இருந்து, தினந்தோறும் அவரவர்களின் ஸ்வபாவிக கர்மங்களை செய்வித்தவாறு, சாத்விகர்களுக்கு சுகங்களை, ராஜசர்களுக்கு சுகதுக்கங்களின் கலவையையும், தாமசர்களுக்கு துக்கங்களையும் கொடுக்கிறான். (அவர்களின் அனுபவத்திற்குக் கொண்டு வருகிறான்).

இதில், பவி, ஹரின்மணி, வித்ரும என்றால் வைரம், நீலமணி, பவளம் என்னும் மூன்று வர்ணங்களை, சாத்விக, ராஜஸ, தாமஸர்களுக்கு ஒப்பிட்டால், பாகவதாதிகளில் சொல்லப்பட்ட விஷயங்களுக்கு வேறுபாடு வருகிறது. அது எப்படியெனில், பாகவத 10ம் ஸ்கந்தத்தில்: 

ஸத்வந்த்ரிலோகஸ்திதயே ஸ்வமாயயாபிபர்தி ஷுக்லங்கலு வர்ணமாத்மன: |
ஸர்காய ரக்தம் ரஜசோப ப்ரும்ஹிதம் க்ருஷ்ணாந்துவர்ணம் தமஸாஜனாத்யயே ||

என்னும் ஸ்லோகத்தில், உலகத்தை காப்பாற்றுவதற்காக, நீ சத்வ குணத்தை பிரதிபலிக்கும் வெண்மை நிறத்தை ஏற்றாய். ஸ்ருஷ்டி செய்யும் காலத்தில், ரக்த வர்ணத்தை ஏற்றாய். மக்களை அழிக்கும் காலத்தில் தமோ குணத்தை பிரதிபலிக்கும் கருப்பு வர்ணத்தை ஏற்றாய் - என்கிறார். இதிலிருந்து ரஜோ குணரூபம் ரக்த வர்ணம் என்றும், தமோ குணரூபம் கருப்பு வர்ணம் என்றும் தெளிவாகிறது. தாசராயரின் வாக்கியத்திலிருந்து, சாத்விக ரூபம் வைரம் என்றும், ராஜ ரூபம் நீலமணி என்றும், தாமஸ ரூபம் பவள வர்ணம் என்றும் தெரிகிறது. இங்கு சொல்லப்பட்டிருக்கும் நீல வர்ணம் என்பது கருப்பு வர்ணத்திற்கும் பொருந்துகிறது. எப்படியெனில், ஸ்ரீகிருஷ்ணன் சில இடங்களில் கருப்பு வர்ணன் என்றும் சில இடங்களில் நீல வர்ணன் என்றும் வர்ணிக்கப்பட்டிருக்கிறான். சில சமயங்களில் கூந்தலை வர்ணிக்கும்போது ’நீலகுந்தல’ என்று சொல்லியிருப்பதால் கிருஷ்ண வர்ணத்திற்கு நீலம் என்றும் பெயருண்டு என்பது தெளிவாகிறது. 


ஆக, தாசரின் வாக்கியத்திலிருந்து, வெண்மை, கருப்பு, சிவப்பு ஆகிய வர்ணங்களை வரிசையாக சொல்லி, தேவ, மானவ, தானவ என்று சொல்லியிருப்பதால், பாகவதாதி கிரந்தங்களில் சொல்லியிருப்பதற்கு வேறுபாடு தெரிகிறது. ஆகவே இந்த பத்யத்தில் ‘தேவ மானவ தானவ’ என்பதற்கு பதில் ‘தேவ தானவ மானவ’ என்று இருக்கலாம் என்று நினைக்கிறோம். அப்படி இருந்தால், சாத்விக, தாமஸ, ராஜஸ என்னும் வரிசையை வைத்துக்கொண்டால், மேற்சொன்ன பாகவத ஸ்லோகத்திற்கு பொருந்துகிறது. இதே விதமாகவே, உத்தம அதம மத்யம என்று நிர்ணயங்களில் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். 

***

Wednesday, March 25, 2020

#17 - வியாப்தி சந்தி

#17 - வியாப்தி சந்தி

நித்ய நிக3மாதீ11 நிர்கு3
ப்4ருத்1யவத்ஸல ப4யவினாஷன
சத்யகா1ம ஷரண்ய ஷாமல கோ1மலாங்க3 சுகி2 |
மத்த1னந்த3தி3 மர்த்யரொளஹொர
கெ3த்த1னோடலு சுத்து1தி1ப்பனு
அத்யதி41 சந்த்ருப்த1 த்ரிஜகத்1வியாப்த1 பரமாத்ம ||17


நித்ய நிகமாதீத = நித்யமான வேதங்கள் கூட விளக்குவதற்கு சாத்தியமில்லாத குணரூபங்களைக் கொண்டவன்.
நிர்குண = சத்வரஜஸ்தமோ குணங்களுக்குக் கட்டுப்படாதவன்
ப்ருத்யவத்ஸல = பக்தர்களில் அன்பு கொண்டவன்
பயவினாஷன = பக்தர்களின் பயங்களைப் போக்குபவன்
சத்யகாம = உண்மையான விருப்பம் கொண்டவன்
ஷரண்ய = வேண்டுவதற்கு அருகதை கொண்டவன்
ஷாமலகோமலாங்க = கருப்பு வர்ணத்தைக் கொண்ட அழகான தேகத்தைக் கொண்டவன்
சுகி = சுக ஸ்வரூபன்
மத்தனந்ததி = மத்யபானங்களைக் குடித்து, சுயநினைவு இல்லாமல், பயமில்லாமல் சுற்றுபவனைப் போல
மர்த்யர = மனுஷ்யாதி பிராணிகளின்
ஒளஹொரகெ = உள்ளே மற்றும் வெளியே
யித்தனோடலு = எங்கு பார்த்தாலும்
இப்பனு = இருக்கிறான்
அதி = மிகவும்
அதிக = அதிகமாக
சந்த்ருப்த = எப்போதும் திருப்தியாகவே இருக்கிறான்
த்ரிஜகத் வியாப்த = மூன்று உலகங்களிலும் வியாப்தனாக இருக்கிறான்
பரமாப்த = பக்தர்களுக்கு நண்பனானவன்.

ஸ்ரீபரமாத்மன், நித்யமான வேதங்களில் சொல்லப்பட்டிருப்பதைவிட அதிக குணரூபங்களைக் கொண்டவன். சத்யரஜஸ்தமோ என்னும் ப்ராக்ருத குணங்கள் அற்றவன். தன் பக்தர்களில் அதிக அன்பினைக் கொண்டவன். பக்தர்களுக்கு வரும் பயங்களை பரிகரிப்பவன். அவனின் சங்கல்பங்கள் என்றும் வீணாவதில்லை. சரணடைவதற்கு தகுதியுள்ளவன். கருமை நிறத்தவன். அழகான அங்கங்களைக் கொண்டவன். நித்யானந்த ஸ்வரூபன். எப்போதும் திருப்தியுடன் இருப்பவன். மூன்று உலகங்களின் உள்ளேயும் வெளியேயும் வியாப்தனாக இருப்பவன். பக்தர்களுக்கு நட்பானவன். மத்யபானங்களைக் குடித்தவர்கள், எப்படி மெய்மறந்து, சுய நினைவில்லாமல், பயமில்லாமல் சுற்றுவரோ, அதைப்போல, அனைத்து பிராணிகளின் உள்ளே, வெளியே மற்றும் அதன் சுற்றிலும் எங்கு பார்த்தாலும் அங்கு இருப்பவன். சந்திரமுகி என்னும் உதாரணத்தில், சந்திரனின் ஒளியை மட்டும் எப்படி உவமையாக எடுத்துக்கொள்கிறோமோ அப்படி, இங்கு மத்யபான உதாரணத்தில் இருக்கும் பயமில்லாமை என்னும் குணத்தை மட்டும் எடுத்துக் கொள்ளவேண்டும். 

***


Tuesday, March 24, 2020

#16 - வியாப்தி சந்தி

#16 - வியாப்தி சந்தி


தோ131னு தானாகி மனமொத3
லாத31ரணதொளித்து3 விஷயவ
நைது3வனு நிஜபூர்ண சுக2மய க்ராஹ்ய க்ராஹக1னு |
வேத3வேத்3யனு திளியத3வனோ
பா1தி3 பு4ஞ்சிஸுதெ1ல்லரொளகா3
ஹ்லாத33டு3வனு ப4க்தவத்ஸல பா4க்யம்ப1ன்ன ||16

தோதகனு = எதையும் தீர்மானிப்பவன்

தானாகி = தானே ஆன
மனமொதலாத = மனது முதலான
கரணதொளித்து = இந்திரியங்களில் இருந்துகொண்டு
விஷயவனு = விஷய சுகங்களை
ஐதுவனு = (பரமாத்மன் தானே) அவற்றைப் பெறுகிறான்
நிஜபூர்ண சுகமய = பூர்ணானந்த ஸ்வரூபன் (ஆனாலும்)
க்ராஹ்யக்ராஹகனு = கந்த ரஸ முதலான வஸ்துகளில் இருந்து, க்ராஹ்ய என்று பெயர் பெறுகிறான், மூக்கு, நாக்கு ஆகிய இந்திரியங்களில் இருந்து க்ராஹக என்று பெயர் பெறுகிறான். 
பாக்யசம்பன்ன = ஷட்குணைஸ்வர்யங்களைக் கொண்டவனான, பக்தவத்ஸலனான ஸ்ரீபரமாத்மன்
திளியதவனோபாதியலி = ஒன்றும் தெரியாதவனைப் போல
புஞ்சிசுத = அவரவர தேகங்களில் சுகங்களை போகித்தவாறு
எல்லரொளகு = அனைவரின் தேகங்களிலும் இருந்து மகிழ்ச்சியடைகிறான். 

ஸ்ரீபரமாத்மன், மனம் முதலான இந்திரியங்களில் இருந்து, ஜீவர்களுக்கு விஷயாதிகளில் ஆசையை உருவாக்கி செய்யும் செயல்கள் என்ன? 

ஸ்ரீபரமாத்மன், மனம் முதலான இந்திரியங்களில் இருந்து, அதாவது, கண்களில் இருந்து, ரூபங்களை பார்ப்பது, காதுகளில் இருந்து சத்தத்தைக் கேட்பது, மூக்கில் இருந்து வாசனையை ஸ்வாசிப்பது ஆகிய செயல்களை செய்கிறான். நாக்கினில் இருந்து ருசியை ஏற்றுக் கொள்கிறான். தோல் சர்மங்களில் இருந்து, குளிர் வெயில் ஆகியவற்றை உணர்கிறான். மேலும், கண் காது போன்ற இந்திரியங்களின் அபிமானிகளான தேவதைகளில் இருந்து பார்ப்பது, கேட்பது, உண்பது, ஜீர்ணிப்பது, குளிர் வெயில்களை உணர்வது என அந்தந்த செயல்களை செய்கிறான். இதன் பொருள் என்னவெனில்: கண் முதலான அபிமானி தேவதைகளில் இருந்து பார்ப்பதற்கும், கேட்பதற்கும் தீர்மானிக்கிறான். கண் முதலான இந்திரியங்களில் இருந்து ரூப, சப்தங்களை ஏற்றுக்கொள்கிறான் என்று அறியவேண்டும். 

க்ராஹ்ய க்ராஹக என்றால்: கண்களால் பார்க்கத் தகுதியானவை அழகான வஸ்துகள். இதற்கு க்ராஹ்ய என்று பெயர். ரூபங்களை பார்ப்பவை கண் முதலான இந்திரியங்கள். ஸ்ரீபரமாத்மன் தானே க்ராஹ்ய ரூபியாகவும், க்ராஹக ரூபியாகவும் இருக்கிறான். இப்படி, தத்வாபிமானி தேவதைகளில் இருந்து, க்ராஹ்ய வஸ்துகளை ஏற்றுக்கொள்ளுமாறு சொல்லி, இந்திரியங்களில் இருந்து அவற்றை ஏற்றுக்கொண்டு, விஷய சுகங்களை அனுபவிக்கிறான். அவனோ, எப்போதும், பூர்ணானந்த ஸ்வரூபன். ஒருவரில் இருந்து ஆனந்தத்தை ஏற்றுக்கொள்வது அவனுக்கு பெரிய விஷயமில்லை. வேதங்களால் புகழப்படுபவன். ஆறு நற்குணங்களால் நிரம்பியவன். ஆனாலும், ஜீவர்களில் இருந்து, ஒன்றும் தெரியாதவனைப் போல, அந்தந்த தேகங்கள் ஏற்கும் சுகங்களை ஏற்று மகிழ்ச்சியடைகிறான். 

தனக்கு சுக அனுபவங்களின் விருப்பமே இல்லாவிட்டால், ஸ்ரீபரமாத்மன், ஜீவர்களில் இருந்து அந்த சுகங்களை ஏன் அனுபவிக்க வேண்டும்? அதாவது, அவன் பக்தவத்ஸலன் ஆகையால், ஜீவர்களை மேம்படுத்துவதற்காக (உத்தரிப்பதற்காக) தான் அவற்றை ஏற்றுக்கொள்கிறான். பாகவத 7ம் ஸ்கந்தத்தில், இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது. 

நைவாத்மன: ப்ரபுரயம் நிஜலாபபூர்ணோ மானஞ்சனாதவிதுஷ: கருணோவ்ருணீதே |
யத்யஜ்ஜனோ பகவதே விததீதமானம் தச்சாத்மனே ப்ரதிமுகஸ்ய யதாமுகஸ்ரீ: ||

இந்த ஸ்லோகத்தை ஏற்கனவே ஒரு இடத்தில் உதாரணமாகப் பார்த்திருக்கிறோம். ஆனாலும், பேசும் விஷயத்திற்கு சம்பந்தப்பட்டிருப்பதால் மறுபடி இங்கே பார்க்கலாம். ஸ்ரீபரமாத்மனுக்கு தன் விருப்பத்தினாலேயே தனக்கு பூர்ணமான சுகம் இருக்கிறதே தவிர, ரமாதேவியர் மூலமாகக்கூட தனக்கு ஆகவேண்டியது ஒன்றும் இல்லை. அப்படி இருந்தாலும், தகுதியானவர்களில் இருந்து பூஜைகளை செய்வித்து, ஜீவர்களில் இருந்து அதை ஏற்றுக்கொள்கிறான். அது எதற்கு என்றால், அவன் கருணைக்கடல் ஆகையால், பக்தர்களின் பூஜையை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தால், பக்தர்களுக்கு திருப்தி ஆவதில்லை. அவர்களின் நலனுக்காகவே தான் அவற்றை ஏற்றுக்கொள்கிறான். நம் முகத்தின் அலங்காரத்தைப் பார்த்து மகிழவேண்டும் என்றால், அதை கண்ணாடியில் பார்த்து மகிழவேண்டுமே தவிர, நம் முகம் நமக்குத் தெரிவதில்லை. ஆனால், கண்ணாடியில் தெரியும் முகத்தின் பிரதிபிம்பத்திற்கு அலங்காரம் செய்வது சாத்தியமில்லை. ஆகையால், நம் முகத்திற்குத் தேவையான அலங்காரம் செய்துகொண்டு, கண்ணாடியில் அதைப் பார்த்து மகிழ்வதைப் போல, பிம்பனான பரமாத்மன் பூஜையை ஏற்றுக்கொண்டால் நமக்கு மகிழ்ச்சி உண்டாகிறது என்பதே இந்த ஸ்லோகத்தின் கருத்து. 

மரங்களின் வேருக்கு நீர் இறைத்தால், அதன் கிளைகள் வளர்வதைப் போல், நம் தேகத்தின் இருந்து பரமாத்மன் சுகங்களை அனுபவித்தால், அது ஜீவனுக்கு திருப்தி ஆகிறது. இல்லையெனில், ஜீவன் சுகத்தைப் பெறுவதில்லை. ஆகையாலேயே, ஸ்ரீபரமாத்மன் தேகங்களில் இருந்து விஷய சுகங்களை அனுபவித்து, ஜீவனை திருப்திப்படுத்துகிறான் என்று அறியவேண்டும். 

***


Monday, March 23, 2020

#15 - வியாப்தி சந்தி

#15 - வியாப்தி சந்தி


மன விஷயதொளகி3ரிஸி விஷயவ
மனதொளகெ3 நெலெகொ3ளிஸி பலு னூ
தனவு சுஸமீசீன விது3பாதேயவெந்த3ருபி1 |
கனஸிலாத3ரு தன்ன பாத33
நெனெவனீயதெ3 சர்வரொளகி3
த்தனுப4விசுவனு ஸ்தூ2லவிஷயவ விஷ்வனெந்தெ3னிஸி ||15

மன = மனதினை

விஷயதொளகெ = பிடித்தவற்றையே கேட்க வேண்டும், அழகானவற்றையே பார்க்க வேண்டும், சுவையானவற்றையே சுவைக்க வேண்டும் என்னும் விஷய சுகங்களில்
இரிஸி = இறக்கி
விஷயவ = அந்த விஷய சுகங்களை
மனதொளகெ = மனதில்
நெலெகொளிஸி = நிலைநிறுத்தி
இது = இந்த விஷய சுகங்கள்
பலுனூதனவு = மிகவும் புதியதாக இருக்கின்றன
சுசமீசீனவாதுது = மிகச் சிறந்தவை
உபாதேயவு = இதனால் சீக்கிரத்தில் சுகம் உண்டாகிறது
எந்தருபி = என்று ஜீவர்களுக்கு தெரியப்படுத்தி
கனஸிலாதரு = கனவிலாவது
தன்ன பாதத நெனெவனு = தன் பாதங்களை நினைப்பவர்களை
ஈயதெ = கொடுக்காமல்
சர்வரொளகித்து = அனைத்து பிராணிகளிலும் இருந்து
விஷ்வனெந்து = விஸ்வ என்று
எனிஸி = அழைக்கப்படுபவன்
ஸ்தூலவிஷயவ = ஸ்தூலமான விஷய போகங்களை அனுபவிப்பான்

சாத்விகர்களின் மனதை மட்டும் தன் பாதாரவிந்த ஸ்மரணையில் நிறுத்தி, விஷய சுகங்கள் தற்காலிகமானவை என்று சொல்லி, அவர்களுக்கு ஞானத்தைக் கொடுக்கிறான் ஸ்ரீபரமாத்மன். ராஜஸ தாமஸ மக்களை அப்படி செய்வதில்லை. அவர்களுக்கு எப்படி அருள்கிறான் என்பதையே இந்த பத்யத்தில் சொல்கிறார் தாசராயர். 

மனதினை விஷய சுகங்களில் நிலைநிறுத்துகிறான். அதாவது, சுவையான உணவுகளையே உண்ண வேண்டும். ஸ்த்ரீயர்களின் போகங்களை அனுபவிக்க வேண்டும் என்னும் விஷய சுகங்களில் அவர்கள் மனதினை வைத்து, இவை எப்போதும் புதியது, இவற்றையே நாம் எப்போதும் அனுபவிக்க வேண்டும் என்னும் எண்ணத்தை விதைத்து, அதையே திடமாக்கி, ஜாக்ர அவஸ்தையில் அதாவது அவர்கள் விழித்திருக்கும்போது பகவத் ஸ்மரணையே வராமல், கனவில் கூட தன் பாதாரவிந்தங்களின் ஸ்மரணையைக் கொடுக்காமல், விஷ்வ என்று அழைத்துக் கொண்டு அனைத்து இடங்களிலும் இருந்து, ஸ்தூலமான சுகங்களை தான் அனுபவிக்கிறான். 

ஸ்வநிர்மிதேஷு நிர்விஷ்ணோ புங்க்தே பூதேஷு தத்குர்ணா - பிராணிகளில் தான் இருந்து அந்த தேகத்திற்கு சம்பந்தப்பட்ட சுகங்களை மட்டும் அனுபவிக்கிறான் என்னும் பாகவத வாக்கியமே இதற்கு ஆதாரமாக இருக்கிறது. 

***


Sunday, March 22, 2020

#14 - வியாப்தி சந்தி

#14 - வியாப்தி சந்தி

ஸ்ருதிததிகளிகெ கோ3சரிசத3
பிரதிமஜா னந்தா3த்மனச்யுத
விதத விஷ்வாதா4ர வித்4யாதீ4ஷ விதி4ஜனக1 |
பிரதிதிவச சேதனரொளகெ ப்ரா
க்ருத புருஷனந்த33லி சஞ்சரி
சுத நியம்ய நியாமகனு தானாகி3 சந்தெய்ப ||14


ஸ்ருதிததிகளிகெ = வேத சமூகங்களுக்கு
கோசரிஸத = முழுமையாக தரிசனமளிக்காத
அப்ரதிம = சமானம் இல்லாத
ஆனந்தாத்மனு = ஆனந்த ஸ்வரூபனான
அச்யுத = நாசம் இல்லாதவனான
விதத = அனைத்து இடங்களிலும் வியாப்தனான
விஷ்வாதார = உலகத்திற்கு ஆதாரமானவனான
வித்யாதீஷ = வித்யைக்கு அதிபதியான ரமாதேவியின் தலைவனான
அல்லது
விஷ்வாதார வித்யாதீஷ = உலகத்திற்கு ஆதாரமான வித்யைக்கு தலைவனான
விதிஜனக = பிரம்மதேவரின் தந்தையான ஸ்ரீபரமாத்மன்
ப்ரதிதிவஸ = தினந்தோறும்
சேதனரொளகெ = ஜீவர்களில் இருந்து
ப்ராக்ருத புருஷ நந்ததலி = சாமான்யரான பஞ்சபூத சரீரங்களைக் கொண்ட புருஷனைப் போல
நியம்ய = நண்பனைப் போல அவனுக்குக் கட்டுப்பட்டவனைப் போல
நியாமக = அதிபதிகளில் இருந்து, ஆணைகளை பிறப்பிப்பவனைப் போலவும்
சந்தெய்ப = மக்களுக்கு சமாதானம் அளிக்கிறான்.


வேத ஸ்வரூபளான, துர்கா ரூபியான ரமாதேவியும்கூட யாரின் குணரூப ஸ்வரூபங்களை முழுமையாக அறிவதில்லையோ, யார் தனக்கு ஒப்புமை இல்லாதவனோ, உத்பத்தி சூன்யனோ, ஆனந்த ஸ்வரூபனோ, நாசம் இல்லாதவனோ, அனைத்து இடங்களிலும் வியாப்தனோ, உலகத்திற்கு ஆதாரமானவனோ, அனைத்து வித்யைக்கும் தலைவனோ, பிரம்மனின் தந்தை என்று அழைத்துக் கொள்பவனோ, அத்தகைய ஸ்ரீபரமாத்மன், ப்ரக்ருதி சம்பந்தமான, மூன்று குணங்களுக்கும் சம்பந்தமான ஜீவர்களின் ப்ராக்ருத தேகத்தில், தானும் ப்ராக்ருத ரூபத்தைக் கொண்டு இருந்தவாறு, ஒருவனுள் இருந்து ஆணையைப் பிறப்பிக்கிறான், இன்னொருவனில் இருந்து அதை நிறைவேற்றுகிறான். இப்படி அரசாட்சி செய்பவர்களில் இருந்து ஆணையைப் பிறப்பித்து, மகிழ்ச்சியைக் கொடுக்கிறான். மற்றவர்களில் இருந்து அந்த ஆணையை நிறைவேற்றி, பரிசுகளைப் பெறவைத்து, மகிழ்ச்சியைக் கொடுக்கிறான். 

***