பாவப்ரகாசிகே’விற்கு சம்பந்தப்பட்ட சில விசேஷமான தகவல்கள்
1.
பரமார்த்த சந்திரோதய மாதப் பத்திரிக்கை பிரமோதூத நாம சம்வத்ஸரம் சிராவண மாதம் தொகுப்பு 4 இதழ் 5 ஆகஸ்ட் 1930 இதழில் பிரசுரிக்கப்பட்ட கடிதம்.
குருசேவா
என் நம்பிக்கைக்குப் பாத்திரரான பாகேனஹல்லி பிராணநாதவிட்டலா அங்கிதத்தைப் பெற்றவரான திரு சேஷதாசர், சுமார் 6-7 ஆண்டுகளுக்கு முன் மல்லேஸ்வரத்தில் நடந்த ரதோத்ஸவத்தின்போது என்னிடம் சொன்ன விஷயம் பின்வருமாறு. நம் குருவான திரு சுப்பராயதாசரிடம் வேண்டிக்கொண்டு, அவர் மூலமாக ஸ்ரீராம பட்டாபிஷேகத்தின் கதையை உபன்யாசம் செய்வித்தால் மிகவும் நன்றாக இருக்கும். அவர் கேட்டுக்கொண்டபடியே சீதாகல்யாண மகோத்ஸவத்தை செய்து முடித்தோம். அங்கு வந்திருந்து உபன்யாசத்தைக் கேட்ட அனைவரும் மிகவும் மகிழ்ந்து, தாசரை மல்லேஸ்வர மடத்தில் ஹரிகதாம்ருதசார பாடத்தை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர். ஸ்ரீதாசரும் அதை மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு, ‘ஹரிக்ருபா’ ஆலயத்தில் சுமார் 10 மாதங்கள் சில சிஷ்யர்களுக்கு பாடம் எடுத்தார்.
ஆனால் அதற்கும் திருப்தி அடையாத நாங்கள், ஹரிகதாம்ருதசார காவியத்திற்கு பாவபிரகாசிகெ என்னும் உரையை எழுதி வெளியிடவேண்டும் என்ற எங்கள் ஆசையை தெரிவித்தோம். மிகவும் வயதாகிவிட்டதால் தம்மால் இந்த வேலையை செய்ய முடியாது. இந்த வேலைக்கு மிகவும் கற்றறிந்த அறிஞரான, தன் அருளுக்கு பாத்திரரான சிஷ்யரையே கேட்கிறேன் என்று கூறினார்.
அதன்படியே இப்போது அந்த உரையை எழுதிக்கொண்டிருக்கும் ஸ்ரீதந்தேமுத்துமோகனவிட்டல அங்கிதத்தைப் பெற்றவரான சுப்பராயதாசரின் சிஷ்யரான ஸ்ரீபத்மனாபதாசரை தேர்ந்தெடுத்தார். ஸ்ரீதாசரின் அருளைப் பெற்று இந்த உரையானது தற்போது எழுதப்பட்டு வருகிறது. இதுவரை 14 இதழ்களில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுவரை இந்த காவிய பிரசாரத்திற்கு உதவி செய்து வரும் நல்லுள்ளங்களுக்கு எனது சாஷ்டாங்க வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
பக்தசேவகன்
M. மூர்த்திராவ்
2.
பரமார்த்த சந்திரோதய மாதப் பத்திரிக்கை சுக்ல நாம சம்வத்ஸரம் சைத்ர மாதம் தொகுப்பு 3 இதழ் 1 ஏப்ரல் 1929 இதழில் பிரசுரிக்கப்பட்ட கடிதம்.
பலமுறை பாரத பாகவத புராணங்களை நன்றாக படித்து தெரிந்துகொண்டு, உபன்யாசங்களை செய்து, வியாசகூடத்தை நன்றாக அறிந்துகொண்டு பிறகு தாசகூடத்தைப் பற்றிய ஸ்ரீசுப்பராயதாசரின் சிஷ்யரான பத்பனாபதாசரால் இயற்றப்பட்டது இந்த உரை. திருப்பதி சபாவில் ஹரிகதாம்ருதசார தேர்விற்கு மேற்பார்வையாளராக இருந்து, பலமுறை ஹரிகதாம்ருதசார பாடத்தை எடுத்திருக்கும் ஸ்ரீசுப்பராயதாசரிடமிருந்தும், பல ஆண்டுகளாக பாகவதாதி புராண உபன்யாசங்களை சொல்லிக்கொண்டிருக்கும் பண்டிதரான போடேனஹல்லி ஸ்ரீகிருஷ்ணமூர்த்தி ஆச்சாரிடமும் காட்டி ஒப்புதல் பெற்றுள்ளார். வியாசகூட தாசகூட என்று இருவருக்கும் வரும் சந்தேகங்களை, பாரத பாகவத புராணங்களிலிருந்து மேற்கோள்களை எடுத்துக் காட்டி தீர்த்துவைத்துள்ளார். மேலும் அங்கங்கே தக்க உதாரணங்களைக் கொடுத்து, ஒவ்வொரு சொல்லுக்குமான பொருள், பொருளுரை, விசேஷமான பொருள் ஆகியவற்றைக் கொடுத்துள்ளார். மல்லேஸ்வரத்தில் வசிக்கும் ஸ்ரீமூர்த்திராயர் மற்றும் ஆற்காடு ஸ்ரீனிவாசராயர் தெருவில் வசிக்கும் ஸ்ரீவெங்கடராவ், நிஜகல், இவர்களுடன்
தற்போது குறைந்திருக்கும் தாசபரம்பரையை மறுபடி அதிகரிக்கும்படியான நோக்கத்துடன் இந்த உரையை குறைந்த லாபத்தில் அச்சடித்து, குறைந்த விலைக்கே மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நிச்சயித்துள்ளனர்.
நிறுவனர்.
3.
பாவப்ரகாசிகாவைப் பற்றி ஸ்ரீதந்தேமுத்துமோகனதாசரின் சிஷ்யரான ஸ்ரீவரதேசவிட்டல அங்கிதத்தைப் பெற்றவரான ஸ்ரீவாமன கிருஷ்ண தேஷ்பாண்டே எழுதிய கடிதம். பரமார்த்த சந்திரோதய பத்திரிக்கை ஜுலை 1930ல் வெளிவந்தது.
தங்களின் பிரிய சிஷ்யரான ஸ்ரீபத்பனாபதாசர், ஹரிகதாம்ருதசாரத்திற்கு எழுதிய பாவபிரகாசிகே என்னும் உரையைப் படித்தேன். இரண்டாம் பகுதியில் ‘ஸ்ரீரமணி கரகமலபூஜித’ இந்த பதத்திற்கு எழுதியுள்ள நீண்ட விளக்கத்தை & கொடுத்துள்ள உதாரணங்களைக் கண்டு, மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளேன். இதைப் படித்ததால் என் இந்த ஜென்மம் சார்த்தகமாயிற்று என்று எண்ணுகிறேன். இந்த உரையை எவ்வளவு படித்தாலும் திருப்தி ஆவதேயில்லை. இப்படிப்பட்டவருக்கு பண்டிதரத்ன என்னும் பட்டத்தைக் கொடுப்பது தகுதியானதே. இப்படிப்பவருக்கு குருவாக இருக்கும் தங்களின் புகழ், பரமார்த்த சந்திரனின் கதிர்களைப் போல் எப்போதும் வளர்ந்துகொண்டே இருக்கட்டும். பத்மனாபதாசரை நான் வணங்குகிறேன். மேலும் நீங்கள் செய்த உதவியை நான் எக்காலத்திற்கும் மறக்காமல் இருக்கவேண்டி மதுசூதனின் காலடிகளைப் பற்றி வணங்குகிறேன்.
***
No comments:
Post a Comment