#5 - மங்களாசரண சந்தி
சதுரவத3னனராணி அதிரோ
ஹித விமலவிக்ஞானி நிக3ம
ப்ரததிக3ளிக3பி4மானி வீணாபாணி பி3ரம்மாணி |
நதிஸி பே3டு3வெ4 ஜனனி லகுமி
ப1திய கு3ணகள துதிபுதகெ சன்
மதி1ய பாலிஸி நெலெஸு நீ மத்வத3ன ஸதனதலி ||5
பொருள்:
சதுரவதனனராணி = சதுர்முக பிரம்மனின் மனைவியான
அதிரோஹித விமலவிக்ஞானி. அதிரோஹித = திரோஹித என்றால் மறந்து போகுதல். அதிரோஹித என்றால் அது இல்லாமை. அதாவது, எல்லாம் நன்றாக நினைவில் இருத்தல்.
விமல = அழகான
விக்ஞானி = சிறந்த ஞானமுள்ள
நிகமப்ரததிகளிகபிமானி = நிகம = வேதங்களின். ப்ரததிகளிகெ = குழுக்களுக்கு. அபிமானி = அபிமானியான. வீணாபாணி = வீணையைக் கொண்ட கைகளை உடைய.
பிரம்மாணி = வேதங்களின் உபதேசங்களான அல்லது ஜகத்குருவான பிரம்மதேவரின் மனைவி
ஜனனி = தாயான சரஸ்வதி
நின்னன்னு நதிஸி = வணங்கி
பேடுவெ = வேண்டுவேன்
லகுமீபதிய = லட்சுமிபதியான ஸ்ரீமன் நாராயணனின்
குணகள = குணங்களை
துதிபுதகெ = ஸ்தோத்திரம் செய்வதற்கு
ஸன்மதிய = சிறந்த புத்தியை
பாலிஸி = கருணையுடன் கொடுத்து
நீ = நீ
மத்வதனசதனதலி = மத் = என்னுடைய. வதன = முகம் என்னும். ஸதனதலி = வீட்டில். நெலஸு = குடியிருப்பாயாக.
பொருள்:
தாயே, சரஸ்வதி, நீ பிரம்மதேவரின் மனைவி. உனக்கு மிகத்தெளிவான ஞானம் எப்போதும் நிறைந்திருக்கிறது. வேத சமூகங்களுக்கு நீயே அபிமானியாக இருக்கிறாய். உன் கையில் எப்போதும் வீணை இருக்கிறது. (அந்த வீணையால், உன் கணவரைப் போற்றியவாறு, பகவத் குணங்களை மக்களுக்கு போதித்துக்கொண்டிருக்கிறாய்). குருபத்னி எனப்படுகிறாய். லட்சுமிபதியை ஸ்தோத்திரம் செய்வதற்கு நான் முயன்று வருகிறேன். அந்த விஷயத்தில் தவறான ஞானம், சந்தேகங்கள் வராமலிருக்க ஸ்ரீ பரமாத்மனின் குணங்கள் அனைத்தும் எனக்கு கிட்டுமாறு, எனக்கு நற்புத்தியை கருணையுடன் அருள்புரிவாயாக. அதுமட்டுமல்லாமல், நீயே ஒரு ரூபத்தினால் என்னுடைய வாக்கினில் நின்று பகவத் விஷயங்களை நன்றாக பேசவைக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.
சிறப்புப் பொருள்:
பிரம்ம தேவருக்கு, சர்வ தேவோத்தமத்வமும், ஜகத்குருத்வமும் எப்படி சொல்லியிருக்கிறார்களோ அவை சரவஸ்வதி தேவிக்கும் இருக்கின்றன என்ற சிந்தனையில் ‘ராணி’ என்னும் சொல்லால் தேவோத்தமத்வமும், ‘பிரம்மாணி’ என்னும் சொல்லால் குருபத்னித்வமும் இருக்கின்றன என்று சொல்கிறார். இதனால், புனருக்தி தோஷம் இல்லை என்று அறிய வேண்டும்.
அடுத்து, ஜகத்குருவான வாயுதேவரின் நியத பத்னியான மற்றும் வாக்கிற்கு அபிமானியான பாரதி தேவியிடம், ஹரிகதாம்ருதசாரத்தை சொல்வதற்கு நற்புத்தியைக் கொடு என்று வேண்டுகிறார்.
***
No comments:
Post a Comment