ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Sunday, May 3, 2020

#31 - விபூதி சந்தி

#31 - விபூதி சந்தி


இருதிஹரு நாத்ய த3ஸ்ரரு
நிருருதியு யமத4ர்ம யமகி
ங்கரரு மேதி3னி காலம்ருத்யு ஷனைஸ்சராதிக3ளு |
கரெஸிகொம்ப3ரு ஷூத்4ரரெந்தன
வரத ஷூத்4ரரொளிப்ப ரிவரொள
3ரவிதூ3ர னிருத்தனிகனெந்தரிது மன்னிபு1து3 ||31


நாஸத்யதஸ்ரரு = அஸ்வினி தேவதைகள் 
நிரருதியு = திக்பாலகனான நிரருதி
யமதர்மன்,
யமகிங்கரர்கள்,
மேதினி = பூமி
காலம்ருத்யு,
ஷனைஸ்சராதிகளு = சனீஸ்வரன் முதலான தேவதைகள்
ஷூத்ரரொளு = நான்காம் வர்ணத்தவர்களில்
இருதிஹரு = இருக்கிறார்கள்
இவரொளகெ = இந்த தேவதைகளில்
அரவிதூர = தோஷங்கள் அற்றவனான அனிருத்தன்
மன்னிபுது = மரியாதை செய்யவேண்டும்.

நாஸத்யதஸ்ரர் என்னும் இருவர் அஸ்வினி தேவதைகள், சனீஸ்வராதி தேவதைகள், யமதர்மன், யமதூதர்கள், பூமி, காலம்ருத்யு, நிரருதி, இவர்கள் அனைவரும் ஜாதியில் நான்காம் வர்ணத்தவர் என்று நினைத்து, அந்த ஜாதிக்கு அபிமானி தேவதைகளாக, அவர்களில் இருக்கின்றனர். இவர்களில் தோஷங்கள் அற்றவனான அனிருத்தரூபி ஸ்ரீபரமாத்மன் இருக்கிறான் என்று மரியாதையுடன் நினைக்கவேண்டும். 

***

#30 - விபூதி சந்தி

#30 - விபூதி சந்தி

மீனகே1தன த1னய ப்ராணா
பான வ்யானோதான முக்2யை
கோ1ன பஞ்சாஷன் மருத்க3ண ருத்3ர வசுக23ணரு |
மேனகா1த்மஜெ கு1வர விஷ்வ
க்சேன த4னபாத்3யனி மேஷரனு
தா3னுராக3தி3 தே4னிபு1து3 வைஷ்யரொளு ப்ரத்4யும்ன ||30

மீனகேதன = மன்மதனின்
தனய = மகனான அனிருத்தன்
ப்ராணாபான வ்யானோதானமுக்ய = பிராண, அபான, வ்யான, உதான முதலான
ஏகோனபஞ்சாஷத் மருத்கண = 49 மருத்கணர்கள்
ருத்ரவசுகணரு = ருத்ரகண, வசுகணர்கள்
மேனகாத்மஜெ குவர = பார்வதியின் மகனான கணபதி
விஷ்வக்சேன,
தனபாதி = குபேராதி
அனிமிஷரனு = தேவதைகளை
வைஷ்யரொளு = வைஷ்ய ஜாதியின் அபிமானிகளாக, வைஷ்யர்களின் இருப்பவர்கள் என்று
ப்ரத்யும்ன = ப்ரத்யும்ன நாமக ஸ்ரீபரமாத்மன் வசிக்கிறான் என்றும்
ஸதா = எந்நேரமும் / எப்போதும் 
அனுராகதி = நினைக்க வேண்டும். 


மன்மதனின் அவதாரமான ப்ரத்யும்னனின் மகனான அனிருத்தன், பிராண, அபான, வியான, உதான முதலான 49 மருத்கணங்கள், 11 ருத்ரர்கள், பார்வதியின் மகனான கணபதி, விஷ்வக்சேன, குபேராதி தேவதைகள் ஆகியோர் வைஷ்யாபிமானிகள், வைஷ்யர்களில் இருப்பவர்கள். இந்த தேவதைகளில் இருப்பவர், பிரத்யும்ன நாமக பகவந்தன் என்று அன்புடன் எப்போதும் நினைக்க வேண்டும். 

***

Saturday, May 2, 2020

#29 - விபூதி சந்தி

#29 - விபூதி சந்தி


பூ4ஸுரரொளிப்ப1ப்ஜ ப4வனொளு
வாஸுதே3வனு வாயு க23
தா3 ஷிவஹிபே1ந்த்ரனு விவஸ்வான் நாமக சூர்ய |
பே4ஷ காமமராஸ்ய வருணா
தீ3 சுரரு க்‌ஷத்ரியரொளிப்பரு
வாஸவாகி3ஹ சங்கருஷ்ணன நோடி3 மோதி3பரு ||29


பூசுரரொளிப்ப = பிராமணர்களின் உள்ளிருக்கும்
அப்ஜ பவனொளு = பிரம்ம தேவருக்குள்
வாசுதேவனு = வாசுதேவ நாமக பரமாத்மன்
வாயு = வாயுதேவர்
ககப = பறவைகளில் சிறந்தவனான கருடன்
ஸதாசிவ = ருத்ரதேவர்
அஹிப = சேஷதேவர்
இந்திரன்,
விவஸ்வன் நாமக சூர்ய = விவஸ்வன் நாமகனான சூரியன்
பேஷ = நட்சத்திரங்களின் தலைவனான சந்திரன்
காம = மன்மதன்
அமராஸ்ய = அக்னி
வருணாதி = வருணன் முதலான தேவதைகள்
க்‌ஷத்ரியரொளிப்பரு = க்‌ஷத்ரிய அபிமானியாக இருப்பவர்கள்
தம்மொளகெ வாஸவாகிஹ = வசிக்கும்
ஸங்கருஷணன = சங்கர்ஷண நாமக பரமாத்மனை
நோடி மோதிபரு = பார்த்து மகிழ்வர்.

பிராம்மணாதி வர்ணாபிமானி தேவதைகளையும், அந்த ஜாதியின் நியாமகனான வாசுதேவ ரூபங்களையும், ‘பூசுரரொளிப்ப’ என்னும் பத்யத்தில் தொடங்கி அடுத்த 31ம் பத்யம் வரைக்கும் விளக்குகிறார் தாசராயர். 

பிராமண ஜாதியினருக்கு அபிமானி பிரம்மதேவர். இவர் பிராமணர்களில் இருப்பவர். அவரில் வாசுதேவ மூர்த்தியை சிந்திக்க வேண்டும். வாயுதேவர், கருட, ருத்ர, சேஷ, இந்திர, விவஸ்வான் என்னும் சூரியன், சந்திரன், மன்மதன், அக்னி, வருணாதி தேவதைகள் ஆகியோர் க்‌ஷத்ரிய ஜாதியின் அபிமானிகள்,  இவர்கள் க்‌ஷத்ரியர்களில் இருப்பார்கள். இவர்களில் சங்கர்ஷணரூபி ஸ்ரீபரமாத்மன் இருக்கிறான் என்று சிந்திக்க வேண்டும். 

***

#28 - விபூதி சந்தி

#28 - விபூதி சந்தி


வாரிஜ ப4வாண்ட3வெ ஸுமண்ட1
மேருகி3ரி ஸிம்ஹானவு பா4
கீ3ரதி4யெ மஜ்ஜனவு திக்3வஸ்த்ரக3ளு நுடி மந்த்ர |
பூ4ருஹஜ ப2ல பு1ஷ்ப க3ந்த4
மீர சஷிரவி தீ31 பூ4ஷண
தாரகெக3 ளெந்த3ர்ப்பிலு கைகொண்டு3 மன்னிஸு||28


வாரிஜ பவாண்டவெ = இந்த பிரம்மாண்டமே
சுமண்டப = சிறந்த மண்டபம்
மேருகிரி = மேரு பர்வதம்
சிம்ஹாசனவு = சிம்மாசனம்
பாகீரதியெ = கங்கையின் தண்ணீரே
மஜ்ஜன = அபிஷேகம்
திக்வஸ்த்ரகளு = திசைகளே வஸ்திரங்கள்
நுடி = பேச்சுக்களே மந்திரங்கள்
பூருஹஜ = தானாக வளர்ந்த மரங்களில் இருக்கும் பூ, பழங்களே
ஸமீர = காற்று
கந்த = சுகந்தம்
ஷரீரவெ = சந்திர சூர்யர்களே தீபங்கள்
தாரககளே = நட்சத்திரங்களே
பூஷண = ஆபரணங்கள்
எந்தர்ப்பிஸலு = என்று சமர்ப்பிக்க
கைகொண்டு = ஸ்வீகரித்து
மன்னிஸுவ = நம் அபராதங்களை மன்னிப்பான்

பிரம்மாண்டமே ஸ்ரீபரமாத்மனின் மண்டபம். மேரு மலையே சிம்ஹாசனம். கங்கை நதியே ஸ்னானத்திற்காக நீர். திசைகளே வஸ்திரங்கள். பேச்சுக்களே மந்திரங்கள். மரங்களில் வளரும் பூ, பழங்களே தேவருக்கு பூ, புஷ்பங்கள். வீசும் காற்றே சுகந்தம். சந்திர சூரியரே தீபங்கள். நட்சத்திரங்களே ஆபரணங்கள் என்று நினைத்து பரமாத்மனை மானஸ பூஜை செய்து சமர்ப்பித்தால், பரமாத்மன் அவற்றை ஏற்றுக்கொண்டு நம் அபராதங்களை மன்னித்து நமக்கு அருள்கிறான். 

***

Friday, May 1, 2020

#27 - விபூதி சந்தி

#27 - விபூதி சந்தி


ஆப1ணாலயக3த பதா3ர்த்த2வு
ஸ்த்ரீ புருஷருக3 ளிந்திரியக3ளலி
தீ3ப பா1வக1தொ3ளிருதிஹ தை1லாதி3 த்3ரவ்யக3ளு |
ஆ பரமக3வதா3னவெந்து3
தே3தே3 மரெயத3லெ ஸ்மரிஸு
பூ41னந்த3தி3 சஞ்சரிஸு நிர்ப4யதி3 சர்வத்ர ||27


ஆபணாலயகத = ஆபண = கடைக்குள். ஆலய = வீட்டில். கத = இருக்கும்
பதார்த்த = அரிசி, பருப்பு ஆகிய பதார்த்தங்கள்
ஸ்த்ரீ புருஷர் = ஆண் பெண்கள்
இந்திரியகளலி = காது, மூக்கு, கை, கால்கள் ஆகிய இந்திரியங்களில் அணியும் ஆபரணங்களில்
தீப பாவகரொளு = தீபம், நெருப்பு ஆகியவற்றில்
இருதிஹ = இருக்கும்
தைலாதி த்ரவ்யகளு = எண்ணெய் போன்ற த்ரவ்யங்கள் இவை அனைத்தும்
ஆ பரமகெ = பரமாத்மனுக்கு
அவதானவெந்து = ஆஹுதி என்று 
பதேபதே = திரும்பத்திரும்ப
மரெயதலெ ஸ்மரிஸுத = மறக்காமல்; நினைத்தவாறு
பூபனந்ததி = அரசனைப் போல
சஞ்சரிஸு = ஓடியாடு
நிர்பயதி = பயம் இல்லாமல்
சர்வத்ர = எல்லா இடங்களிலும்

ஆமயோsயஞ்ச பூதானாம் ஜாயதேயேனஸுவ்ரத |
ததேவஹ்யாமயத்ரவ்யம் தத்புனாதிசிகித்ஸிதம் |
ஏவன்ன்ருணாங்க்ரியாயோக: ஸர்வே சம்ஸ்க்ருதி ஹேதவ: |
த யோவாத்மவினாஷாய கல்பந்தே கலிபிதா:பரே ||
(பாகவத முதல் ஸ்கந்தம்)

நோய்க்கு காரணமான பதார்த்தங்களை தின்றால், அது அந்த மனிதனையே கொன்றுவிடும். ஆனால், அந்த பதார்த்தங்களையே மருத்துவர்கள் சுத்தம் செய்து, நோயாளிக்குக் கொடுத்தால், அது மருந்தாகிவிடுகிறது. அதுபோல, நாம் செய்யும், ஸ்னான, அலங்கார, போஜனாதிகளை, நம் நலனுக்காக என்னும் சிந்தனையுடன் தின்றால் அதுவே நம் சம்சாரத்திற்குக் காரணமாகி விடுகிறது. ஆனால், பரமாத்மனின் வீடான இந்த சரீரத்தை, பரமாத்மனின் ப்ரீதிக்காக கழுவுகிறேன், அலங்கரிக்கிறேன், பாதுகாக்கிறேன் என்று அனைத்தையும் பரமாத்மனின் பூஜை என்று நினைத்தால், அதுவே முக்திக்கான சாதனை என்று (மேற்கண்ட ஸ்லோகத்தில்) சொல்லியிருப்பர். அதையே இங்கு தாசராயரும் கூறுகிறார். 

கடையில் இருக்கும் பதார்த்தங்கள், வீட்டில் இருக்கும் அரிசி, பருப்பு முதலான பதார்த்தங்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் அணியும் ஆபரணங்கள், தீபத்திற்கு விடும் எண்ணெய், நெருப்பில் போடும் கட்டைகள், ஆகிய அனைத்தும் பரமாத்மனின் பூஜாத்மக யாகத்தில் விடும் ஆஹுதி என்று நினைத்து, ஒவ்வொரு கணமும் இந்த சிந்தனையை விடாமல், எப்போதும் நினைத்தவாறு, மகாராஜாவானவன் எப்படி யாருக்கும் பயப்படாமல் சஞ்சரிக்கிறாரோ அதுபோல, நீயும் யாருக்கும் பயப்படாமல் சஞ்சரிப்பாயாக. 

***

#26 - விபூதி சந்தி

#26 - விபூதி சந்தி


4வவெனிப1 வனதி3யொளு கர்ம
ப்1ரவஹதொ3ளு சஞ்சரிஸுதிஹ தே3
ஹவ ஸுனாவெய மாடி3 தன்னவரிந்த3 ஒடகூ3டி3 |
தி3வஸ தி3வஸக3ளல்லி லகுமி
4வனு க்ரீடி3பனெந்து3 சிந்திஸி
1வனனய்ய ப4வாப்தி4 தா3டி1ஸி பரமசுக2வீவ ||26


பவவெனிப = சம்சாரம் என்னும்
வனதியொளு = கடலில்
கர்ம = புண்ய பாப கர்மங்கள் என்னும்
ப்ரவஹதொளு = ஆற்றில்
சஞ்சரிசுதிஹ = பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியில் வந்து போய்க்கொண்டிருக்கும்
தேஹவெ = தேகத்தையே
ஸுனாவெய = உத்தமமான படகாக ஆக்கி
தம்மவரிந்தலி = தம் பக்தர்களான தத்வாபிமானி தேவதைகளுடன்
திவஸ திவஸகளல்லி = தினந்தோறும் (எப்போதும்)
லகுமீதவனு = லட்சுமிபதி
க்ரீடிபனெந்து = விளையாடுகிறான் என்று
சிந்திஸி = சிந்தித்து
பவனனய்ய = வாயுதேவரின் தந்தையான ஸ்ரீபரமாத்மன்
பவாப்தி = பிறவிக்கடலை
தாடிஸி = தாண்டச் செய்து
சுகவீவ = சுகத்தைத் தருகிறான். 

சம்சாரம் என்னும் கடலில், புண்ய பாபாதி கர்மங்கள் என்னும் ஆற்றில், பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியில் வந்து போய்க்கொண்டிருக்கும் இந்த தேகத்தை, ஸ்ரீபரமாத்மன் தன் படகாக ஆக்கிக்கொண்டு, தன் பக்தர்களான தத்வாபிமானி தேவதைகளுடன் சேர்ந்து, தினந்தோறும் (எப்போதும்) அந்தப் படகில் அமர்ந்து விளையாடுகிறான் (தன் நடவடிக்கைகளை செய்கிறான்), என்று நாம் இந்த தேகத்தை பரமாத்மன் வசிக்கும் இடமாக நினைத்து, இது நமது என்னும் அபிமானத்தை விட்டால், பிராணபதியான ஸ்ரீபரமாத்மன் நம்மை சம்சார சாகரத்தை தாண்டச் செய்து, பரமானந்தத்தைக் கொடுக்கிறான். 

***

Thursday, April 30, 2020

#25 - விபூதி சந்தி

#25 - விபூதி சந்தி


மாதரிஷ்வனு தே3ஹரத2தொ3ளு
ஸுதனாகி3ஹ சர்வகாலதி3
ஸ்ரீதருணி வல்லப ரதிகனெந்தரிது3 நித்யதலி |
ப்ரீதியிந்த3லி போ1ஷிஸுத வா
தாதபாதி33ளிந்த3 அவிரத1
ஈ த1னுவினொளு மமதெ1 பி3ட்டிஹனவனெ மஹயோகி3 ||25


மாதரிஷ்வனு = வாயுதேவர்
தேஹரததொளு = தேகம் என்னும் இந்த ரதத்தில்
சர்வகாலதி = அனைத்து காலங்களிலும்
ஸூதனு = சாரதி
ஆகிஹ = ஆகியிருக்கிறான். 
ஸ்ரீதருணி வல்லபனு = ஸ்ரீதேவி என்னும் தருணியின் பதியான ஸ்ரீபரமாத்மன்
ரதிகனெந்தரிது = ரதத்தில் அமர்ந்திருக்கிறான் என்று அறிந்து 
நித்யதலி = தினந்தோறும் (எப்போதும்)
ப்ரீதியிந்தலி = பக்தி விஸ்வாசங்களால்
வாதாத பாதிகளிந்தலி = காற்று வீசுவது முதலான செயல்களால்
அவிரத = திடமாக (இடைவிடாமல்)
போஷிஸு = நன்றாக கவனி
ஈதனுவினொளு = இந்த தேகத்தில்
மமதெ = அபிமானத்தை (ப்ரியத்தை)
பிட்டிஹனு = விட்டவன் (யார் விடுகிறார்களோ)
அவனே
மஹாயோகி = மஹா யோகி ஆகிறான். 

தேகம் என்னும் ரதத்தில் சாரதியாக இருப்பவர் வாயுதேவர். பாகவதத்தில் ‘மனோரஷ்மிபுத்திஸுதோ’ ‘புத்திந்து ஸாரதிம்வித்தி’ புத்தியை சாரதியாக சொல்லியிருப்பர். மேலும் ‘மூலவாயு ரக்‌ஷஸக்ஞஷ்சக்ரே த்வேஷபுண்யதுஷ்க்ருதி’ என்னும் ஆத்யாத்ம யோக வாக்கியத்திற்கேற்ப சக்கரத்தில் இருக்கும் அச்சாணியே வாயுதேவர் என்றும் சொல்லியிருப்பர். ஆனால், தாசராயரோ வாயுதேவரையே சாரதி என்கிறார். இதில் பரஸ்பரம் கருத்து வேறுபாடு வருகிறதே என்றால், அது அப்படியில்லை. 

புத்தியை சாரதியாகி சொல்லியிருப்பது, வெறும் புத்தியை மட்டும் குறிப்பதல்ல. அபிமானி தேவதைகளையும் சொல்கின்றனர் என்று கருத வேண்டும். அப்படியானாலும், புத்திக்கு அபிமானி, உமா, ப்ருஹஸ்பதி ஆகியோர்களே தவிர, வாயுதேவர் இல்லையே என்றால், அதற்கு விளக்கம் இதுவே. புத்தியில் சித்த, புத்தி, அஹங்கார, மனஸ் என்று 4 பகுதிகள் உண்டு. சஞ்சலம் பிறக்கும் இடம் மனஸ். நான், எனது என்று சொல்வது அஹங்காரம். இது இப்படிப்பட்டது என்று தீர்மானம் செய்வது புத்தி. பகவத் பாதாரவிந்தங்களில் திடமாக நிற்கும் புத்தியே சித்தம் எனப்படுகிறது. புத்தியில் சுபுத்தி, துர்புத்தி என்று இரு பாகங்கள் உண்டு. புண்ய கர்மங்களில் நம்மை ஈடுபடுத்துவது சுபுத்தி. பாவ கர்மங்களில் நம்மை ஈடுபடுத்துவது துர்புத்தி. இந்த இரண்டும் அல்லாமல், வெறும் பகவந்தனை பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும் புத்தியே சித்த. 

இப்படியாக சித்தத்திற்கும் புத்திக்கும் சிறிது வேறுபாடு இருந்தாலும், குருபாண்டவ நியாயத்தைப் போன்றது என்று சொல்லலாம். அது என்னவெனில், கௌரவர்கள், பாண்டவர்கள் இருவரும் குரு வம்சத்தில் பிறந்ததால் ‘கௌரவர்கள்’ என்னும் சொல், பாண்டவர்களுக்கும்கூட பொருந்தும். ஆனாலும் கௌரவர் என்னும் சொல் துரியோதனாதிகளை மட்டுமே குறிப்பதோடு நின்றுவிட்டது. ஆனால், பாண்டவ என்னும் சொல், கௌரவர்களைக் குறிப்பதில்லை. பாண்டுராஜனின் மக்கள் மட்டுமே பாண்டவர்கள் என்று குறிக்கிறது. இந்த பெயர் துரியோதனாதிகளுக்கு பொருந்தாது. 

ஆகையால், புத்தியின் இன்னொரு பாகமே சித்தம் ஆனாலும், வெறும் பகவந்தனைப் பற்றி சிந்திக்கும் புத்திக்கு மட்டுமே சித்தத்வம் இருப்பதால், சித்த என்னும் சொல், புத்திக்கு சேர்வதில்லை. புத்தி என்னும் சொல் சித்தத்தையும் குறிக்கும். புத்தியை பகவந்தனிடம் ஈடுபடுத்தினால் அதுவே சித்தம் ஆவதால், அதனை சுபுத்தி எனலாம். இப்படியாக, பகவந்தனில் ஈடுபட்டிருக்கும் புத்தியிலிருந்து வேறுபட்டிருக்கும் சித்தத்திற்கு வாயுதேவரே அபிமானி. ஆகையால், இங்கு புத்தி என்பது சித்தத்தையும் மற்றும் சித்த என்னும் சொல், அபிமானியையும் குறிக்கும். இப்படியாக சிந்தித்தால், சித்தாபிமானியான வாயுதேவரே, சாரதி என ஆகிறது. ஆகையால், தாசராயரின் வாக்கியத்திற்கும், பாகவதாதிகளில் இருக்கும் வாக்கியத்திற்கும் வேறுபாடு இல்லை என்று அறியவேண்டும். 

அச்சாணியை வாயுதேவர் என்று சொல்லும் ஆத்யாத்ம யோகத்தின் வாக்கியத்தின்படி, அச்சாணி ரூபமாகவும், சாரதியாகவும் வாயுதேவரே இருக்கிறார் என்று சொன்னால் அதில் தவறு எதுவும் இல்லை. 

ஸ்ரீபரமாத்மனே இந்த தேக ரதத்தில் அமர்ந்திருக்கிறார் என்று அறிந்து தினந்தோறும் அன்ன, பானாதிகளால் தினந்தோறும் இந்த தேகத்தைப் பார்த்துக்கொள். இந்த தேகம் என்னுடையது என்று நினைத்து, இந்திரிய அபிமானத்திற்காக மட்டும் சரீரத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டாம் என்கிறார். இந்த தேகம் பரமாத்மன் அமரும் ரதம். ஆகையால் இதை கழுவுகிறேன், ஆடை அணிகலன்களால் அலங்கரிக்கிறேன் என்று ரதம் கெடாமல் இருப்பதற்காக அன்ன, பானாதிகளால் நன்றாக பாதுகாப்பேன் என்று சிந்தித்து பார்த்துக் கொள். எனக்கு வெயில் ஆகாது, மழை பிடிக்காது என்று இந்திரிய அபிமானத்திற்காக தேக அபிமானத்தை செய்யாமல், பகவத்ப்ரீதிக்காக மட்டும் சரீர போஷணம் செய்தவாறு, வெயில், குளிர் ஆகியவற்றை சகித்துக்கொண்டு, நான் எனது என்னும் அபிமானத்தை விட்டு இருப்பவன் யாரோ, அவனே மஹாயோகி. 

***